Metro Mirror

Metro Mirror Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka

//கிழக்கு வாசலுக்குப் போவதும், கேட்கும் போதெல்லாம் அதைச் சரிசெய்ய முடியும் என்று தொடர்ந்தும் கூறப்பட்டது ஆனால் எந்த முன்...
11/05/2026

//கிழக்கு வாசலுக்குப் போவதும், கேட்கும் போதெல்லாம் அதைச் சரிசெய்ய முடியும் என்று தொடர்ந்தும் கூறப்பட்டது ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.//

//தொடர்ந்து இவ்வாறான பதில்களில் அதாஉல்லா மீது நம்பிக்கை இழந்தோம்//

//உள்ளூராட்சி தேர்தல் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய காங்கிரஸின் கிழக்கு வாசலை அணுகிய போது கைவிரிக்கப்பட்டது.//

//பள்ளிவாசலை சாய்ந்தமருது நகர சபைக்கு தனியாக தேர்தல் அறிவிக்கும்படி கோரி தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்புமாறு கூறப்பட்டது.//

//அதாஉல்லா அவர்களிடம் வழக்கு போடுவது சம்பந்தமாக கூறிய போது கேசட் செயலில் இல்லை என்றும், வாதாடுவதற்கு சரியான பாயிண்ட் இல்லை என்றும் கூறினார்//

//ஒரு முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் அதாஉல்லாவே இப்படிக் கூறியதும் அவநம்பிக்கை ஏற்பட்டாலும், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை.//

ஏ.எல்.எம் சலீமின் பகிரங்க சாட்சியம்

நகர சபை வழக்கு நீயே சாட்சி!

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வழக்குத் தீர்ப்பும், அரசியல் பித்தலாட்ட நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைத்த தீர்ப்பு.

சாய்ந்தமருது நகர சபை வெற்றி பெற்று எமதூருக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில், வல்லவன் அல்லாஹ்வுக்கு என்றும் நன்றி கூறுவோம்.

அல்ஹம்துலில்லாஹ்!

பொறுமைக்கும் எல்லை உண்டு என்பார்கள், ஆனால் எல்லை தாண்டிய பொறுமை. எமது பொறுமைக்குக் கிடைத்த பரிசு இப்பெரும் வெற்றியாகும்.

நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

அதற்காக பாடுபட்ட ஒவ்வொருக்கும் கோடி நன்றிகள் உரித்தாகட்டும். இறைவன் ஈருலக வெற்றியை வழங்கட்டும் என்ற பிரார்த்தனையுடன்!

இந்த வழக்கைப் பொறுத்த வரையில், ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.

சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் செய்யப்பட்ட விசேட வர்த்தமானி 14.02.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. பின்பு 18.02.2020ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய ரீதியில் பல அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுவும் சில அரசியல் விசமிகள் அரங்கேற்றிய பொய்யான, ஓட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதியாக காட்டிய ஒரு துரதிஷ்டமான செயலாகும். அதற்கான கூலிகளை வல்லவன் அல்லாஹ் வழங்கப் போதுமானவன்.

தொடர்ந்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குச் செல்வதா அல்லது வழக்குப் போடுவதா என்ற சிந்தனை வந்த போது, தேர்தலே முன்னின்றது.

தேர்தலில் MPயைப் பெற்று வென்ற கையுடன் நகரசபை வர்த்தமானியை மீளக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனங்களில் இருந்தது.

எமதூர் மக்கள் மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபையின் வேண்டுகோளின் பேரில், பல அரச உயர் பதவிகளைத் துறந்து முன் ஓய்வெடுத்து எமதூர் மக்களுடன் நானும் முன்னின்று ஒருமித்த கருத்துடன் சுமார் 10,000க்கு மேற்பட்ட வாக்குகளை தேசிய காங்கிரசுக்குப் பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால் தேர்தல் நடைபெற்று MP இருந்தும், ஒவ்வொரு வருடமும் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் கழிந்தது.

