Metro Mirror

Metro Mirror Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka

முதல் நாளில் 151 ரூபா கோடி வசூல் செய்த 'கூலி'நேற்று வெளியான `கூலி' திரைப்படம், உலக அளவில் ரூ.151 கோடிக்கு மேல் வசூல் செய...
15/08/2025

முதல் நாளில் 151 ரூபா கோடி வசூல் செய்த 'கூலி'

நேற்று வெளியான `கூலி' திரைப்படம், உலக அளவில் ரூ.151 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சுதர்சன் இன்று மாரடைப்பால் காலமானார்.இவரது திடீர் மறைவு யாழ் மண்ணிற்கு மட்டுமல்ல முழுத்...
15/08/2025

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சுதர்சன் இன்று மாரடைப்பால் காலமானார்.

இவரது திடீர் மறைவு யாழ் மண்ணிற்கு மட்டுமல்ல முழுத் தேசத்திற்கும் பேரிழப்பாகும்.

15/08/2025

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட - பீடாதிபதியாக பேராசிரியர் MALA.ஹலீம் மீண்டும் தெரிவு.!
👇

மினி சூறாவளியால் சேதமடைந்த அக்கரைப்பற்று மீன் விற்பனை நிலையத்தின் கூரைத்தகடுகள் திருத்தம்.!அக்கரைப்பற்று மீன் விற்பனை நி...
15/08/2025

மினி சூறாவளியால் சேதமடைந்த அக்கரைப்பற்று மீன் விற்பனை நிலையத்தின் கூரைத்தகடுகள் திருத்தம்.!

அக்கரைப்பற்று மீன் விற்பனை நிலையத்தின் கூரைத்தகடுகள் அண்மையில் ஏற்பட்ட மினி சூறாவளி காற்றினால் ஒரு பகுதி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டது.

இவ்விடயம் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர், மாநகர முதல்வர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் கவனத்திற்கு மீன் விற்பனையாளர்கள் சங்கத்தினால் கொண்டு வரப்பட்டது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட முதல்வர் வேலைகளை உடனடியாக செய்ய வேண்டும் என பணிப்புரை வழங்கியதனால் கூரைத் தகடுகள் போடும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வேலைகள் ஆரம்பிக்கப்படும் போது பிரதி முதல்வர் யூ.எல் உவைஸ், உறுப்பினர்களான ஏ.எஸ்.ஏ பாசித், ஏ.சி.எம் நுஹ்மான், எம்.என்.எம் றியால், ஏ.கே.ஏ பாஹிம், மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் விரைவாக நடைபெறுவதற்கு உத்தரவுகளை வழங்கிய மாநகர முதல்வருக்கும், மாநகர உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்கட்டும்.

மாநகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.ஏ பாசித் அவர்கள் இவ்வேலைகளை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ். பாரூக் ஓய்வுபெற்றார்.!✍️எம் என் முஹம்மது அக்கரைப்பற்று பிரதேச ...
15/08/2025

அக்கரைப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ். பாரூக் ஓய்வுபெற்றார்.!

✍️எம் என் முஹம்மது

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த நிருவாக உத்தியோகத்தர் எம். எஸ். பாரூக் அவர்கள், தனது 35 ஆண்டுகளான அரசாங்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார்.

கடந்த 13 வருடங்களாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக மிகுந்த பொறுப்புடன் தனது கடமைகளை ஏற்று, சக உத்தியோகத்தர்களிடமும் அன்பும், மரியாதையும் மிக்க ஒத்துழைப்புடன் பணியாற்றியவர்.

இவரது ஓய்வை முன்னிட்டு இடம்பற்ற சிறப்பு நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ;கிராம நிலதாரிகள் மற்றும் பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

அரச சேவையில் அவரது அர்ப்பணிப்பு மனப்பான்மையையும், சிறப்பான பணியாற்றலையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

15/08/2025

தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்; நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை என்கிறது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு.!

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் ஹலீம் மீண்டும் தெரிவு.!கல்முனையைச் சேர்ந்த புகழ்ப...
15/08/2025

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் ஹலீம் மீண்டும் தெரிவு.!

கல்முனையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் பொறியியல் நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக (SEUSL) பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் தெரிவாகியுள்ளார்.

இந்தத் தெரிவு இன்று பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஒன்றுகூடலில் நடைபெற்றது.

