வியூகம் News

வியூகம் News உடனுக்குடன் உண்மைச் செய்திகள்...
(1)

அக்கரைப்பற்று மாநகர சபையினரின் களப்பணி கண்டியில் தொடர்கிறது!தேசிய காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய அ...
11/12/2025

அக்கரைப்பற்று மாநகர சபையினரின் களப்பணி கண்டியில் தொடர்கிறது!

தேசிய காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ. எல். எம். அதாவுல்லா அவர்களின் தலைமையில், கம்பளையில் சில பிரதேசங்களில் அனர்த்தத்தால் குடிநீர் வசதியின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இத்துடன் அப்பிரதேச மக்களின் வீடுகள், வெள்ளநீர் சென்ற பகுதிகளை பார்வையிட்டு சுற்றுச்சூழலை சுத்தமாக்கும் துப்புரவு பணிகளும், மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் கௌரவ உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் தொடர்ந்து நடை பெற்றுவருகின்றன.

மக்கள் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் முயற்சியாக அக்கரைப்பற்று மாநகர சபை குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.

கிண்ணியா வெள்ளப் பாதிப்புக்கு ZAHARA FOUNDATION – ROYAL DIAMOND GROUP (UAE) இணைந்து நிவாரண உதவிஅண்மையில் இலங்கையை தாக்கி...
11/12/2025

கிண்ணியா வெள்ளப் பாதிப்புக்கு ZAHARA FOUNDATION – ROYAL DIAMOND GROUP (UAE) இணைந்து நிவாரண உதவி

அண்மையில் இலங்கையை தாக்கிய கடும் வெள்ள அனர்த்தம் கிண்ணியா பிரதேசத்தையும் பெரிதும் பாதித்தது. வீடுகள் சேதமடைந்து, அத்தியாவசியப் பொருட்கள் பறிபோய், பல குடும்பங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை *ZAHARA FOUNDATION* மற்றும் **ROYAL DIAMOND GROUP – UAE* இணைந்து வழங்கின.

இந்நிவாரணப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றன.

பெரும்பாலும் தமிழ் மக்கள் (99%) வசிக்கும் ஈச்சந்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் மிகுந்த சேதம் ஏற்பட்டதுடன், அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனை முன்னிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. இத்துடன் அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் சமமான உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த மனிதாபிமான முயற்சி பயனுள்ள வகையில் முன்னெடுக்கப்படுவதற்காக, நிவாரணங்களை ஒருங்கிணைத்த கிண்ணியாவைச் சேர்ந்த *அஷ்-ஷெய்க் அப்துல் அஸீஸ் (நழீமி)* அவர்கள் சிறப்பாக பங்காற்றினார். மேலும் நிவாரணங்களை வழங்கிய மல்வானையைச் சேர்ந்த கலாநிதி அல்ஹாஜ் ஜிப்ரி மற்றும் பணியில் ஈடுபட்டு ஒத்துழைத்த அனைத்து நலன்விரும்பிகளுக்கும் ஏற்பாட்டாளர் குழு சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இவ்வெள்ள அனர்த்தம் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையும் மனித நேயமும் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டதைக் காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீண்டும் வழமைக்கு கொண்டு வர இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பாக அமைகின்றன.

 #வியூகம்TV"கல்விக்காய் கரம் கொடுப்போம்"   புயல், பெருவெள்ளம், மண் சரிவு மற்றும் பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள...
07/12/2025

#வியூகம்TV
"கல்விக்காய் கரம் கொடுப்போம்"

புயல், பெருவெள்ளம், மண் சரிவு மற்றும் பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெளி மாவட்ட மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வியூகம் TV முன்னெடுக்கும் உன்னத வேலைத் திட்டம்😍

அனர்த்தங்களில் சிக்கி தமது கல்விக்கான அடிப்படை தேவைகளை இழந்து நிற்கும் மாணவ மணிகளுக்கு மானசீகமாய் பங்களிக்கும் இச் செயற்திட்டத்தில் உள்நாட்டு -வெளிநாட்டு உறவுகள் இணைந்து கொள்ள முடியும்.

