Polonnaruwa Today

Polonnaruwa Today 🌍 உலகம் பேசும் ஊர்க் குரல் 🎙️

சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி. பெண்கள் பிரிவில் பங்கு பற்ற பொலன்னறுவை தம்பாளையைச் சேர்ந்த அல் ஹாபிழா. மும்தாஸா மன்சூர...
05/08/2026

சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி. பெண்கள் பிரிவில் பங்கு பற்ற பொலன்னறுவை தம்பாளையைச் சேர்ந்த அல் ஹாபிழா. மும்தாஸா மன்சூர் தெரிவு செய்யப்பட்டு நாளை மக்கா நோக்கிப் பயணம்-

புனித குர்ஆனை மனப்பாடம் செய்தல், ஓதுதல் மற்றும் அதன் விளக்கவுரை (தஃப்ஸீர்) ஆகியவற்றிற்கான 46-வது 'மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேசப் போட்டி' 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 முதல் 19 வரை மக்காவில் நடைபெறவுள்ளது. இம்முறை முதன்முறையாக, ஆண்களுக்கான பிரிவுடன் பெண்களுக்கான தனிப் பிரிவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேதிகள் மற்றும் இடங்கள்:
போட்டி நடைபெறும் காலம்: ஆகஸ்ட் 6-19, 2026;
நிறைவு விழா: ஆகஸ்ட் 19, 2026

ஆண்களுக்கான இடம்: மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் (புனித மசூதி);

பெண்களுக்கான இடம்: ஹில்டன் மக்கா கன்வென்ஷன் ஹோட்டலில் உள்ள பிரம்மாண்ட அரங்கம்.

பரிசுகள் மற்றும் பிரிவுகள் குறித்த விவரங்கள்: மொத்தப் பரிசுகள்: பரிசுகளின் மொத்த மதிப்பு 10,260,000 சவூதி ரியால்கள் (SAR) ஆகும்.

போட்டிப் பிரிவுகள்: இப்போட்டியில் ஐந்து முக்கிய பிரிவுகள் உள்ளன:
ஏழு விதமான ஓதுதல் முறைகளுடன் (கிராயாத்) முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தல்,
விளக்கவுரையுடன் மனப்பாடம் செய்தல்,
முழுமையாக மனப்பாடம் செய்தல் மற்றும் குர்ஆனின் தொடர்ச்சியான பகுதிகளை மனப்பாடம் செய்தல்.

ஏற்பாட்டுக் குழு: இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்புப் பணி மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகம்.
சவுதி அரேபியா.

பொலன்னறுவை மாவட்ட "சிறந்த கனிஷ்ட்ட இரானுவ படை வீரனாக" (Best Junior Soldier – Polonnaruwa District) தம்பாளை சுபையிர்  ஸிப...
03/08/2026

பொலன்னறுவை மாவட்ட "சிறந்த கனிஷ்ட்ட இரானுவ படை வீரனாக" (Best Junior Soldier – Polonnaruwa District) தம்பாளை சுபையிர் ஸிப்கி தெரிவு... (எம்.ஸீ.ஏ.ஸமட்)

149,000-க்கும் அதிகமான இலங்கை இராணுவ வீரர்களில், 30,000-க்கும் அதிகமான 25 வயதிற்குட்பட்ட வீரர்களில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட Best Junior Soldier பட்டியலில்,பொலன்னறுவை மாவட்டம் சார்பாக சிபையிர் முஹம்மட் ஸிப்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் பொலன்னறுவை தம்பாளை கிராமத்தைச் சேர்ந்தவர். S.T.சுபையிர் (Eravur) மற்றும் A.L. பாத்தும்மா (ஸவ்தாஉம்மா) ஆகியோரின் இளைய புதல்வரான இவர், தற்போது 11 Gemunu Watch படைப்பிரிவில் பணியாற்றி வருவதுடன், 9th NCC (இரத்தினபுரி) யில் Special Operation Trainer(விஷேட தாக்குதல் தொடர்பான பயிற்றுவிப்பாளாராகவும் சேவையாற்றி வருகிறார்.

