Thamotharam pratheevan

Thamotharam pratheevan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thamotharam pratheevan, Media/News Company, Kalmunai.

கல்வி ஒன்றே எம் இனத்தின் எதிர்காலம்..வளைகுடா வானம்பாடிகள்  #சமூகநல  #மேம்பாட்டு  #அமைப்பின் உயரிய பணியாகக் கிழக்கு மாகாண...
31/03/2023

கல்வி ஒன்றே எம் இனத்தின் எதிர்காலம்..

வளைகுடா வானம்பாடிகள்
#சமூகநல #மேம்பாட்டு #அமைப்பின்
உயரிய பணியாகக் கிழக்கு மாகாணத் தமிழர் தேசம் எங்கும் தேவையுடைய மாணவர்களின் கல்வித் தேவைகளை மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் எம் உறவுகளால் முடிந்தவரை எம்மூடாக மிகச் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இது மண்முனை மேற்குக் கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை எனும் அழகிய கிராமத்தின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோரின் வேண்டுகோளின் பெயரில் (26.03.2023 ஞாயிறு) அவர்களுக்கான அறநெறிப் பாடசாலையினைப் பொறுப்பேற்றதோடு வாரம் தோறும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து #வீரத் #திருமகள் #உலகநாச்சியாரின் பெயரும் சூட்டி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தோம்.

விஷேடமாக இந்தப் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பணியாளர்களது அர்ப்பணிப்பும் அந்த மாணவர்களின் கல்வித் தரம் நல்லொழுக்கம் என்பனவும் விஷேடமாகப் பெற்றோரின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இந்தப் பாடசாலையின் வெற்றிக்குக் காரணம்.

பெற்றோரின் கிராமத்து உபசரிப்பையும் கொளுக்கட்டையும் பசுப்பாலும் மீண்டும் ஓரு தடவை மறக்க முடியாத தருணமாகியது.

அழிக்கப்பட்ட தமிழர் கிராமங்களையும் அடயாளங்களையும் தேடும் பணியும் மீட்கும் பணியும் தொடருகிறது.செங்காமம்,ஆலங்குளம் கிராமங்...
17/03/2023

அழிக்கப்பட்ட தமிழர் கிராமங்களையும் அடயாளங்களையும் தேடும் பணியும் மீட்கும் பணியும் தொடருகிறது.

செங்காமம்,ஆலங்குளம் கிராமங்களையும் ஆலயங்களையும் மீட்டு வரலாற்றை ஆவணப்படுத்தியதைத் தொடர்ந்து...

விரைவில் அழிக்கப்பட்ட இந்த ஆலயத்தையும் மீட்டு வரலாற்றைக் காத்து ஆவணப்படுத்தும் அடுத்தகட்ட முயற்சி.

(இந்தக் கிராமத்தில் 1987-1990 களுக்கு முன்னர் சுமார் 250 தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வந்த இயற்கை எழில் கொஞ்சம் அழகிய பிரதேசமாகவும் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் தென்னந் தோட்டங்கள் என செழிப்புடனும் வனப்புடனும் காணப்பட்ட தமிழ்க் கிராமமாகும் அன்று இங்கு காணப்பட்ட பொது மயானம் இரண்டு ஆலயங்கள் என்பவற்றில் தற்போது எஞ்சியுள்ளது இந்த பிள்ளையார் ஆலயத்தின் இரண்டு பீடங்களும் அடித்தளமும் தீர்த்தக் கிணறும் வெளிக் கிணறும் மாத்திரமே (இன்று குப்பைகள் இடும் பிரதேசமாகக் காட்சியளிக்கிறது) இறுதியாக 1990 களின் பின்னர் தற்போது அங்கு தமிழர்கள் யாருமே இல்லை என்பதுடன் 2018 ம் ஆண்டு இதைப்பற்றி அறிந்து அங்கு சென்று பார்வையிட்டிருந்தேன் தற்போதுதான் அதற்கான அடுத்த கட்ட முயற்சி கைகூடியிருக்கிறது.

