லங்கா செய்திகள்

லங்கா செய்திகள் உடனுக்குடன் உண்மை செய்திகள் 🇱🇰
(2)

  💔
20/09/2025

💔

🔴  #மந்திரிமனை இடியத்தொடங்கியுள்ளது....!தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ்.மாநகர சபையினரின் கவனத்திற்கு!சற்று முன்னர் முதல...
18/09/2025

🔴 #மந்திரிமனை

இடியத்தொடங்கியுள்ளது....!

தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ்.மாநகர சபையினரின் கவனத்திற்கு!

சற்று முன்னர் முதல் சங்கிலியன் அரண்மனை (மந்திரிமனை) கட்டடம் இடிய தொடங்கியுள்ளது...

📷 - Rajeevan Saahithyan

'மன்னாரில் ஒரு சாதனை நாயகி"அகில  இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 17 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான ...
18/09/2025

'மன்னாரில் ஒரு சாதனை நாயகி"

அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 17 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வடமாகாணம் சார்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவி செல்வி சம்சிக்கா சத்தியசீலன் என்பவர் தங்கபதக்கம் 🏅 பெற்றுக்கொண்டு மன்னார் மண்ணிற்க்கு பெருமை சேர்த்து

மன்னார் மண்ணில் இருந்து தேசிய மட்டத்திலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய #முதல்பெண்மணியாகவும் இவர் விளங்குகிறார்.

இவரை பயிற்சிவித்த
( )
மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுனர் (மாவட்ட செயலகம் மன்னார் ) அவரது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும். NYC மன்னார்
என அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🔥

இந்த வெற்றிப் பெண்மணி மன்னார்
தாழ்வுபாடு கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

🔴📌சங்காரம் திரைப்படத்தில் துணை பெண் நடிகைக்கான விருதினை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் நடிகையுமான கிருஷிக...
17/09/2025

🔴📌சங்காரம் திரைப்படத்தில் துணை பெண் நடிகைக்கான விருதினை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் நடிகையுமான கிருஷிகா புஷ்பராசா அவர்கள் பெற்றுள்ளார்.!

முன்னைய ஜனாதிபதிகள் அமைச்சர்கள் யாழ் வந்தால் குசன் கதிரைகள் இருக்கைகளாகவும் மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதை...
17/09/2025

முன்னைய ஜனாதிபதிகள் அமைச்சர்கள் யாழ் வந்தால் குசன் கதிரைகள் இருக்கைகளாகவும் மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதைகளுக்கு கம்பளம் விரித்து அலங்கரிக்கப்படும்😇😇😇 ஆனால் மக்களின் ஜனாதிபதி எப்படி இருக்க வேண்டும் 💕🥰AKD

சோகத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் உயிரிழப்பு.!புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந...
12/09/2025

சோகத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் உயிரிழப்பு.!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று வயதில் மகளுடன் சக்கோட்டையில் வாழ்ந்து வரும் நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார், குகாசினி நிஷாந்தன் (வயது 37) என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மையும் அப்பனும் 😍
12/09/2025

அம்மையும் அப்பனும் 😍

யாருக்கு இருக்கு இப்படி ஒரு நண்பன்...❤😍
07/09/2025

யாருக்கு இருக்கு இப்படி ஒரு நண்பன்...❤😍

யாழ்ப்பாண இளைஞர்கள் தயாரித்த சொகுசு சுற்றுலா படகு நெடுந்தீவில்!எமது இளையர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன ஆனால் அதனை வெளிக...
07/09/2025

யாழ்ப்பாண இளைஞர்கள் தயாரித்த சொகுசு சுற்றுலா படகு நெடுந்தீவில்!

எமது இளையர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன ஆனால் அதனை வெளிக்கொண்டுவர போதுமான வசதிகள் இல்லை.