மாணவர்களுக்கு தேவையான பொருட்கள்:

👍அப்பியாசக் கொப்பிகள்
👍பாடசாலை உபகரணங்கள்
👍பாடசாலை பைகள்
👍பாதணிகள், சப்பாத்துக்கள்
👍சீருடை துணிகள்
👍வினா விடை புத்தகங்கள், கையேடுகள்

❤️அன்பான உறவுகளே! பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயனடையும் வகையில் மேற்கண்ட பொருட்களை நீங்கள் வழங்க விரும்பினால் நமது வியூகம் ஊடக வலையமைப்பு காரியாலயத்திற்கு நேரடியாக வருகை தந்து ஒப்படைக்க முடியும் அல்லது நிதி பங்களிப்பும் வழங்க முடியும்.

📍
வியூகம் ஊடக வலையமைப்பு
61B, லெனின் வீதி, மாளிகைக்காடு மேற்கு
காரைதீவு, இலங்கை.

மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு
📲0774073361, 0764073361

அனர்த்த  நிவாரண சேகரிப்புக்கு நிதி உதவி அளியுங்கள்:சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விடுக்கும் அன்பா...
04/12/2025

அனர்த்த நிவாரண சேகரிப்புக்கு நிதி உதவி அளியுங்கள்:
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கடல் கடந்து வாழும் உறவுகளுக்கும், உள்ளூர்களிலும் வாழும் ஈமானிய உள்ளங்களுக்கும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அன்பான வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிமாவட்ட மக்களுக்கான நிவாரணப் பணியினை எமது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புக்கள் சேர்ந்து
நிவாரணம் சேகரிக்கும் பொருட்டு நேற்று (01)ஆம் திகதி சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, சாய்ந்தமருது - மாளிகைகாடு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அல்ஹாஜ் மீராமுகைடீன் மீராசாஹிப் என்ற

Meeramohaideen Meerasahibu
A/C No 0220601531001
Amana Bank
Kalmunai

பங்களிப்புச் செய்யக்கூடிய சகோதரர்களின் பங்களிப்பை இக்கணக்கினூடாக மாத்திரமே வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கிலக்கம் டிசம்பர் 06 ஆம் திகதி வரையுமே உங்கள் பணத்தினை வைப்பிலிட முடியும். டிசம்பர் 07 ஆம் திகதி இக்கணக்கிலக்கம் மூடப்படும். அதன் பின்னர் யாரும் வைப்பிலிட வேண்டாம் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

குறிப்பு : 06 பேர் கொண்ட நம்பிக்கையான பொறுப்புதாரிகளும் வங்கிக் கணக்கிக்கான இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் விஷேட அம்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மரமொன்று முறிந்து பொது மதிலுக்கு பாரிய சேதம்(எம்.எஸ்.எம். ஸாகிர்) சாய்ந...
26/11/2025

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மரமொன்று முறிந்து பொது மதிலுக்கு பாரிய சேதம்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தற்போது வீசிவரும் காற்றின் வேகம் காரணமாக பாடசாலையில் மரமொன்று முறிந்து விழுந்து பாடசாலை பொது மதிலை உடைத்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை பொது மதில் உடைந்திருப்பதன் காரணமாக பாடசாலைக்கு பாதுகாப்பு என்பது குறைவாக உள்ளது.

பாடசாலையில் தற்போது நடப்பட்டுள்ள மரக் கன்றுகளுக்கும் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது.

பொது மதில் உடைந்துள்ளதால், ஆடு, மாடுகள் உட் சென்று அங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் பாடசாலையின் உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையும் காணப்படுவதாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தெரிவித்துள்ளார்.

26/11/2025
ஆட்சி நீடிக்க ஆசி வேண்டி பொத்துவில் சுல்பிகாரின் கரையோரத்தை சுற்றிய சைக்கிள் ஓட்டம்!இலங்கை திருநாட்டின் ஒன்பதாவது நிறைவே...
25/11/2025

ஆட்சி நீடிக்க ஆசி வேண்டி பொத்துவில் சுல்பிகாரின் கரையோரத்தை சுற்றிய சைக்கிள் ஓட்டம்!

