யாழ்ப்பாணம்.com

யாழ்ப்பாணம்.com இணையத்தில் யாழ்ப்பாணம் /எங்களுடன் இணையுங்கள்/

தமிழ்க்கலாச்சாரத்தின் மையமெனத்திகழும் யாழ்ப்பாணக் குடாநாட்டினை பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஆயிரம் வருடங்களுக்கு மேலான யாழ்ப்பாண வரலாறு சிறப்பானது. வீதிகள் தோறும் ஆலயங்களும், பச்சைப் பசேலென விரிந்து பரந்திருக்கும் வயல்வெளிகளும் குடாநாட்டை சூழ பரந்து விரிந்திருக்கும் நீலக்கடலும் அழகுக்கு அழகு சேர்ப்பன.

வவுனியா கூமாங்குளத்திக் தமிழ் இளைஞனை துரத்தி சென்ற போக்குவரத்து பொலிஸ்.  அந்த இளைஞன் சடலமாக காணப்படுகின்றார்தனது பெயர்ப்...
11/07/2025

வவுனியா கூமாங்குளத்திக் தமிழ் இளைஞனை துரத்தி சென்ற போக்குவரத்து பொலிஸ். அந்த இளைஞன் சடலமாக காணப்படுகின்றார்

தனது பெயர்ப் பட்டியையும் விட்டு விட்டு தப்பி ஓட்டம். பண்டார என்ற நபர்ரின் பெயர்ப்பட்டி சம்பவ இடத்தில்.

11/07/2025

.com 5324 Followers, 13 Following, 62.8k Likes - Watch awesome short videos created by swissnews7.com

யாழ்பாணத்துக்குள் நின்று அரசியல் செய்பவர்கள் என அனைவரும் பொறுப்பெடுக்க வேண்டிய தரப்புக்கள்.
11/07/2025

யாழ்பாணத்துக்குள் நின்று அரசியல் செய்பவர்கள் என அனைவரும் பொறுப்பெடுக்க வேண்டிய தரப்புக்கள்.

11/07/2025

பரபரப்பான கோடை விடுமுறைக்கு தயாராகும் விமான நிலையங்கள்.

உண்மையில் ஆரிய குளம் என்பது எமது சொத்து யாழ் மத்தியில் அமைந்திருக்கும் ஆரியகுளத்திற்கு நானும் எனது நண்பர்களும் சென்றிருந...
10/07/2025

உண்மையில் ஆரிய குளம் என்பது எமது சொத்து

யாழ் மத்தியில் அமைந்திருக்கும் ஆரியகுளத்திற்கு நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம். அதன் தோற்றம் எமக்கு மிகவும் கவலையை கொடுத்திருந்தது.

அங்கு ஓர் மூலையில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. உண்மையில் அவ் இடம் பல மில்லியன் செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு எமது மக்களின் பொழுதுபோக்கு தளமாக யாழ் மாநாகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி அவர்கள் ஒரு வருமானத்தை திரட்ட வேண்டி உள்ளது என்பதால் மாநாகரசபை ஆணையாளரிடம் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தேன்.

அப்போது தான் அறியக்கூடியதாக இருந்தது அவ் இடம் தனியாருக்கு ரென்டர் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை.

உண்மையில் ஓர் பொது சொத்தை நாம் ரென்டர் எடுத்தால் அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இது அவருடைய தவறு மட்டுமல்ல எமது தவறும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிள்ளையான் தனது சகாக்களை காட்டி கொடுப்பதாக தகவல் 🚶
10/07/2025

பிள்ளையான் தனது சகாக்களை காட்டி
கொடுப்பதாக தகவல் 🚶

09/07/2025

அரசாங்கத்திற்கே பயம் அர்சுனாகதைத்தால்

09/07/2025

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டன...

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இத...
09/07/2025

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு
14ஆம் நாள்
09.07.2025

#செம்மணி #செம்மணிபுதைகுழி

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன்  ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று
09/07/2025

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று

08/07/2025

தலைவர் வீரச்சாவு -தலைவர் தனது வித்துடலை சர்வதேசம் பார்க்க விரும்பினாரா

28/06/2025 முதல் 06/07/2025 வரை சிங்களச் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளின் கதியை அன்றாடம் பதிவிட்டு வந்தேன். பலர் ...
08/07/2025

28/06/2025 முதல் 06/07/2025 வரை சிங்களச் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளின் கதியை அன்றாடம் பதிவிட்டு வந்தேன். பலர் படித்திருப்பினும் சிலர் மட்டுமே கருத்திடல் செய்தனர்.

