Malwana News

Malwana News மள்வானையின் முதற்தர செய்தி வழங்குனர்

*14 வருடங்கள் நிறைவு காணும் மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையின் சிறுவர் பூங்கா……*மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலைக்கு...
14/07/2025

*14 வருடங்கள் நிறைவு காணும் மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையின் சிறுவர் பூங்கா……*

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலைக்கு முன்னால் கம்பீரமான தோற்றத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் மாலைப்பொழுதை கழிக்க ,ஓய்வெடுக்க வருகின்ற வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்கா இன்று அதன் 14 ஆம் ஆண்டு பூர்த்தியை காண்கின்றது.

மள்வானையில் இவ்வாறானதொரு சிறுவர் பூங்காவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அப்போதைய இளைஞர்கள் தாங்கள் ஒன்று சேர்ந்து தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நன்நோக்குடன் குறித்த வேலைத்திட்டத்தை தமது குழு மள்வானை அபிவிருத்தி குழு (MDA) என்ற நாமத்துடன் கடந்த 2009 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்து சுமார் இரண்டு வருட காலங்கள் அதன் அமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு அப்போதைய காலத்தில் அதிநவீன சிறுவர் பூங்கா உபகரணங்கள் பல மில்லியன் செலவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சர்வதேச தரத்திலான ஒரு சிறுவர் பூங்காவை அமைத்து முடித்தனர்.

குறித்த வேலைத்திட்டத்தில் மள்வானை அபிவிருத்தி குழுவினருடன் இதற்கு தனிப்பட்ட முறையிலும் உதவி செய்த நல்லுள்ளம் படைத்த நமது தனவந்தர்களும் நினைவு படுத்தப்படவேண்டும் குறித்த வேலைத்திட்டத்தில் பங்கு கொண்ட பலர் இன்று நம் மத்தியில் இல்லாவிட்டாலும் இப்படியானதொரு தூர சிந்தனையில் உருவாக்கப்பட்ட
இச்சிறுவர் பூங்கா இன்று சூழவுள்ள அயல் மாற்றுமத சகோதர இன நல்லுரவுப்பாலமாகவும் செயற்பட்டு வருகின்றதோடு வளரும் மாற்று மத சிறு பிஞ்சு உள்ளங்களில் எமது நல்ல விடயங்களை பதிக்கின்ற ஒரு தளமாகவும் இது இருந்துவருகின்றது

அது தவிர நாட்டின் தேசிய தினத்தில் கொடி ஏற்றப்பட்டு ஒரு விழாவாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இச்சிறுவர் பூங்காவை மையப்படுத்தியதொரு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை வரலாற்றில் பதியப்படவேண்டிய ஒரு விடயமே ,மேலும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் பல மேலதிகமான சிறுவர் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிட்டுக்கூறப்பட வேண்டிய விடயமே

இத்தனைக்கும் மத்தியில் சில தீய சக்திகளின் எதிர்ப்புக்கும் இவர்கள் முகம் கொடுக்காமல் இல்லை சமூகத்தில் எந்த நல்ல விடயம் என்றாலும் ஒரு சில தீய சக்கிகள் அதனை தடுக்க முற்படுவது புதிய விடயமல்ல அவற்றை வெற்றி கொண்டு அல்லாஹ்வுக்கான தமது சமூகப்பணியை இன்றும் தொடந்து வருகின்ற குறித்த மள்வானை அபிவிருத்தி குழு (MDA) இன்றும் பல இலட்சங்கள் செலவில் சிறுவர் பூங்காவின் திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது

இன்றைய இளைஞர்களுக்கு அப்போதைய மள்வானை அபிவிருத்தி குழு (MDA) ஒரு தூர சிந்தனை செயற்பாட்டின் உருவாக்கமான இச்சிறுவர் பூங்க நல்லதொரு எடுத்துக்காட்டு என்பதை யாரும் மறுக்கமட்டர்கள் தமது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள குறித்த மள்வானை அபிவிருத்தி குழு (MDA) அதன் இணை தலைவர்களான அல்-ஹாஜ் கமால் ஹுஸைன்
அல்-ஹாஜ் முஹம்மத் மஸாஹிம்
அல்-ஹாஜ் முஹம்மத் பஸ்லி உற்பட அதன் ஏனைய உறுப்பினர்களுக்கும் குறிப்பாக சகல விடயங்களின் போதும் தான் வெளிநாட்டில் இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு ஞாபகப்படுத்தும் சகோதரர் இனாமுல் அல்வான் அவர்களையும் இங்கு நினைவு கூர்ந்து அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ,தொழில் பரகத்தும் செய்து தமது சமூகப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க நாமும் பிரார்த்திக்கின்றோம்
ஆமீன்

