Sooriyakanthi

Sooriyakanthi இந்திய வம்சாவளி மலையக மக்களின் குரல்

அட்டன்  பஸ் விபத்தில்  மூவர் பலி; 40 பயணிகள் காயம் அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் கண்டி பி...
21/12/2024

அட்டன் பஸ் விபத்தில் மூவர் பலி; 40 பயணிகள் காயம்


அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் 21.12.2024 அன்று காலை 10 மணியளவில் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் . பஸ்ஸில் பயணித்த மூவர் பலியாகியுள்ளதுடன் நாற்பது பேர் வரை காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த பஸ்ஸில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 40 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அட்டன் நிருபர்)

ஏப்ரல் மாதம்  19 ஆம் திகதி  சாரல் தெறித்து விழும்  கற்பாறையொன்றின் காணொலி ஒன்றை  பதிவிட்டு ‘ மலையகம் தான் .....எந்த இடம்...
10/05/2024

ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி சாரல் தெறித்து விழும் கற்பாறையொன்றின் காணொலி ஒன்றை பதிவிட்டு ‘ மலையகம் தான் .....எந்த இடம் என்று சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள்....’ என்று பதிவிட்டிருந்தேன்…பலரும் சரியாக எட்டியாந்தோட்டை வேவல்தலாவை தோட்டம் என விடையளித்திருந்தனர். இரண்டு தொழிலாளர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு இங்கு அமர்ந்திருக்கும் படமும் வேவல்தலாவை தோட்டத்தில் எடுக்கப்பட்டது தான். மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை நிறைந்த இத்தோட்டைத்தை வெறுமனே இரசித்து விட்டு வருபவர்களுக்கு, தோட்ட நிர்வாகமும் அங்கு வசிக்கும் தொழிலாளர்களும் கடந்த ஐந்து வருடங்களாக முகங்கொடுத்து வரும் ஒரு சம்பவம் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை தான்….நான் எதிர்ப்பார்த்தது போன்றே எவரும் தோட்டம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி தெரிந்திருக்கவில்லையென்றே அறியமுடிகின்றது.
அங்கு என்ன பிரச்சினை?

காணொலி அதற்கான விடையை கூறும்.

https://fb.watch/rZAJl5bnn0/

தொந்தரவு செய்யாத எழுத்துகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்காதீர்கள்…!பத்திரிகையாளர்கள்  தமது பணியை சுதந்திரமாக முன்னெடுக்கும...
03/05/2024

தொந்தரவு செய்யாத எழுத்துகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்காதீர்கள்…!

பத்திரிகையாளர்கள் தமது பணியை சுதந்திரமாக முன்னெடுக்கும் சூழல் இருந்தால் மாத்திரமே நாட்டு மக்களை துணிகரமானவர்களாக மாற்ற முடியும். அவர்களை கேள்வி கேட்க வைக்க முடியும். பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மாத்திரமானதல்ல… உண்மைகளை அம்பலப்படுத்த துடிக்கும் அனைவருக்கும் உரித்தானது. பத்திரிகையாளர்கள் மக்களின் குரலாக நின்று கேள்வி எழுப்ப வேண்டும்.

இல்லாவிடின் அவ்வாறு கேள்வி எழுப்பும் வகையில் மக்களை வழிநடத்த வேண்டும். இளம் பத்திரிகையாளர்கள் முதலில் தாம் வாழ்ந்து வரும் மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும், அநீதிகளையும் , ஊழல்களையும் எதிர்த்து கேள்வி கேட்க பழகுங்கள். அதை அறிக்கையிட பழகுங்கள்.
அரசியல்வாதிகளோடு நின்று படம் எடுக்க ஆர்வம் காட்டும் நீங்கள், அவர்கள் உங்கள் பிரதேசத்துக்கு செய்திருக்கும் அல்லது செய்யப்போகும் பணிகள் குறித்து கேட்பதில்லை.

ஒரு திறன்பேசியோ அல்லது மடிக்கணிணியோடு, ஒரு அறையும் கிடைத்தால் ஊடகவியலாளர்கள் ஆகி விடலாம் என்று நினைக்காதீர்கள். மக்களோடும் தனிமையாகவும் பயணித்தால் மாத்திரமே உங்களுக்கு தகவல்கள் கிடைக்கும்.
ஊடகவியலாளர்களின் பிரதான பணி மக்களுக்கு அறிவூட்டுவதே (Educate public) அவர்களின் குரலாக நாம் கேள்வியெழுப்பும் போது எங்கள் குரலாக அவர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பிப்பர்.

இப்போதுள்ள பல பத்திரிகையாளர்கள் யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்துகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்…..இவர்கள் தாம் ஒரு பாதுகாப்பான ஒரு எல்லைக்குள் நின்று கொண்டிருப்பதாக நினைக்கின்றனர்.

அருந்ததி ராய் கேட்பது போல யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்துகள் எதற்கு ? இளம் ஊடகவியலாளர்கள் நியாயமான தொந்தரவை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

நியாயமாக கேள்வி கேட்கும் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர தின வாழ்த்துகள்…!

நன்றி: தேசியன்  வீரகேசரி வாரவெளியீடு–11/02/2024மலையக சமூகத்துக்கு மாத்திரம் ஆசிரிய உதவியாளர் நியமனம் எதற்காக? 2015 ஆம் ஆ...
13/02/2024

நன்றி: தேசியன்
வீரகேசரி வாரவெளியீடு–11/02/2024

மலையக சமூகத்துக்கு மாத்திரம்
ஆசிரிய உதவியாளர் நியமனம் எதற்காக?

