மலைநாடு

  • Home
  • மலைநாடு

மலைநாடு Malainaadu (மலைநாடு) page and www.malainaadu.lk are shares daily political, cultural and public
(1)

மலைநாடு (https://www.facebook.com/Malainaadu/) முகநூல் ஊடாக மலையக மக்களின் அரசியல், கலாசார, பண்பாட்டு, சமூக பொருளாதார தகவல்களை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

ட்ரம்ப், புடின் சந்திப்பு - என்ன பேசினார்கள்?உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை ...
16/08/2025

ட்ரம்ப், புடின் சந்திப்பு - என்ன பேசினார்கள்?

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார்.

அதன் பிரகாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் கூட்டு இராணுவ தளத்தில் நடைபெற்றது. இங்கு புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை ட்ரம்ப் அளித்தார். இங்கு இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது புடின் கூறியதாவது:

எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நானும், ட்ரம்பும் வெளிப்படையாக பேசினோம். ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான்.

ட்ரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.

அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.

உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ட்ரம்ப் கூறியதற்கு உடன்படுகிறேன். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

இரு தலைவர்களும் "பல புள்ளிகளில்" உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தாலும், உறுதியான ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்: ஒரு முக்கியமான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. விரைவில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசி வழியாகப் பேச உள்ளேள்ன. எதிர்காலத்தில் ஜெலென்ஸ்கியை உள்ளடக்கிய முத்தரப்பு சந்திப்பு நடைபெறலாம் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி - புதிய பொலிஸ்மா அதிபர் சந்திப்பு!புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதி...
15/08/2025

ஜனாதிபதி - புதிய பொலிஸ்மா அதிபர் சந்திப்பு!

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குறையொன்றில் இர...
15/08/2025

சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குறையொன்றில் இரு சிறுத்தைப் புலிகள் நடமாடிவருவதாக சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி கொழும்பில் இன்று இடம்பெறும் மாபெரும் ஆர்ப்...
15/08/2025

பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி கொழும்பில் இன்று இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

அமெரிக்காவின் சான்டா பாப்ரா கொழும்புக்கு வருகிறது!யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா(LCS 32) கப்பல் ஓகஸ்ட் 16ஆம் திகதி நாளை கொழும்பு...
15/08/2025

அமெரிக்காவின் சான்டா பாப்ரா கொழும்புக்கு வருகிறது!

யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா(LCS 32) கப்பல் ஓகஸ்ட் 16ஆம் திகதி நாளை கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்த வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

எமது கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், எமது உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கப்பற்படையின் ஓர் அங்கமான யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ளது.

“யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கிறது,” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்துள்ளார்.

“பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும்.

2021, ஒக்டோபர்16ஆம் திகதி பெயர் சூட்டப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட இக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7இன் ஒரு அங்கமாக செயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கிறது.

ஹாலி எல பிரதேச சபைக்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்டத்தின் மேமலை பிரிவில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகளை புனர்நிர்மானம் செ...
15/08/2025

ஹாலி எல பிரதேச சபைக்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்டத்தின் மேமலை பிரிவில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகளை புனர்நிர்மானம் செய்யும் முகமாக தோட்ட மக்களுக்கு நிர்மான பணி பொருட்களை தோட்ட முகாமையாளருடாக வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில் ஹாலி எல பிரதேச தோட்ட பகுதி பொறுப்பாளர் மதி, பிரதேச சபை உறுப்பினர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலையகத்திலிருந்து ஜெனீவா வரை – எங்கள் குரல் இப்போது ஐநா உயர் சபை வரை பதிவாகியுள்ளது.மலையகத் தமிழ் சமூகத்தினர் எதிர்கொண்ட...
15/08/2025

மலையகத்திலிருந்து ஜெனீவா வரை – எங்கள் குரல் இப்போது ஐநா உயர் சபை வரை பதிவாகியுள்ளது.

மலையகத் தமிழ் சமூகத்தினர் எதிர்கொண்ட நீண்டநாள் பிரச்சினைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட்டுள்ளமை, எம் அனைவரது ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான முயற்சியின் விளைவாகும்.

இந்தப் பயணம், தலைவர் மனோ கணேசன் அவர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) நிலைப்பாடுகளை முன்வைத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையர் வோல்கர் டர்க்கை சந்தித்தபோது கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, கொழும்பில் நடைபெற்ற ஐ.நா. இலங்கை அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், நான் உயர் ஆணையரை சந்தித்து எம் சமூகத்தின் கோரிக்கைகளை விரிவாக விளக்ககினேன்.

அதுமாத்திரம் அன்றி கண்டியில் முன்னணி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உயர் ஆணையரை சந்தித்து, மக்களின் தொடர் அவலங்கள் அவர்களின் உரிமை மறுப்பு என்பன விளக்கமளிக்கப்ட்டன.
உயர் ஆணையருக்கு சமர்ப்பிக்கப்பட்ட எங்கள் அறிக்கை, மலையகத்தில் வாழும் எம் மக்களின் வரலாற்று மற்றும் கட்டமைப்பு சார்ந்த புறக்கணிப்புகளை விரிவாக பதிவு செய்தது, குறிப்பாக:

• நிலம் மற்றும் வீட்டு உரிமை – 60%க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நில உரிமையில்லா நிலைகளில், லயன் அறைகளில் சிக்கியுள்ளனர்.

