Kwin Tv

Kwin Tv FB Live TV From Kalmunai this is all about live

23/08/2025

உளமார பாராட்டுகின்றோம். 👏 👏 👏

49 வருடங்களிள் JKMO கராத்தே சங்க மாணவன் எஸ்.பாலுராஜ் KATA போட்டியில் கிழக்கு மாகாணத்தில் 10வது தங்கப்பதக்கத்தினையும், 05வது முறையும் BEST PLAYER விருதையும் தனதாக்கிகொண்டு கிழக்கு மாகாணத்திட்கும், தான் கடமைபுரியும் பாடசாலை Carmel Fatima College பெருமை பெற்றுக்கொடுத்துள்ளார்.

தேசிய விளையாட்டு விழாவானது காலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 18 19 20ஆம் திகதிகளில் நடைபெற்றது.

நடைபெற்ற போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கு 02 தங்கம் 02 பித்தளை பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன.

இதில் 35 வயதுடைய JKMO கராத்தே மாணவன் எஸ்.பாலுராஜ் KATA போட்டியில் 10 வது தடவையும் தங்கம் வென்றுள்ளார்.

இவருக்கான பயிற்சிகளை JKMO கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் S.முருகேந்திரன்(Eng) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

23/08/2025

IMAGINE YOURSELF AS SOMEONE FIGHTING FOR JUSTICE WITHOUT WITNESS & EVIDENCECAST: THUSHI MAYURA THANUSHGA RAMESH CK.ANUSHANTH R.PRASANIYA L.ARAVINTHAN V.SARAV...

23/08/2025

பூமியை தாக்கும் நிலவு கற்கள்.. விரைவில் நடக்கப்போகும் சம்பவம்! பூமிக்கு ஆபத்தா?


எதிர்வரும் 2032ம் ஆண்டு நிலவிலிருந்து நேரடியாக விண்கற்கள் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றனர். ஆனால் இந்த விண்கற்கள் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2032 ஆம் ஆண்டு நிலா மற்றும் விண்கல் அறிவியலுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என சமீபத்திய வானியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித வரலாற்றில் முதன்முறையாக, நிலாவிலிருந்து நேரடியாகப் புவியை நோக்கி விண்கல் மழை பொழிய வாய்ப்புள்ளது.

வழக்கமாக, புவியில் நிகழும் விண்கல் மழைகள் சூரியனைச் சுற்றும் வால்மீன்களிலிருந்து வெளியேறும் தூசித் துகள்கள் அல்லது சிறிய பாறைகளால் ஏற்படுகின்றன. ஆனால், இம்முறை இது முற்றிலும் மாறுபட்ட நிகழ்வாக இருக்கும்.

ஒரு விண்கல் நிலாவுடன் மோதும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நிலாவிலிருந்து வெளியேறும் துகள்கள் புவியை வந்தடையும். இந்த நிலாத் துகள்கள் புவியின் வளிமண்டலத்துடன் உராய்வதால் எரிந்து, வானில் பிரகாசமான ஒளிக்கீற்றுகளையும், எரிகற்களையும் உருவாக்கும். இது 2032 ஆம் ஆண்டை புவி, நிலா மற்றும் விண்கல் அறிவியலுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக மாற்றும்.

2024 YR4' என்ற விண்கல்தான் நிலவுடன் மோதப்போகிறது. இந்த விண்கல் குறித்த ஆரம்பக் கட்ட கணக்கீடுகள், இது புவியைத் தாக்க ஒரு சிறிய வாய்ப்புள்ளதாகக் காட்டின.

அதிர்ஷ்டவசமாக, சமீபத்திய ஆய்வுகள் இது புவியைத் தாக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், நிலாவைத் தாக்க சுமார் 4% வாய்ப்புள்ளது.

இந்த விண்கல் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டபோது, 2032ம் ஆண்டு டிசம்பர் மாதம் புவியைத் தாக்கக்கூடும் என்று கருதப்பட்டது. இது இதுவரை கண்டறியப்பட்ட விண்கற்களில் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.

ஆனால், மேலும் துல்லியமான ஆய்வுகள் மற்றும் விரிவான புவிச்சுற்றுப்பாதை கணக்கீடுகள் மூலம், வானியலாளர்கள் புவி மீதான தாக்கத்தை இப்போதைக்கு நீக்கிவிட்டனர்.