2015 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்களில் சகல பயிற்சிகளை பூர்த்தி செய்தும் கூட கடந்த ஒன்பது வருடங்களாக ஆசிரியர் சேவை தரம் 3:1 இற்குள் உள்வாங்கப்படாது மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி புரிந்து வருபவர்கள் ஒரு தொகையினர் இருக்கும் போது மேலதிகமாக ஆசிரிய உதவியாளர்கள் 2535 பேருக்கான நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கும் இந்த இழுபறி நிலை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை.
மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றமையை அனைவரும் அறிவர். அதே வேளை மலையக சமூகத்தினருக்கு அரச வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருகிறோம் என்ற பெயரில் கடந்த காலங்களில் மலையக பிரதிநிதிகள் இந்த சமூகத்தினருக்கு செய்த பிரயாச்சித்தமாகவும் ஆசிரியர் நியமனங்களே விளங்கி வருகின்றன. ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுத் தந்து விட்டு பின்பு தமது தொழிற்சங்கம் அல்லது கட்சி சார்ந்த ஆசிரியர் தொழிற்சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் தமது அரசியலை முன்னெடுத்துச்செல்வது இவர்களுக்கு இலகுவான காரியமாகையால் மேலும் மேலும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆசிரிய நியமனங்களையே பெற்றுத்தருவதில் அரசியல் பிரமுகர்கள் அக்கறை காட்டி வருகின்றனர்.
கடந்த காலங்களில் மலையக சமூகத்தினருக்கு வெற்றிகரமான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் 2015 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்கள் என்ற பெயரில் இலங்கையில் வேறு எந்த சமூகத்தினருக்கும் இல்லாத ஒரு கல்விச் சேவை நியமனத்தை அரசியல்வாதிகள் உருவாக்கினர். மாதம் ஆறாயிரம் ரூபாய்க்கு ஆசிரிய உதவியாளர்கள் பதவிக்கு அமர்த்தப்பட்டனர். அதே ஆண்டு தான் தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் கிடைத்தவர்கள் ஆசிரியர் பயிற்சிக கலாசாலைகளில் உரிய பயிற்சிகளை நிறைவு செய்த பிறகு அவர்கள் இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3:1 இற்கு உள்வாங்கப்படுவர் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த நியமனம் பெற்றவர்களின் நிலைமையறிந்து நான்காயிரம் ரூபாய் வேதன அதிகரிப்பு செய்யப்பட்டது. ஆனால் வருடங்கள் ஒன்பது கடந்தும் மத்திய மாகாணத்தில் மாத்திரம் சுமார் 146 பேர், ஆசிரியர் சேவை தரத்துக்குள் உள்வாங்கப்படாது மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் இன்னும் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் பல போராட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்து ஓய்ந்து போய் விட்டனர்.
மலையக சமூகத்துக்கு மாத்திரம் ஏன் இந்தளவு குறைந்த வேதனத்தில் அதுவும் ஆசிரிய உதவியாளர்கள் என்ற பெயரில் நியமனங்களை வழங்க வேண்டும் என கல்வித்துறை சார்ந்தவர்களும் இதற்கெதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இப்படியொரு நியமனம் அவசியமா என்ற கேள்விகளும் இல்லாமலில்லை. ஆனால் அரசியல்வாதிகள் தமது பிடிவாதங்களை மாற்றிக்கொள்வதாக இல்லை.
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் முகமாக மீண்டும் ஆசிரிய உதவியாளர்களை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். இதன்படி பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள 863 பாடசாலைகளில் நிலவும் 2535 ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் இவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் இவர்கள் தமது பட்டக்கல்வி அல்லது ஆசிரியர் பயிற்சிநெறிகளை பூர்த்தி செய்ததற்கு பின்பு, இவர்கள் ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் நியமனத்தில் உள்வாங்கப்பட்டவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக தமது சேவையை நிரந்தரமாக்குவதற்கு போராடியதில் கட்டம் கட்டமாகவே அது நிறைவேறியது. அதாவது இந்த செயற்பாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லாமலில்லை. சில ஆசிரியர்களின் கோப்புகளில் ஆவணங்கள் குறைபாடுகள் உள்ளதாகவும், இவர்களை பணி நிரந்தரமாக்கினால் அதற்குரிய சம்பள அளவுத்திட்டத்துக்கு ஏற்ப வேதனம் வழங்குவதற்கு திறைசேரியில் பணம் இல்லை என்றும் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. எதற்காக இந்த நியமனம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறித்து சில கல்வி அதிகாரிகளுக்கே தெரியாதுள்ளது. ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் அதை சரி செய்வதற்கு வருடக்கணக்காக காத்திருக்க வேண்டுமா என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆக 2015 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்கள் நியமனத்தில் உருவான இந்த குளறுபடிகள் இன்னும் முழுமையாக தீர்க்கப்பட முடியாதிருப்பதால், 2024 ஆம் ஆண்டு கோரப்படவுள்ள நியமனங்கள் குறித்து பலருக்கும் சந்தேகங்களும் தயக்கங்களும் எழுவதை தவிர்க்க முடியாது. இது தேர்தல் கால ஆண்டாக விளங்குவதால் இதுவும் ஒரு அரசியல் செயற்பாடாக இருக்குமோ என்ற சந்தேகமும் பலரிடத்தில் நிலவுகின்றது. இதை தெளிவுபடுத்த வேண்டியது பிரதிநிதிகளைச் சாரும். மேலும் தற்போதுள்ள நெருக்கடிகளில் தோட்டத்தொழிலாளி ஒருவருக்கான நாட்சம்பள கோரிக்கையாக 1700 ரூபாய் கோரப்பட்டுள்ள நிலையில், மாதம் இருபதாயிரம் ரூபாய் வேதனத்தில் ஒரு அரசாங்க தொழிலை செய்வதற்கு எத்தனைப் பேர் முன்வருவர் என்ற கேள்வியும் எழுகின்றது.
மலையக சமூகத்தினர் என்றால் எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வர் என்ற ஒரு ஏளன மனநிலை மலையக பிரதிநிதிகளிடமும் உருவாகி விட்டதா என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்குவதை தவிர்க்க முடியாதுள்ளது. ஏதோ அரசாங்கத்தின் பக்கம் இருக்கின்றோம் என்பதற்காக ஒரு சமூகத்தை இவ்வாறு இழிவுபடுத்தக் கூடாது. இதற்கு பல நியாயங்களை பிரதிநிதிகள் கூறலாம். ஆனால் இந்த ஆசிரியர் உதவியாளர் விவகாரத்தில் கடந்த கால போராட்டங்களை இப்போதுள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதா மற்றும் அரசியல் ரீதியாக நாடு கடும் நெருக்கடிகளில் உள்ளது. ஸ்திரமான ஒரு அரசாங்கம் இல்லாத நிலையில் புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு உள்வாங்கப்பட்டவர்கள் பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதங்களும் இல்லை. ஆகவே புதிய ஆசிரிய நியமனங்கள் மூலமாக பெருந்தோட்டப்பகுதி ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டால் அது வரவேற்கப்பட வேண்டியதொன்று. ஆனால் நியமனம் கிடைக்கவிருக்கும் ஆசிரியர்கள் மன உளைச்சல்களுடனும் , தமது வாழ்வாதாரத்துக்கு தேவையான உரிய வேதனத்துக்காக போராட்டங்கள் செய்தும் அலைந்து திரிந்தும் தான் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமா ? அப்படி நடக்காது என்பதை மலையக அரசியல் பிரதிநிதிகள் உறுதி செய்வார்களா?

