Metro Mirror

Metro Mirror Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்கம்.!முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்க...
10/09/2025

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்கம்.!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மாத்திரம் எதிராக வாக்களித்தார்.

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக ஐ.எல்.எம்.றிபாஸ் பொறுப்பேற்றார்.!(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ...
10/09/2025

அஷ்ரஃப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் அத்தியட்சகராக ஐ.எல்.எம்.றிபாஸ் பொறுப்பேற்றார்.!

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய அவர் இன்று (10) புதன் கிழமை வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர்.எம். ஹாரீஸிடமிருந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக நீண்ட காலம் பணிபுரிந்த வைத்தியர் ஏ.எல்.எம்.எப். ரஹ்மான் ஓய்வு பெற்றதையடுத்து வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.

இதன் போது கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.எல். பாரூக், மருத்துவ அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி, வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய பரிபாலகர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதானிகள், சிவில் அமைப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு.!(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)கல்முனை மற்றும...
09/09/2025

ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு.!

(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் மிகவும் தேவையுடைய சில பயனாளர்களை இனங்கண்டு YWMA பேரவையின் அனுசரணையில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பேரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குழாய் நீர்க்கிணறுகள் அமைக்கப்பட்டு, தனது பொற்கரங்களால் திறந்து கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்களுடன் குறித்த பயனாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

தாருல் அர்கம் மத்ரஸா – இரண்டாம் கட்ட புனரமைப்புக்கான நிதி கையளிப்பு.!(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)கல்முனை தாருல் அர்கம் மத்ரஸாவின் ...
09/09/2025

தாருல் அர்கம் மத்ரஸா – இரண்டாம் கட்ட புனரமைப்புக்கான நிதி கையளிப்பு.!

(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)

கல்முனை தாருல் அர்கம் மத்ரஸாவின் இரண்டாம் கட்ட கட்டிட புனரமைப்பு பணிக்கான நிதியுதவி கையளிப்பு நிகழ்வு (08) கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் தலைமை காரியாலயத்தில் இனிதே இடம்பெற்றது.

மதக் கல்வி வளர்ச்சியும், சமூக முன்னேற்றமும் ஒன்றிணைந்த உயரிய சேவை நிகழ்வாக இது அமைந்தது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும்,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகர் தலைவருமான
ரஹ்மத் மன்சூர் அவர்கள், மத்ரஸா நிர்வாகத்தினரிடம் புனரமைப்புக்கான நிதியை YWMA அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மத்ரஸா உஸ்தாத்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த உதவி மூலம் மத்ரஸாவின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வி சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"மதக் கல்விக்கு வித்திடும் கைகள் – சமூகத்தின் உண்மையான ஒளிக்கற்றைகள்" என்பதை உணர்த்தும் விதமாக, அனைவராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாக இவ்விழா அமையப்பெற்றது.

மஸ்ஜிதுல் கைராத் பள்ளிவாசலுக்கு உயர் மின் இணைப்பு – ரஹ்மத் மன்சூர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வழங்கப்பட்டது.!(ஏ.எஸ்...
09/09/2025

மஸ்ஜிதுல் கைராத் பள்ளிவாசலுக்கு உயர் மின் இணைப்பு – ரஹ்மத் மன்சூர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வழங்கப்பட்டது.!

(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)

அல்லாஹ்வின் பாதையில் சமூக நலனுக்காக தொடர்ந்து அர்ப்பணித்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன், YWMA நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுத்துச் செயல்பட்ட மஸ்ஜிதுல் கைராத் பள்ளிவாசலுக்கு உயர் மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (09) மிகுந்த ஆனந்தத்துடன் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு, தனது பொற்கரங்களினால் பள்ளிவாசலுக்கான உயர் மின் இணைப்பை திறந்து வழங்கினார்.

மேலும், பள்ளிவாசலின் தற்போதைய குறைபாடுகள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து நிர்வாகத்தினருடன் அவர் ஆழ்ந்த கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பிரதேசவாசிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

சமூக நலனுக்காக அல்லாஹ்வின் பாதையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய உயரிய சேவைகள் தொடர்ந்து நிறைவேறி, பலருக்கும் நன்மை பயக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.

மின்சார கட்டணத்தை மேலும் 6.8 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானம்.!மின்சார கட்டணத்தை மேலும் 6.8 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு ...
09/09/2025

மின்சார கட்டணத்தை மேலும் 6.8 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானம்.!