கிழக்கு வாசலுக்குப் போவதும், கேட்கும் போதெல்லாம் அதைச் சரிசெய்ய முடியும் என்று தொடர்ந்தும் கூறப்பட்டது ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

தொடர்ந்த இவ்வாறான பதில்களில் நம்பிக்கை இழந்த நிலையில், நாங்கள் இவருடங்களாக வழக்குக்குத் தேவையான ஆவணங்களை சேர்ப்பதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டோம். அது மட்டுமன்றி, பல பிரபல சட்டத்தரணிகளை சந்தித்து ஆலோசனைகளையும் பெற்று வந்தோம். சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷஹித், இஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் நஜீப் போன்றோரை சந்தித்தோம்.

இறுதியாக, உள்ளூராட்சி தேர்தல் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய காங்கிரஸின் கிழக்கு வாசலை அணுகிய போது கைவிரிக்கப்பட்டது. பள்ளிவாசலை சாய்ந்தமருது நகர சபைக்கு தனியாக தேர்தல் அறிவிக்கும்படி கோரி தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்புமாறு கூறப்பட்டது.

மேலும் நம்பிக்கை இழந்த நாங்கள், இதற்கு வழக்கைத் தவிர வேறு வழி இல்லை என்று அறிந்த பிறகு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

இடைக்கால உத்தரவு பெறப்பட்டால் மட்டுமே இந்த வழக்கை கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில், அதாஉல்லா அவர்களிடம் வழக்கு போடுவது சம்பந்தமாக கூறிய போது கேசட் செயலில் இல்லை என்றும், வாதாடுவதற்கு சரியான பாயிண்ட் இல்லை என்றும் கூறினார். ஒரு முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் இப்படிக் கூறியதும் அவநம்பிக்கை ஏற்பட்டாலும், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

நான் அவரிடம் கூறிய வார்த்தை, “ஏன் வழக்குப் போடவில்லை என்று சாய்ந்தமருது மக்கள் என்னைப் பிடிப்பார்கள்” என்று கூறிவிட்டு வந்தேன். வழக்கு என்ற இலக்கிலிருந்து நாங்கள் மாறவில்லை.

ஆவணங்களை கையளித்து வழக்கு தாக்கல் செய்தோம்.

குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் பிந்தியிருந்தால்கூட எங்களது வழக்கு திசை மாறி இருக்கும்.

இடைக்கால உத்தரவு இல்லாமல் நோமினேஷன் முடிவடைந்தால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

சிலவேளை தேர்தல் நடைபெற்றும் இருக்கும்.

எல்லாம் அவன் செயல். வல்லவன் அல்லாஹ் நாடிவிட்டான் என்றால் யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

அரசியல்வாதிகளுடைய நாடகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

எமது வழக்கை சிரேஷ்ட சட்டத்தரணியும், பாரிஸ்டருமான திரு சுரேன் ஜனராஜ் அவர்கள் தலைமையிலான குழு சமர்ப்பித்து வாதப் பிரதிவாதங்களை மேற்கொண்டது.

பிரதிவாதிகளாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர், தேர்தல் ஆணையம், எல்லை நிர்ணய ஆணையம், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பெயரிடப்பட்டன.

இரண்டு இடையீட்டு மனுக்களை மருதமுனையிலிருந்து ஒருவரும், கல்முனையிலிருந்து மற்றொருவரும் சமர்ப்பித்தனர். முதலாமவர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி, சட்ட முதுமாணி, SLMC செயலாளர் நாயகம், MP நிசாம் காரியப்பர் அவர்களும், மற்றவர் சார்பாக மற்றொரு சிரேஷ்ட சட்டத்தரணியும், அமைச்சுக்கள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே அவர்களும், தேர்தல் ஆணையம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு சாலிய பீரிஸ் அவர்களுமாக பலர் கலந்து கொண்டனர்.

சில வேளைகளில் வழக்கு இலக்கம் கூறப்படும் போது சுமார் 10க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் எழுந்து நிற்பார்கள்.

எனவே இவ்வாறு ஏறக்குறைய கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்று, கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இறுதி வாதப் பிரதிவாதம் பிற்பகல் வேளையில் நடைபெற்றது.