ஏ.எச்.எம்.பௌஸான்

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையின் க.பொ.த சாதாரன தர பரீட்சை பெறுபேறுகள் ….1. R. M. F. Rafeeda - 9A2. A. A. Ibrahim - ...
11/07/2025

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையின் க.பொ.த சாதாரன தர பரீட்சை பெறுபேறுகள் ….

1. R. M. F. Rafeeda - 9A
2. A. A. Ibrahim - 8A B
3. A. H. Aaysha - 8A B
4. M. F. F. Hamna - 8A B
5. M. J. F. Nadha - 8A B
6. M. N. F. Ashfa - 8A B
7. S. M. F. Zahra - 8A B
8. C. H. F. Amna - 7A B C
9. A. A. Aashik Mohamed - 6 A 3B
10. M. F. Shafni - 6A 2B
11. M. I. Hikma - 6A B 2C
12. M. N. A. F. Ruthaiba - 6A 2B S
13. A. H. F. Sara - 5A 3B C
14. F. H. Sumaiya - 5A 3B C
15. M. M. F. Ilma - 5A 2B 2C
16. M. J. Mujahid - 5A 2B 2C
17. A. M. Sumaiya - 4A 5B
18. M. R. Umar Rija - 4A 4B C
19. A. I. F. Arafa - 4A 2B 2C S
20. J. S. Zaina - 4A 2C 3S
21. M. I. F. Asma - 4A B 2C 2S
22. S. H. F. Safra - 4A 3B 2C
23. T. S. F. Hamna - 4A 2B 3C

School Pass Percentage : 76%

O / L 2024 பெறு பேறு மீளாய்வு

*9A ஒன்றுதான் என்ற குறை இருந்தாலும் 8A ஆறு கிடைத்திருப்பது மகிழ்வை தருகின்றது.

*9A ஒன்றுடன் 8A ஆறும் சேர்ந்து மொத்தமாக 9A ஏழினை பெற்றுக் கொள்வதற்கான எமது திட்டமிடல்கள் சிறிய அளவில் தவறி போனது.

* அல் முபாரக் தேசிய பாடசாலையில் O/L பரீட்சையில் வருடம் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய 9A ஆறினை முறியடிப்பதற்கான எமது கல்வி திட்டமிடல்கள் தொடரும்.

*23 மாணவர்கள்4A இற்கும் அதிகமான பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றார்கள்.

*76% மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வியை தொடர்வதற்கு தகைமை கிடைத்திருப்பது கடந்த ஐந்து வருடங்களில் பெறப்பட்ட அதிகூடிய சதவீதமாகும்.

சாதனைகளுடன் கூடிய சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்த எமது பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர், தரம் 11 பகுதி தலைவர் மற்றும் பாட ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் இந்த சிறந்த பெறுப்பேற்றை பெற்றுக் கொள்வதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய SDEC, OBA, OGA மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு உதவி செய்த வெளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், Nabaviyay நிறுவனம் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக பெற்றோர் என்ற வகையில் Risham Hajiar செய்த பொருளாதார உதவிகளையும் ஆலோசனைகளையும் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

பிரதி அதிபர்
கல்வி அபிவிருத்தி
M.L. M Rizwan

ஜும்ஆ முபாரக் ……..!
11/07/2025

ஜும்ஆ முபாரக் ……..!

08/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம்.

*சகல பெற்றார்களுக்குமான அறிவித்தல்*

இலங்கை அரசாங்கத்தின் Clean Srilanka வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சிரமதானம் மூலம் சுத்தம் செய்வதோடு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துகின்றது.

அந்த வகையில் எமது பாடசாலையிலும் நாளைய தினம் சிரமதான வேலைத் திட்டமொன்று நடைபெற இருக்கின்றது.