சிங்களச் சிறை , அரசியற் கைதி , விடுதலை போன்ற பதப் பிரயோகம் சிலருக்கு எரிச்சல் ஊட்டியிருக்கலாம். ஆட்சியாளரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கடா என்று அந்தச் சிலர் தம் மனதுள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.

பாரிய குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளில் கணிசமானோர் 2009 இலிருந்து பலதடவை தம் குடும்பத்தினர் ஊடாக ஆட்சியாளரிடம் மன்னிப்புக் கோரிக் கடிதம் அனுப்பினர். அவை பயன் தரவில்லை. ஆனால் நான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

எனக்கெதிராக அரசினால் கொழும்பு மேல்நீதிமன்றில் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சட்டத்தரணியை நியமிக்காமல் எனக்காக நானே வாதாடினேன். ஒரு வழக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் இன்னொரு வழக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழும் போடப்பட்டிருந்தன.

சிங்கள மொழித் தேர்ச்சியோ வழக்காடும் சட்ட அறிவோ பயிற்சியோ எதுவும் இல்லா நிலையில் மனத் துணிவை மட்டுமே நம்பி ஆபத்தான இக் கருமத்தில் இறங்கினேன்.
சிறையிலிருந்து தமிழ்த் தேசிய மூத்த சட்டத்தரணி ஒருவரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்க முயன்றேன். தன் மனைவியின் சகோதரி குடும்பம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு இப்போது நேரமில்லை என்று கூறிக் கதையை முடித்து விட்டார். என்னால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மீது நடத்தப்பட வேண்டிய உண்மை விளம்பல் விசாரணை ( Voir Dire ) பற்றிய அறிவு அப்போது எனக்கு இருக்கவில்லை. நீதிமன்றும் எனக்கு அதைத் தெளிவுபடுத்தவில்லை. இந்த இடத்தில் நான் சறுக்கியதன் காரணமாகவே தண்டிக்கப்பட்டேன். இது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான 2008 இல் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையதில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை 2017 இல் எனக்கு விதிக்கப்பட்டது. தண்டனையைக் குறைக்கக் கோருமாறு கேட்கும் வாய்ப்பு நீதிமன்றினால் தரப்பட்ட போதும் நான் அதை வேண்டாம் என நிராகரித்தேன்.

அவசரகாலச் சட்டத்தின் கீழான அடுத்த வழக்கு என்வசம் ஆறு கைக்குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டுத் தொடர்பானது. குற்றத்தை ஒத்துக்கொண்டால் மூன்று மாதம் சிறைத் தண்டனை தருவதாக நீதிமன்று எனக்கு ஆசை காட்டியது. என் கைது தொடர்பில் அரசுத் தரப்பினால் தவறான தகவல் முன்வைக்கப்பட்டதுடன் முக்கிய பொலிஸ் சாட்சி பொய்யுரைப்பதை குறுக்கு விசாரணை செய்து நான் நிரூபித்தேன். ஆனாலும் நீதிமன்று 2018 இல் ஆயுள் தண்டனை விதித்தது.

நீதிமன்றங்களில் வழங்கப்படுவது தீர்ப்பேயன்றி நீதியல்ல. இரண்டு தீர்ப்புக்கும் எதிராக மேல்முறையீடு செய்தேன். அங்கும் எனக்காக நானே வாதாட அனுமதி பெற்றேன். இதன்போது சட்ட நுணுக்கங்களை அறிந்து கொண்டவனாக நான் வளர்ந்து விட்டேன்.
2023 ஆகியும் மேலும் மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டே வந்தது.

இதற்குள் கொறோனா தன் கைவரிசையை ஒருபுறம் காட்ட மறுபுறம் மூன்று நோய்கள் என்னைத் தாக்கின. பலதடவை உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்கனவே என்னுடல் பலவீனப்பட்டிருந்தது. சிறைக்குள்ளேயே என் சாவு என நான் எண்ணியபோது முக்கியமான மூவர் என் விடுதலைக்குக் காரணமாயினர்.

முதலாமவர் புற்றுநோய். Cancer.
இரண்டாமவர் பக்கவாதம். Stroke.
மூன்றாமவர் நடுக்குவாதம் Parkinson.

இவர்களுடன் இணைந்து பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றி !!!!!!!!!!

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் யாருக்காவது ஏதாவது தெளிவின்மை அல்லது மாற்றுக் கருத்து இருப்பின் கருத்திடுங்கள். கலந்துரையாடலாம்.

----- தேவதாசன்.
08/07/2025.

பகிர்வு :-
நன்றி 🙏 தேவதாசன் கனகசபை

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாழ்ப்பாணம்.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share