Thavatheesan Amirthalingam

Thavatheesan Amirthalingam வாழு வாழ விடு அவ்ளோ தான் தத்துவம்

யாழ் இராசவின் தோட்டம்  முளவை சந்தியில் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை கண்டுபிடிக்கபட்டுள்ளது. பொலிஸார் விசாரனையை ஆரம்பித்த...
09/07/2025

யாழ் இராசவின் தோட்டம் முளவை சந்தியில் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை கண்டுபிடிக்கபட்டுள்ளது. பொலிஸார் விசாரனையை ஆரம்பித்துள்ளனர்.

மஹாராஜவின் FOX Resort அரண்மனையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ,இலங்கை தமிழ் அரசுக்கட்சி சந்திப்பு.
30/05/2025

மஹாராஜவின் FOX Resort அரண்மனையில்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ,இலங்கை தமிழ் அரசுக்கட்சி சந்திப்பு.

🚨விளையாட்டு உபகரண இறக்குமதி மோசடி மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட  சிறை. நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட  சிறை.   முன...
29/05/2025

🚨விளையாட்டு உபகரண இறக்குமதி மோசடி மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட சிறை. நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட சிறை.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக கெரம்போர்ட் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று(29) அறிவிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அதன் தலைவர் பிரதீப் ஹெட்டியாரச்சி, பிரதீப் அபேரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 2014 செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 14,000 கெரம்போர்ட்டுகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரண இறக்குமதியின் போது 53.1 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 06 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்ப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 70ஆம் சரத்தின் கீழ் பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
------------------------

🚨கொழும்பு வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(29) கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவு.

23/05/2025

முன்னால் அமைச்சர் துமிந்த திசாநாயக கைது

சர்ச்சைக்குரிய உணவக பெயர் பலகை அகற்றம்யாழ் மாநகரசபையின் துரித நடவடிக்கையினால் அகற்றபட்ட. மாமிச உணவகத்தின் பெயர்பலகை.யாழ்...
22/05/2025

சர்ச்சைக்குரிய உணவக பெயர் பலகை அகற்றம்

யாழ் மாநகரசபையின் துரித நடவடிக்கையினால் அகற்றபட்ட. மாமிச உணவகத்தின் பெயர்பலகை.யாழ்ப்பாணம் மாநகர சபை இன்று வியாழக்கிழமை அகற்றியுள்ளது.

யாழ் நல்லூர் ஆலயச்சூழலில் புதிதாக அமைக்கப்பட்ட அனுமதி அளிக்கப்படாத அசைவ உணவகத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை அடுத்து, உணவகத்தின் பெயர்ப்பலகையை யாழ் மாநகர சபையினர் தற்போது அகற்றியுள்ளனர்.

21/05/2025

இந்தியாவில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா

தற்போது 257 பேருக்கு உறுதி

21/05/2025

கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு "சாலக" பெயர் ரணில் தரப்பு பரிந்துரை.

21/05/2025

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன்.

19 மே 2025உதயன் பத்திரிகை அவதூறுச் செய்தி - நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ் தேவானந்தா..............யாழ்ப்பாணத்தில் இருந்த...
19/05/2025

19 மே 2025

உதயன் பத்திரிகை அவதூறுச் செய்தி - நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ் தேவானந்தா..............
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட 500 மில்லியன் ரூபா நஸ்ட ஈடு கோரிய மானநஷ்ட வழக்கின் முன்விளக்க கலந்துரையாடல் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி எஸ். சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்றது.

'தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவராக்க அரசு முயற்சிப்பதேன்? - நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி கேள்வி' என்ற தலைப்பில் 2012.11.07 ஆம் திகதியன்று உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி, தனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட பொய்யான செய்தி என்பதை சுட்டிக்காட்டி டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த பத்திரிகை நிறுவனத்துக்கு எதிராக 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரிய மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணைகளுக்கு எதிர்தரப்பினர் தொடர்ச்சியாக சமுகமளிக்காமையால் ஒருபக்க விளக்கத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட நீதிமன்றம் வழக்காளியான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு, நட்ட ஈடாக 2 மில்லியன் ரூபாவை உதயன் பத்திரிகை பிரசுரிப்பாளரான நியூ உதயன் பப்ளிகேசன் பிரைவேட் லிமிடெட் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து உதயன் பத்திரிகை நிறுவனம், குறித்த வழக்கை மீள் விசாரணைக்கு உட்படுத்துமாறு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்தரன் முன்னிலையில் முன்விளக்க நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேலதிக முன்விளக்க கலந்துரையாடலுக்காக எதிர்வரும் ஜீன் மாதம் 6 ஆம் திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எகிற போகும் மின்சார கட்டணம் .2025 ஜூன் முதல் மின்சார கட்டணத்தை 18.3% இனால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோர...
18/05/2025

எகிற போகும் மின்சார கட்டணம் .

2025 ஜூன் முதல் மின்சார கட்டணத்தை 18.3% இனால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது .

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தற்போது இந்த முன்மொழிவை பரிசீலித்து வருகின்றது.

கலந்துரையாடல்களுக்கு பின்னர், 2025 ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தங்கள் தீர்மானத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

#மின்சாரசபை

இப்ப இதை யார் செய்திருப்பார்கள்?
17/05/2025

இப்ப இதை யார் செய்திருப்பார்கள்?

யாழ் கொழும்புத்துறை துண்டி இந்து மயாணத்தையோட்டி உள்ள வடிகால் துப்பரவில் ஈடுபட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்மால் பிரத...
15/05/2025

யாழ் கொழும்புத்துறை துண்டி இந்து மயாணத்தையோட்டி உள்ள வடிகால் துப்பரவில் ஈடுபட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்மால் பிரதி மேயர் ரீகன் அவர்களின் செயல்பாட்டை பாராட்டுவதுடன், அதில் உள்ள குப்பைகளை அகற்ற கூறியும் யாழ் மாநகரசபை அதிகாரிகள் அதுக்கு அலட்சியம் காட்டுவது ஏன்?

இது யாழ் மாநகரசபை அதிகாரிகளின் கவனதுக்கு...!

Address

Jaffna

Telephone

+94774737737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thavatheesan Amirthalingam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share