எனவே நாளைய தினம் அனைத்து பெற்றோர்களும் சிரமதானத்திற்கு தேவையான உபகரணங்களுடன் காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு சமுகமளிக்குமாறு மிகவும் பணிவாய் வேண்டிக்கொள்கின்றோம்.

8.45 மணிக்கு சிரமதானம் நிறைவடையும்.

சமுகமளிக்கும் சகல பெற்றோர்களும் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.

*சிரமதானம் செய்ய வேண்டிய பகுதிகள்*
1) தரம் 6,7பெற்றோர்கள் - மைதானத்தின் Primary பக்கம்

2) தரம் 8,9 பெற்றோர்கள் - ஏனைய மைதான பகுதி

3) தரம் 10,11 பெற்றார்கள் - Mahindodaya lab சுற்றுப் பகுதி

4) தரம் 12,13 பெற்றார்கள் - Parking பகுதி

தகவல்
அதிபர்.

CONGRATULATIONS ON AAT PASSED FINALIST CONVOCATION  # Arkam Rahman # Amani Faris # Hafsa Mansoor # Zuhriya Farookமள்வானை...
08/07/2025

CONGRATULATIONS ON AAT PASSED FINALIST CONVOCATION

# Arkam Rahman
# Amani Faris
# Hafsa Mansoor
# Zuhriya Farook

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் உயர்தர வணிக பிரிவு மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட AAT கற்கை நெறியினை 13 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் சிறந்த முறையில் பூர்த்தி செய்துள்ளனர் .இதற்காக முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.மேலும் இதனை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் வாழ்த்து செய்திகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முயற்சியானது பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான ஜனாப் Rifdy பொறியியலாளர், Najeebur Rahman ,மர்ஹூம் சகோதரர் Iflar மற்றும் Sahmi ஆசிரியர் ஆகியோரின் முயற்சியினால் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை அதிபர்,நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும்.

இதற்காக மாணவர்களுக்கு வகுப்புக்களை நடத்தி வழிகாட்டி உதவிய ஆசிரியர்களான Rifdy Engineer , Nuzrath Sir, Sajith Sir,Munas Sir , Azra Azar Lawyer மற்றும் Sahmi sir அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்காக அனுசரணை வழங்கிய Seylan Fabric உரிமையாளர் அல்ஹாஜ் Ashkar Ismail கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடவே எமது மாணவச் செல்வங்கள் கல்வியில் மேலும் மேலும் உச்ச நிலையை அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவனாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை நிறைவேற்று குழு, பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன் விரும்புகளின் நல்லாசிகள்.

We are thrilled to congratulate you on completing the AAT course and earning the distinguished title of Passed Finalist from the prestigious Association of Accounting Technicians, Sri Lanka! This remarkable achievement is a testament to your hard work, dedication, and resilience in pursuing academic excellence.

Completing this program while studying in Grade 13 commerce is no small feat, and you have shown remarkable commitment by undertaking your coursework at Al Mubarak Central College. We would also like to acknowledge the visionary initiative of the Late Brother Iflar Kaleel, Rifdy Sir, Najeebur Rahman and Sahmi Sir, along with the unwavering support from our school principal, the School Development Executive Committee, and the Old Boys Association, who believed in your potential and facilitated this incredible opportunity.

A special note of thanks goes to the esteemed lecturers who guided and supported you throughout this journey: Rifdy Sir, Nuzrath Sir, Sajith Sir, Munas Sir, Azra Azar Lawyer, and Sahmi Sir. Your dedication to our students has undoubtedly played a crucial role in their success.

We must also express our deep gratitude to Al Haj Ashkar Ismail, the Founder Chairman of Seylan Fabrics, for sponsoring selected students and helping them pursue their dreams. Your generosity has made a significant impact on their educational paths.

As you embark on new adventures and challenges, we wish you all the best in your future endeavours. May your hard work and commitment continue to lead you to success!