• தொழிலாளர் உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டல் – வாழ்வாதாரத் தரத்திற்கு குறைவான வேதனங்கள், முன்னேற்றத்தை மறுக்கும் தங்கி வாழும் பொருளாதார முறை.

• சுகாதார அணுகல் – செயல்படாத தோட்ட மருத்துவ மையங்கள், நியமனமற்ற மருத்துவர்கள்.

• நிர்வாக சமத்துவம் – மிகுந்த மக்கள் தொகையுள்ள கிராம சேவை பிரிவுகள், தமிழ் பேசும் அதிகாரிகள் பற்றாக்குறை.

• பெண்கள் பாதுகாப்பு – பெண் தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் அநியாய சுரண்டல்.

இப்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான தனது சமீபத்திய விரிவான அறிக்கையில், உயர் ஆணையர், மலையகத் தமிழ் சமூகத்தினர் எதிர்கொள்ளும் கட்டமைப்பு மற்றும் பொருளாதார பாகுபாடுகளை வெளிப்படையாக அங்கீகரித்துள்ளார். இது நாங்கள் சமர்ப்பித்த அறிக்கையின் மொழியுடன் முற்றிலும் ஒத்ததாகும்.

இது ஒரு வரலாற்று தருணம் – எங்கள் போராட்டத்தின் உண்மை, உலகின் மிக முக்கியமான மனித உரிமைகள் மேடையில் இப்போது பதிவாகியுள்ளது. மலையகத்தின் தேயிலை மலைகளில் இருந்து ஜெனீவாவின் அரங்குகளுக்கு எங்கள் குரல் சென்றடைந்துள்ளது.

இந்த அங்கீகாரம் என்பது ஆரம்பம் மட்டுமே. நில உரிமை, சமமான வேலை சூழல், தரமான சுகாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மற்றும் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் தொடர்ந்து பயணித்து எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும்.

📄 நாம் சமர்ப்பித்த முழுமையான அறிக்கையை வாசிக்க: https://www.scribd.com/.../Structural-Discrimination-and...

பரத் அருள்சாமியின் முகநூல் பதிவு

இந்திய சுதந்திர தினத்தையிட்டு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்து!எமது நட்பு மிகுந்த அயல்நாடான இந்தியாவின் 79ஆவ...
15/08/2025

இந்திய சுதந்திர தினத்தையிட்டு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்து!

எமது நட்பு மிகுந்த அயல்நாடான இந்தியாவின் 79ஆவது சுதந்திர வாழ்த்துக்கள் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

”ஏறக்குறைய முழு இந்தியாவும் பிரித்தானிய சாம்ராட்சியத்திற்கு அடிமைப்பட்டு அரசியல் தலைமைகளினதும் மக்களினதும் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் 1947ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 15ஆம் நாள் சுதந்திரமடைந்தது.

பல மதத்தவர்களையும் சில ஆயிரக்கணக்கான மொழிகளையும் பேசும் பல இனத்தவர்களைக் கொண்ட இந்தியா 30 இற்கும் மேற்பட்ட மொழிவாரி மாநிலங்களையும் உலகிலே அதிக சனத்தொகைக்
கொண்ட நாடாகவும் திகழ்கின்றது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இவ்வனைத்து மக்களும் ஒரு கொடியின் கீழ் ஒரே தலைமையில் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை ஆகும்.
அது மட்டுமல்லாது கடந்த 79 வருடங்களாக அனைத்து மக்களும் ஒற்றுமையாக செயல்பட்டு அரசியல், பொருளாதார, சமூக ரீதியாகவும், கலை கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என அனைத்து துறையிலும் படிப்படியாக முன்னேறி இன்று ஓர் வலுவான வல்லரசாக திகழ்கின்றது.

இந்தியாவுக்கும் எம் இலங்கைக்குமான பிணைப்பு நட்புறவு சுமார் 2600 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. மதம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு என பல்வேறு விடயங்களில் காணப்படும் பின்னிப் பிணைந்த நிலை இன்று வரை எமது வாழ்வியலில் தாக்கத்தை செலுத்துகின்றது.

இந்நிலையில் இன்றைக்கு சுமார் 202 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து குடியேறியவர்களின் சந்ததியினர் பல இலட்சக்கணக்கில் இலங்கையில் வாழ்கின்றனர்.

அவர்களின் நலன் கருதி இந்தியா வழங்கிவரும் பல்வேறு உதவிகளை நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக கல்வி, சுகாதாரம், வீடமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் எம்மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இது தவிர ஒட்டுமொத்த இலங்கைக்கும் இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் இக்கட்டான சூழ்நிலையில் ஓடிவந்து உதவிக்கரம் நீட்டிய நிகழ்வுகள் ஏராளம்.

அவை அனைத்தையும் இதய சுத்தியோடு வரவேற்பதோடு எதிர்காலத்திலும் அவை தொடரும் என எதிர்பார்க்கின்றேன்.

79ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகள் மற்றும் முழு இந்திய மக்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் தூதுவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.” என தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது சவாலாக உள்ளது!தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒர...
15/08/2025

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது சவாலாக உள்ளது!

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தோட்டத் தொழில்கள் அமைச்சும் நிதி அமைச்சும் இது தொடர்பாக தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்கள் -  நுவரெலியா மாவட்டத்துக்கு முன்னுரிமை வேண்டும்!"அரச நிறுவனங்களில் சுமார...
13/08/2025

அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்கள் - நுவரெலியா மாவட்டத்துக்கு முன்னுரிமை வேண்டும்!

"அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமன அனுமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனங்களின்போது நுவரெலியா மாவட்டம் மற்றும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்." என்று இ.தொ.கா உபத்தலைவர் திரு.சச்சிதாணந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

"அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி மிக வரவேற்கத்தக்க விடயமாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஐயாவின் காலப்பகுதியின் ஆசிரியர் நியமனங்கள் , அரச ஊழியர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

மேலும் மத்திய மாகாண முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனின் காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இறுதியாக தனது பாராளுமன்ற காலப்பகுதியிலும் மலையகத்துக்கான 740 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இதைத் தவிர்த்து பார்க்கின்ற போது வேறு எந்த காலப்பகுதியிலும் அரசு நியமனங்கள் வேறு நிறுவனங்களின் நியமனங்கள் என்பவற்றை வேறு யாரும் பெற்றுக் கொடுத்ததாக தெரியவில்லை.
தற்போதைய அரசு எல்லா வழிகளிலும் பாகுபாடற்ற நல்ல நிர்வாகத்தை நடத்துவதற்கான செயற்பாடுகளை செய்வதாக கூறி வருகின்ற இந்த நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த மிகப்பெரிய வாய்ப்பில் சிறுபான்மை சமூகத்துக்கு சரியான சந்தர்ப்பங்களை அவர்களது தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சம்பந்தமாக வலியுறுத்தி அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இன்னும் ஒரு 55 வருட காலத்துக்கு 62 ஆயிரம் நியமன வாய்ப்பில் விகிதாசார அடிப்படையில் பார்த்தாலும் கூட சிறுபான்மை இனத்துக்கு சுமார் 23 ஆயிரம் நியமன வாய்ப்புகள் இல்லாது போய்விடும் என்றே கூறவேண்டும் எனவும் சச்சிதானந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் – குறைந்த காணி, அதிக அநீதிஇலங்கையின் நிலப் பகிர்வு முறையில் நீண்டகாலமாக நிலவி...
13/08/2025

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் – குறைந்த காணி, அதிக அநீதி

இலங்கையின் நிலப் பகிர்வு முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் அநீதி, மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையைப் பின்தள்ளி வருகிறது. கிராமிய மக்களுக்கு 20 பேர்ச் காணி வழங்கப்படும் நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு வெறும் 7 பேர்ச் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது வெறும் எண் வேறுபாடு அல்ல; சம உரிமை மீதான நேரடி மீறல் ஆகும்.

ஒரே நாட்டின் குடிமக்களாக இருந்தும், வாழும் இடத்தின் அடிப்படையில் நில அளவில் இவ்வளவு வித்தியாசம் வைப்பது ஜனநாயகக் கொள்கைக்கு எதிரானது.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற அடிப்படைக் கொள்கையே இங்கு
தேயிலை, ரப்பர் போன்ற பயிர்களுக்கு பிரசித்தமான பகுதிகள்

குறைந்த காணி காரணமாக:
சிறு விவசாயம் சாத்தியமில்லை
வீடு விரிவாக்கம் இயலாத நிலை
குடும்பம் முழுமையாக தோட்ட வேலை மீது சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம்

காலனித்துவ காலத்தில், இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காக திட்டமிட்டு குறுகிய பரப்பளவிலான குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டன.

இந்த அநீதி, நூற்றாண்டுகளாக மாற்றமின்றி தொடர்கிறது.
பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், சமூக மையங்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு இடமின்றி போகிறது.

கல்வி, ஆரோக்கியம், சமூக தொடர்பு அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
சம நில அளவை வழங்கும் சட்ட திருத்தம்
வரலாற்று அநீதியை சரிசெய்யும் சிறப்பு திட்டங்கள்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச், கிராமிய மக்களுக்கு 20 பேர்ச் என்ற நிலைமை, சட்டரீதியாகவும் மனிதநேய ரீதியாகவும் ஏற்க முடியாதது. சமத்துவமும் சமூக நீதியும் நிலைநிறுத்தப்படும் நாள், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை கொண்டு வரும்

Suresh Rajaratnam

13/08/2025

பெருந்தோட்ட தொழிலாளர்களின் EPF ETF பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்களை தீர்க்க விழிப்புணர்வு அவசியம்!

- மஸ்கெலியா பிரதேசசபை பிரதி தவிசாளர் ராஜ் அசோக் இளைஞர்களுக்கு வேண்டுகோள் -

Address


Alerts

Be the first to know and let us send you an email when மலைநாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மலைநாடு:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share