13/06/2026
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (12) இரவு சிறுவன் காணாமல் போனதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.