பெருந்தோட்ட பகுதி மாணவர்களின் இடைவிலகல்கள்..!சுதந்திரத்துக்கு பின்பும் இலவச கல்வியை பெறமுடியாத ஒரே சமூகத்தினராக இந்நாட்ட...
16/01/2024

பெருந்தோட்ட பகுதி மாணவர்களின் இடைவிலகல்கள்..!

சுதந்திரத்துக்கு பின்பும் இலவச கல்வியை பெறமுடியாத ஒரே சமூகத்தினராக இந்நாட்டில் மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் விளங்கினர். இந்த அவலம் சுமார் நாற்பது வருடங்கள் வரை நீடித்தன. அதன் பின்னர் படிப்படியாக தோட்டப்பாடசாலைகள் அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டு மாகாண பாடசாலைகளாக மாற்றம் பெற்ற பின்னரும் இலவச கல்வியை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியாத அவலம் தொடர்கின்றது.

2023 ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் அதிக மாணவர் இடைவிலகல்களை கொண்ட மாவட்டமாக நுவரெலியா விளங்குகின்றது. இந்த புள்ளி விபரங்களை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன் படி மத்திய மாகாணத்தில் கடந்த வருடம் மொத்தமாக 1986 மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். அதிகமாக நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா கல்வி வலயத்தில் 570 மாணவர்களும் அட்டன் கல்வி வலயத்தில் 541 மாணவர்களும் கொத்மலை கல்வி வலயத்தில் 319 மாணவர்களும் கம்பளை கல்வி வலயத்தில் 209 மாணவர்களும் இடை விலகியுள்ளனர்.

குறித்த கல்வி வலயங்கள் பெருந்தோட்டங்களை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களாகும். ஆகவே பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை ஆகியன இந்த இடை விலகல்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் 2022 ஆம் ஆண்டே மாணவர் இடைவிலகல் கணிசமாக அதிகரித்திருந்தன. அதற்கு கொவிட் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து நாட்டில் உருவான பொருளாதார நெருக்கடிகள் காரணமாகக் கூறப்படுகின்றன.

இதில் உண்மைகள் உள்ளதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பொருளாதார பாதிப்பு காரணமாக பெருந்தோட்டப்பிரதேசங்களில் 42.8வீதமான குடும்பங்கள் கடனாளிகளாக மாறி விட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நாடாளுமன்றில் கடந்த ஒன்பதாம் திகதி தரவுகளை முன்வைத்திருந்தார். ஆகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வறுமை நிலையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கின்றது என்பது தான் உண்மை.

ஆனால் அவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கமோ அல்லது இந்த மக்களின் பிரதிநிதிகளோ அக்கறை கொள்வதில்லை. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தால் இந்த சமூகத்தினர் மூன்று வேளை உணவை முழுமையாக பெறுவதில்லை. அவ்வாறிருக்கும் போது தமது பிள்ளைகளுக்கான பாடசாலை சீருடைகள்,காலணிகள்,புத்தக பைகள் போன்றவற்றை எவ்வாறு இவர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும்?

சில தோட்டப்பிரதேசங்களிலிருந்து பாடசாலைகளுக்கு பஸ்களில் செல்ல வேண்டும். பல பகுதிகளில் இ.போ.ச பஸ்கள் இல்லை. இதனால் மாணவர் பருவகாலச் சீட்டுகளையும் பெற முடியாது. தனியார் பஸ்களில் பாடசாலை சென்று வருவதற்கு தமது பிள்ளைக்கு ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் வரை செலவளிக்க இந்த பெற்றோர்களுக்கு முடிவதில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்வதில் இந்த பிள்ளைகள் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

இந்த காரணங்களை வைத்தே சில பாடசாலை நிர்வாகங்களும் மாணவர்களை இடை நிறுத்துகின்றன. மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களை பாடசாலைக்கு வரச்செய்வதில் இக்காலத்தில் எந்த பாடசாலை சமூகமும் கூடுதல் அக்கறை காட்டுவதில்லை.

இடைவிலகலுக்கு வறுமை ஒரு பிரதான காரணமாக விளங்கினாலும் பாடசாலைகளில் சில மாணவர்களுக்கு இழைக்கப்படும் உளரீதியான கொடுமைகள் பற்றியும் இங்கு பேச வேண்டியுள்ளது. குறிப்பாக சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் இவ்வாறு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

மிகவும் கடினங்களுக்கு மத்தியில் தமது பிரதேச பாடசாலைகளில் சாதாரண தரம் சித்தியடைந்து சிறந்த பெறுபேறுகளுடன் நகர்ப்புற பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிக அதிகம். சராசரி புள்ளிகளைப் பெற்றாலும் பாடசாலை பெறுபேறுகளை இலக்கு வைத்து செயற்படும் சில அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் அவர்கள் மனரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுகின்றனர்.

பாடசாலை சமூகம் எதிர்ப்பார்க்கும் பெறுபேறுகளை குறித்த மாணவனோ மாணவியோ பெற முடியாத சந்தர்ப்பத்தில் அவர்கள் கட்டாயப்படுத்தி பாடசாலைகளிலிருந்து இடை நிறுத்தப்படுகின்றனர். அல்லது வேறு பாடப்பிரிவை தெரிவு செய்வதற்கு வற்புறுத்தப்படுகின்றனர்.

இது தொடர்பான தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. ஏனெனில் பாடசாலைகளிலிருந்து குறித்த மாணவர்கள் விலகிச்செல்லும் போது தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இவர்கள் செல்கின்றனர் என்றவாறு அவர்களின் பெற்றோர்களிடமும் கடிதங்கள் பெறப்படுகின்றன. இல்லாவிடின் அவர்களுக்கான விடுகை பத்திரத்தை குறித்த பாடசாலை நிர்வாகங்கள் வழங்குவதில்லை.