பீட உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில் அவர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டமை, அவரது தலைமைத்துவம் மற்றும் பீட முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு மீது அங்கத்தினர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

கல்முனையைச் சேர்ந்த பாடசாலை அதிபர் மறைந்த மொஹமட் அப்துல் லத்தீப் மற்றும் கதீஜா உம்மா ஆகியோரின் மூன்றாவது மகனாகப் பிறந்த ஹலீம், 1970 முதல் 1980 வரை கல்முனை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 10 வரை கல்வி கற்றார்.

பின்னர் அம்பாறை மத்திய கல்லூரி (தற்போது டி.எஸ். சேனாநாயக்க தேசிய பாடசாலை) யில் தரம் 11 மற்றும் 12 கல்வியைத் தொடர்ந்து, பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கணிதத் துறையில் சிறப்புப் பட்டப்படிப்பிற்குத் தெரிவானார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் சிறப்புப் பட்டம் பெற்ற பிறகு, 1993 ஆகஸ்ட் மாதம் வரை அங்கு மின்னியல் மற்றும் இலத்திரனியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

பின்னர் ஹாங்காங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பையும், அமெரிக்காவின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜியில் கலாநிதி பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

1996 இல், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பெல் ஆய்வகத்தில் (Bell Labs) ஆய்வாளராக இணைந்து, மொபைல் மற்றும் நிலையான வயர்லெஸ் தொடர்பாடல் துறையில் அதிநவீன ஆராய்ச்சி மேற்கொண்டார். பின்னர் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் நியூ ஜெர்சி இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

2009 முதல் 2011 வரை சவுதி அரேபியாவின் கிங் பஹத் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும், அதன் பின்னர் ஹாய்ல் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் பதவி வகித்தார்.

2016-2017 காலப்பகுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து, பொறியியல் கற்கைகளுக்கான I.E.S.L. அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 2020 ஜனவரியில் முதன்மைப் பேராசிரியராகவும், பிப்ரவரியில் துறையிடைசார் கற்கைகள் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமைத்துவத்தில், பல்கலைக்கழகத்தில் டயலொக் எக்சியாடா நிறுவனத்துடன் இணைந்து 5வது தலைமுறை வயர்லெஸ் கண்டுபிடிப்பு மையம் (5GIC) நிறுவப்பட்டது. இதன் பணிப்பாளராக தற்போது அவர் பணியாற்றி வருகிறார்.
பதவிக்காலம் மற்றும் மீண்டும் தெரிவு
2022 ஆகஸ்ட் 18 முதல் பீடாதிபதியாகப் பொறுப்பு ஏற்ற ஹலீம், தனது முதல் பதவிக்காலத்தில் பீடத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2025 ஆம் ஆண்டின் தெரிவிலும் அவர் ஒருமித்த ஆதரவுடன் மீண்டும் பீடாதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.

பேராசிரியர் ஹலீம், உலகத் தரம்வாய்ந்த பல சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளில் தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார். பல தரம்வாய்ந்த நூல்கள், கட்டுரைகள், மற்றும் தொழில்நுட்பக் கையேடுகள் அவரால் வெளியிடப்பட்டுள்ளன. இவரது ஆய்வுகள், தொலைத்தொடர்பு மற்றும் வயர்லெஸ் நுட்பங்களில் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகின்றன.

பேராசிரியர் ஹலீமுக்கு முன் பீடாதிபதியாக பணியாற்றிய கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக 2013 முதல் 2022 வரை மூன்று தவணைகள் பீடாதிபதியாக இருந்ததுடன், தற்போது உபவேந்தராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஹலீமின் மீண்டும் தெரிவு, அவர் கொண்டுள்ள தலைமைத்துவத் திறமை, கல்வித் துறையில் அர்ப்பணிப்பு, மற்றும் பீட முன்னேற்றத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளைப் பிரதிபலிக்கிறது.

-எம்.வை.அமீர்

15/08/2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.!

15/08/2025
மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கன மழை; ஜம்மு காஷ்மீரில் வெள்ளப் பெருக்கினால் 55 பேர் பலி,!ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார்...
15/08/2025

மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கன மழை; ஜம்மு காஷ்மீரில் வெள்ளப் பெருக்கினால் 55 பேர் பலி,!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

15/08/2025

விமல் வீரவன்ச CID யில் ஆஜர்; உயிர்த்த ஞாயிறு குறித்து வெளியிட்ட கருத்து பற்றி விசாரணை.!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Metro Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Mirror:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share