5 ஆண்டுகால கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் 30-க்கும் மேற்பட்ட மேம்பட்ட (Advanced) இராணுவப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான அங்கீகாரமாக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

தொழுநோயை ஒழிப்போம் – பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் புதிய முயற்சிதொழுநோய் (Leprosy) தொடர்பான பொது ...
01/08/2026

தொழுநோயை ஒழிப்போம் – பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் புதிய முயற்சி

தொழுநோய் (Leprosy) தொடர்பான பொது மக்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 31 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பொலன்னறுவை மருத்துவ சுகாதார அதிகாரி அலுவலகத்தில் (Medical Officer of Health Office – MOH) விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்வை மருத்துவ சுகாதார அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்ததுடன், வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தொழுநோயின் தன்மை, அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் சமூகத்தில் காணப்படும் தவறான நம்பிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

கருத்தரங்கில் ஆசிரியர்கள், கிராம அலுவலர்கள் (கிராம நிலதாரிகள்), பொலிஸ் அதிகாரிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொலன்னறுவை மாவட்ட தமன்கடுவை கிளையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பை உறுதியளித்தனர்.

இதன் போது கருத்தரங்கின் முக்கிய தீர்மானமாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தமன்கடுவை பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ தொழுகை முடிந்த பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்கு தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு உரைகளை மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பொது மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் தொழுநோய் குறித்த தவறான அச்சங்கள் மற்றும் சமூகப் பாகுபாடுகளை நீக்குவதோடு, ஆரம்ப அறிகுறிகளை மக்கள் விரைவாக அறிந்து உடனடியாக மருத்துவ சேவையைப் பெற ஊக்குவிப்பதே பிரதான நோக்கமாகும்.

இந்த புதிய விழிப்புணர்வு திட்டம், மஸ்ஜித்களும் சுகாதாரத் துறையும் இணைந்து சமூக நலனுக்காக மேற்கொள்ளும் சிறந்த முன்மாதிரி முயற்சியாகும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் தொழுநோய் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும்.

ஊடகப் பிரிவு,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ,
பொலன்னறுவை மாவட்டம்,
தமன்கடுவை கிளை.

"நமது உள்ளங்கள் குர்ஆனின் ஒளியால் ஒளிரட்டும்!"RAHMATH NAGAR KHATHMUL QURAN CERTIFICATION CEREMONYஅல்லாஹ்வின் கிருபையால் ...
31/07/2026

"நமது உள்ளங்கள் குர்ஆனின் ஒளியால் ஒளிரட்டும்!"

RAHMATH NAGAR KHATHMUL QURAN CERTIFICATION CEREMONY

அல்லாஹ்வின் கிருபையால் எங்கள் (அல் ஹஸனாத் தஹம் பாசல) அல் மத்ரஸதுல் ஹைரிய்யா மக்தப் குர்ஆன் மத்ரஸாவின் கத்முல் குர்ஆன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29 July 2026) சிறப்பாக நடைபெற்று முடிந்தது. (الحمد لله)

இந்நிகழ்வில் புனித திருமறைக் குர்ஆனை நூற்றுக்கு நூறு வீதம் (அஷ் ஷேய்க் எம்.எம்.எம். றஷ்மின் மஜீதி) முஅல்லிமின் கண்காணிப்பில் முழுமையாக பார்த்து ஓதி முடித்த மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப் பாடத்திட்டத்தின் நான்கு வருடங்களை பூர்த்தி செய்த 6 மாணவச் செல்வங்களளையும் பாராட்டி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் 3 சான்றிதழ்களும், புனித குர்ஆனை பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழும் மற்றும் பதக்கம் (Medal), பரிசில்கள், இவ்விழாவின் நினைவுச் சின்னங்களும் முஅல்லிம்களான அஷ் ஷேய்க் எம். றஷ்மின் (மஜீதி), அஷ் ஷேய்க் எம். தமீம் (இஹ்ஸானி) அவர்களின் கரங்களால் வழங்கி வைக்கப்பட்டன.

# 6 மாணவர்கள்
1) இல்யாஸ் அப்துல் பாஸித்
2) நஸீம் முஹம்மத் ஆதிப்
3) ரபீழ் முஹம்மத் ஹஸீப்
4) நஜீம் பாதிமா அப்ழா
5) சனூன் பாதிமா சம்ஹா
6) மஷூத் பாதிமா ஆயிஷா

