JK TAMIL News Update

JK TAMIL News Update Memes & Current Apparencies Meme Creator, News Creator, Editor

21/03/2025

பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தடை

அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார்.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

21/03/2025
21/03/2025

மீண்டும் விளக்கமறியலில் தேசபந்து

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வெலிகம - பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

21/03/2025

இன்றைய வானிலை ..!
2025.03.20

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய ,சப்ரகமுவ, ‌மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
***

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் காலி, கொழும்பு, புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

15/03/2025

மருந்து கொள்முதல்களில் மோசடி ..!




2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவசரகால கொள்முதல் முறையின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான போலி ஆவணங்கள் குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு (COPE) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளைப் பதிவு செய்யாததால் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) தலைமை நிர்வாக அதிகாரி சவீன் செமகே குழுவிடம் தெரிவித்துள்ளார்.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

15/03/2025

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் போராட்டம் ..!

இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு கோரி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், இன்று நள்ளிரவுடன் அனர்த்தம், மரண சடங்கு போன்ற கடமைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

15/03/2025

வானில் தோன்றிய அதிசய நிலவு!




வானில் அதிசய இரத்த நிலவு நேற்றையதினம்(13) முதல் இன்று(14) அதிகாலை வரை அவதானிக்கப்பட்டுள்ளது.
பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் சந்திரன் முழுமையாகச் செல்லும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சிறிது நேரம் வானம் முற்றிலும் இருட்டாகத் தோன்றும். ஆனால் அது முற்றிலும் கருப்பாக இருப்பதில்லை. மாறாக சந்திரன் சிவப்பு நிறத்தில் வானத்தில் தோன்றுகிறது.

அப்போது வானத்தில் இரத்தம் தோய்ந்த நிறத்தில் நிலவு காணப்படுவதால் இதை இரத்த நிலவு அல்லது பிளட் மூன் என்று அழைக்கின்றனர்.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

15/03/2025

வெட்டுக்காயங்களுடன் இரு பெண்கள்
சடலங்களாக மீட்பு ..!



திருகோணமலை பகுதியில் பெண்கள் இருவர் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில்
வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

15/03/2025

வன விலங்குகள் கணக்கெடுப்பு ஆரம்பம்!

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன விலங்குகள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (15) மணிக்கு நடைபெறவுள்ளது.

அன்று வீட்டுத்தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

15/03/2025

தீப்பிடித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

178 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தின் போது 172 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் விமானத்திலிருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு படையினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

10/03/2025

இலங்கை வந்த சிவகார்த்திகேயன்..!

சுதா கொங்கரா இயக்கும் "பராசக்தி" திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, மதுரையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினர்.

முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாகச் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பராசக்தியின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது.

இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகை தந்துள்ளனர்.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

Address

Ja-Ela

Website

Alerts

Be the first to know and let us send you an email when JK TAMIL News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share