Ulagavalam

Ulagavalam நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤️❤️

யாழில் இருந்து புறப்பட்ட  #யாழ்ராணி ஓமந்தையில் புகையிரத தண்டவாளத்தை உடைத்து கொண்டு சென்றதில் நான்கு புகையிரத பெட்டிகள் த...
26/01/2025

யாழில் இருந்து புறப்பட்ட #யாழ்ராணி ஓமந்தையில் புகையிரத தண்டவாளத்தை உடைத்து கொண்டு சென்றதில் நான்கு புகையிரத பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலத்தியுள்ளது. மயிரிழையில் காப்பாற்ற பட்ட மக்கள்.
புகையிரத பெட்டிகள் தடம் புரளாமல் காப்பாற்றப்பட்ட பயணிகள்.

உடைந்து விழுந்த மின்சார தூண்.மின்சார சபை ஊழியர்கள் மூவருக்கு பலத்தகாயம்; ஒருவரின் நிலை கவலைக்கிடம் - மொனரகலையில் சம்பவம்...
26/01/2025

உடைந்து விழுந்த மின்சார தூண்.
மின்சார சபை ஊழியர்கள் மூவருக்கு பலத்தகாயம்; ஒருவரின் நிலை கவலைக்கிடம் - மொனரகலையில் சம்பவம்

மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் ஒன்று உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஊழியர்கள் மின்சார தூண்களை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

ஒரு ஊழியர் ஒரு மின் கம்பத்தின் மேல் நின்று மின் கம்பிகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது, ​​அந்தக் தூணின் நடுப்பகுதி உடைந்து தரையில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி திருநகர் பகுதியில், இன்று சனிக்கிழமை காலை புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
25/01/2025

கிளிநொச்சி திருநகர் பகுதியில், இன்று சனிக்கிழமை காலை புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் வவுனியா சுந்தரபுரத்ம் பகுதியில் வெட்டிக் கொலை!வவுனியா, சுந்தரபுரத்தில் வியாழக்கிழமை (23.01)...
24/01/2025

28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் வவுனியா சுந்தரபுரத்ம் பகுதியில் வெட்டிக் கொலை!

வவுனியா, சுந்தரபுரத்தில் வியாழக்கிழமை (23.01) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த குறித்த நபர் கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் இரவு 11:30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் சென்று கொண்டிருந்த போதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

✅👉 #பெரியநீலாவணை பகுதியில் சற்று முன்னர் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்...!
24/01/2025

✅👉 #பெரியநீலாவணை பகுதியில் சற்று முன்னர் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்...!

யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில்...
19/01/2025

யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சொந்த இடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஜெயந்தன் (வயது-38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே குளிக்கச் சென்றதாகவும் பின்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது.
17/01/2025

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே துப்பாக்கிச் சூடு..! இருவர் பலி...!மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே இன்று (16) நட...
16/01/2025

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே துப்பாக்கிச் சூடு..! இருவர் பலி...!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே இன்று (16) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு,

ஆணொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான சவேரியன் அருள் மற்றும் 42 வயதான செல்வக்குமார் யூட்என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இருவரும்,காயமடைந்த ஆண் ஒருவரும் இன்று (16) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறவிருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகை தந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிய வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை படுகொலையை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில்,

இவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

16/01/2025

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள் கைது

 #கல்கிஸ்ஸ_துப்பாக்கிச்  #சூடு_4_சந்தேகநபர்கள்  #கைது16 Jan 2025 கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி ...
16/01/2025

#கல்கிஸ்ஸ_துப்பாக்கிச் #சூடு_4_சந்தேகநபர்கள் #கைது

16 Jan 2025 கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற நபரும், அதை அகற்ற உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ​ஜெக்கெட்டுகளை களுபோவில, போதிவத்வ பகுதிக்கு எடுத்துச் சென்ற நபர் மற்றும், டிசம்பர் 28 முதல் ஜனவரி 05 வரை அந்த பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை வைத்திருந்து, ஜனவரி 05 ஆம் திகதி இரவு கொட்டாவை-பிலியந்தலை 255 வீதியில் உள்ள பாழடைந்த இடத்திற்கு கொண்டு சென்று குற்றத்திற்கு துணை போன நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்

கைது செய்யப்பட்ட 28, 27, 21 மற்றும் 17 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வெள்ளவத்தை, பொரளை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
dc

16/01/2025
கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும்  முச்சக்கர வண்டி ஒன்றும் வந்தாறு மூலை ப...
15/01/2025

கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் வந்தாறு மூலை பகுதியில் வைத்து நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வை பட்டத்திருவிழா - 2025
15/01/2025

வல்வை பட்டத்திருவிழா - 2025

கோட்டைக்கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். சாரதி தப்பியோட்டம்மட்டு கல்முனை சாலை வழிய...
14/01/2025

கோட்டைக்கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். சாரதி தப்பியோட்டம்

மட்டு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் கோட்டைக்கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக்கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித் தள்ளியதில் அப் பெண்மணி படுகாயமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி வேனைக் கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். கோட்டைக்கல்லாறு பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயமே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது

யாழில் ரயில் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் மரணம்!யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் ம...
14/01/2025

யாழில் ரயில் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில் திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களான நவரத்தினம் நவாஸ்கரன் (வயது 19) என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நடந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த 2 வயது பெண் குழந்தை.! RIP😥
14/01/2025

மட்டக்களப்பில் நடந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த 2 வயது பெண் குழந்தை.! RIP😥

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகலில் மட்...
14/01/2025

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகலில் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் 2ஆம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உள்ள கிணற்றிற்கு அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவதினமான நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பாத்த நிலையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தையை பிரேத பரிசோதைனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தோடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

⭕ யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தலமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலில் சாவகச்சேரி பொலிஸ் போ...
14/01/2025

⭕ யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தலமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலில் சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 23,20வயதுடைய இரு இளைஞர்கள் 200போதை மாத்திரைகளுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 60 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சாவகச்சேரி
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரனையின் பின்னர் இன்று சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Ulagavalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulagavalam:

Videos

Share