உள்ளூர் உற்பத்திகள் பெருகுமானால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 💪💪💪

📌👉இது போல் இன்று எத்தனை பிஞ்சு உள்ளங்கள் நொந்திருக்குமோ 💔2027 ல் அல்ல இன்றே உடனே ஒழித்துக் கட்ட வேண்டிய ஒரு பரீட்சை........
06/09/2025

📌👉இது போல் இன்று எத்தனை பிஞ்சு உள்ளங்கள் நொந்திருக்குமோ 💔
2027 ல் அல்ல இன்றே உடனே ஒழித்துக் கட்ட வேண்டிய ஒரு பரீட்சை.....
பிள்ளைகளுக்கு, அடுத்தவர் உள்ளத்தைbyb மிதித்து ஏற கற்றுக் கொடுக்காதீர்கள்.....

அடுத்தவரையும் இணைத்து ஏற கற்றுக் கொடுங்கள்.

🔴 நேற்றைய எல்ல - வெல்லவாய பேரூந்து விபத்தில்  #உயிரிழந்த சிலரின் புகைப்படங்கள் 🥹💔🥀 ஊடகங்களில் வெளியாகி உள்ளன..
05/09/2025

🔴 நேற்றைய எல்ல - வெல்லவாய
பேரூந்து விபத்தில் #உயிரிழந்த
சிலரின் புகைப்படங்கள் 🥹💔🥀
ஊடகங்களில் வெளியாகி உள்ளன..

🫡❤️ நேற்றிரவு 500 அடி பள்ளத்தில் பஸ் விழுந்த போது தனது உயிரைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி பலரின் உயிரை காப்பாற்றிய  #...
05/09/2025

🫡❤️ நேற்றிரவு 500 அடி பள்ளத்தில்
பஸ் விழுந்த போது தனது உயிரைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி பலரின் உயிரை காப்பாற்றிய #இராணுவ_வீரன்!

நேற்று இராவண எல்ல பகுதியில்
நடந்த பேருந்து விபத்தில் மூன்று
பேரைக் காப்பாற்ற துணிச்சலான முயற்சியில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்
ஒருவர் இன்று பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

இராணுவத்திற்கு கிடைத்த தகவலின்படி, முதல் மீட்புக்குழு வீரர்கள் இரவு 9:20 மணியளவில் ராவண எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர்.

சம்பவ இடத்தில், ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது, அவர்களில் சிறப்புப் படை டி-சர்ட் அணிந்த ஒரு இளைஞர் இருந்தார், அவர் ஒரு சிறிய குழுவிற்கு தலைமை தாங்கி பாதிக்கப்பட்டவர்களை
மீட்கத் தொடங்கினார்.

பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து
நின்ற இடத்திற்கு மேலே இறந்த நான்கு பேரும், காயமடைந்த மூன்று பேரும் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சாதாரண மனிதர்களால் அந்த இடத்தை அடைவது மிகவும் கடினம் என்றாலும்,
அந்த இளைஞன் தனது உயிரைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி இறந்த மற்றும் காயமடைந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றார்.

காயமடைந்தவர்களில் ஒருவருடன் கீழே இறங்கும்போது, அவரின் தலை ஒரு பாறையில் மோதியதால் பலத்த காயம் அடைந்தார். வலியையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கையில் அவர் தொடர்ந்து உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணிக்குப் பிறகு, அவருக்கு ஆரம்ப மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அந்த நபர் இலங்கை இராணுவத்தின் 2வது சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல்
W.M.V.M. பண்டாரா என்பது கண்டறியப்பட்டது.

விடுப்பில் வீட்டில் இருந்த
அதிகாரி, தனது வீட்டிற்கு அருகில்
நடந்த விபத்துக்கு பதிலளித்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவினார்.

போர்க்காலத்திலும் சரி, இயற்கை அனர்த்தங்களின் போதும் சரி, வீதி @விபத்துக்களின் போதும் சரி, தீ விபத்துக்களின் போதும் சரி எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் நேரம், காலம், இரவு, பகல், மழை,
வெள்ளம், புயல் என எதையும் பொருட்படுத்தாமல் களத்திலிறங்கி
மக்களுக்காக போராடும் எமது நாட்டின்
படை வீரர்கள் எப்போதும் எமது அன்புக்கும் மரியாதைக்குமுரியவர்கள்..

By: Razana Manaf

Respect to all soldiers 🫡💚🇱🇰

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when லங்கா செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to லங்கா செய்திகள்:

Share