Colombo TV Network

Colombo TV Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Colombo TV Network, Media, Hunupitiya.

connect with COLOMBO TV NETWORK -world largest live tamil Trending news tv network.




லைக் செய்து செய்திகளை படியுங்கள்.. TV Network










அனைத்துவிதமான செய்தி

களையும் உடனுக்குடன் அறிந்திட இங்கே லைக் செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/ColomboTVnetwork/

🇱🇰 Happy 78th Independence Day, Sri Lanka 🇱🇰Warm wishes to our beloved nation on the 78th Independence Anniversary.May t...
04/02/2026

🇱🇰 Happy 78th Independence Day, Sri Lanka 🇱🇰

Warm wishes to our beloved nation on the 78th Independence Anniversary.
May the Lion Flag fly high with pride, unity, and strength.
Let us honor our heroes, protect our heritage, and work together for a peaceful, prosperous future.
One nation, one heart, one Sri Lanka.

✨ Proud to be Sri Lankan ✨
Colombo TV Network COLOMBO BREAKING NEWS

Wishing Sri Lanka a proud 77ᵗʰ Independence Anniversary 🇱🇰May our nation grow in unity, peace, and strength.Colombo TV N...
03/02/2026

Wishing Sri Lanka a proud 77ᵗʰ Independence Anniversary 🇱🇰
May our nation grow in unity, peace, and strength.
Colombo TV Network

அணிநடை எருமை!தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வட பகுதியில் அமைந்துள்ளது மாராசோ தீவு (Marajó Island). இத்தீவில் மழைப்பொழிவு...
09/11/2025

அணிநடை எருமை!

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வட பகுதியில் அமைந்துள்ளது மாராசோ தீவு (Marajó Island). இத்தீவில் மழைப்பொழிவு அதிகமென்பதால் சாலைகளில் சேறும் சகதியும் சில மாதங்களுக்கு நிறைந்திருக்கும். எனவே இத்தீவிலுள்ள காவல்துறையினர் தம்முடைய ரோந்துப் பயணங்களுக்கு (patrol) மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை; சேற்றிலும் சகதியிலும் நடப்பதில் வல்லவையான எருமைகளையே பயன்படுத்துகின்றனர். மாராசோ தீவிலுள்ள சோரே (Soure) எனும் நகரத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இருவர் எருமைமீது கம்பீரமாகப் பயணிக்கும் காட்சியைத்தான் படத்தில் காண்கிறீர்கள். 🙂

பயணத்துக்குப் பெயர்பெற்ற குதிரையைப் பயன்படுத்தாமல் எருமையை ஏன் இவர்கள் பயன்படுத்துகின்றனர்? 🤔

குதிரைகள் விரைந்து செல்லக்கூடியவை; ஆனால், அவற்றின் குளம்புகள் குறுகலாக (narrow hooves) இருப்பதால் சேற்றில் பயணிக்கும்போது அதில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு; ஆனால் எருமைகளின் குளம்புகள் அகலமானவை; விரிந்தவை; (broad, splayed hooves); எனவே சேற்றில் சிக்கிக்கொள்ளாமல் பயணிக்க வல்லவை. அதனால்தான் காவல்துறையினர் எருமைகளில் பயணிக்கின்றனர். இத்தீவுவாழ் பொதுமக்களும்கூடச் சேறும் சகதியும் நிறைந்த சாலைகளைக் கடக்க எருமைகளைப் பயன்படுத்துகின்றனர்.

எருமைப் பயணமென்பது இந்தத் தீவின் அடையாளமாகவே மாறியிருப்பதால் சுற்றுலாப் பயணிகளையும் இஃது ஈர்ப்பதாகத் தெரிகின்றது. எனவே எருமையால் இத்தீவின் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு மக்கள்தொகையைவிட எருமைகளின் தொகை அதிகமாம்! 🙂

எருமைகள் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவையல்ல. அப்படியானால் இவை இத்தீவுக்கு வந்ததெப்படி எனும் வினா எழுகின்றது அல்லவா?

இந்த எருமைகள் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து இத்தீவுக்கு 19ஆம் நூற்றாண்டில் இறக்குமதியாகியிருக்கின்றன.

எருமைகளை இத்தீவுவாசிகள் வரவழைத்ததென்னவோ உழவுத்தொழிலுக்கும் எருமைகளிலிருந்து கிடைக்கும் பால், இறைச்சி, தோல் போன்றவற்றைப் பயன்கொள்வதற்கும்தான்! ஆனால் இவற்றின் தடையற்ற ’நடை’த்திறனைக் கண்டதும் சதுப்புநிலப் பகுதிகளைக் கடப்பதற்கான வாகனமாகவும் இவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

*****

எருமைகளை இத்தீவுக்கு நல்கிய நாடுகளுள் ஒன்று நமது பாரததேசம் எனும்போது நம்மவர் எருமையின் பெருமையை அறியாதிருப்பரோ?