மேலும் இந்நிகழ்வில் அம்மாணவர்களின் பெற்றோர்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு இந்நிகழ்வை திட்டமிட்டு நடாத்திய அஷ் ஷேய்க் எம். றஷ்மின் (மஜீதி) அவர்களும் ரஹ்மத் நகர் ஜாமிஉல் ஹஸனாத் ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாக சபை உறுப்பினர்களின் முன்னிலையில் கௌரவ நிர்வாகத் தலைவர் ஜனாப் ஏ. தமீம் சாப் அவர்களின் கரங்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அல் மத்ரஸதுல் ஹைரிய்யாவின் முஅல்லிமான அஷ் ஷேய்க் எம். தமீம் (இஹ்ஸானி) அவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

மேலும் இந்நிகழ்வின் இருதிக் கட்டமாக ஏனைய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு எங்களுடைய மத்ரஸாவில் ஆரம்பக் கல்வியை கற்று தற்பொழுது முஸ்லிம் கொலனி மஜீதிய்யாஹ் மகளிர் அரபுக் கல்லூரியில் தன்னுடை சன்மார்க்க கல்வியில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவி ரமீஸ் பாதிமா ரீஜா அவர்களுக்கு பரிசுகள் பல வழங்கி வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.

இறுதியாக இவ்விழாவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய கௌரவத் தலைவர் ஜனாப் ஏ. தமீம் அவர்களுக்கு ஞாபகம் சின்னம் வழங்கப்பட்டு இவ்விழா இனிதே சலவாத்துடன் நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.... அல்ஹம்து லில்லாஹ்.

இவ்விழாவிற்கு செல்வத்தாலும், உடலாலும், நேரத்தாலும், பிரார்த்தனைகளாலும், நல்லெண்ணங்களினாலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஜஸாகுமுல்லாஹு ஹைரல் ஜஸா.

.Rashmin Marzook (Majeedhi)

எமது ‎பாடசாலை மைதானமும் நாமும்..‎‎‎எம் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத காலம் என்றால் அது எமது பாடசாலை காலம் என்றே ...
31/07/2026

எமது ‎பாடசாலை மைதானமும் நாமும்..


‎எம் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத காலம் என்றால் அது எமது பாடசாலை காலம் என்றே கூற முடியும்.
‎அதிலும் எமக்கும் எமது பாடசாலை மைதானத்திற்கும் இடையில் இருக்கும் உறவு அதை வார்த்தைகளால் கூறி விளக்க முடியாது..
‎நட்பு, வெற்றி, தோல்வி, விட்டுக்கொடுப்பு, பொறுமை, விடாமுயற்சி என்று பல பண்புகளை வளர்த்த ஓர் இடமே பாடசாலை மைதனம்.

‎நம்மில் உள்ள பல பண்புகளுக்கும் பாடசாலை மைதானத்திற்கும் இடையில் நம் உடலில் ஒட்டி இருக்கும் உயிரைப் போன்று ஒரு பந்தம் உள்ளது.

‎எமது முஸ்லீம் கொலனியை பொறுத்தவரையில் எமக்கு ஒரு பொது மைதானம் இல்லை என்பதால் பாடசாலை காலம் முடிந்து பல வருடங்கள் கழிந்தும் எமது பாடசாலை மைதானத்தை விட்டு வெளிவர முடியவில்லை.

‎பொது மைதானம் என்கின்ற கனவு நினைவாகும் வரை பாடசாலை மைதானமே எமது உயிர்நாடியாக உள்ளது.

‎எமது பாடசாலையில் பழைய மாணவர் சங்கத்தை நிறுவி அதனை கட்டம் கட்டமாக வருடா வருடம் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

‎அதில் பிரதானமானது ஒரு குறிப்பிட்ட வருடத்து சாதாரண தர குழு ( ordinary level batch group) மாணவர்களின் ஒற்றுமை.
‎அதற்கு பிரதான காரணமாக அமைவது பழைய மாணவர்கள் சங்கத்தின் நிர்வாக கட்டமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதம்.
‎ஒவ்வொரு வருடமும் ஒரு சாதாரண தர குழு தலைமை தாங்கி பழைய மாணவர்கள் சங்கத்தை வழிநடத்த வேண்டும் என்கின்ற கட்டமைப்பு.

‎அதேபோன்று வருடா வருடம் நடைபெறுகின்ற பழைய மாணவர்கள் சங்கத்தின் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி.
‎இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் மூலம் பாடசாலைக்கு பல நன்மைகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது நாங்கள் அறிந்து விடையமே.

