SAHO Creations

SAHO Creations Documentary making | Brand story video making | Digital marketing services | Commercial advertisement | Product photoshoot
(3)

விற்பனைக்கு – அரிசி ஆலைக் கட்டடம் மற்றும் களஞ்சியம்📍 இடம்: கனகராயன் குளம், வவுனியா✅ 4 1/2 ஏக்கர் காணி✅ அரிசி ஆலைக் கட்டட...
30/05/2026

விற்பனைக்கு – அரிசி ஆலைக் கட்டடம் மற்றும் களஞ்சியம்

📍 இடம்: கனகராயன் குளம், வவுனியா
✅ 4 1/2 ஏக்கர் காணி
✅ அரிசி ஆலைக் கட்டடம் மற்றும் விசாலமான களஞ்சிய வசதி
✅ 120 KW சோலார் மின்சார அமைப்பு
✅ மாதாந்திர சோலார் வருமானம் சுமார் ரூ. 500,000/-
✅ தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தித் துறையினருக்கு சிறந்த வாய்ப்பு

கட்டடம் 1 - 150 அடி நீளம் X 51 அடி அகலம் X 17 அடி உயரம்

தளம் - 400 மூடை நெல்லு கொள்ளளவு

கட்டடம் 2 - 75 அடி நீளம் X 40 அடி அகலம் X உயரம் 24 அடி

📞 மேலும் விபரங்களுக்கு:
077 248 7201
உங்கள் தொழில் முதலீட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அரிய சந்தர்ப்பம்!

30/05/2026

உங்க தேவைக்கு உடனடித் தீர்வு

உங்கள் வீட்டு நிகழ்வுகளை இனி புதிய அனுபவமாக மாற்றுங்கள்! திருமணம், பிறந்தநாள் விழா, குடும்ப சந்திப்பு, பள்ளி நிகழ்வு, நி...
28/05/2026

உங்கள் வீட்டு நிகழ்வுகளை இனி புதிய அனுபவமாக மாற்றுங்கள்!

திருமணம், பிறந்தநாள் விழா, குடும்ப சந்திப்பு, பள்ளி நிகழ்வு, நிறுவன விழா — எந்த நிகழ்வாக இருந்தாலும், உங்கள் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குங்கள்!

🥽 VR (Virtual Reality) அனுபவம் இப்போது உங்கள் நிகழ்வுகளிலும்!

✅ 360° Virtual Reality Shows
✅ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதுமையான அனுபவம்
✅ உங்கள் நிகழ்வுக்கு கூடுதல் கவர்ச்சி
✅ புகைப்படம் எடுக்கும் அளவிற்கு வைரலாகும் அனுபவம்
✅ குடும்பமும் நண்பர்களும் ரசிக்கும் டிஜிட்டல் பொழுதுபோக்கு
🎊 “வந்தவர்கள் பேசிக்கொண்டே போகும்” ஒரு வித்தியாசமான அனுபவத்தை உங்கள் நிகழ்வில் சேருங்கள்!

📞 முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
SAHO Creations – நிகழ்வுகளை அனுபவமாக மாற்றுகிறோம்!

+94702004416 077 248 7201

28/05/2026

நாங்கள் இந்த நிலைமைக்கு வர இது தான் காரணம்!!
Kannan Product
Uthayanagar West
0703355452

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.”உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வித்தகன் அவர்கள், தனது ப...
27/05/2026

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”
உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வித்தகன் அவர்கள், தனது பெயருக்கேற்றவாறு திறமையைத் தன்னுள் கொண்ட ஒரு சிறந்த கைவினைக் கலைஞன் என்பதை அவரின் உற்பத்திகளே காட்டி நிற்கின்றன. இவரின் திறமைக்கு 6 தடவைகள் ஜனாதிபதி விருதும், 56 தடவைகள் மாகாண மட்டத்திலான விருதுகளையும் தட்டிச் சென்ற சாதனையாளன் என்பதுடன், பல உள்ளூர் கைவினைக் கலைஞர்களை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். இவ்வாறான முயற்சியாளர்களுடன் பயணிப்பதும், அவர்களை ஊக்குவிப்பதும் எமது கடமையாகும்.
தென்னஞ்சிரட்டைகளில் பலவகையான கண்கவர் பெண்களுக்கான ஆபரணங்கள், சுவர் ஓவியங்கள், வீடுகளை அலங்கரிக்கும் அழகுப் பொருட்கள், சமையலறைக்குத் தேவையான கரண்டிகள், அகப்பைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை உருவாக்கி, உள்ளூரில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார்.
இப்போது வித்தகன் அவர்களின் உற்பத்திகள் இலண்டன் சந்தையையும் நோக்கி பயணிக்கத் தயாராக இருப்பது மிகுந்த பெருமைக்குரிய விடயமாகும். தரமான உற்பத்திகளுக்கு எப்போதும் சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்பதற்கு இவரே சிறந்த சான்றாக திகழ்கிறார். VAP MULTI CRAFT

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நினைப்பவர்களில் ஒருவரா நீங்கள்?
இந்தப் பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்வதன் மூலம், மேலும் பல வாய்ப்புகள் உருவாக உங்களாலும் உதவ முடியும்.