மலையக பெருந்தோட்ட கல்வி சமூகம் எதிர்நோக்கிவரும் இவ்வாறான பிரச்சினைகளை மலையக அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை. அவற்றை தவிர்க்கவே பார்க்கின்றனர். மத்திய மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சரிலிருந்து முப்பது வருடங்களாக அந்த பதவியை அலங்கரித்து வந்த அனைவருமே நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் பலர் பாராளுமன்ற பிரவேசம் கண்டு எம்.பிக்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் , இராஜாங்க அமைச்சர்களாகவும் பணியாற்றியவர்கள். நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போது நாடாளுமன்றத்திலுள்ள இரண்டு எம்.பிக்களும் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள்.

அதில் ஒருவர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் விளங்கியவர். இவர்களது காலத்திலும் மாணவர் இடைவிலகல்கள் இருந்திருக்கலாம். ஆனால் அப்போது இது குறித்து அவர்கள் அக்கறை கொள்ளாமலிருந்த காரணத்தினாலேயே பாதிப்பு இன்று எல்லை மீறி சென்றுள்ளது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை என்பதை உரியவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

மனைவியின் 7,500 ரூபாய் சேவைக்கால பணத்தைப்பெற ஆறு வருடங்களில் ஒரு இலட்சம் ரூபாய் செலவளித்தேன்…….ஓய்வு காலத்துக்குப்பிறகு ...
19/11/2023

மனைவியின் 7,500 ரூபாய் சேவைக்கால பணத்தைப்பெற ஆறு வருடங்களில் ஒரு இலட்சம் ரூபாய் செலவளித்தேன்…….

ஓய்வு காலத்துக்குப்பிறகு தோட்டத்தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி பணத்தைப் பெறுவதற்கு இன்னும் பல வழிகளில் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் வதியும் ராமசாமி
கிருஷ்ணமேனன் என்பவரின் கதை இது...... தனது மனைவியில் சேவைக்கால பணத்தைப் பெற தொழில் திணைக்களம், மனித உரிமை பிராந்திய காரியாலயம் என அலைந்து திரிந்து ஆறு வருடங்களின் பிறகே அவருக்கு அந்த பணம் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கான அவர் செலவளித்த கால நேரம், பணம் அதிகமாகும்.
இவரது மனைவியின் பெயர் சுப்பையா மகேஸ்வரி. மகேஸ்வரியின் சொந்த இடம் லிந்துலை தங்ககலை தோட்டம். 1975 இலிருந்து 1988 வரை அவர் அங்கு
தொழிலாளியாக பணி புரிந்துள்ளார். பின்னர் கிருஷ்ணமேனனை திருமணம் முடித்து
நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்தில் பெயர் பதிந்து அங்கு பணி செய்து 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஒலிபண்ட் தோட்டத்தில் பணிசெய்தமைக்கான சேவைக்கால பணம் உள்ளிட்ட ஏனைய ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி
கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அவருக்கு சிக்கல்கள் இருக்கவில்லை.
எனினும் தனது மனைவி 13 வருடங்கள் பணியாற்றிய தங்ககலை தோட்டத்தில் பணியாற்றிய காலத்துக்குரிய சேவைக்கால பணத்தைப் பெறுவதில் அவர்
அலைகழிக்கப்பட்டுள்ளார். தற்போது அட்டன் பிளாண்டேஷன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்ககலை தோட்ட காரியாலயத்துக்கு 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடம் வரை மனைவி அங்கு பணியாற்றியமைக்கான ஒரு கடிதத்தைப் பெற அவர்
மனைவியுடன் அலைந்து திரிந்துள்ளார். எப்போது சென்றாலும் அதிகாரி இல்லை தமக்கு
வழங்க முடியாது இன்னுமொரு நாள் வாருங்கள் என பதில் தரப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நுவரெலியா தொழில் திணைக்களத்தை நாட அவர்கள் குறித்த
தோட்டப்பிரிவு அட்டனில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் கீழ் வருகின்றது என
அங்கு அனுப்பியுள்ளனர்.
அட்டன் தொழில் திணைக்களமும் தங்ககலை தோட்ட நிர்வாகத்துக்கு இவரின் மனைவிக்கு கடிதத்தை வழங்குமாறு கடிதம் மூலம் உத்தரவிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.
இறுதியாக நுவரெலியா மனித உரிமை பிராந்திய காரியாலயத்தில் அவர் முறையிட்டுள்ளார். இறுதியில் ஒரு வருடம் கழித்தே அவரின் மனைவிக்கு கடிதம்
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சேவைக்கால பணம் எவ்வளவு என தெரிவிக்கவில்லை.
பின்பு அந்த பணத்தை பெறுவதற்கு 2018 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை
அட்டன் தொழில் திணைக்களத்துக்கு தனது மனைவி மற்றும் தான் அங்கம் வகிக்கும்
தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோரோடு அலைந்து திரிந்துள்ளார் கிருஷணமேனன்.
நுவரெலியாவிலிருந்து அட்டனுக்கு வந்து செல்வதற்கான பிரயாண மூவருக்குமான
உணவு என அவர் கணக்கிட்டு பார்த்ததில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேல் அவரது
கையிலிருந்த பணம் செலவளிந்துள்ளது.
அட்டன் தொழில் திணைக்கள அதிகாரிகள் இதை நீங்கள் நுவரெலியா காரியாலயத்தில்
தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூற அங்குள்ளவர்களோ இல்லை அட்டனில்
தான் பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். வேறு வழியின்றி இரண்டாவது தடவையாகவும் அவர் மனித உரிமை பிராந்திய காரியாலத்தை நாடியுள்ளார்.
தொழில் திணைக்களம், மனித உரிமை காரியாலயம் என கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கடித பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ‘தோட்டத்தை பிரதிநிதித்துவம்
செய்யும் அதிகாரி வந்திருந்தால் தொழில் அதிகாரி இருக்கமாட்டார். வெளியே சென்றிருப்பதாகக் கூறுவார்கள். தொழில் அதிகாரி இருந்தால் தோட்ட அதிகாரி வருகை தந்திருக்க மாட்டார்கள். ஆனால் நானும் எனது மனைவியும் தொழிற்சங்க பிரதிநிதியும்
அறிவித்த திகதியில் காரியாலயத்தில் இருப்போம். இப்படியே நாம் ஆறு வருடங்களாக
அலைந்து திரிந்தோம்’ என்று கூறும் கிருஷ்ணமேனன் இறுதியாக 27/10/2023 அன்று இவரது மனைவிக்கு கிடைக்க வேண்டிய சேவைக்கால பணம் ரூபாய் 7434.34 ரூபாய் காசோலையாகக் கிடைத்துள்ளது. ஆரம்பத்திலேயே தனது மனைவியின் சேவைக்கால
பணம் இவ்வளவு தான் எனக் கூறியிருந்தால் நாம் எமது பணத்தையும் நேரத்தையும் வீணத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் விசனம் தெரிவிக்கும்
கிருஷ்ணமேனன், இப்படி பல தொழிலாளர்களை அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். என்று கூறுகின்றார்.
தோட்ட நிர்வாகங்கள், தொழில் திணைக்களங்கள், தொழிற்சங்க காரியாலயங்கள் என அனைத்துத் தரப்பினராலும் கைவிடப்பட்டு நிலையில் இருநூறு ஆண்டுகள் கடந்தும் தொழிலாளர்கள் இவ்வாறு அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்
வர்க்கத்தினருக்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன என்பதற்கு கிருஷ்ணமேனன் மற்றும் அவரது மனைவிக்கு இடம்பெற்ற சம்பவங்கள் ஒரு சான்றாக உள்ளன.