‎இருந்த போதிலும் ஒவ்வொரு வருட சாதாரண தர குழுக்களுக்கு இடையிலான உறவு வலுவாகும் பட்சத்தில் பழைய மாணவர்கள் சங்கம் மென்மேலும் உறுதியாகும் என்பது உறுதியான நம்பிக்கை.

‎அதனை எமது பாடசாலை மைதானத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு எமது சாதாரண தர குழுக்களுக்கு இடையிலான ஒரு சிநேகபூர்வமான மென்பந்து கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

‎2000 ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கும் , 2001 சாதாரண தரமானவர்களுக்கும் இடையிலான இந்த சிநேகபூர்வமான போட்டி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று எமது குறிக்கோளுக்கு உறுதுணையாக அமையும் வண்ணமாக இந்த போட்டி அமைந்திருந்தது.

‎எனவே இவ்வாறான போட்டிகள் எதிர்காலத்தில் நடைபெறும் பட்சத்தில் சாதாரண தர மாணவர்கள் குழுக்களுக்கு இடையிலான நல்லுறவு வலுப்படும் என நம்புகிறோம்.

‎இந்த நல்லுறவு பழைய மாணவர்கள் சங்கத்தை உறுதியாக நிலைத்திருக்க வைக்க உதவும்.

‎அத்தோடு எமது பாடசாலை மைதானத்தை சிறந்த முறையில் பராமரிப்பு செய்வதற்கு பழைய மாணவர்களின் சிரமதானமும், பண உதவிகளும் தேவைப்படுகின்றது என்பதனை நாம் அறிவோம்.

‎எனவே அதற்கான முதல் படியாக எமது சிநேகபூர்வமான போட்டிக்கு அனுமதி அளித்த பாடசாலை அதிபருக்கு நன்றி கூறி பாடசாலை மைதான அபிவிருத்தி பணமாக ஒரு சாதாரண தர குழுவுக்கு 2500/- வா விதம் மொத்தம் 5000/- ரூபாய் வழங்கப்பட்டது. இந்தப் பணம் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கப்பட்டு பற்றுச்சீட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டது .
‎எனவே நாம் வழங்கிய பணம் பாடசாலை மைதான அபிவிருத்தி வேலைக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும்.

‎எனவே பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்கு எம்மால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பு.

‎சிறு துளிகள் பெரும் வெள்ளம் ஆவது போல் இந்த சிறு உதவி தொகைகள் நாளடைவில் பாரிய மாற்றங்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.

‎ஒரு பாடசாலையில் கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று கல்விசாரா நிகழ்வுகளும் முக்கியமே..
‎அதனை ஊக்குவிப்போம்..
‎வழி நடத்துவோம்..
‎நல்ல பண்புகள் உடைய சமுதாயத்தை கட்டியெடுப்போம்..

‎ஜஸாக்கல்லாஹ் ஹைர்..






ஜனாஸா அறிவித்தல் ---------------------------------------முன்னாள் கதுருவெல மர்கஸ் பள்ளிவாயலின் தலைவர் மஹ்ரூப் ஹாஜியார் (ம...
28/07/2026

ஜனாஸா அறிவித்தல்
---------------------------------------
முன்னாள் கதுருவெல மர்கஸ் பள்ளிவாயலின் தலைவர் மஹ்ரூப் ஹாஜியார் (மஸ்கட் மஹ்ரூப்) அவர்கள் நேற்றிரவு காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மிக நீண்ட காலமாக பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர், பொருளாளர், தலைவர் பதவிகளிலும் பொல/ முஸ்லிம் தேசிய பாடசாலை SDC செயலாளர், பிரஜா பொலீஸ் தலைவர் போன்ற அமைப்புகளில் இருந்து பல சமூக சேவைகளை செய்த மஹ்ரூப் ஹாஜியார் மிகவும் சிறந்த ஆளுமையுள்ளவர். மிகவும் கனிவாகவும் பணிவாகவும் மற்றவருடன் பேசக்கூடியவர்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து எமது மர்க்கஸ் மையவாடியில் நடைபெறும்.

📚 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 📚26.07.2026 அன்று, Hands of Hope (HOH) Foundation அமைப்பின் ஏற்பாட்டில் ...
27/07/2026

📚 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 📚

26.07.2026 அன்று, Hands of Hope (HOH) Foundation அமைப்பின் ஏற்பாட்டில் சாஹிரா ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள தேவையான வழிகாட்டல்களும் ஊக்கமளிக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

🌱 "இன்றைய வழிகாட்டல், நாளைய வெற்றியின் அடித்தளம்."