Warmest wishes from the

Principal, Teachers, School Development Executive Committee, Old Boys Association, and all well-wishers of

Al Mubarak Central College, Malwana

அகில இலங்கை தமிழ் மொழித்தினம் 2025களனி வலய மட்டப் போட்டிகள் மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் நடைபெற்றதுகல்வியமைச்சி...
03/07/2025

அகில இலங்கை தமிழ் மொழித்தினம் 2025
களனி வலய மட்டப் போட்டிகள் மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் நடைபெற்றது

கல்வியமைச்சின் 35/2018 சுற்று நிருபத்தின் படி வருடந்தோறும் சகல தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளிலும் தமிழ்மொழித்தினப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

களனி கல்வி வலய மட்டப்போட்டிகளின் வாய்மொழிப்போட்டிகள் நேற்று 02.07.2025 அல் முபாரக் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

வலயத்துக்குட்பட்ட 8 பாடசாலைகளுக்குரிய மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றினர்.

மே/கள/அல். அஷ்ரப் மகா வித்தியாலயம்,
மே/கள/புனித சாந்த அந்தோனியார் கல்லூரி, புனித அன்னம்மாள் கல்லூரி,
ஷாஹிரா மகா வித்தியாலயம்,
வெலேகொட முஸ்லிம் வித்யாலயம்,
அல் முபாரக் தேசிய பாடசாலை,
அல் மஃமூத் மகா வித்தியாலயம்,
அல் முஸ்தபா மகா வித்தியாலயம்
முதலிய பாடசாலைகளே ஆகும்.

கம்பஹா களனி வலய தமிழ்மொழி மூல பிரதிக் கல்விப் பணிப்பாளர் கௌரவ M.T.M. தௌஸீர் அவர்களின் தலைமையில் ஆசிரிய ஆலோசகர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டலுடனும் ஏனைய ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் மேற்குறித்த பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் தமிழ் மொழிக்குழுவின் ஏற்பாட்டாளர்களால் இன்றைய வைபவமும் போட்டி நிகழ்ச்சிகளும் அல் முபாரக் தேசிய பாடசாலையில் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டன.

மள்வானை அல் மத்ரஸதுன் நபவிய்யாஹ் நிர்வாகக்குழு அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் மத்ரஸாவின் பழைய மாணவர்களினால்  ஆறாவது முறையாக...
02/07/2025

மள்வானை அல் மத்ரஸதுன் நபவிய்யாஹ் நிர்வாகக்குழு அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் மத்ரஸாவின் பழைய மாணவர்களினால் ஆறாவது முறையாகவும் மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விழா சென்ற 21.06.2025 - சனிக்கிழமை அன்று பியகம சுதந்திர வர்தக வலய கேட்போர்கூடத்தில் ( BOI Auditorium) சிறப்பாக இடம்பெற்ற போது …..

மறைந்த பியகம சிவில் பொலிஸ் பாதுகாப்பு பொறுப்பதிகாரி திரு W.D வீரசிங்க அவர்களது இறுதிக்கிரிகைகள் நேற்று சியம்பலாப்பே பொது...
02/07/2025

மறைந்த பியகம சிவில் பொலிஸ் பாதுகாப்பு பொறுப்பதிகாரி திரு W.D வீரசிங்க அவர்களது இறுதிக்கிரிகைகள் நேற்று சியம்பலாப்பே பொது மயானத்தில் இடம் பெற்றது …….

மள்வானை தல்கள முபாரக் மௌலானா தக்கியா அல்-முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸா ஏற்பாட்டில் இடம் பெறும் ஓத வைக்கின்ற முதல் நாள் நிக...
02/07/2025

மள்வானை தல்கள முபாரக் மௌலானா தக்கியா அல்-முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸா ஏற்பாட்டில் இடம் பெறும் ஓத வைக்கின்ற முதல் நாள் நிகழவுகள் இன்று காலை இடம் பெற்றது

வழமையாக முஹர்ரம் மாதம் முதல் புதன் கிழமை இந்நகழ்வுகள் இடம்பெற்று வருவதோடு இம்முறை மள்வானையை சேர்ந்த சுமார் நூற்று ஐந்து சிறுவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்

பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த இந்நிகழ்வு “பலகை எழுதுதல்” என்ற வகையில் அன்று தொடக்கம் இன்று வரை ஒரு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இந்நாளில் சிறுவர்களுக்கு முதல் குர்ஆன் ஓத கற்றுக்கொடுக்க படுவதோடு இதனை வீடுகளில் ஒரு விழாவாக சந்தோசமான நாளாக உறவினர்களை அழைத்து விருந்து மற்றும் இனிப்புப்பண்டங்கள் வழங்கப்பட்டு ஒரு சந்தோசமான நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதமைThe relief package for 05 blood tests worth about Rs. 5,500.00 05 இரத்த பரிசோதமைகளுக்கா...
01/07/2025