எமது சிரேஷ்ட சட்டத்தரணியும், பாரிஸ்டருமான திரு சுரேன் ஜனராஜ் அவர்கள் நீண்ட நேரம் தனது முன்வைப்புக்களைச் செய்தார். பதிலுக்கு முதுமாணி நிசாம் காரியப்பர் மற்றும் ADG நெரின் புள்ளே போன்றோர் கடுமையான பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

இறுதியில், மதிப்புமிக்க நீதிபதிகள் வாதப் பிரதிவாதங்களை முடிவுறுத்தி, எழுத்து மூலமான முன்வைப்புக்கு காலம் வழங்கி தீர்ப்பு வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வியாழன் 07.05.2026ஆம் திகதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் அந்த நாள் வந்து தீர்வு வழங்கப்பட்டது.

மருதூர் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட்ட நாள். அரசியல் நாடகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்டமுறையானது என்றும், தனித்தனியாக கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது நகர சபைக்கான வட்டாரங்களுக்கான எல்லைகள் தேசிய குழுவினால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயம் செய்யப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இவ்வெற்றியானது சாய்ந்தமருதை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. UC என்ற இலக்கை உள்ளத்தில் இறுதிவரை சுமந்து கொண்டு சென்ற செயற்பாட்டாளர்கள், போராளிகள், ஓட்டு மொத்த மருதூர் மக்கள் அனைவருக்கும் உரித்தானது.

எனவே, இப்பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தில் பிரிவினைகளையும் அரசியல் பேதங்களையும் தாண்டி நின்று, எதிர்காலத்தில் ஒரு வளமிக்க முன்மாதிரியான சபையாக சாய்ந்தமருது நகர சபை மிளிர, எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.

மேலும், சுயநலமற்ற மருதூரை நேசிக்கும் ஒரு குழுவிடம் அதிகாரம் சென்றடைய எனது வலுவான பிரார்த்தனைகளை முன்வைக்கிறேன்.

பாரக்கல்லாஹு பீக்கும்......... ஆமீன்!

உங்களில் ஒரு நகரசபை போராளியாக என்றும்
A.L.M சலீம்

சாய்ந்தமருது நகர சபை பிரகடணம் சட்ட ரீதியானது.!புதிய கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கான வட்டார...
07/05/2026

சாய்ந்தமருது நகர சபை பிரகடணம் சட்ட ரீதியானது.!

புதிய கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கான வட்டாரங்கள் 2 மாதங்களுக்குள் மீள் நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.!

-உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கல்முனை மாநகர சபை Vs சாய்ந்தமருது நகர சபை விவகார வழக்கு; உயர் நீதிமன்ற தீர்ப்பு நாளை;நிசாம் காரியப்பர் தெரிவிப்பு.!
06/05/2026

கல்முனை மாநகர சபை Vs
சாய்ந்தமருது நகர சபை விவகார வழக்கு; உயர் நீதிமன்ற தீர்ப்பு நாளை;
நிசாம் காரியப்பர் தெரிவிப்பு.!

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஜேர்மன் பயணம்.!(அஸ்லம் எஸ்.மௌலானா)அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌப...
02/05/2026

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஜேர்மன் பயணம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இரு வார கால விஜயம் மேற்கொண்டு இன்று ஜேர்மன் பயணமாகிறார்.

ஜேர்மனில் இடம்பெறவுள்ள Workshop on Connective Cities Deep Dive on Water Resilience Municipalities எனும் பயிற்சி செயலமர்வில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.

இந்த செயலமர்வில் ஜேர்மன் நாட்டிலுள்ள 03 மாநகர சபைகளினதும் மேலும் 05 நாடுகளில் இருந்து தலா ஒரு மாநகர சபை என்ற ரீதியிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இரு வார காலத்திற்கான முழுமையான புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் அக்கரைப்பற்று மாநகர சபையின் பொறியியலாளர் ஹனீப் மொகமட் அவர்கள் முதல் ஒரு வார கால உத்தியோகபூர்வ செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், இந்த செயலமர்வைத் தொடர்ந்து சுவிஸ்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரு வார காலம் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பையும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் கடந்த காலங்களில் ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

29/04/2026
பிரதேச வைத்தியசாலைகளில் குருதித் தட்டுப்பாடு.!சாய்ந்தமருதில் இரத்ததான முகாம்.!அன்பின் உறவுகளே எமது பிரதேச வைத்தியசாலைகளி...
29/04/2026

பிரதேச வைத்தியசாலைகளில் குருதித் தட்டுப்பாடு.!

சாய்ந்தமருதில் இரத்ததான முகாம்.!