மின்சார கட்டணத்தை மேலும் 6.8 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வாய்வழி மூல பொது ஆலோசனைகள் பெறும் நடவடிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக முன்வைக்க முடியுமெனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி மாகாண மட்டத்தில் சாதனை.!2025 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்டப் பாடசாலைகளுக்கு இடையி...
09/09/2025

கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி மாகாண மட்டத்தில் சாதனை.!

2025 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், திருகோணமலை கந்தளாய் ஆயிஷா மகளிர் மஹா வித்யாலய மாணவி இப்திகார் சுல்பா, 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 60m மற்றும் 100m ஓட்டப்போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று, தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

​இம்மாணவி கடந்த 2023 மாகாண மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

​அவரது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றியும் பாராட்டும்!

-பாடசாலை செய்திப் பிரிவு

09/09/2025
சம்மாந்துறை பொலிஸாரினால் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு.!(தில்சாத் பர்வீஸ்)சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் க...
09/09/2025

சம்மாந்துறை பொலிஸாரினால் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு.!

(தில்சாத் பர்வீஸ்)

சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் கனரக வாகன சாரதிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

வாகனங்களினால் பயணிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றவும், ஹேண்ட் பிரேக், சிக்னல் விளக்குகள், முகப்பு விளக்குகள் உள்ளிட்ட மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, பழுதடைந்த வாகனங்கள் சில பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில், குறைபாடுகளை சரிசெய்ய சாரதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

சாரதிகள் தங்களது வாழ்க்கையையும், பிறர் வாழ்வையும் பாதுகாக்க பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் முக்கியம் பற்றி பொலிஸ் அதிகாரிகளினால் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

மேலும், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நேரத்திலும், முடிவடையும் நேரத்திலும் வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கியதுடன் இதனை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து ஒழுங்கும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இவ்விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையானது, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறி கட்டளையின் பிரகாரம், அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜேரத்ன, போக்குவரத்து பிரிவு பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்திற்கு பிரியாவிடை!(தில்சாத் பர்வீஸ்)சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில...
09/09/2025

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்திற்கு பிரியாவிடை!

(தில்சாத் பர்வீஸ்)

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 5 வருடம் 9 மாதம் 10 நாட்களாக கடமையாற்றிய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

அவரது சேவைக்காலத்தில் பொது மக்கள் மத்தியிலும், பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது. இதனால் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாரிய கொள்ளைச் சம்பவம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என்பன இடம் பெறாமல் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் கருத்து தெரிவிக்கையில் "சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் சேவைக் காலத்தில் பல்வேறு மாற்றங்கள் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி விசேடமாக போதைப்பொருள் ஒழிப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தனது முழுமையாக அர்ப்பணித்த ஒருவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் சிறந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவு செய்யப்பட்டு பொலிஸ் திணைக்களத்தினால் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது பிரியாவிடை பெற்றுச் செல்லும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கே.டி.எஸ் ஜெயலத் கருத்து தெரிவிக்கையில்" சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் எனது தலைமையின் கீழ் நூறு வீதத்திற்கு (100%) எழுவது வீதமான (70%) பல்வேறு பெருங்குற்றப்பிரிவு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இதற்கு சம்மாந்துறை பொதுமக்கள் மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியாக இருந்தனர். இவ்வாறு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர், பொலனறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை பிரதேச செயலக தீடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல் கஜன்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய உபதேச குழுவின் தவிசாளர் ஏ.ஜே. காமில் இம்டாட்,அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா, சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹக்கீம், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ் கே.எம்.கே.றம்சீன், ஆர்.எஸ்.எச். லங்கா சோலர் நிறுவனத்தின் தவிசாளர் எம்.எஸ்.எம்.றியால் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு, அவரின் சேவையை பாராட்டி நினைவுப் பரிசுப் பொருட்கள், பொண்ணாடை என்பன வழங்கி வைக்கப்பட்டது.

சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு.!(தில்சாத் பர்வீஸ்)சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்க...
09/09/2025

சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு.!

(தில்சாத் பர்வீஸ்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெய்னாகாடு பகுதியில் இன்று (09) செவ்வாய்க்கிழமை 2 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவன் சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு!.(தில்சாத் பர்வீஸ்)சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பத...
09/09/2025

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு!.

(தில்சாத் பர்வீஸ்)

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார இன்று (09) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட இருப்பதாகவும், சமூக நலனுக்கேற்ப குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என புதிய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப் குமார அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

முன்னாள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் இடமாற்றமாக மொனராகலை மாவட்டம் பிபிலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Address

Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Metro Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Mirror:

Share