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதமை
The relief package for 05 blood tests worth about Rs. 5,500.00

05 இரத்த பரிசோதமைகளுக்காை நிவாரணப் பபாதி சுமார் ரூ. 5,500.00

I. FBS – Blood sugar level checking test.
இரத்த ேரக் ்கமர அளமவ ேரிபாரக் ்கும் சோதமை.

II. Lipid Profile - Complete cholesterol screening test.
முழுமமயாை பகாலஸ் ட்ரால் ஸ் கிரைீ ிங் சோதமை.

III. PT - Liver test. கல் லீரல் சோதமை.

IV. SCR - Kidney test. சிறுநீ ரக பரிசோதமை.
Rs. 2,600.00

V.
ESR – (Various cancer cells, Sepsis, Arthritis).
( பல்சவறு புற்றுசநாய் பேல்கள், பேப்சிஸ் , கீல்வாதம். )

Date : Thursday 03rd July 2025. (வியாழக்கிழமம 03 ஆம் ஜூமல 2025)

Location : Ahadiya Building, Malwana. (அஹதியா கட்டிடம் , மல் வாைா.)

Time : From 6:30AM to 10:00AM (காமல 6:30 மணி முதல் 10:00 மணி வமர)

All test reports are issued by a government approved medical laboratory run under the supervision of experienced government recognized and certified medical laboratory inspectors.
(அனுபவம் வாய்ந்தஅரசுஅங்கீகாரம் பபற்றமற்றும் ோை்றளிக்கப்பட்டமருத்துவஆய்வக ஆய்வாளரக் ளிை் சமற்பாரம் வயிை் கீழ் இயங்கும் அரசுஅங்கீகரிக்கப்பட்டமருத்துவ ஆய் வகத்தால் அமைத்து சோதமை அறிக்மககளும் வழங் கப்படுகிை் றை.)

Important: - Please avoid any food or beverage for 12 hours before tests (12 hour fasting).

முக்கியமாைது: - பரிசோதமைக்கு முை் 12 மணி சநரம் உணவு அல் லது பாைங் கமளத் தவிரக் ்கவும் (12 மணிசநர உண் ணாவிரதம் ).
Kottunna Rd, Biyagama. (பகாடடு் ை் ை வீதி, பியகம.) Telephone - 077 056 6651.

தொலைபேசி- 077 056 6651

மள்வானை அல்-முபாரக் தேசிய படசாலை 1993 O/L  Batch ஒன்றுகூடல் இன்று 29 ஆம் திகதி முன்னாள்  குழுத்தலைவர் இர்பான் மௌலவியின் ...
30/06/2025

மள்வானை அல்-முபாரக் தேசிய படசாலை 1993 O/L Batch ஒன்றுகூடல் இன்று 29 ஆம் திகதி முன்னாள் குழுத்தலைவர் இர்பான் மௌலவியின் வீட்டில் நடைபெற்றது.

இவ்வொன்றுகூடலில் புதிய உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் குழு உறுப்பினர் மற்றும் பியகம பிரதேச சபை உறுப்பினராகிய சகோதரர் இர்ஷாத் அவர்களையும் கௌரவித்தனர்.

மல்வானை மக்களுக்காக இரவுபகலாக சேவை செய்யும் இர்ஷாத் மந்திரி அவர்கள் கடந்த covid 19 காலத்தில் கூட ஜனாஸா விடயங்களில் முன்முரமாக நின்று மக்களுக்கு சேவை செய்ததை மல்வானை மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள். இன்னும் சேவைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதே போன்று நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு தேசிய பட்டியலில் வெற்றி பெற்று இன்று மக்கள் சேவகனாக பிரதேச சபையியிலும் அங்கம் வகிக்கிறார்.

1993 Batch சார்பாக ஒரு நினைவுச்சின்னத்தை குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இர்ஷாத் மந்திரி அவர்களுக்கு வழங்கப்படுவதை இந்த படங்களில் காணலாம்.

Address

Kaduwela

Alerts

Be the first to know and let us send you an email when Malwana News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malwana News:

Share