அன்பின் உறவுகளே எமது பிரதேச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள குருதித் (இரத்தத்) தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் Myown Education Aid சமுகசேவை பிரிவு மற்றும் United Power House ஆகியவற்றின் பூரண அனுசரணையுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இனைந்து இரண்டாவது முறையாகவும் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

எனவே இதில் குருதிக்கொடை வழங்கக்கூடியவர்கள் அனைவரும் கலந்து இந்த உயிர் காக்கும் உன்னத பணியில் நீங்களும் இனைந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இடம்: சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம்

காலம்: 02/05/2026 சனிக்கிழமை

நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை

உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்.

ஓர் உயிரை வாழ வைத்தவர் எல்லா உயிர்களையும் வாழ வைத்தவர் போல்ஆவார் (அல் குர்ஆன்)

ஏற்பாடு: ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை மற்றும் மஜ்லிஸ் சூரா சாய்ந்தமருது.

ஊடகப் பிரிவு
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை சாய்ந்தமருது

மர்ஹூம் சக்காப் இஸட். மௌலானா அவர்களின் மனைவி காலமானார்.!சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி- ஜின்னா லேனில் வசித்து வந்த லத்தீபா...
27/04/2026

மர்ஹூம் சக்காப் இஸட். மௌலானா அவர்களின் மனைவி காலமானார்.!

சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி- ஜின்னா லேனில் வசித்து வந்த லத்தீபா எஸ்.மௌலானா காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹூம் இஸ்மாயில் - மர்ஹூமா ஆசுரா உம்மா ஆகியோரின் புதல்வியும்

ஓய்வுபெற்ற ஆசிரியர் மர்ஹூம் சக்காப் இஸட். மௌலானா அவர்களின் மனைவியும்

சித்தி மும்தாஜ், இனாம் மௌலானா, றிஸ்வான் மௌலானா, அஸ்வான் மௌலானா, ஜஹாங்கீர் (சௌபான்) மௌலானா, அஸ்லம் மௌலானா, முஹாஜிர் மௌலானா, றமீஸ் மௌலானா ஆகியோரின் அன்புத் தாயாரும்

மர்ஹூம் முக்தார், மர்ஹூம் அஸீஸ், ஹைருன்னிஸா ஆகியோரின் சகோதரியும்

அஜ்மல்கான், மஜ்மலா, முபாயிஸா, ஜனூபா, நுமைஸா, ஹமீமா, சிறீன்தாஜ், றினோஸா ஆகியோரின் மாமியாவும் ஆவார்.

அன்னாரது ஜனாஸா சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி- ஜின்னா லேனில் அமைந்துள்ள ஊடகவியலாளர் அஸ்லம் எஸ்.மௌலானா அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டு முயற்சி: சந்தேக நபர் அடையாளம்.!வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க விருந்து நிகழ்வில் துப்ப...
26/04/2026

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டு முயற்சி: சந்தேக நபர் அடையாளம்.!

வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர் குறித்த விபரங்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சந்தேக நபர் டொரன்ஸ், கலிபோர்னியாவை சேர்ந்த 31 வயதான கோல் தோமஸ் ஆலன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளதோடு, மேலதிக பரிசோதனைகளுக்காக உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ பீட மாணவி பாத்திமா இஸ்ரா காலமானார்.!சாய்ந்தமருது பிரதான வீதி, கோல்ட் ஹவுஸ் லேனில் வசித்து வந்த பாத்திமா இஸ்ரா (...
26/04/2026

மருத்துவ பீட மாணவி பாத்திமா இஸ்ரா காலமானார்.!

சாய்ந்தமருது பிரதான வீதி, கோல்ட் ஹவுஸ் லேனில் வசித்து வந்த பாத்திமா இஸ்ரா (மருத்துவ பீட மாணவி) இன்று அதிகாலை கொழும்பில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் எம்.ஐ.எம். சாதாத் (விரிவுரையாளர்) - ஏ.ஆர்.சித்தி சபீனா (ஆசிரியை, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி) தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

பாத்திமா நுஸ்ரா (பொறியியல் பீட மாணவி) மற்றும் பாத்திமா நுஸ்ஹா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.

Address

Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Metro Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Mirror:

Share