வியூகம் News

வியூகம் News உடனுக்குடன் உண்மைச் செய்திகள்...

23/05/2025

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளியில் திருட்டுச் சம்பவம்! CCTV காட்சிகள்...

அன்பான பொதுமக்களுக்கு கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் விடுக்கும் அவசரமான அறிவித்தல்📍

எமது கல்முனை ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசலில் கடந்த 13.05.2025, செவ்வாய்க்கிழமை,
பிற்பகல் 02.00 மணியளவில் சூட்சுமமான முறையில் திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு பதிவிடப்படும் காணொளி மற்றும் புகைப்படத்தில் காணப்படுகின்ற நபர் பள்ளிவாசலினுள் நுழைந்து எமது ஜும்ஆ பள்ளிவாசலின் முஅத்தினாருடன் சகஜமாக பேசி குளிர்பானம் ஒன்றை அவருக்கு வழங்கி மயக்கமுறச் செய்து மேற்குறித்த கேவலமான திருட்டுச் சம்பவத்தை எமது பள்ளிவாசலில் அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பள்ளிவாசலின் பராமரிப்புக்காக சேகரிக்கப்பட்ட இம்மாதத்துக்குரிய (மே) சந்தா பணத்தின் பெரும் பகுதி திருடப்பட்டுள்ளது என்பதுடன் வயது போன பள்ளிவாசல் முஅத்தினை சுய நினைவு இழக்க செய்து அவரை மரணத்திற்கு இட்டுச் செல்லும் கொலை முயற்சியாகவே இந்த திருட்டு சம்பவம் உற்று நோக்கப்படுகின்றது.

இவ்வாறான கொடிய கயவனை அடையாளம் காண்பது எம் சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.

எனவே இங்கு தரப்படுகின்ற காணொளி மற்றும் புகைப்படத்தில் உள்ள நபரை தனிப்பட்டரீதியில் அறிந்தவர்கள் அல்லது ஏதாவது சந்தர்ப்பங்களில் கண்டவர்கள் உடன் கீழே குறிப்பிடப்படுகின்ற தொடர்பு இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் மென்மேலும் அருள் புரிவான்.

நன்றி

இவ்வண்ணம்
செயலாளர்
ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் கல்முனை

077 911 4499
0773453922
0773452532

BCAS கல்முனை வளாகம் டிப்ளோமாதாரர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது! தகவல் தொழில்நுட்பம் (IT), கணினிமயமாக்கப்பட்ட கட்டுமான வ...
14/05/2025

BCAS கல்முனை வளாகம் டிப்ளோமாதாரர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது!

தகவல் தொழில்நுட்பம் (IT), கணினிமயமாக்கப்பட்ட கட்டுமான வடிவமைப்பு தொழில்நுட்பம் (CCDT) மற்றும் ஆங்கில டிப்ளோமா (Diploma in English) கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்கiளுக்கான விருது வழங்கும் விழா BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர் திரு. கே. முகமது இஷ்ராக் தலைமையில் 2025 ஏப்ரல் 26 ஆம் தேதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த பிரமாண்டமான நிகழ்வில் மொத்தம் 143 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இது அவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் மேலும் இது உற்சாகமான தொழில்முறை பாதைகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது.

இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர். BCAS வளாகத்தின் தலைவர் திரு. ராஜேந்திர தியாகராஜா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறன் சார்ந்த கல்வியின் மதிப்பு மற்றும் பணியாளர்களின் எதிர்காலம் குறித்து ஊக்கமளிக்கும் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

BCAS வளாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. தேரேஷ் அமரதுங்க கௌரவ விருந்தினராகப் பங்கேற்று விடாமுயற்சி, தகவமைப்பு மற்றும் புதுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட செய்தியுடன் மாணவர்களை ஊக்குவித்தார்.
கௌரவ விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் ருவன் அபேசேகரவும் கலந்து கொண்டார். மாணவர்களின் சாதனைக்கு ஆதரவளிக்கும் வலுவான கல்வி கூட்டாண்மைகளை அவர் முன்னிலைப்படுத்தினார்.

தலைமை மூலோபாய அதிகாரி திரு. ரிஜிதா ரணவீர, சந்தைப்படுத்தல் தலைவர் திருமதி. விஹங்கா லியனகே, உதவி மேலாளர் - கார்ப்பரேட் மூலோபாயம் திருமதி. சலனி கஹதுவா மற்றும் BCAS சர்வதேச வேலைவாய்ப்புத் தலைவர் திரு. எழிலன் குகவேல் உள்ளிட்ட பல சிறப்பு அழைப்பாளர்களின் வருகையால் இந்த நிகழ்வு மேலும் சிறப்பாகவிருந்தது.

இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சம் 143 டிப்ளோமாதாரர்களுக்கு டிப்ளோமாக்கள் வழங்கப்பட்டு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை அங்கீகரித்து தொகுதியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழா மனமார்ந்த வாழ்த்துக்கள், நினைவு புகைப்படங்கள் மற்றும் பகிரப்பட்ட பெருமை உணர்வுடன் நிறைவடைந்தது - அணுகக்கூடிய தொழில்துறைக்கு ஏற்ற கல்வி மூலம் மாணவர்களை மேம்படுத்துவதில் BCAS கல்முனை வளாகத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது.