தமிழர் வரலாற்றுத் தேடலின் தொடர்ச்சி அம்பாரை மாவட்டம் தாண்டி கிழக்கு மண்ணையும் தாண்டி வடக்கிலும் தொடருகிறது.கிளிநொச்சி வெ...
14/03/2023

தமிழர் வரலாற்றுத் தேடலின் தொடர்ச்சி அம்பாரை மாவட்டம் தாண்டி கிழக்கு மண்ணையும் தாண்டி வடக்கிலும் தொடருகிறது.

கிளிநொச்சி வெற்றிலைக்கேணி கடற்கரைக் காட்டில் காணப்படும் சுமார் 300 வருடம் பழமையானது என அந்தப் பிரதேச மக்கள் கூறும் சுமார் 500 வருடங்களைக் கடந்த வரலாறு கொண்டிருக்கக் கூடிய புராதன வெளிச்ச வீடு.

இதன் சிறப்பு யாழ்பாணக் கோட்டை அமைக்கப்பட்டுள்ள கடற் கற்பாறைகள் முருகைக் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதோடு அதே கற்களால் உருவான சுற்று மதிலும் சுரங்கப் பாதை (எங்கு செல்கிறது என தெரியவில்லை என அந்த மக்கள் கூறும்) ஒன்றும் ஒரு கிணறு வடிவில் அதே கற்களால் அமைக்கப்பட்டுள்ளது என்பதே அதன் சிறப்பம்சமாகும்.

யுத்த காலத்தில் கூட இது பல யுத்த வடுக்களைத் தாங்கியவாறு பாதுகாப்பாக வானுயர சுமார் 200 அடி உயரம் வரை கம்பீரமாக நிற்கிறது.

இது பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர் தேசத்துச் சொத்து ஆனால் கவனிப்பாரின்றிக் காடு மண்டிப் போய்க் கிடக்கிறது.

கல்விச் சுற்றுலா மற்றும் ஏனைய சுற்றுலாக்கள் செல்லும் மக்களும் புலம் பெயர் உறவுகளும் நாட்டிற்கு வரும் போது இந்த இடத்திற்குச் சென்று பாருங்கள்.

வெல்லாவெளி பொறுகாமம் எனும் பிரதேசத்தில் அவுரி மனிசிட கடையடி என்று அழைக்கப்படும் (அந்த பெயரையுடைய ஒரு பாட்டி முன்னர் இந்த...
12/03/2023

வெல்லாவெளி பொறுகாமம் எனும் பிரதேசத்தில் அவுரி மனிசிட கடையடி என்று அழைக்கப்படும் (அந்த பெயரையுடைய ஒரு பாட்டி முன்னர் இந்த இடத்தில் கடை வைத்திருந்ததாகவும் அதனால்தான் இந்த இடம் அவ்வாறு அழைக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டது) இந்த இடத்தில் அழகான வயல்வெளிகள் நீர்நிலைகள் இத்தி மர நிழல் என அழகான சூழலில் காணப்படும் இந்த வைரவர் ஆலயமும் அதன் அருகில் நிற்கும் இத்தி மரமும் சுமார் 200 வருடத்திற்கும் மேல் பழமையானது என அந்த இடத்தைச் சேர்ந்த வயதான ஐயாமார் கூறினர் ( பல வீர வரலாறுகளையும் பூர்வீக புராதன வரலாறுகளையும் பற்றி நிறையவே பேசினோம் அந்த ஐயாமாரோடு)

தேடல்களும் ஆய்வுப் பணிகளும் தொடர்கிறது.

வாழ்த்துகள். #வளைகுடா வானம்பாடிகள்  சமூக நல மேம்பாட்டு அமைப்பின் முதலாம் ஆண்டு விழா கடந்த வாரம் மட்டக்களப்புத் தமிழ்ச் ச...
31/01/2023

வாழ்த்துகள்.

