16/12/2025
"ரூபிகான் நதியை கடப்பது போல"
சிங்களத்தில் k .sanjiwa
தமிழில் A.M.Nafeel (abbasi)
ஜனாதிபதி சட்டத்தரணி Saliya pieris தனது முக நூல் பக்கத்தில் ஒரு அழகான செய்தியை பதிவு செய்து இருந்தார்.
கி.மு 49 ல் கோல் தேசத்தின் ஆளுநராக இருந்த ஜூலியஸ் ஸீஸர் ரோம் செனட் சபையின் உத்தரவையும் மீறி தனது படையுடன் ரூபிகான் நதியை கடந்து சென்று விட்டார். அந்த நதியை கடந்த பிறகு மீண்டும் திரும்பி வருதல் என்று ஒன்று கிடையாது. அது மீண்டும் திரும்பி வர முடியாத ஒரு முடிவை எடுத்த தருணம். அது கடைசியில் ஒரு உள்நாட்டுப் போருடனும் ஜூலியஸ் ஸீஸரின் வெற்றியுடனுமே முடிவடைந்தது.
"ரூபிகான் நதியை கடப்பது"
மீள் பெற முடியாத தீர்மானம் எடுப்பது போன்ற சொற் றொடர்களுக்கு மேற் குறிப்பிட்ட இந்த சம்பவம் உதாரணமாக அமைந்து விட்டது.
அரசியலிலும், ஆட்சியிலும் சில சமயம் சில முடிவுகள் ரூபிகான் நதியை கடப்பதை போன்று கடினமான நேரம் தான். இவ்வார சந்தர்ப்பங்களில் நாட்டின் நீண்ட கால நலனை மணதில் பதித்துக் கொண்டு மிக புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டும்.
ஆம், உண்மையிலே முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கைதும் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அம்சமாகும்.
முன்னால் ஜனாதிபதி ஒருவர் தவறு செய்து இருந்தாலும் அவரை கைது செய்ய முடியாது என்பது தான் நமது மக்களின் மின்நிலை இன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு பின்னால் செல்லும் அவரின் சகாக்கள் நமக்கு இதைதான் சொல்ல வருகிறார்கள்.
இதோ தற்போது இந்த இரும்புச் சுவர் உடைந்து விட்டது . எனவே அந்த அடிப்படையில் நான் இதை நாட்டின் எதிர்காலம் சார்ந்த முடிவாக தான் நான் இதை கருதுகிறேன்.
ஆம், உண்மையிலே மீண்டும் திரும்ப முடியாது. தற்போது நீதிக்கு முன்னால் ஜனாதிபதி கூட சமமாகி விட்டார்.
இந்த விடயத்தில் குற்றவியல் விசாரனை தினைக்களம் ( criminal investigation department) சுயாதீனமாக செயற்பட்டதையும் தினைக்களத்தின் இந்த தீர்மானத்தில் ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த விதத்திலும் தலையிடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நான் நினைக்கிறேன் இந்த சம்பிரதாய முறை மிக முக்கியமானது.இவ்வாறான தினைக்களங்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கு விட வேண்டும். அப்படி செய்தால் சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பது கடினமான ஒன்றாக இருக்காது.
நான் இந்த அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ வாக்களிக்கவில்லை ஆனாலும் இவர்களை தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் ரணில் விக்கிரமசிங்க இதை விட பெரிய தவறு செய்து இருந்தாலும் அவர் கைது செய்யப்பட மாட்டார். எனவே இந்த நேரத்தில் சகல கௌரவமும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டும்.
இன்னொரு பக்கத்திலு பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கான நியாயத்தை தேடி செல்லும் கடைசி இடம் தான் CID .கோடாபயவின் ஆட்சிக்கு பின் இவ்வாரு ஒரு சரியான பாதைக்கு வந்தது மிகவும் வரவேற்கதக்கது. Shani Abe sekara போன்ற ஒருவர் ஓய்வை பெறாமல் இந்த காரியத்திறகு தமது பங்கை வழங்கியது வரவேற்க தக்க விடயமாகும்.
ஆம் , உண்மை இது மீண்டும் திரும்ப முடியாத ஒரு சந்தர்ப்ப தான்.