Metro Mirror

Metro Mirror Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka

05/11/2025
அமெரிக்காவின் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய விமானம்.!அமெரிக்...
05/11/2025

அமெரிக்காவின் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய விமானம்.!

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் லூயிஸ்வில்லிலிருந்து ஹொனலுலுவில் உள்ள டேனியல் கே. இனூயே சர்வதேச விமான நிலையத்திற்குச் புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த விமானப் பணியாளர்கள் மூவர் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் தரையில் விழுந்தபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ ஒரு மைல் தூரத்திற்குப் பரவியது மற்றும் இதனால் கரும்புகை வானில் சூழ்ந்தது.

At least 11 people were injured, the Kentucky governor said, and two nearby businesses were struck by the plane.

05/11/2025

இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி.!

யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது.

இலங்கையின் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் பிரதான தேசிய ஒத்திகை பயிற்சி களுத்துறை மாவட்டத்தில் நடைபெறுகிறது. இது இன்று காலை 8.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology), கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், முப்படைகள் (இராணுவம், கடற்படை, விமானப்படை), பொலிஸ், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம், உள்ளூராட்சி மன்றங்கள், பாடசாலைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.

04/11/2025

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிட நிர்மாண வேலைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சரவை தீர்மானம்.!

இதயச் செயலிழப்புக்கு வாய்ப்பு.!
04/11/2025

இதயச் செயலிழப்புக்கு வாய்ப்பு.!

04/11/2025

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானம்.!

Railway பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்.!இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரத...
04/11/2025

Railway பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்.!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

165 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை புகையிரத சேவை இலங்கை புகையிரத திணைக்களத்தின் பல்வேறு பதவிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் கூட்டாக மேற்கொள்கின்ற சேவையாகும்.

குறித்த திணைக்களத்தின் கீழ் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகள் புகையிரத சேவையை பேணிச் செல்வதற்குத் தேவையான பதவிகளாகும்.

புகையிரத் திணைக்களத்தின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி போன்ற பதவிகளுக்கு ஆண் உத்தியோகத்தர்கள் மாத்திரம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதுடன், கண்காணிப்பு முகாமையாளர் பதவிக்கு 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெண் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டனர்.

அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கமைய அரச துறையில் இதுவரை பெண்களை ஆட்சேர்ப்புச் செய்யாத பதவிகளுக்குப் பெண்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை-சவூதி உறவின் ஆன்மீகப் பாலமாகத் திகழும் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!✍️எஸ். சினீஸ் கான்இலங்கை மற்றும் சவூதி அ...
04/11/2025

இலங்கை-சவூதி உறவின் ஆன்மீகப் பாலமாகத் திகழும் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!

✍️எஸ். சினீஸ் கான்

இலங்கை மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கிடையேயான உறவு பல துறைகளில் நீண்டகாலமாக வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக கல்வி, சமய, கலாச்சாரம் மற்றும் மனிதநேயத் துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை நிலைநிறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டியை மூன்றாவது தடவையாக நடத்த தீர்மானித்துள்ளமை பெருமைக்குரியது.

இந்தப் போட்டி 2025 டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் சிறந்த குர்ஆன் மனன மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டி, இஸ்லாமிய கல்வியையும், குர்ஆனின் புனித வசனங்களை மனனம் செய்தை ஊக்குவிக்கும் ஒரு உயர்ந்த மேடையாக அமையும்.

இந்த உயரிய முயற்சிக்கு பின்னணியில் நிற்பவர் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள். அவரது அர்ப்பணிப்பு, மற்றும் இஸ்லாமிய கல்வி, கலாச்சார வளர்ச்சிக்கான அவரது ஆழ்ந்த அக்கறை, இலங்கையின் முஸ்லிம் சமூகத்தினரிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் இலங்கையில் தனது பதவிக்காலத்திலிருந்து இதுவரை பல மத, கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் வழிநடத்தும் சவூதி அரேபிய தூதரகம், இலங்கையின் இளைஞர்கள் மார்க்க கல்வியைப் பெறவும், குர்ஆன் மனனத்தில் திறம்பட விளங்கவும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

இது ஒரு ஆன்மீக விழிப்புணர்வின் திருவிழா. இளம் தலைமுறையினருக்கு அல்லாஹ்வின் வசனங்களை மனனம் செய்யும் ஊக்கத்தையும், அவர்களின் வாழ்வில் நற்குணம், இறையச்சச் மற்றும் ஒழுக்கத்தின் அடித்தளத்தையும் வலுப்படுத்துகிறது.