#வளைகுடா வானம்பாடிகள் சமூக நல மேம்பாட்டு அமைப்பின் முதலாம் ஆண்டு விழா

கடந்த வாரம் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் மிகவும் விமர்சையாக முதலாவது ஆண்டு விழா கேக் வெட்டி தமிழர் கலை கலாசார நிகழ்வுகளோடு கொண்டாடப்பட்டது இதன் போது அமைப்பின் உறுப்பினர்கள் நன்கொடையாளர்கள் அமைப்பினால் நடாத்தப்படும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள்போட்டிகளில் வெற்றிபெற்றற மாணவர்கள் எனப் பலரும் கெளரவிக்கப்பட்டனர் அத்தோடு பரிசில்களும் வழங்கப்பட்டதோடு அமைப்பின் சீருடையும் வெளீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பல அரசியல் பிரமுகர்களும் உயர் அரச அதிகாரிகளும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கதிரவன் பட்டிமன்க் குழுவினர் இந்நிகழ்வுகளை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்கியிருந்தனர் இவர்களோடு அமைபின் செயற்பாட்டாளர் தம்பி புலேந்திரனும் செயலாளர் புண்ணியமூர்தி அவர்களும் இணைந்திருந்தனர்.

விசேடமாகக் குவைத் நாட்டிற்கான தூதுவர் மரியாதைக்குரிய திரு.காண்டீபன் பாலசுப்ரமணியம் ஐயா திரையில் தோன்றி சிறப்பு உரையினையும் வாழ்த்தினையும் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் ஆலோசகராக நானும் கலந்து கொண்டிருந்தேன்.

14.01.2023 அம்பாரை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களை நோக்கிச் சென்று கிராமத்து மக்களோடு இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா.நாவ...
21/01/2023

14.01.2023
அம்பாரை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களை நோக்கிச் சென்று கிராமத்து மக்களோடு இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா.

நாவிதன்வெளி மத்தியமுகாம் 11ம் கிராம மக்களுடன் பாரம்பரிய விளையாட்டுகள் கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பகக் கொண்டாடிய பொங்கல் விழா.

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு
வளைகுடா வானம்பாடிகள் சமூக நல மேம்பாட்டு அமைப்பு இணைந்து நடாத்திய மிகவும் அருமையான திட்டமிடலுடனான இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மகிழ்சியான தருணம்.

மத்தியமுகாம் நாலாம் கிராமம் அறநெறிப் பாடசாலை மாணவர்களுடன் அமர்ந்திருந்து சைவமும் தமிழும் பற்றியும் எமது கலை கலாசாரம் அதன...
18/12/2022

மத்தியமுகாம் நாலாம் கிராமம் அறநெறிப் பாடசாலை மாணவர்களுடன் அமர்ந்திருந்து சைவமும் தமிழும் பற்றியும் எமது கலை கலாசாரம் அதனோடு இணைந்த எம் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றியும் பேசியதோடு போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளும் செய்த அழகிய தருணம்.

09/12/2022

#மனித #உரிமை #மீறல்களுக்கு #எதிரான #கண்டனப் #பேரணியும் #போராட்டமும்.

சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10 ஆம் திகதி.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தவிருக்கின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கவனயீர்ப்புப் பேரணி 2022.12.10 காலை 10 மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைய இருக்கின்றது எனவே இந்த கவனயீர்ப்புப் பேரணியிலே கலந்து கொள்ளுமாறு மனித உரிமை சார்ந்து செயல்படுகின்ற செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளுடைய பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர் வாகன உரிமையாளர்கள் ஆட்டோ சங்கத்தினர் மதகுருமார்கள் ஊடகவியலாளர்கள் கட்சி பேதங்களின்றி அரசியல்வாதிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைப்பு விடுக்கின்றோம்.

02/11/2022

நீதிக்கான குரலாய் எப்போதும் களத்தில் இருப்போம்.