இலங்கை திருநாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நீண்ட ஆயுள் மற்றும் நீண்ட கால ஆட்சி, சமாதான நல்லிணக்கம், போதை பாவனை முற்றாக ஒழிக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டம் இனமத பேதமற்ற நாட்டை உருவாக்கும் திட்டம் போன்றவைகளுக்கு ஆசி வேண்டி பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல சைக்கிள் ஓட்ட வீரர் சுல்பிகார் கெளரவ ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க அவர்கள் பிறந்த ஊரான அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தில் இருந்து இன்று காலை இச் சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்தார்.

நாட்டைச் சுற்றி கரையோர பிரதேசம் ஊடாக சென்று ஜனாதிபதி செயலகம் வரை செல்லவுள்ளும் இந்த சைக்கிள் ஓட்டத்தை தம்புத்தேகம விகாரையின் விகாராதிபதி பனாமுரே சாந்த
ஹிமி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தப்புத்தேகமயில் ஆரம்பித்து மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை ஊடாக பொத்துவில் சென்று மொனராகலை, வெள்ளவாய, கதிர்காமம் மாத்தறை , காலி , பேருவளை ஊடாக கொழும்பு சென்று 10 வது தினத்தன்று ஜனாதிபதி செயலகம் வரை சைக்கிள் ஓட்டத்தில் செல்லவுள்ளார்.

சுல்பிகார் உங்களது பிரதேசங்களினூடாக வரும்போது அவரை அன்புடன் வரவேற்று தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்...
25/11/2025

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளருக்கான நியமனம் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் கொழும்பு கிரான் மோனாச் ஹோட்டலில் வைத்து கடந்த 2025.11.23 அன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கான தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பொருளாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நியமனம் பெற்ற உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தான் தொடர்ச்சியாக இப்பொறுப்பில் அதிக வருடங்கள் செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் அப்பொறுப்பினை கட்சி தலைமை தன்னிடத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் தனது கட்சிக்கும் தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கும் இன்னும் அதிகமான விசுவாசத்துடன் அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓமான் வரலாற்றின் ஆழமும் இலங்கையுடனான  ஆழமான இராஜதந்திர உறவும்எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.ஓமான் சுல்தானகம் (...
21/11/2025

ஓமான் வரலாற்றின் ஆழமும் இலங்கையுடனான ஆழமான இராஜதந்திர உறவும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

ஓமான் சுல்தானகம் (Sultanate of Oman) அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. அதன் வரலாறு ஒரு கடல்சார் பேரரசாக விளங்கியதுடன், நவீன காலத்தில் எண்ணெய் வளம் மற்றும் இராஜதந்திர நடுநிலைமைக்காக அறியப்படுகிறது.

1. வரலாற்றுப்பின்னணி மற்றும் தேசிய தினம்:
ஓமான் உலகிலேயே மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து சுதந்திரமாக இருக்கும் அரபு நாடுகளில் ஒன்றாகும். அதன் வரலாறு மூன்று முக்கியப் புள்ளிகளில் மையப்படுத்தப்பட்டுள்ளது:

* போர்ச்சுகீசியர் வெளியேற்றம் (1650): 1507 இல் இருந்து ஓமானின் முக்கிய துறைமுகங்களை போர்ச்சுகீசியர்கள் ஆக்கிரமித்திருந்தனர். நவம்பர் 18, 1650 அன்று, இமாம் சுல்தான் பின் சைப் (Imam Sultan bin Saif) தலைமையிலான கிளர்ச்சி போர்ச்சுகீசியர்களை ஓமானில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றியது. இது ஓமானின் முதல் முக்கியமான சுதந்திர தினமாகக் கருதப்படுகிறது.

* அல் பு சைதி வம்சத்தின் ஆரம்பம் (1744): 1744 ஆம் ஆண்டு, தற்போதைய ஆளும் குடும்பமான அல் பு சைதி (Al Bu Said) வம்சத்தின் நிறுவனர், இமாம் சையத் அஹ்மத் பின் சயீத் அல் பு சைதி (Sayyid Ahmed bin Said Al Busaidi) ஆட்சியைக் கைப்பற்றி, நாட்டை ஐக்கியப்படுத்தினார். இந்த நாள் நவம்பர் 20 ஆகும்.

