Metro Mirror

Metro Mirror Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka

10/08/2026
மொட்டு செயலாளர் சாகர காரியவசமுக்கு வெளிநாட்டு பயணத் தடை; நீதிமன்றம் உத்தரவு.!மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் இன்று ...
10/08/2026

மொட்டு செயலாளர் சாகர காரியவசமுக்கு வெளிநாட்டு பயணத் தடை; நீதிமன்றம் உத்தரவு.!

மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் இன்று (10) காலை கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் பொது வெளியில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்துக்கு சாகர காரியவசம் இன்று காலை அழைக்கப்பட்டார்.

அதன்போது, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

🛑பேச்சுவார்த்தை தோல்வி; பர்தா அணியும் ஊழியர்களை உள்வாங்க கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் மறுப்பு.!🛑இலங்கை...
10/08/2026

🛑பேச்சுவார்த்தை தோல்வி; பர்தா அணியும் ஊழியர்களை உள்வாங்க கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் மறுப்பு.!

🛑இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 5 முறைப்பாடுகள் பதிவு.!

🛑உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை.!

✅www.metromirror.lk 2026-08-10

✍️பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஐந்து (5) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக் ககொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முஅஸ்ஸம் மற்றும் குழுவினர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

எனினும், குறித்த சந்திப்பின் போது, நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை அல்லது நாளை மறுதினம், அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் நோட்டீஸ்கள் அனுப்பப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும், விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இவ்விடயம் தொடர்பாக இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Metro Mirror
[email protected]
WhatsApp 0779599929

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டம் இன்று ஜனாதிபதி அநுர தலைமையில...
10/08/2026

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டம் இன்று ஜனாதிபதி அநுர தலைமையில் நடைபெற்றது.

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில்இலங்கை சிவராஜன் முதலிடம்.!(றியாஸ் ஆதம், ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.எம்.ஜபீர்)அறுகம்பே அரை ...
10/08/2026

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில்
இலங்கை சிவராஜன் முதலிடம்.!

(றியாஸ் ஆதம், ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.எம்.ஜபீர்)

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1கிலோ மீற்றர் பிரதான போட்டி நிகழ்ச்சியில் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதலாம் இடத்தினையும் இலங்கையைச் சேர்ந்த கே.ஜி.ஆர்.சமரகுமார இரண்டாம் இடத்தினையும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சொஹி மியாமொடோ மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி போரம் அதன் 10வது ஆண்டு நிறைவையொட்டி ஒன்றாய் ஓடுவோம் ஒன்றாய் எழுவோம் எனும் தொனிப்பொருளில் நடாத்திய குறித்த அரை மரதன் ஓட்டப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இன்று (09) பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எம்.எம். முசாரப், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. பஅஹமட் நசீல் உட்பட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் மற்றும் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்ட குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு தடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் - வெள்ளையன் வினோத்காந்த்.!(களத்திலிருந்து மின்மினி மின்ஹா)டெங்கு நோயை ...
10/08/2026

டெங்கு தடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் - வெள்ளையன் வினோத்காந்த்.!

(களத்திலிருந்து மின்மினி மின்ஹா)

டெங்கு நோயை ஒழிப்பதற்கு அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களும் சமூக அமைப்புகளும் இணைந்து செயற்பட வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வெள்ளையன் வினோத்காந்த் தெரிவித்தார்.

புதிய வளத்தாப்பிட்டியில் இன்று (10) நடைபெற்ற டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலோன் பிரிட்டிஷ் கல்லூரி, Voice of Future Sri Lanka, Change for Student Community ஆகியவற்றின் நிறுவுனரான வெள்ளையன் வினோத்காந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளராகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராகவும், அக்கட்சியின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

துரித செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட அமைப்புகள் பின்வருமாறு.

1.அறம் அமைப்பு.
2.Voice of Future Sri Lanka.
3.மாற்றத்திற்கான மாணவர்கள் அமைப்பு.
4.வாரணம் நற்பணி ஒன்றியம்.
5.ஸ்ரீ நாவலர் சன சமுக நிலைய நிர்வாகம்.
6.வீனஸ் விளையாட்டு கழகம்.
7.நண்பர்கள் ஒன்றியம்.
8.உதவும் கரங்கள் அமைப்பு.
9.கிரேஸ் பாடல் பாடசாலை நிர்வாகம்.
10.நியூ லைப் அமைப்பு.

பத்து சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கண்ணகி, அம்மன், மத்திய, விபுலானந்த மற்றும் ஸ்ரீ நாகதம்பிரான் வீதிகளில் வீடுகள் தோறும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொது இடங்கள், வெளிக்காணிகள், பாவனையற்ற காணிகள், குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.எஸ். டீ. அத்தநாயக்க, கிராம சேவகர் எம். உதயராஜன், பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்டோர் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்கினர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை Vs பர்தா விவகாரம்; அரச சேவை நடுநிலைமைக்கு அச்சுறுத்தல்.!மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும்...
10/08/2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை Vs பர்தா விவகாரம்; அரச சேவை நடுநிலைமைக்கு அச்சுறுத்தல்.!

மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09 சுகாதார உதவியாளர்களுக்கு மத மற்றும் கலாசார நடைமுறைகளின்படி சீருடை அணிய நிர்வாகம் தடை விதித்துள்ளதாக வெளியான செய்திகள் குறித்து சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்களது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பில் சிவில் சமூக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அரச நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற பணிச்சூழலை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமையாகும். முறையான அரச சுற்றுநிருபங்களின்படி சீருடை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பணிக்கு வரும் ஊழியர்களைத் தடுப்பது, அவர்களின் தொழில் உரிமையையும் கண்ணியத்தையும் பாதிப்பதாக அமைகிறது.

நாட்டின் அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் அடிப்படை உரிமைகளுக்கும், அரச பொது நிர்வாக அமைச்சின் விதிமுறைகளுக்கும் மாறாக உள்ளூர் நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது அரச சேவை கட்டமைப்பில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கி விடுகின்றன. இதனால் பன்மைத்துவம் கொண்ட ஒரு சமூகத்தில், அரசு நிறுவனங்கள் அனைத்து தரப்பினருக்கும் நடுநிலையானதாக இயங்க வேண்டிய நிலைமை ஏற்படாது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய விவகாரங்கள் சரியான நேரத்தில் கையாளப்படாவிட்டால், அது தவறான முன்னுதாரணமாக மாறி சமூகங்களிடையே தேவையற்ற மனக்கசப்புகளையும் சந்தேகங்களையும் வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இச்சம்பவம் தொடர்பாகச் சுகாதார அமைச்சும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும் உடனடியாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணைக்குழுவை அமைத்து உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து அரச ஊழியர்களின் ஆடை கட்டுப்பாடு குறித்த நிலவும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், ஏற்கனவே உள்ள அரச சுற்றுநிருபங்களை அனைத்து சுகாதார நிறுவனங்களுக்கும் மீண்டும் தெளிவுபடுத்தி அனுப்புவதுடன்,
பேச்சுவார்த்தைகள் மூலம் இப் பிரச்சினைக்குச் சட்டபூர்வமான மற்றும் நிரந்தரமான தீர்வு காணப்படுவதே அரச சேவையின் நம்பகத்தன்மையையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

10/08/2026

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க அரசாங்கம் திட்டம்; முன்னாள் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு.!

Address

Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Metro Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Mirror:

Shortcuts

Share