சாய்ந்தமருதில் தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!(எம்.எஸ்.எம்.ஸாகிர்)சாய்ந்தமருதில் தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்...
28/04/2025

சாய்ந்தமருதில் தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருதில் தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) திங்கட்கிழமை இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் கோரிக்கைக்கு அமைவாக, சாய்ந்தமருது பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தோணா அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, அதற்கான ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் பேரில், அவரது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 3.2 மில்லியன் பெறுமதியான செயற்றிட்டம் கடந்த மாதம் செய்யப்பட்டிருந்தத்து.

அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில், தோணா அபிவிருத்திக்கான வேலைதிட்டத்தை ஆரம்பமாக முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, அதற்கான ஆலோசனைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா வழங்கினார்.

இந் நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர், கல்முனை மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர பொறியியலாளர், சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் துறை சார் பொறியியலாளர்கள், உரிய திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிகழ்ச்சித் திட்டமானது விரைவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி நகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு.!!காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்ப...
05/04/2025

காத்தான்குடி நகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு.!!

காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சில சுயற்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒருமித்து அறிமுக நிகழ்வும் பொதுக்கூட்டமும் காத்தான்குடி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

காத்தான்குடி நகர சபை 10 வட்டார உறுப்பினர்களையும் 9 போனஸ் உறுப்பினர்கள் அடங்கலாக 19 உறுப்பினர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#வியூகம்tv #வியூகம்news

உள்ளூராட்சி மன்ற தேர்தல்:வெற்றி வியூகம் தொடர்பாகதேசிய மக்கள் சக்தி அபேட்சகர்களுக்கு விளக்கமளிப்பு எதிர்வரும் உள்ளூராட்சி...
05/04/2025

உள்ளூராட்சி மன்ற தேர்தல்:
வெற்றி வியூகம் தொடர்பாக
தேசிய மக்கள் சக்தி அபேட்சகர்களுக்கு விளக்கமளிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசசபை ஊடாகப் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் அபேட்சகர்களுக்களுடனான கலந்துரையாடலொன்று (03) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி ஆகிய பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம்?, அதற்கான தேர்தல் வியூகங்களை எவ்வாறு வகுக்கலாம்? என்பது தொடர்பான வெற்றி வியூகக் கலந்துரையாடலில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு தனது காத்திரமான கருத்துக்களை முன்வைத்து, வெற்றி பெறுவதில் உள்ள வியூகங்களைத் தெளிவுபடுத்தினார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

#வியூகம்tv #வியூகம்news #

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியுடனான விஷேட கலந்துரையாடல்.இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் குற்றச்சாட்ட...
03/04/2025

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியுடனான விஷேட கலந்துரையாடல்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும் மற்றும் கல்முனையின் சமகால பிரச்சினைகள், கல்முனை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாகவும் ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி Mr. Marc-André Franche குழுவினருக்கும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்கிழமை 01-04-2025 அன்று பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை தொடர்பான சமகால விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

#வியூகம்news #வியூகம்tv

ஆதம்பாவா எம்.பி.யினால்சாய்ந்தமருது பிரதான வீதிகளில் தெரு விளக்குகள் ஒளிர வைப்பு....சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை முதல் ...
02/04/2025

ஆதம்பாவா எம்.பி.யினால்
சாய்ந்தமருது பிரதான வீதிகளில் தெரு விளக்குகள் ஒளிர வைப்பு....

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை முதல் காரைதீவு வரையான பிரதான வீதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராமல், கேட்பாரற்றுக் கிடந்த தெரு விளக்குகள் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களது முயற்சியினால் இன்று (02) புதன்கிழமை திருத்தி அமைக்கப்பட்டு, ஒளிர வைக்கப்பட்டன.

இவ் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

26/03/2025

🔴புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு நிந்தவூர் HAYAANI FOREIGN SHOP இல் மாபெரும் மலிவு விற்பனை 🔥

📍HAYAANI FOREIGN SHOP
Theatre Road,
Nintavur-21
Contact:0772066259

26/03/2025

🔴நேருக்கு நேர்: தன் தாய்க் கட்சி முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் அதாஉல்லாஹ் இணைவாரா? முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளர்
Safeer Mansoor

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா...
12/03/2025

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு “விதிமுறைகள்” தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு தெரிவித்து இருக்கிறோம்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முறைப்பாட்டுக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. “பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்,” என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள WhatsApp இல் இணைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/HtWNEidgb82J6JmW5zNX58

#வியூகம்tv #வியூகம்news

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால் 2025 தேசிய வரவு செலவுத்திட்டத்தில் கல்முனை சந்தாங்கேணி மைதான விளையாட்ட...
12/03/2025

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால் 2025 தேசிய வரவு செலவுத்திட்டத்தில் கல்முனை சந்தாங்கேணி மைதான விளையாட்டரங்கு அபிவிருத்திக்கு 150 Millions ரூபா ஒதுக்கிடு.

உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள WhatsApp இல் இணைந்து கொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/HtWNEidgb82J6JmW5zNX58

#வியூகம்tv #வியூகம்news

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when வியூகம் News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வியூகம் News:

Share