மலையகம் –200 பற்றி பேச ஆரம்பித்துள்ள தேசிய மக்கள் சக்திஜே.வி.பி என்று அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி 2015 ஆம் ஆண்டி...
22/10/2023

மலையகம் –200 பற்றி பேச ஆரம்பித்துள்ள தேசிய மக்கள் சக்தி

ஜே.வி.பி என்று அழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி 2015 ஆம் ஆண்டிலிருந்து 27 கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் கூட்டணியாக மாற்றம் பெற்றுள்ளது. கடும் சிவப்பாக இருந்த தனது கட்சியின் நிறத்தை இளஞ்சிவப்பாக மாற்றியுள்ளது.
இந்த நாட்டின் இரத்தம் தோய்ந்த வரலாற்று சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு அமைப்பு தற்போது ஜனநாயக ரீதியில் மாற்றங்களை கண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஜே.வி.பியின் தலைவராக உருவெடுத்த அநுர குமார திசாநாயக்கவே தற்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் விளங்குகிறார்.
எந்த அரசாங்கமென்றாலும் ஆட்சியில் நிலவும் சீர்கேடுகள், ஊழல்களை தைரியமாக நாடாளுமன்றில் அம்பலப்படுத்தும் ஒரு தேசிய கட்சியின் தலைவராக அநுர குமார விளங்குகின்றார். மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் நாடாளுமன்றில் பேசப்படும் போது, மலையக பிரதிநிதிகள் வாய் மூடி மெளனம் காத்தாலும் இவர் அம்மக்கள் சார்பாக பேசியிருக்கின்றார். தற்போது மலையகம் இருநூறு பற்றி அநுர வாய் திறந்துள்ளார். அட்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மலையகம்– 200 அட்டன் பிரகடன நிகழ்வில் அவர் மலையக சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி புதிதாக எதுவும் கூறியிருக்கவில்லை. இந்த சமூகத்தின் வாக்கு வங்கிகளின் சாவிகளை மலையக அரசியல்வாதிகள் தம்வசம் கொண்டிருப்பதாகவும் அரசாங்கம் கேட்கும் போது அதை பாவிப்பதாகவும் வசை பாடியிருந்தார். அதுவும் மலையகத்துக்கு புதிய செய்தியில்லை.
அவர்கள் இருநூறு வருடங்களுக்கு முன்பு மன்னாரிலிருந்து கால்நடையாக வந்து சேர்ந்ததையும் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்திலுள்ள மலைப்பிரதேசங்களில் குடியேற்றங்களே இல்லாத காலத்தில் அவர்கள் குடியேற்றப்பட்ட அவலத்தையும் நினைவு கூர்ந்தார்.
சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் காரணமாக அட்டன் புகையிரத நிலையத்திலிருந்து இரயில்களில் இந்த மக்கள் ஏற்றப்பட்டு தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட வரலாற்றையும் கூறினார்.
தற்போது இருநூறு வருடங்களை கடந்தும் அவர்கள் நிலவுரிமையற்ற சமூகமாக வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், தாம் ஆட்சியமைத்தால் இந்த உரிமைகளைப் பெற்றுத்தருவதாகக் கூறினார். இவை எல்லாமே தேசிய மக்கள் சக்தியின் தலைவராக அநுர குமார கூறிய விடயங்கள். ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் ஜே.வி.பி என்ற அமைப்பின் தோற்றத்தையும் பெருந்தோட்டப்பகுதிகள் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களிலும் அந்த அமைப்பு முன்னெடுத்த அழிவு நடவடிக்கைகள் பற்றியும் மலையகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது.
இந்த அழிவுகள் , அட்டூழியங்கள் பற்றியும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அநுர குமார அறியாதவரல்லர். ஆனால் அதற்கு இந்த சமூகத்திடம் மன்னிப்பு கோரி விட்டு அவர் தனது உரையை ஆரம்பித்திருக்கலாம்.
எனினும் பிற்காலத்தில் இந்த சமூகத்தின் பிரஜா உரிமை சட்டமூலங்களுக்கு நாடாளுமன்றில் ஜே.வி.பி ஆதரவாக இருந்ததை மறுக்கவும் மறக்கவும் முடியாது.
2009 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இறுதி குடியுரிமைச் சட்டங்களான நாடற்ற மக்களுக்கான பிரஜாவுரிமை வழங்கும் 5 ஆம் இலக்க ( (திருத்தச்) சட்டம், இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் 6 ஆம் இலக்க ( திருத்தச் ) சட்டம் ஆகிய இரண்டுக்கும் பின்னணியில் ஜே.வி.பியே இருந்தது.
இந்நிலையில், அட்டன் நகருக்கு வந்து மலையக சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம் என்று கூறும் அநுர குமார, ஜே.வி.பியின் ஸ்தாபகரான ரோகண விஜேவீரவின் அரசியல் வகுப்பில் ஐந்தாவதான இந்திய விஸ்தரிப்பு வாத எதிர்ப்பு நிலை பற்றி அறியாதவர் அல்லர்.
1820 களில் பிரித்தானியரால் பெருந்தோட்டத் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தென்னிந்திய உழைக்கும் வர்க்கத்தினரை கள்ளத்தோணிகள் என்றும், அவர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க வந்த அந்நிய சக்திகள் என்றும் வர்ணித்தவர் ரோகண விஜேவீர. மட்டுமின்றி இந்தத் தொழிலாளர்கள் இலங்கைக்கு நோய்களை கொண்டு வந்தவர்கள் என மிக மோசமான வார்த்தை பிரயோகங்களால் மலையக சமூகத்தை அவமானப்படுத்தியவர்கள் ஜே.வி.பியினர்.
டெல்டா தோட்ட தேயிலை தொழிற்சாலையை தீ வைத்து கொளுத்தினர். மலையகத்தின் ஏதாவதொரு பகுதியை தமது ஆக்கிரமிப்புக்குள் அவர்கள் கொண்டு வர திட்டம் தீட்டியபோது, இ.தொ.காவினர் உடபுசல்லாவையில் வைத்து அவர்கள் அடித்து துரத்தினர். இதற்கு தோட்டத்தொழிலாளர்கள் பலர் தைரியமாக முன்வந்து அவர்களை எதிர்த்து நின்றனர்.
இந்த வரலாற்றை இப்போதுள்ள இளைஞர்கள் அறிந்துள்ளனரோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் தெளிவாக உள்ளனர். இடதுசாரி தேசியவாத கொள்கைகளுடன் தனது அரசியலை ஆரம்பித்த ஜே.வி.பி பின்னர் இனவாத அமைப்பாகவே பயணத்தை தொடர்ந்தது. இடதுசாரி சிந்தனைகள் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் விமல் வீரவன்ச போன்றோரை அரவணைத்த காரணத்தினால் அது இனவாத கட்சியாகவே முத்திரை குத்தப்பட்டிருந்தது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கும் ஜே.வி.பியினர் பின்பு எதற்காக மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடுகின்றனர் என்ற கேள்விக்கு இன்று வரை பதிலில்லை. ஒற்றையாட்சியையே தமது இலக்காக கொண்டு செயற்படும் ஜே.வி.பியினர் எந்த காலத்திலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியாக எந்த ஒரு தீர்வையும் முன்வைத்ததில்லை.
ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருக்கும் கூட்டணியாக அது மக்கள் ஆதரவை அதிகம் பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. எனினும் எமது நாட்டின் மக்கள் எக்காலத்திலும் நேர்மையாக அரசியலை முன்னெடுக்கும் எந்த அமைப்புக்கும் பெருவாரியான ஆதரவை எப்போதும் வழங்கியதில்லை. ஏனென்றால் மக்களும் ஊழலுக்கு பழகி விட்டனர்.
இந்நிலையில் மலையக சமூகத்தை குறிவைத்து தேசிய மக்கள் சக்தி அவர்களின் உரிமைகள் குறித்து பேச ஆரம்பித்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல. 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 16 ஆசனங்களைப் பெற்ற அவர்கள் 2004 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு 39 ஆசனங்களைப் பெற்றனர் என்பது முக்கிய விடயம்.

