அடையாளம்

அடையாளம் Kanton Marketing PLC

கடந்த 11ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லொன்றில் மூத்த உலமா ஒருவர் ஜும்ஆ பிர­சங்­கத்­தினை...
21/07/2025

கடந்த 11ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லொன்றில் மூத்த உலமா ஒருவர் ஜும்ஆ பிர­சங்­கத்­தினை மேற்­கொண்­டி­ருந்தார்.

இதன்­போது வக்பு செய்ய வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்­தினை கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­ய­துடன் வக்பு செய்தால் கிடைக்கும் நன்­மைகள் தொடர்­பாக புனித அல்-­குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்­பி­டு­கின்ற விட­யங்­களை எல்லாம் சுட்­டிக்­காட்­டினார்.

எனினும், வக்பு சொத்­துக்கள் சூறையா­டப்­ப­டு­வது தொடர்­பிலும் அதற்­காக வழங்­கப்­ப­டு­கின்ற தண்டனைகள் தொடர்பில் எதுவும் குறித்த ஜும்­ஆவில் பேசப்­ப­ட­வில்லை.

ஜும்ஆத் தொழுகை முடி­வ­டைந்த பின்னர் குறித்த மூத்த உல­மா­வினைச் சந்­தித்து இது தொடர்பில் கூறினேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்­ஆவில் நீங்கள் கூறிய விடயம் தொடர்பில் பேசு­கின்றேன் என்று சமாளித்தச் சென்றார்.

குறித்த பள்­ளி­வா­ச­லுக்கு ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை தான் இந்த மூத்த உலமா ஜும்ஆப் பிர­சங்­கத்­திற்­காக வரு­வது வழமை என ஜமாத்­தார்கள் தெரி­வித்­தனர். அப்­படி என்றால் வக்பு சொத்து சூறை­யா­டப்­ப­டு­வது தொடர்பில் குறித்த உல­மாவின் ஜுஆப் பிர­சங்­கத்­தினை கேட்­ப­தற்கு இன்னும் ஆறு மாதங்கள் காத்­தி­ருக்க வேண்டும்.

கபூ­ரியா அரபுக் கல்­லூ­ரிக்கு வக்பு செய்­யப்­பட்ட பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் ஏற்­க­னவே சூறை­யா­டப்­பட்­டு­விட்­டன. கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரிக்­காக வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கான முயற்­சிகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எவ்­வா­றா­யினும், இறை­வனின் உத­வி­யுடன் குறித்த முயற்சி தடுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. இது போன்று எமது மூதா­தை­யர்­க­ளினால் நாட­ளா­விய ரீதியில் எதிர்­கால முஸ்லிம் சமூ­கத்­திற்­காக வக்பு செய்­யப்­பட்ட பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் தற்­போது சூறை­யா­டப்­படுக் கொண்­டி­ருக்­கின்­றன. காத்தான்குடி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான வக்பு செய்யப்பட்ட காணியை அபிவிருத்தி என்ற போர்வையில் சூறையாட ஒரு தரப்பு முயல்வதாக பாடசாலை சமூகத்தினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்­காக வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்கள் சூறை­யா­டப்­ப­டு­வது தொடர்­பான விழிப்­பு­ணர்வு மிகவும் அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும். எனினும், அதனை மேற்­கொள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூ­கங்கள் உள்­ளிட்ட இலங்கை முஸ்லிம் சமூக தவ­றி­விட்­டுள்­ளது.

‘ஜும்ஆ மேடை’ என்­பது சக்தி வாய்ந்த ஊட­க­மொன்­றாகும். இதன் ஊடாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு தேவை­யான விழிப்­பு­ணர்­வு­களை மிகவும் இல­கு­வாக வழங்க முடியும். எனினும், அது வினைத்­தி­ற­னாக இடம்­பெ­று­கின்­றதா என்­பதே இன்று வரை­யுள்ள கேள்­விக்­கு­ரி­யாகும்.