எருமைக்கும் நமக்குமான தொடர்பு நெடியது. சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் மருதநிலத்து விலங்கான எருமையின் செயற்பாடுகளை விரிவாகப் பேசும் வகையில் ’எருமைப் பத்து’ என்றே ஒரு பத்து இருக்கின்றது. அதிலொரு பாடல் எருமையின் நடையை ’அணிநடை’ அதாகப்பட்டது ’அழகான நடை’ என்று வருணிக்கின்றது. நோட் திஸ் பாயிண்ட்!😁

”அழகுநடை போடும் எருமையானது ஆடித் திளைத்த சேற்றில் நெய்தலும் ஆம்பலும் பூத்திருக்கும் கழனிகள் கொண்ட ஊரனின் மகள்” என்று தலைவி இதில் சுட்டப்பெறுகின்றாள்.

”அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகளிவள்…” (ஐங். 96)

தமிழ்நாட்டுச் சிறுவர் எருமைமீது ஏறிக்கொண்டு தம் தொழில்களை மேற்கொள்ளச் செல்லும் வழக்கம் அந்நாளில் இருந்திருக்கின்றது (பழைய தமிழ்த்திரைப்படங்களில்கூட இக்காட்சிகளைக் காணலாம்). அவ்வாறு சிறுவர்கள் எருமைமீது அமர்ந்துசெல்லும் காட்சியைக் கண்டார் மருதன் இளநாகனார் எனும் சங்கப் புலவர். 🧐அவருக்கு எருமை, குன்றுபோலவும் அதில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் மந்திகள்போலவும் காட்சியளித்திருக்கின்றனர். 😁அக்காட்சியைப் பாட்டாகவே பாடிவிட்டார் புலவர்.

”…………..திரிமருப்பு எருமை
மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்
சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத்
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்.” (அகம். 206)

வீரத்தோடும் எருமையை இணைத்துப் பார்த்திருக்கின்றது தமிழ் மரபு. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் நின்று, அஞ்சியோடும் தன் வீரர்களை எருமைபோலப் பாதுகாத்து நிற்பவனின் வீரத்தை ’எருமை மறம்’ என்கிறது தமிழ். 💪

காரான், மையான், மை, மேதி, மூரி எனப் பல பெயர்கள் எருமையைக் குறிப்பதற்கு நம்மிடமிருக்கின்றன.

கர்நாடகத்திலுள்ள மைசூரை நாமறிவோம். எருமையூர் என்ற பெயரே மையூர் என்றாகிப் பின் மைசூர் என்றானதாகச் சொல்லப்படுகின்றது. எருமைகள் மிகுந்த பகுதியாக ஒருகாலத்தில் இவ்வூர் இருந்ததனால் இப்பெயர் பெற்றிருக்கவேண்டும். 😇

’எருமை வெளியனார்’ எனும் பெயரில் சங்கப் புலவரொருவர் இருந்திருக்கின்றார். இங்கே ’எருமை’ என்பது அவரது ஊர் எனக் கருதப்படுகின்றது.

ஆமாம்…இத்துணைச் சிறப்புவாய்ந்த அணிநடை எருமையை நம் மக்கள் எமனேறும் வாகனமாக்கியது ஏன்?🤔

பயணிக்கும் பாதை எத்தனை கடினமாக இருப்பினும் எருமை இருந்தால் எமன் அதிலேறிக் கவலையில்லாமல் கடந்துசென்று உயிரைக் கவர்ந்துவிடலாம் எனும் எண்ணத்தால் இருக்குமோ?!😎

~மேகலா இராமமூர்த்தி

#மாராசோ
́


#அணிநடைஎருமை
#மைசூர்
#எருமைமறம்
#எருமைவெளியனார்

5-  வகையான பாயாசம்ல்..---🥛 1. சேமியா பாயாசம் (Semiya Payasam)தேவையான பொருட்கள்:சேமியா – 1 கப்பால் – 3 கப்சர்க்கரை – ¾ கப...
08/11/2025

5- வகையான பாயாசம்ல்..

---

🥛 1. சேமியா பாயாசம் (Semiya Payasam)

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 கப்

பால் – 3 கப்

சர்க்கரை – ¾ கப்

நெய் – 2 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை – சிறிதளவு

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

செய்வது எப்படி:

1. வாணலியில் நெய் ஊற்றி சேமியாவை பொன்னிறமாக வறுக்கவும்.

2. பால் சேர்த்து கொதிக்க விடவும்.

3. சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

4. ஏலக்காய் தூள் சேர்த்து இறக்குவதற்கு முன் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
👉 சுவையான சேமியா பாயாசம் ரெடி!