இலங்கையில் சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு, இஸ்லாமிய பண்பாட்டின் ஒளியையும் பரப்பும் சிறந்த சேவையாகும். அவரின் தன்னலமற்ற பணிகள், இலங்கை-சவூதி உறவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாலமாக என்றும் நினைவுகூறப்படும்.

ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி - 2025✍️ எஸ். சினீஸ் கான்எதிர்வரும் நவம்பர் 9 முதல் 12 வரை சவூதி அரேபியா தனது ஐந்தாவது ஹஜ் ...
04/11/2025

ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி - 2025

✍️ எஸ். சினீஸ் கான்

எதிர்வரும் நவம்பர் 9 முதல் 12 வரை சவூதி அரேபியா தனது ஐந்தாவது ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சியை “மக்காவிலிருந்து உலகம் நோக்கி” என்ற தலைப்பில் ஜித்தா சூப்பர்டோம் (Jeddah Superdome) அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த சர்வதேச நிகழ்வு, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தினால் (Ministry of Hajj and Umrah) ஏற்பாடு செய்யப்படுவதுடன், உலகம் முழுவதிலுமிருந்து ஹஜ் பயணிகளை சேவையாற்றும் முறைமைகளை மேம்படுத்துவதில் சவூதி அரசின் தொடர்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த உயரிய முயற்சி, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவூதி அரேபியாவின் மன்னருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சௌத் அவர்களின் கருணைமிக்க தலைமையிலும், இளவரசர் முகம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சௌத் அவர்களின் புதுமைமிக்க பார்வையிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இவர்களின் புத்திசாலித்தனமான வழிநடத்தல் மற்றும் Vision 2030 இலக்குகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பு, ஹஜ் மற்றும் உம்ரா துறையை உலக தரத்துக்கு உயர்த்தியுள்ளது.

இந்த மாநாடு, ஹஜ் சேவைகள் துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய தீர்வுகளை ஆராயவும் ஒரு மேடை அமைக்கிறது. மேலும, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் ஹஜ் பயண அனுபவத்தின் தரத்தை உயர்த்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

மொத்தம் 52,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இக்கண்காட்சியில் 13 துறைகளிலிருந்து 260-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. சுற்றுலா, சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 95 சர்வதேச நிபுணர்கள் 80 கலந்துரையாடல்கள் மற்றும் 60 பணிமனைப் பயிற்சிகளில் பங்கேற்று, எதிர்கால சவால்களுக்கு 100-க்கும் மேற்பட்ட புதுமையான தீர்வுகளை முன்வைக்க உள்ளனர். 150000 மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், இந்நிகழ்வில் சில முக்கிய புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறது. அவற்றில் “E’asha-thon” எனப்படும் உணவு விநியோக முறைமையை நவீனப்படுத்தும் திட்டம், “Humanizing the Holy Sites” எனும் புனித இடங்களில் பயணிகளுக்கான வசதிகளை மனிதநேயமான முறையில் மேம்படுத்தும் முயற்சி, மற்றும் “Sustainable Solutions” எனும் சுற்றுச்சூழல் நட்பு ஆற்றல், சீரான வள மேலாண்மை போன்ற நிலைத்தன்மை முயற்சிகள் அடங்கும்.

மேலும், “Innovation Zone” பகுதியில் 15 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் கூட்ட நெரிசல் முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு திறனை மேம்படுத்தும் தொடர்பில் கலந்துரையாடப்படும்.

மாநாட்டின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. இவை ஹஜ் துறையில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, சேவைத் தரம், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மாநாடு மூன்று முக்கிய கருதுகோள்களை மையமாகக் கொண்டுள்ளது - டிஜிட்டல் மாற்றம் (Digital Transformation), செயல்முறை முகாமைத்துவம் (Smart Management) மற்றும் செயற்பாட்டு நிலைத்தன்மை (Operational Sustainability).

இவை அனைத்தும் சவூதி அரேபியாவின் Vision 2030 மற்றும் Pilgrim Experience Program இலக்குகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் ஹஜ் பயணத்தை மேலும் எளிதாக்கி, பாதுகாப்பானதும் ஆன்மீகத்தன்மையுடனும் ஆக்குவது இதன் பிரதான நோக்கம்.

“மக்காவிலிருந்து உலகம் நோக்கி” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சி, மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மத் பின் சல்மான் ஆகியோரின் முன்னோக்கிய பார்வை, தலைமைத் திறன், மற்றும் புனித ஹஜ் பயணத்தின் அனுபவத்தை உயர்த்தும் அவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் உலகளாவிய ஆன்மீக மற்றும் தொழில்நுட்பச் சந்திப்பாக அமைய உள்ளது.

Address

Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Metro Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Mirror:

Share