அந்த சந்தர்ப்பங்களிலும் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையும் இல்லை , தமது தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லை. அது குறித்து ஜே.வி.பி எப்போதும் பேசியதில்லை. ஏனென்றால் அப்போது தேசிய அரசியலில் பலமிக்க அணியாக அந்த அமைப்பு இருந்தது.
இலங்கையின் மூன்றாவது சக்தியாக உருவெடுக்க இருந்த காலகட்டங்களை ஜே.வி.பி தாண்டி விட்டது என்பது இறுதியாக இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தெளிவானது. மொத்தம் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே அதனால் பெற முடிந்தது. ஆகவே இப்போது அதையும் தக்க வைக்க வேண்டிய நிலையில் அது உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டங்கள், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அணிதிரளும் ஆதரவாளர்கள் ஏன் தேர்தல்களில் தமக்கு வாக்களிப்பதில்லை என்ற விடயம் அவர்களுக்கு தெரியாமலில்லை. உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் வர்க்கத்தினரின் எண்ணிக்கை இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் இல்லை. இருந்தாலும் அவர்கள் போராட வருவதில்லை. தமது பிரதிநிதிக்காக ஏதோ வந்து கட்சிக் கொடிகளை ஏந்தி கோஷம் போடுவதோடு அவர்களின் குரல் ஓய்ந்து விடுகின்றது.
அப்படியிருக்கும் போது தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்கள் இவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் மனதில் ஜே.வி.பி என்றால் பழைய வரலாறு தான் வந்து போகும். கட்சியின் பெயரையும் நிறத்தையும் மாற்றினால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இவை எல்லாவற்றையும் விட, தேசிய மக்கள் சக்தி ஏதாவதொரு விதத்தில் அதிகாரங்களை கொண்டிருந்தாலும் மலையக சமூகத்துக்கு வேறு தரப்பினர் ஊடாக நன்மைகள் கிடைக்காமல் மலையக பிரதிநிதிகள் பார்த்துக்கொள்வர். ஏனென்றால் அநுர கூறியது போன்று, இந்த சமூகத்தினருடைய வாக்கு வங்கியின் சாவிக்கொத்து மலையக பிரதிநிதிகளிடமே உள்ளது. அதை தமக்குள் மாற்றிக்கொள்வார்களே ஒழிய வெளியிலிருந்து வரும் எந்த நபருக்கும் பார்ப்பதற்குக் கூட இவர்கள் கொடுக்க மாட்டர்.
அந்த சந்­தர்ப்­பங்­க­ளிலும் மலை­யக பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு காணி உரி­மையும் இல்லை , தமது தொழிலில் உழைப்­புக்­கேற்ற ஊதி­யமும் இல்லை. அது குறித்து ஜே.வி.பி எப்­போதும் பேசி­ய­தில்லை. ஏனென்றால் அப்­போது தேசிய அர­சி­யலில் பல­மிக்க அணி­யாக அந்த அமைப்பு இருந்­தது.
இலங்­கையின் மூன்­றா­வது சக்­தி­யாக உரு­வெ­டுக்க இருந்த கால­கட்­டங்­களை ஜே.வி.பி தாண்டி விட்­டது என்­பது இறு­தி­யாக இடம்­பெற்ற பொதுத்­தேர்­தலில் தெளி­வா­னது. மொத்தம் மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மாத்­தி­ரமே அதனால் பெற முடிந்­தது. ஆகவே இப்­போது அதையும் தக்க வைக்க வேண்­டிய நிலையில் அது உள்­ளது. தேசிய மக்கள் சக்­தியின் ஆர்ப்­பாட்­டங்கள், பொது நிகழ்­வு­களில் கலந்து கொள்ள அணி­தி­ரளும் ஆத­ர­வா­ளர்கள் ஏன் தேர்­தல்­களில் தமக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என்ற விடயம் அவர்­க­ளுக்கு தெரி­யா­ம­லில்லை. உரி­மை­க­ளுக்­காக போராடும் தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரின் எண்­ணிக்கை இன்று பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் இல்லை. இருந்­தாலும் அவர்கள் போராட வரு­வ­தில்லை. தமது பிர­தி­நி­திக்­காக ஏதோ வந்து கட்சிக் கொடி­களை ஏந்தி கோஷம் போடு­வ­தோடு அவர்­களின் குரல் ஓய்ந்து விடு­கின்­றது.
அப்­ப­டி­யி­ருக்கும் போது தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்கள் இவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் மனதில் ஜே.வி.பி என்றால் பழைய வரலாறு தான் வந்து போகும். கட்சியின் பெயரையும் நிறத்தையும் மாற்றினால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இவை எல்லாவற்றையும் விட, தேசிய மக்கள் சக்தி ஏதாவதொரு விதத்தில் அதிகாரங்களை கொண்டிருந்தாலும் மலையக சமூகத்துக்கு வேறு தரப்பினர் ஊடாக நன்மைகள் கிடைக்காமல் மலையக பிரதிநிதிகள் பார்த்துக்கொள்வர். ஏனென்றால் அநுர கூறியது போன்று, இந்த சமூகத்தினருடைய வாக்கு வங்கியின் சாவிக்கொத்து மலையக பிரதிநிதிகளிடமே உள்ளது. அதை தமக்குள் மாற்றிக்கொள்வார்களே ஒழிய வெளியிலிருந்து வரும் எந்த நபருக்கும் பார்ப்பதற்குக் கூட இவர்கள் அனுமதி கொடுக்க மாட்டர்.

மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்த ஜனாதிபதி யார்?  மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதோ, இல்லையோ... ஆனால், ஒ...
21/08/2023

மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்த ஜனாதிபதி யார்?


மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதோ, இல்லையோ... ஆனால், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மக்களை வைத்து அரசாங்கத்தின் பக்கம் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஐந்து வருடங்களை கடந்து சென்று, பின்பு அரசாங்கத்தை குறை கூறும் அரசியல் கலாசாரம் இலங்கையில் மலையகத்தில் மாத்திரமே அதிகம்.
1977ஆம் ஆண்டு முதன் முதலாக நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றவர் செளமியமூர்த்தி தொண்டமான்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் இணைந்துகொண்ட அவர் அக்கால சூழலில் இந்த மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்க முனைந்தார். 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் அவர் ஜே.ஆர் அரசுடன் இருந்துகொண்டே சாணக்கியமாக செயற்பட்டு, தலைநகரில் பல இழப்புகளை தவிர்க்க உதவினார்.
அந்த வரலாறு தெரியாதவர்களே அவர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை என விமர்சித்தனர். ஜே.ஆர். காலத்தில் மலையக பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் அரசமயமாக்கப்பட்டன. ஆனால், பாராளுமன்றில் வேறு உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை என்பதால் இந்த சமூகத்தைப் பற்றிய குரல்கள் எழவில்லை.
அதன் பின்னர், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாசவின் மூலமாகவே மலையக மக்களின் பிரஜா உரிமை பிரச்சினைகள் தீர்ந்தன என இன்று வரை கதைக்கப்படுகின்றது. அதுவும் ஒரு அரசியல் சாணக்கியத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட உரிமை. அதன் பிறகே மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களித்து வந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஐக்கிய தேசிய கட்சிக்கே தனது ஆதரவை வழங்கி வந்தது. தனது ஆட்சியில் முழுமையான காலப்பகுதியை நிறைவு செய்வதற்கு முன்பே அவர் 1993ஆம் ஆண்டு ஒரு மே தினத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகுதியாக உள்ள காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த டி.பி.விஜேதுங்க மலையக மக்களை மிகவும் இழிவாக கருதிய ஒருவராகவும் இனவாதப் போக்கு கொண்டவராகவும் விளங்கினார்.
1994ஆம் ஆண்டு தேசிய அளவிலும் மலையகத்திலும் அரசியல் காட்சிகள் மாறுகின்ற சூழல் எழுந்தது. தொடர்ச்சியாக 17 வருட ஆட்சியின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை இழந்தது. சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியானார்.
அதே போன்று மலையகத்திலும் மலையக மக்கள் முன்னணி என்ற மாற்று சக்தி உருவாகியது. அதன் ஸ்தாபகத் தலைவர் பெ.சந்திரசேகரனின் ஒரு ஆசனம் மூலம் ஆட்சியை தக்கவைத்த சந்திரிகா முதன் முறையாக இந்த மக்களுக்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை உருவாக்கினார். அதன் மூலம் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தனிவீட்டுத் திட்டத்துக்கு முதன் முறையாக வித்திட்டார், அமரர் சந்திரசேகரன்.
யுத்த சூழல் உச்சம் பெற்றிருந்த காலமாகையால், பாதுகாப்பு செலவீனங்களுக்கு மத்தியில் சந்திரிகா அம்மையாரால் நாட்டை குறிப்பிடத்தக்களவுக்கு அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்ல முடியவில்லை. எனினும், குண்டுத்தாக்குதலில் தப்பித்த அவர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.
அச்சந்தர்ப்பத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை அலங்கரித்தாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு மற்றும் காணியுரிமை பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. அதேவேளை யுத்தத்தை காரணங்காட்டி இந்த பிரதிநிதிகள் தமக்குரிய சலுகைகளை அனுபவிக்காமலில்லை.
11 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து சந்திரிகா அம்மையார் கொண்டுவந்த தீர்வுப் பொதியையும் எவரும் கணக்கிலெடுக்கவில்லை. இப்படியாக 2005ஆம் ஆண்டு அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.
அடுத்ததாக, மகிந்த ராஜபக்ஷ யுகம். அவரின் ஆட்சியிலும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என மலையக பிரதிநிதிகள் வலம் வந்தாலும் பாராளுமன்றத்தில் எவருமே வாய் திறக்காத காலமாக அது இருந்தது.
அமரர் சந்திரசேகரன் மாத்திரம் தனக்கு வாக்களித்த மக்களின் நலன்கள் குறித்து காத்திரமாக சில கருத்துக்களை முன்மொழிந்தார். மலையக பல்கலைக்கழகம் குறித்தும் தேசிய பாடசாலைகளின் தேவை குறித்தும் அவர் அடிக்கடி விவாதங்களை நடத்தினார். அவரின் முயற்சியினாலேயே ஹட்டன் திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையம் உருவானது. அந்நேரம் அவர் சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார். அதன் தொடர்ச்சியாக தனியானதொரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு மலையகத்தின் மாற்று கட்சியினரிடத்திலிருந்தே முட்டுக்கட்டைகள் போடப்பட்டன என்பதை சகலரும் அறிவர்.
மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட அறிவித்த பிறகும் அவருக்கு ஆதரவு தருவதற்கே மலையக பிரதிநிதிகள் முன்வந்தனர்.