தற்போதைய ஆய்வுகள் நிலா மீது தாக்கம் ஏற்படும் சாத்தியக்கூறுகளைத் தெளிவாகக் காட்டுகின்றன. இது 2032 ஆம் ஆண்டில் நிலாவைத் தாக்கினால், அது மனிதகுலம் முழுமைக்கும் ஒரு வாழ்நாள் நிகழ்வாக அமையும்.

இது நிலாவை முழுமையாக அழிக்காது. மாறாக, நிலாவின் மேற்பரப்பில் பல இடங்களில் கூடுதல் பள்ளங்களை உருவாக்கும்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம் சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்த விண்கல் சுமார் 60 மீட்டர் விட்டம் கொண்டது. இது புவியைத் தாக்கினால் ஒரு நகரத்தையே அழிக்கும் திறன் கொண்டது.

நூற்றுக்கணக்கான ஹிரோஷிமா குண்டு வெடிப்புக்குச் சமமான ஆற்றல் வெளிப்படும். அதிர்ஷ்டவசமாக, இப்போதைக்கு அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

10 கி.மீ.க்கு அதிகமான விட்டம் கொண்ட விண்வெளிப் பாறைகள் பூமியை முற்றிலுமாக அழிக்கக்கூடியவை. 1 கி.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட விட்டம் கொண்ட விண்வெளிப் பொருட்கள் ஒரு முழு நாகரிகத்தையே அழிக்கக்கூடும்.

உதாரணமாக, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த டைனோசர் அழிவு, சுமார் 10 கி.மீ. அளவுள்ள ஒரு விண்கல்லால் ஏற்பட்டது.

வானியலாளர்கள் அத்தகைய விண்கற்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் அத்தகைய பெரும் அச்சுறுத்தல்களிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இந்த விண்கல் நிலாவுடன் மோதும்போது, ஒரு பிரகாசமான ஒளிக்கீற்று நிலாவில் ஏற்படும். இது 2032 ஆம் ஆண்டில் பல வினாடிகளுக்கு வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

இந்த விண்கல்-நிலா மோதல் நிலாவில் சுமார் 1 கி.மீ. விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கும். இது அமெரிக்காவில் அரிசோனா பாலைவனத்தில் உள்ள பாரிங்கர் விண்கல் பள்ளத்தின் அளவைப் போன்றது. கடந்த 5,000 ஆண்டுகளில் நிலாவில் நிகழும் மிகப்பெரிய தாக்கம் இதுவாக இருக்கும்.

இந்த மோதல் 100 மில்லியன் கிலோ நிலாப்பாறைகளையும், தூசியையும் விண்வெளியில் வெளியேற்றும்.

அந்தத் தூசியின் ஒரு சிறிய பகுதி புவியையும் வந்தடையும். இவ்வாறுதான் நவீன மனித வரலாற்றில் முதன்முறையாக இந்த நிலா விண்கற்கள் புவியில் நிகழும்.

நிலாத் துகள்கள் சில நாட்களில் புவியை வந்தடையலாம். அப்போது நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு எரிகல்லும் தூய நிலாப் பொருளாக இருக்கலாம். இது நம் வாழ்நாளில் முதல்முறையாக நிலா விண்கல் புயலாக இருக்கும்.

இந்த நிலாத் துகள்கள் காரணமாக, விண்வெளி ஓடங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

23/08/2025

ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த கார் மட்டு கல்லடியில் விபத்துக்குள்ளானது

இன்று அதிகாலை மட்டு கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று கல்லடி பிரதேசத்தால் பயணிக்கும் போது கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்னால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த ஆலயக்கிணற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்துச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பு விமான நிலையம் சென்று மீண்டும் ஆரையம்பதி நோக்கி பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கும் போது. அவர்கள் பயணம் செய்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி முருகன் ஆலய கிணற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நிகழ்ந்த சமயம் காரில் 6 பேர் பயணித்ததுடன் அதில் 7 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளடங்குகிறது.

காயமடைந்தவர்கள் வீதியால் பயணித்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலையில் 7 மாத கைக்குழந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

06/08/2025

எத்தனை பேருக்கு பிடிக்கும்
#அம்மியில் அரைத்த #சம்பலும்...சுட சுட #ரொட்டியும்..அதுவும் #அம்மா கைல..
ஒரு கனவு ருசி

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
06/06/2025

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

04/04/2025
09/03/2025

06/03/2025

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி ....

12/12/2024

யாருக்காவது தெரியுமா?

Address

Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Kwin Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category