வேலை வாய்ப்பு Ellalan Tourism And Adventures in Jaffna நிறுவனத்திற்கு🎯 Tourism & Hospitality Executive தேவை📍இடம் : யாழ்ப...
26/05/2026

வேலை வாய்ப்பு
Ellalan Tourism And Adventures in Jaffna நிறுவனத்திற்கு
🎯 Tourism & Hospitality Executive தேவை

📍இடம் : யாழ்ப்பாணம்

[email protected]
+94 74 255 2024

25/05/2026

உங்கள் நிகழ்வுகளை மேலும் மெருகூட்ட

25/05/2026

என் வெற்றிக்கு என் பிள்ளைகள் தான் காரணம்...

முள்ளிவாய்க்கால் வடுக்களிலிருந்து உயிர்த்தெழுந்து, 'விழுதல் என்பது வீழ்ச்சியல்ல, புதிய எழுச்சியின் தொடக்கம்' என்பதைத் தன...
24/05/2026

முள்ளிவாய்க்கால் வடுக்களிலிருந்து உயிர்த்தெழுந்து, 'விழுதல் என்பது வீழ்ச்சியல்ல, புதிய எழுச்சியின் தொடக்கம்' என்பதைத் தன் வாழ்வாங்கு நிரூபித்துக் காட்டிய ஒரு போராளியின் கதை இது.

"முள்ளிவாய்க்காலோடு நாங்களும் செத்துப் போயிருக்கலாம்..." என்ற எண்ணம் நமக்கே பலமுறை தோன்றியிருக்கும் அளவுக்கு மரணமும் துயரமும் சூழ்ந்திருந்த காலம் அது. 2009 மே 17-ஆம் திகதி வரை அப்படியொரு பேரழிவு வரும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை; தலைவர் ஏதாவது ஒரு மாற்று வழியைக் காட்டுவார், சூழல் மாறும் என்றே கடைசி நிமிடம் வரை அனைவரும் நம்பினர். ஆனால், ஒட்டுமொத்தமாக ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அவர்தான் தெய்வேந்திரம் முத்துலிங்கம். பூர்வீகம் திருகோணமலை மூதூர் என்றாலும், தற்போது முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் உள்ள முத்துவிநாயகபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த கால யுத்தச் சூழ்நிலையும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளும் அவரை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய வைத்தன. உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடு போராட்டக் களத்தில் இணைந்த அவர், கிட்டத்தட்ட 20 வருடங்கள் அந்தப் போராட்ட வாழ்க்கையிலேயே வாழ்ந்தார்.

ஒரு முன்னாள் போராளியாகப் பல போர்க்களங்களைக் கண்ட அவருடைய உடலில், ஆறு தடவைகளுக்கு மேல் விழுப்பண்கள் (காயங்கள்) ஏற்பட்டுள்ளன. 1992-ஆம் ஆண்டு முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் நடந்த சண்டையிலும், யாழ்ப்பாணம் முன்னேறிப் பாய்ச்சல் சமரிலும் படுகாயமடைந்து தன் ஒரு கையை இழந்தார். இறுதியாக முள்ளிவாய்க்கால் மண்ணிலும் குண்டு வீச்சில் அவருடைய இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

யுத்தம் முடிந்து, புனர்வாழ்வு முகாம் சென்றுவிட்டுத் திரும்பிய போது அவர்களின் உலகம் தலைகீழாக மாறியிருந்தது. போராட்டக் காலத்தில் நாட்டை மீட்கப் போராடிய அவர், இப்போது தன் குடும்பத்தைக் காப்பாற்றப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். முள்ளிவாய்க்காலில் இருந்து வெறும் கையோடுதான் திரும்பினர்; அவரிடம் எதுவுமே இல்லை, எல்லாம் 'பூஜ்ஜியம்' (Zero) என்ற நிலையில்தான் இருந்தது. சாதாரண வாழ்க்கையில் இருந்தவர்களாவது தங்களுக்கு என்று ஏதோ ஒரு சிறு சேமிப்பையோ, சொத்தையோ வைத்திருந்தார்கள், ஆனால் இவர்களிடம் எதுவுமே இல்லை. அந்தத் தருணத்தில்தான், "பேசாமல் முள்ளிவாய்க்காலிலேயே செத்திருக்கலாம், இந்த வறுமையை விட மரணம் எவ்வளவோ மேலானது" என்று அவரது மனம் கதறியது.

ஆனால், உடனே அவரது உள்மனம் சொன்னது: "போராட்டத்திற்காகவே வாழ்ந்தவன் நீ, இதையும் ஒரு கை பார்த்துவிடு!" அந்த மன உறுதிதான் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

"இழந்தது கை மட்டும்தான், எங்கள் இதயத்தில் உள்ள நம்பிக்கையை அல்ல!"
முத்துலிங்கமும் அவரது மனைவியும் மாற்றுத்திறனாளிகள். புனர்வாழ்வு முடிந்து சமூகத்தோடு இணைந்து வாழ்வது ஆரம்பத்தில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. உழைத்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், முதலில் விவசாயம் செய்தனர். ஆனால், மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால் அவர்களால் எல்லா வேலைகளையும் செய்ய முடியவில்லை; ஆட்களுக்குக் கூலி கொடுத்து விவசாயம் செய்ததால் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை.