எனினும், 2010ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் பெ.சந்திரசேகரன் திடீர் இறப்பை தழுவ, அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வாய்ப்பை 2015 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி நன்றாக பயன்படுத்திக்கொண்டது.
ரணில் மற்றும் மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இ.தொ.காவை பின்தள்ளிவிட்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்றது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தனி வீட்டுத்திட்டங்கள், மலையக அதிகார சபை என்பன உருவாகின. பல்கலைக்கழகத்துக்கு இடம் ஒதுக்கி, அதற்கான பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே திடீரென ஜனாதிபதி மைத்திரிபால மகிந்தவை பிரதமராக்கி, நாட்டில் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கினார்.
எவ்வாறெனினும், ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியிலிருந்து பார்க்கும்போது ஆர்.பிரேமதாச, சந்திரிகா அம்மையார் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஆட்சிக் காலத்திலேயே மலையக சமூகத்தினருக்கு ஓரளவுக்கு ஏதோ நல்ல விடயங்கள் நடந்தன எனலாம்.
நல்லாட்சிக் காலத்தில் பலவீனமான ஜனாதிபதியாக மைத்திரி இருந்தாலும், ஆட்சி நடத்தியது என்னவோ பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான்.
மகிந்த ஆட்சியில் யுத்த வெற்றி மயக்கத்தில் நாடே இருந்தபோது, எவ்வளவோ விடயங்களை மலையக சமூகத்துக்கு பிரதிநிதிகள் பெற்றுக்கொடுத்திருக்கலாம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அவர் அமைத்துக்கொடுத்த கார்பட் வீதிகளும் மின்சார இணைப்புகளும் மலையக மக்களின் பசியையும் வறுமையையும் தீர்க்கவில்லை.
மைத்திரிக்குப் பிறகு களம் கண்ட கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவதாக முழக்கமிட்டு ஜனாதிபதியானார். இவர் ஒரு சிறந்த நிர்வாகி. ஆகையால் அவருக்கு ஆதரவு வழங்க நாம் முடிவு செய்தோம் என இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அச்சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும், 2019ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஆதரவு நல்கிய ஆறுமுகன் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 2020 மே மாதம் இறப்பை தழுவினார்.
கோட்டாபயவின் குறுகிய கால மோசமான ஆட்சியைப் பற்றி இப்போது புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ ஆறுமுகனின் கனவை நனவாக்குவோம் என்றும் மலையக பல்கலைக்கழகம் பற்றியும் உறுதி அளித்திருந்தார்.
இன்று ஆறுமுகன் இறந்து மூன்று வருடங்களாகிவிட்டன. இடையில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று மிகுதிக் காலத்தை ஆட்சி செய்கின்றார்.
என்ன பேசப்போகின்றனர்?
இப்படியானதொரு சந்தர்ப்பத்திலேயே அனைத்து மலையக பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மலையக சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாள் ஒதுக்கப்பட்டது.
கடந்த வாரம் 11ஆம் திகதி நாள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியானது தாம் ஏற்பாடு செய்த நடைபயண நிகழ்வை காட்டி, இச்சந்திப்புக்கு வேறொரு நாள் கேட்டிருந்தது. எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதில் கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.
ஏனைய ஜனாதிபதிகளை போன்றல்லாது ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடும்போது மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி புதிதாக எதுவும் இந்த பிரதிநிதிகள் எடுத்துக் கூறவேண்டிய தேவைகள் இருக்காது என்பதே உண்மை. ஏனென்றால், அவர் இந்நாட்டின் அனைத்து சமூகங்களினதும் பிரச்சினையை அறிந்தவர்.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் இவர் போட்டியிடுவது உறுதியாகவுள்ள நிலையில், இது ஒரு அரசியல் தேவையின் நிமித்தமான கலந்துரையாடலாக அமைந்துவிடக்கூடாது.
மலையக பிரதிநிதிகளில் இ.தொ.கா மாத்திரமே அரசாங்கத்தின் பக்கம் உள்ளது. மூன்று கட்சிகள் கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித்தின் பக்கம் உள்ளது. இந்த இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியமை ஒரு சந்தேகத்தையும் எழுப்பாமலில்லை. ஆனால், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துவிடக்கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.
மலையக சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். ஆனால் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட நான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும் என ரணில் விக்ரமசிங்கவும், அவரை தெரிவு செய்தால்தான் நாம் அவரினூடாக உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என மலையக பிரதிநிதிகளும் சொல்லாமல் இருந்தாலே போதுமானது.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக மலையக பிரதிநிதிகள், தமது மக்களின் அபிப்பிராயங்களையும் எண்ண ஓட்டத்தையும் அறிந்துகொள்வது மிக முக்கியமானது என்பதை உணர்ந்தால் சரி.

Address

Hatton

Alerts

Be the first to know and let us send you an email when Sooriyakanthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sooriyakanthi:

Share