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், ஆசிரியர்கள், வளவாளர் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

Hands of Hope (HOH) Foundation
கல்வியால் சமூகத்தை உயர்த்துவோம்.

🏅 25 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்பு மிக்க அஹதிய்யா சேவைக்கு தேசிய கௌரவம்!எமது  #பொலன்னறுவையைச் சேர்ந்த சிறந்த கல்வியா...
27/07/2026

🏅 25 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்பு மிக்க அஹதிய்யா சேவைக்கு தேசிய கௌரவம்!

எமது #பொலன்னறுவையைச் சேர்ந்த சிறந்த கல்வியாளரும், அஹதிய்யா ஆசிரியையுமான Zubair Sithy Saleema அவர்கள், அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தேசிய பாராட்டு விழாவில், 25 ஆண்டுகளுக்கும் மேலான தன்னலமற்ற கல்விச் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 🏆🌹

1993 ஆம் ஆண்டு முதல் அஹதிய்யா கல்விப் பணியில் இணைந்து, பல்வேறு அரபுக் கல்லூரிகளில் இறையறிவும் நற்பண்புகளும் நிறைந்த தலைமுறையை உருவாக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ளார்.

தற்போது பாத்திமா ஸஹ்ரா மகளிர் அரபுக் கல்லூரி, ஓட்டமாவாடியில் துணை அதிபராக (Deputy Principal) பணியாற்றி வரும் அவரின் இந்த உயரிய அங்கீகாரம், பொலன்னறுவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறப்பான தருணமாகும்.

நேற்று நடைபெற்ற தேசிய பாராட்டு விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவம், பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய தியாகமும் அர்ப்பணிப்பும் மிக்க கல்விச் சேவைக்கான அழகிய அங்கீகாரமாகும்.

சார்பாக திருமதி Zubair Sithy Saleema அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதுடன், அல்லாஹ் அவர்களின் சேவையை மேலும் ஏற்று, நீண்ட ஆயுளும் நலனும் வழங்கி இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்ட அருள் புரிவானாக எனப் பிரார்த்திக்கிறோம்.

💐 வாழ்த்துக்கள்! அல்லாஹ் உங்கள் சேவையை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்.





கடும் வெப்ப கால நிலையின் போது இவ்வாறான தடாகங்களில்வொழு செய்வது மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்கிறது-முஸ்லிம் கொலனி மர்...
26/07/2026

கடும் வெப்ப கால நிலையின் போது இவ்வாறான தடாகங்களில்
வொழு செய்வது மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்கிறது-முஸ்லிம் கொலனி மர்கஸ் பள்ளி வாசலில்-இன்றைய அஹதியா வகுப்பின் போது மாணவர்களுக்கு எங்கள் முஅல்லிம்களால் வொழு செய்யும் முறைமை பற்றி கற்றுக்கொடுக்கப்பட்ட போது-

✍️Ilham ST  வெலிகந்தை சுகாதார வைத்திய அதிகாரி   பிரிவிற்குற்பட்ட பகுதியில் வசிக்கக் கூடிய புதிதாக திருமணமான தம்பதிகளுக்க...
25/07/2026

✍️Ilham ST

வெலிகந்தை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குற்பட்ட பகுதியில் வசிக்கக் கூடிய புதிதாக திருமணமான தம்பதிகளுக்கான ( ) சுகாதார விழிப்புணர்வுகள் மற்றும் ஆலோசனைகள் ( ) #சுகாதாரப்_பரிசோதகர்_திரு_ST_ILHAM அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.

உங்கள் பகுதிகளிலும் இவ்வாறான புதிதாக திருமணமான தம்பதிகள் காணப்பட்டால் உடனடியாக அவர்களை குடும்ப நல உத்தியோகத்தரிடம் சென்று பதிவு செய்யுமாறு கூற கேட்டுக்கொள்கிறேன்.

👉உங்கள் ஆரோக்கியமே எங்கள் தேவை.

👉சுகாதாரம்/ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலமை மாத்திரமல்ல,
1.உடல் நலம்
2.உள நலம்
3.சமூக நலம்
4.ஆன்மீக நலன்களை உள்ளடக்கியதாகும்.

தொடரும் எங்கள் சேவை.🫡

Address

Muslim Colony
Kaduruwela
51000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Polonnaruwa Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Polonnaruwa Today:

Shortcuts

Share