* நவீன மறுமலர்ச்சி (1970): 1970 ஆம் ஆண்டு சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (Sultan Qaboos bin Said Al Said) அரியணை ஏறி, நாட்டின் நவீன மறுமலர்ச்சியை (Omani Renaissance) ஆரம்பித்தார். ஓமான் அப்போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஏழ்மையான நிலையில் இருந்து நவீன, வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுத்தது.

தேசிய தினத்தின் மாற்றம்:

* பாரம்பரியமாக, நவம்பர் 18 அன்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இது சுல்தான் காபூஸ் அவர்களின் பிறந்த நாளாகவும் (அவரது ஆட்சியின் சிறப்பைக் குறிக்க), அதே நாளில் 1650 இல் போர்ச்சுகீசியர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்திற்காகவும் அனுசரிக்கப்பட்டது.

* தற்போதைய ஆட்சியாளர் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக், 2025 முதல் தேசிய தினத்தை நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இது அல் பு சைதி வம்சத்தின் ஸ்தாபக தினத்தை மையமாகக் கொண்டு, தனிப்பட்ட தலைவரில் இருந்து ஆளும் குடும்பத்தின் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாற்றமாகும்.

2. ஆட்சியாளர்கள் மற்றும் தற்போதைய கால வளர்ச்சி
அமீர்கள்/சுல்தான்கள்
* நவீன ஓமானின் நிறுவனர்: சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (1970 - 2020 வரை ஆட்சி).

* இவர் ஓமானை நவீனப்படுத்திய சிற்பி எனப் போற்றப்படுகிறார். இவர் எண்ணெய் வளத்தை உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்து ஓமானின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பாதை வகுத்தார்.

* பிராந்திய மோதல்களில் நடுநிலை இராஜதந்திரக் கொள்கையைக் (Neutral Diplomacy) கடைப்பிடித்து, ஓமானை அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மையமாக நிலைநிறுத்தினார்.

* தற்போதைய சுல்தான்: சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் அல் சையத் (Sultan Haitham bin Tarik Al Said).
* ஜனவரி 2020 இல் பதவியேற்ற இவர், சுல்தான் காபூஸின் பாதையைப் பின்பற்றி நாட்டை வழிநடத்தி வருகிறார்.

தற்போதைய கால வளர்ச்சி: ஓமான் தொலைநோக்கு 2040 (Oman Vision 2040)
சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் அவர்களின் ஆட்சியின் முக்கிய இலக்கு, ஓமான் தொலைநோக்கு 2040 திட்டத்தைச் செயல்படுத்துவதாகும்.

வளர்ச்சித் துறையின் முக்கிய இலக்குகள்

பொருளாதாரப் பல்வகைப்படுத்தல்: எரிவாயு, சுற்றுலா, தளவாடங்கள் (Logistics), மீன்வளம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளை ஊக்குவிப்பதன் மூலம் எண்ணெய் வருமானத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.

மனித மேம்பாடு: சர்வதேச தரத்திலான கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுகாதார அமைப்புகளை நிறுவுதல். ஓமான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல்.

சுழற்சி அதிகாரம் (Decentralization): தலைநகரான மஸ்கட்டில் மட்டும் இல்லாமல், நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் (Governorates) சமமான வளர்ச்சியை உறுதிசெய்ய, அதிகாரத்தைப் பரவலாக்குதல்.

உலகளாவிய நிலைப்பாடு:
நடுநிலை மற்றும் அமைதிக் கொள்கையைத் தொடர்வதன் மூலம், சர்வதேச மற்றும் பிராந்திய சவால்களுக்கு அமைதியான தீர்வுகளைக் காணும் இராஜதந்திர மையமாக ஓமானைத் தக்கவைத்துக் கொள்ளுதல்.

3. ஓமான் - இலங்கை உறவுகள்
ஓமான் மற்றும் இலங்கை இடையேயான உறவு வரலாற்றுப் பிணைப்பைக் கொண்டது. மத்திய காலத்திலிருந்தே இந்து சமுத்திர வர்த்தகத்தில் ஓமானின் கப்பல்கள் (Dhows) முக்கியப் பங்காற்றின.