வக்பு சொத்­துக்கள் சூறையா­டப்­ப­டு­வது தொடர்­பி­லான விழிப்­பு­ணர்­வினை ‘ஜும்ஆ மேடையின்’ ஊடாக இல­கு­வாக மேற்­கொள்ள முடியும். அத்­துடன் இந்த சூறையாடல் எனும் பாவத்­திற்­காக இறை­வ­னி­ட­மி­ருந்து கிடைக்­கின்ற தீமைகள் தொடர்பில் எடுத்துக் கூறி அந்தப் பாவத்­தினை தடுக்க வேண்டியதும் உலமாக்களின் கடமையாகும். எனினும், அதனை மேற்­கொள்ள உல­மாக்கள் தவ­றி­விட்­டனர். இதற்­கான சிறந்த உதா­ரணம் தான் கடந்த வாரம் கொழும்பில் இடம்­பெற்ற ஜும்­ஆ­வாகும். ஒரு நன்­மை­யினைக் கூறும் போது அதன் மறு­பக்­க­மான தீமை­யி­னையும் கூற வேண்­டிய சமயத் தலை­­வர்­களின் தலை­யாய கட­மை­யாகும்.

வக்பு சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்கப்படுவதை தடுக்­கின்ற விட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலை­யீடு மிகவும் அவ­சி­யாகும். அத்­துடன் இது தொடர்­பி­லான விழிப்­பு­ணர்­வினை மேற்­கொள்­ளு­மாறு உல­மாக்­க­ளுக்கு அறி­வு­றுத்த வேண்­டி­யது அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலை­யாய கட­மை­யாகும்.

இதனை மேற்­கொள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தவ­ற­விட்­டுள்­ளதை இவ்­வி­டத்தில் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. இலங்கை முஸ்­லிம்­களின் அனைத்து விட­யங்­க­ளிலும் தலையிடுகின்ற அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வக்பு சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­படும் விட­யத்தில் இது­வரை வெளிப்­ப­டை­யாக பேசாத விடயம் கவலையைத் தோற்­று­வித்­துள்­ளது.

அவ்வப் பிரதேசங்களிலுள்ள பண முத­லை­க­ளி­னா­லேயே வக்பு சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­கின்ற விடயம் யாவரும் அறிந்த உண்­மை­யாகும். இவர்களுக்கு எதி­ராக போரா­டு­வது பண வச­தி­யற்ற அப்­பா­வி­க­ளோ­யாகும். சில வக்பு சொத்து மோசடி வழக்கு விசா­ர­ணை­களின் போது இதனை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

எனவே, இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்­காக வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை பாது­காப்­பது அனைத்து தரப்­பி­ன­ரதும் பொறுப்­பாகும். இதற்­காக வேண்டி அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா உட்­பட அனைத்து முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களும் களத்தில் இறங்க வேண்­டி­யுள்­ளது.

அதே­நேரம், ‘ஜும்ஆ மேடையின்’ ஊடாக வக்பு சொத்து கொள்ளையடிப்பிற்கு எதிராக பாரிய விழிப்புணர்வுகளை உடனடியாகவும் அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உலமாக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்க வேண்டும் என இந்தப் பத்தியின் ஊடாக கோரிக்கை விடுக்கிறோம்.

காலங் கடந்துள்ள இந்த விழிப்புணர்வு என்ற விடயத்தினை இப்போதிருந்தாவது நாம் ஆரம்பிப்போம். இதனை செய்யத் தவறின் ஏனைய வக்பு சொத்துக்களும் நிச்சயம் சூறையாடப்படும்!

இப்போ நல்லமா???400G பால்மாவின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு! 1 KG பால்மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு!
10/07/2025

இப்போ நல்லமா???
400G பால்மாவின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!
1 KG பால்மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு!

💥 இது என்ன போத்தல் தெரிஞ்சவங்க சொல்லுங்க 😂😂😂
10/07/2025

💥 இது என்ன போத்தல் தெரிஞ்சவங்க சொல்லுங்க 😂😂😂

"அமீன் ஊடகத்துறையில் ஒரு மலை" மலை உடையாது தேர்தலில் போட்டியிடும் சிலரின் தலைதான் உடையும்!- இன்ஷா அல்லாஹ்!! -ஸ்ரீலங்கா மு...
30/06/2024

"அமீன் ஊடகத்துறையில் ஒரு மலை"

மலை உடையாது தேர்தலில் போட்டியிடும் சிலரின் தலைதான் உடையும்!

- இன்ஷா அல்லாஹ்!! -

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27வது வருடாந்த மாநாடு நாளை 30ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இம்முறை இடம்பெறவுள்ள மாநாட்டில் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து பதவிகளுக்கும் பலத்த போட்டியுள்ளது.