அப்போதுதான், நமக்கான ஒரு சுயதொழிலை நாமே உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தனர். ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்த நல்லினப் பால் மாடுகளில் இருந்து கறக்கும் பாலை, அப்படியே பண்ணைகளுக்குக் கொண்டு போய் மிகக் குறைந்த விலைக்கு விற்றனர். "நாம் ஏன் பாலை விற்க வேண்டும்? அதைக் கொண்டு நாமே தரமான தயாரிப்புகளை உருவாக்கி மக்களுக்குக் கொடுக்கக் கூடாது?" என்ற யோசனை பிறந்தது.

வெறும் 5 லீட்டர் பாலோடுதான் தங்களின் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினர். அவரது மனைவி ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அவர்தான் இந்தத் தயாரிப்பு வேலைகள் அனைத்தையும் முன்னின்று செய்கிறார். முத்துலிங்கம் தயாரித்த பொருட்களை வெளியே கொண்டு போய் விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வெளியாட்களுக்குக் கூலி கொடுக்கும் வசதி இல்லாததால், கணவனும் மனைவியும் இரவும் பகலும் தூங்காமல் உழைத்து வேலைகளைச் செய்கின்றனர். அவர்களின் மகனும் லேபிள் ஒட்டுவது போன்ற சிறு சிறு உதவிகளைச் செய்து அவர்களோடு தோள் கொடுக்கிறான்.

இன்று சந்தையில் பெரிய நிறுவனங்கள் கவர்ச்சியான பேக்கிங் மற்றும் செயற்கை நிறமிகள் (Colors), ரசாயனங்களைக் கலந்து பொருட்களை விற்கிறார்கள். ஆனால், இவர்களுடைய தயாரிப்பில் எந்தவொரு ரசாயனப் பொருளும் கிடையாது; 100% இயற்கையானது, நச்சுத்தன்மையற்றது. தற்போது அவர்கள் பசும்பால் தயிர், நெய், பால் டோபி (Milk Toffee), தட்டவடை, மரவள்ளி கிழங்கு சிப்ஸ் மற்றும் மோர் மிளகாய் போன்ற பலதரப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரித்து வருகிறார்கள்.

அவர்களின் நோக்கம் லாபம் சம்பாதிப்பது மட்டுமல்ல; தங்கள் சமூகத்தில் உள்ள எளிய மக்களும் குறைந்த விலையில் தரமான, ஆரோக்கியமான உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும், இன்று தங்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி கொண்டு போகக்கூடிய அளவுக்கு ஓரளவு முன்னேறியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்தத் தொழிலை முல்லைத்தீவோடு நிறுத்தாமல், வடமாகாணம் முழுவதுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அவர்களுக்கு இருக்கிறது.

அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தங்களைப்போல் ஆகிவிடக் கூடாது, அவர்கள் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். அந்த கிராமத்தில் அருகில் டியூஷன் வகுப்புகள் கூட கிடையாது; பிள்ளைகள் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுதான் படித்தார்கள். வறுமையும் உடல் ஊனமும் அவர்களை வாட்டினாலும், பிள்ளைகளுக்கு அவர்கள் கொடுத்த ஊக்கமும், பிள்ளைகளின் சுயமுயற்சியும் இன்று பேரெழுச்சியாய் பலன் தந்துள்ளது. அவர்களின் மகன் உயர்தரத்தில் (A/L) மூன்று பாடங்களிலும் 'A' சித்தி (3A) பெற்று, தற்போது புகழ்பெற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறான்!

"விடியல் தள்ளிப் போகலாம்... ஆனால், இருள் ஒருபோதும் நிரந்தரமல்ல!"
முள்ளிவாய்க்கால் அவர்களை வாழத் தகுதியற்றவர்கள் போல மாற்ற நினைத்தது. ஆனால், அதே முள்ளிவாய்க்காலின் சாம்பலில் இருந்து, உழைப்பையும் மன உறுதியையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு, இன்று ஒரு சுயதொழில் அதிபராகவும், பல்கலைக்கழக மாணவனின் பெற்றோராகவும் அந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

தடைகள் ஆயிரம் வந்தாலும் தளர்ந்து போகாமல் உழைத்தால், இந்த உலகமே நம் காலடியில் பணியும் என்பதற்கு முத்துலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையே ஆகச்சிறந்த சாட்சி!

Authored by : K. Saranka

Address

1st Floor, LIC Building, No 37, Vembady Road
Jaffna
40000

Telephone

+94772487201

Alerts

Be the first to know and let us send you an email when SAHO Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAHO Creations:

Share

Category