02/11/2022

நீதிக்கான குரலாய் எப்போதும் களத்தில் இருப்போம்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடியும் நீதி கேட்டும் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாகக் காணமலாக்கப்பட்ட உறவுகள் மேற்கொள்ளும் போராட்டங்கள் பேரணிகளின் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர்கள் நடத்துகின்ற கவனயீர்ப்புப் பேரணிகள் போராட்டங்கள் போன்று நேற்றைய தினம் 2022.10.31 அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச திருக்கோவில் பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்தப்பட்ட அந்த தாய்மாருடைய போராட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன் அந்தப் போராட்டம் நடைபெற்ற வேளை அந்த போராட்டங்களை ஒளிப்பதிவு செய்வதற்காக வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களை விட அதிகமாக சுமார் 10க்கும் மேற்பட்ட இலங்கை அரச படையினுடைய புலனாய்வாளர்கள் வருகை தந்து அங்கே போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாய்மார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் என அனைவரையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு வீடியோக்களையும் எடுத்துக் கொண்டிருந்ததை கூட நாங்கள் அவதானித்திருந்தோம் இந்த விடயத்தை நான் ஊடகத்திற்கும் என்னுடைய பேட்டியிலே கூறி இருக்கின்றேன் தங்களது உறவுகளை தொலைத்து விட்டு மிகுந்த மனவேதனையோடு பல வருடங்களாக வெயில் மழை பாராது கஷ்டப்பட்டு தேடி அலைந்து நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த தாய்மாருக்கான நீதியையும் பெற்றுக் கொடுக்காமல் வெறுமனே கண் துடைப்பு செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசு இவ்வாறு தமது புலநாய்வாளர்களை வைத்து அச்சுறுத்துவதும் வேதனையானதும் கண்டிக்கத் தக்கதுமாகும் அத்தோடு புதிய நாடகமாக OMP எனும் தேவையற்ற ஒரு அலுவலகத்தை நிறுவுகின்ற கண்டதுடைப்பையும் அதனைத் தொடர்ந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்குவது என்ற ஒரு நாடகத்தையும் புதிதாக ஆரம்பித்து எங்களுடைய உறவுகளின் நியாயமான நீதி கேட்கின்ற போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதோடு அவர்களுடைய போராட்டங்களை அவமதித்தும் அச்சுறுத்தல் விடுத்தும் வருவது வேதனையாக இருக்கிறது எனவே இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் நீதித்துறையும் சர்வதேச நீதித் துறையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை போன்ற அமைப்புகளும் அவதானித்து இந்த மக்களுடைய நியாயமான போராட்டத்தை நடத்துவதற்கான வழிவகைகளை செய்து கொடுப்பதோடு இந்த தாய்மார் கேட்கின்ற நீதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும் என்று இந்த மாவட்டத்தில் செயல்படுகின்ற ஒரு சமூக செயற்பாட்டாளனாக என்னுடைய கோரிக்கையினையும் முன்வைக்கின்றேன்.

நன்றி

அறிநெறிப் பாடசாலை மாணவச் செல்வங்களோடு சில நிமிடங்கள்.அம்பாரை மாவட்டத்தின் தமிழர் எல்லைக் கிராமங்களுள் ஒன்றான மத்தியமுகாம...
19/10/2022

அறிநெறிப் பாடசாலை மாணவச் செல்வங்களோடு சில நிமிடங்கள்.

அம்பாரை மாவட்டத்தின் தமிழர் எல்லைக் கிராமங்களுள் ஒன்றான மத்தியமுகாம் நான்காம் கிராமம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் அழைப்பை ஏற்று ஒரு வளவாளராகச் சென்று பேசிய அழகிய தருணங்கள்.

விரைவில் அந்த அறநெறிப் பாடாசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவும் அறநெறிப் பாடசாலை அமைக்கின்ற பணியும் முன்னெடுக்கப்படும்.

Address

Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thamotharam pratheevan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share