இதில் விஷேடம் என்னவென்றால் தலைவர் பதவிக்காக 05 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில்,

1. மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன்

2. சிரேஷ்ட ஊடகவியலாளர் மனிதநேயன் இர்ஷாத் ஏ காதர்

3. சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மின்

4. சிரேஷ்ட ஊடகவியலாளர் றிப்தி அலி

5. சிரேஷ்ட ஊடகவியாளர் எம்.எப். றிபாஸ்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 29 வருடங்களாக முஸ்லிம் ஊடக அமைப்புகளில் தாய் அமைப்பாக இயங்கிவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அத்திவாரம் முதல் கட்டிடத்தின் வலுவான உயர்ச்சிக்கு பெரிதும் உந்து சக்தியாக இருந்தவர்கள் அன்றிருந்த பல ஊடக ஜாம்பவான்களுடன் தற்போதைய தலைவர் என்.எம். அமீன் அவர்கள் என்பதும் பலராலும் அறியப்பட்ட உண்மை.

ஆனால், இம்முறை தேர்தலில் மேற்குறித்த ஐவரும் தலைமை பதவிக்காக போட்டியிடுகின்றமை பலராலும் வியந்து பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், பலரது நிலைப்பாடானாது; 'அமீன் நானா' என செல்லமாக அழைக்கப்படுதலும், அதே நேரம் 'அமீன் சேர்' எனும் நாமமும் அசையாத இலட்சிணையாக அவருக்கு முத்திரை பதித்திருக்கின்றது.

அமீனுக்கு கிடைத்த அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்ற காழ்ப்புணர்சியினால்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிரேஷ்ட ஊடகவியளாலர் ஒருவரினால் விடப்பட்ட போலியான அறிக்கையில் 'அமீன் இவ்வருடம் போட்டியிடமாட்டார்' என்ற எவ்வித உண்மையுமற்ற போலிப் பதிவையும் வெளியிட்டிருந்தார்.

அது மாத்திரமல்லாது நேற்றுகூட இணையதள ஊடகமொன்றில் 'அமீன் போட்டியிடுவதில்லை; வாபஸ்' எனும் வதந்தியை பரப்பி விட்டனர்.

குறித்த ஊடகப் பிரதானி மார்க்கம் கற்ற நற்பெயர் பெற்றவர்; அவதூறு, போலிச் செய்திகள், பெரியோருக்கு மரியாதை செய்தல் போன்றன அவர்களிடம் இயல்பாகவே இருக்க வேண்டும்.

துரதிஷ்டம் அந்த போலிச் செய்தியை உருவாக்கி அவர்கள் வெளியிட்டமை மனவருத்தத்துக்குரியதாகும்.

இப்படி பல்வேறு உந்துதல்களும், கறுப்பாடுகளும் மேய்கின்ற இக் காலகட்டத்தில் இந்த அமைப்பபை நேசிக்கும் பலரது கோரிக்கைகளுக்கு அமைவாகவே தேர்தலில் களமிறங்குவதாக மதிப்பிற்குரிய என்.எம். அமீன் அவர்கள் வேட்புமனூவின் இறுதி நாளன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களுக்கு எனது வெளிப்படையான ஆதரவை நான் தெரிவிப்பதோடு ஊடகத்துறையில் அவரது மெச்சத்தக்க செயற்பாடுகள் சிலவற்றையும் நினைவூட்டலாம் என நினைக்கின்றேன்.

- ஊடகர்கள் பலரது தொழில் முன்னேற்றங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகள் புரிந்தவர்.

- நாட்டில் பல இக்கட்டான காலகட்டங்களில் முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்து பலருடனும் நேரடியாகவும், மறைமுகமாக குரல்கொடுத்தவர்.

- தான் சார்ந்த சமூகத்திற்கான தொண்டுகளை ஆற்றியுள்ள போதிலும் அனைத்து சமூகத்தினருடனும் இனவாதம், வேற்றுமைகள் இல்லாது நற்பண்புடன் பழகும் குணம் கொண்டவர்.

- நிர்வாகத் திறமையால் இன்று வரை இந் நாட்டில் வேரூன்றியுள்ள இந்த ஊடக அமைப்பை கட்டிக்காப்பவர்.

- ஊடகவியலாளர்களின் நலன்கலுக்காக பலகோணங்களிலும் உதவிகளைப் பெற்றுக் கொடுத்து ஒத்தசை நல்கும் அழகிய குணம் கொண்டவர்.