---

🌾 2. அரிசி பாயாசம் (P**l Payasam / Rice Payasam)

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ¼ கப்

பால் – ½ லிட்டர்

சர்க்கரை – ½ கப்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

நெய் – 1 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்வது எப்படி:

1. பச்சரிசியை கழுவி சிறிது நெய்யில் வறுக்கவும்.

2. பாலை சேர்த்து மெதுவாக வேக விடவும்.

3. அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

4. ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
👉 இனிப்பும் நெய்யும் கலந்த நாட்டு பால் பாயாசம் தயார்!

---

🍠 3. சக்கரைவள்ளிக்கிழங்கு பாயாசம் (Sweet Potato Payasam)

தேவையான பொருட்கள்:

சக்கரைவள்ளிக்கிழங்கு – 2

வெல்லம் – ½ கப்

தேங்காய் பால் – 1 கப்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

நெய் – 2 டீஸ்பூன்

முந்திரி – சில

செய்வது எப்படி:

1. கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

2. வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

3. இதை கிழங்குடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

4. நன்கு கலந்ததும் தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

5. மேலே நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
👉 நாட்டு மணம் மிக்க சக்கரைவள்ளிக்கிழங்கு பாயாசம் ரெடி!

---

🌴 4. தேங்காய் பால் பாயாசம் (Thengai P**l Payasam)

தேவையான பொருட்கள்:

அரிசி – ¼ கப்

வெல்லம் – ½ கப்

முதல் தேங்காய் பால் – 1 கப்

இரண்டாம் தேங்காய் பால் – 1 கப்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

நெய் – 1 டீஸ்பூன்

முந்திரி – சிறிது

செய்வது எப்படி:

1. அரிசியை வேக வைத்து வைக்கவும்.

2. வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

3. அதில் வேகிய அரிசி, இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

4. அடுப்பை அணைத்து, முதல் தேங்காய் பால் சேர்க்கவும்.

5. ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
👉 நெய் வாசனை கலந்த தேங்காய் பால் பாயாசம் தயார்!

---

🫘 5. பருப்பு பாயாசம் (Paruppu Payasam)

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – ½ கப்

வெல்லம் – ¾ கப்

தேங்காய் பால் – 1 கப்

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்வது எப்படி:

1. பாசிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வேக வைத்து கொள்ளவும்.

2. வெல்லத்தை கரைத்து வடிகட்டி அதில் சேர்க்கவும்.

3. கலவையை நன்கு மிதமாக கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.

4. இறுதியில் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

5. வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
👉 இதன் நாட்டு சுவை அம்மா சமையலை நினைவுபடுத்தும்!
Colombo TV Network COLOMBO BREAKING NEWS

உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.! தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?ஆட்டுக்கல் என்பது வ...
05/10/2025

உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.! தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?

ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்

பழ.கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

(குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

ஒரு உழவு மழை :

‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

மனிதனுக்கு இந்த உலகில் விலை மதிப்பற்ற செல்வம் அறிவு..!

பலமான ஆயுதம் பொறுமை..!

மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை..!

அற்புதமான மருந்து புன்னகை..!

சிந்தித்து செயலாற்றுங்கள்.
Muhammad Waseeim Thahir
Colombo TV Network
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚

Hi
24/03/2025

Hi

நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை♓1 ஹெக்டேர் - 2 ஏக...
10/04/2024

நில அளவுகள் அறிவோம்.
1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச்
இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

உங்கள் நண்பர்களும் அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்.... நமது பக்கத்தை லைக் செய்யவும்

10/04/2024
உங்கள் CEB கணக்கு மீதியை அறியநீங்கள் Pay பண்ணும் CEB Bill ஆனது உடனடியாக Update ஆகின்றதா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஓர் இ...
11/03/2024

உங்கள் CEB கணக்கு மீதியை அறிய

நீங்கள் Pay பண்ணும் CEB Bill ஆனது உடனடியாக Update ஆகின்றதா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஓர் இலகுவான வழி,
உங்களுடைய கையடக்க தொலைபேசியில்
BAccount Number ஐ type செய்து 0719991987 அனுப்பவும்.
(Eg. B 1234567890 & Send to 0719991987)

ஏனையவர்கள் பயனடைந்து கொள்ள பகிருங்கள்...SHARE

2023 ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 800 m ஓட்டத்தில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கம் பெற்றார்.Congratul...
06/10/2023

2023 ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 800 m ஓட்டத்தில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கம் பெற்றார்.

Congratulations Golden Women Tharushi Karunarathna 🥇🇱🇰

Happy teacher's day for all of our teacher's
06/10/2023

Happy teacher's day for all of our teacher's

Address

Hunupitiya
11000

Alerts

Be the first to know and let us send you an email when Colombo TV Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Colombo TV Network:

Share

Category