- பத்திரிகை பிரதம ஆசிரியராக இருந்தாலும், அமைப்பின் தலைவராக இருந்தாலும் எந்த நபர்களையும் நண்பர்களாக அரவனைத்துச் செல்லும் மனோ பக்குவமுடையவர்.

- இலங்கையிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளின் மரியாதைக்குரியவரும், நன்மதிப்பு பெற்றவரும் கூட...

- தனது 72 வயதிலும் கூட இறைவன் அருளால் ஆரோக்கியமாகவும், நிதானித்தும் ஊடகத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துள்ள பலரதும் அபிமானம் பெற்ற மனிதர்.

- வெளிநாட்டு இராஜதந்திர உறவுகளைப் பேணி அதனூடாக பல உதவிகளை ஊடகர்களுக்கு புரிந்தவர்.

- 30 வருட யுத்த காலத்திலும் கூட புல்மோட்டைப் பிரதேசத்தில் சிக்கிய முஸ்லிம் வலிபர்களின் நலனுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரடியாக பேசியவர். (தெளிவு தேவையானவர்கள், அமீன் சேர் இடம் நேரடியாக கேட்கலாம்)

-இவ்வாறு என்.எம். அமீன் அவர்களின் பிரபலம், நற்குணம், சேவைகள், தொண்டு பற்றி அடிக்கிக் கொண்டே செல்லலாம்.

அப்படியான ஒரு மரியாதைமிக்க மனிதரை எதிரத்து தலைவர் பதவிக்காக மேற்குறித்த நால்வரும் களமிறங்கியுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

எது எவ்வாறாயினும் அமீன் என்பது ஊடகத்துறையில் ஒரு Brand name. அமீன் அவர்களின் வெற்றி; உறுதிசெய்யப்பட்ட வெற்றி என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

இன்ஷா அல்லாஹ்!

என்னுடய நன்றியுணர்வு அமீன் சேர் இற்கு எப்பவும் உள்ளது.

அவரால் வளர்ந்த பலர் நன்றி கெட்டு அத்தனையும் மறந்து இன்னொருவக்கு வாக்களிப்பது அவரவர் மனசாட்சிக்குரிய பதில்.

குறிப்பாக இதில் போட்டியிடும் நால்வர் கூட உங்கள் மனசாட்சியிடம் சற்று பேசிப்பாருங்கள்.

உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் என்.எம். அமீன் எந்தளவு முன்னிலையானவர் என்பது உணரப்படும்.

ஆட்சி அதிகாரத்தை கொடுப்பவனும்; எடுப்பவனும் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!

வெற்றி தோல்வி இறைவனிடமுள்ள முடிவு!

அதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த ஜனாநயக தேர்தலில் எனது வாக்கு மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களுக்கு என்பதை நான் பகிரங்கமாக அறிவிக்கின்றேன்.

தேர்தலில் களமிறங்கியுள்ள நீங்கள் அனைவரும் எனக்கு மிக நெருக்கமானவர்கள்தான் இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் இன்றுவரையான எனது ஊடகப் பயணத்தில் "அமீன் என்பது ஒரு மலை"

'தலையை கொண்டு மலையில் முட்டினால்; மலை உயைாது தலைதான் உடையும்'

ஒரு ஜனாநாயக தேர்தலில் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டையும், உரிமையையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் கூறியுள்ளேன்!

ஊடக நணாபர்களே!

உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆதரவுகளையும் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி

✍️ கியாஸ் ஏ. புஹாரி

Gurudev Sri Sri Ravishanker, founder of Art of Living Foundation held a discussion with Prime Minister Dinesh Gunawarden...
19/05/2024

Gurudev Sri Sri Ravishanker, founder of Art of Living Foundation held a discussion with Prime Minister Dinesh Gunawardena at the Temple Trees today (May 18). The Gurudev said his foundation plans to set up free educational centers in Sri Lanka for skills development of youths. He also expressed interest in establishing an Ayurvedic research institution. The foundation has established two orphanage in Batticaloa and Wellawaya. Governor of East, Senthil Thondaman, MPs Jayantha Jayasuriya and Yadamini Gunawardena, Dr N Ramanujam, Vinod Moonasinghe and Madhu Rao and leading members of Art of Living Foundation were present on this occasion.

Address

Dehiwala

Website

Alerts

Be the first to know and let us send you an email when அடையாளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share