நவீன உறவு மூன்று தூண்களில் உள்ளது:

* பொருளாதார ஒத்துழைப்பு: ஓமான், இலங்கையின் முக்கிய எரிபொருள் விநியோகஸ்தர்களில் ஒருவர். சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஓமான் முக்கியப் பங்காற்றியது.

* தொழிலாளர் மற்றும் பணப் பரிமாற்றம்: குவைத்தைப் போலவே, ஓமானும் இலங்கையர்களுக்கு, குறிப்பாகத் திறமையான தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இவர்களின் அன்னியச் செலாவணிப் பரிமாற்றம் (Remittances) இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு அத்தியாவசிய ஆதாரமாகும்.

* இராஜதந்திரம் மற்றும் வர்த்தகம்: இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகள் உள்ளன. இலங்கையின் தேயிலை, மசாலாப் பொருட்கள் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஓமான் ஒரு நிலையான சந்தையாக உள்ளது.

ஓமான் நாட்டின் எதிர்காலத்திற்காக தேசிய தினத்தில் வாழ்த்து:

ஓமான் அதன் நடுநிலைக் கொள்கை, வரலாற்று மரபுகளைப் பேணுதல் மற்றும் நவீன வளர்ச்சிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் பிராந்தியத்தில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.
"சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் அல் சையத் அவர்களின் விவேகமான தலைமையின் கீழ், ஓமான் தொலைநோக்கு 2040 இன் இலட்சிய இலக்குகளை வெற்றிகரமாக அடையவும், உலகின் மிகவும் அமைதியான மற்றும் நிலையான நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து செழிக்கவும் வாழ்த்துகிறோம்.
மத்திய கிழக்கு மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் ஓமானின் பங்கு மிகவும் முக்கியமானது! அதன் எதிர்காலம் மேலும் பிரகாசமாக அமையட்டும்!"

 #அக்கரைப்பற்று   #புத்தளம் நட்புணர்வு சந்திப்பு!அக்கரைப்பற்று மாநகரசபையில் நேற்று(20) நடைபெற்ற  சினேகபூர்வ சந்திப்பில் ...
21/11/2025

#அக்கரைப்பற்று #புத்தளம் நட்புணர்வு சந்திப்பு!

அக்கரைப்பற்று மாநகரசபையில் நேற்று(20) நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும், புத்தளம் மாநகரசபையின் “நள்ளிரவு மேயர்” என்று பொதுமக்களால் அழைக்கப்படும் உறுப்பினர் இஷாம் மரிக்காரும் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக விரிவான உரையாடலை மேற்கொண்டனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்குவது எப்படி என்பதையும், எதிர்காலத்தில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இணைந்த பணிகள் எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதையும் இருவரும் கலந்துரையாடினர்.

இருவருக்கும் இடையிலான உரையாடலில் மறைந்த அரசியல் தலைவர் கே.ஏ. பாயிஸ் பற்றியும் விசேஷமாக பேசப்பட்டது. அவர் இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்ததையும், சமூக நலனுக்காக அவர் செய்த பணிகளை இருவரும் நினைவுகூர்ந்தனர்.

இந்த சந்திப்பின் இறுதியில், எந்த கூடுதல் அதிகாரங்களும் இல்லாமல் பொதுமக்களின் அன்பால் “நள்ளிரவு மேயர்” என்று அழைக்கப்படும் புத்தளம் நகரசபை உறுப்பினர் இஷாம் மரிக்கார், கே.ஏ. பாயிஸ் அவர்களின் வரலாறு புத்தகத்தின் ஒரு பிரதியை மேயர் அதாவுல்லாவிற்கு அன்புடன் கையளித்தார்.

இந்த நட்புணர்வு சந்திப்பு, இரு நகரங்களின் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் ஓர் எடுத்துக்காட்டாகவும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கான நல்ல முன்னோட்டமாகவும் அமைந்துள்ளது.

கிழக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஹாபிழ்களுக்கான கிராத் போட்டியில்  சவளக்கடையை சேர்ந்த அல் ஹாமியா அறபுக்கல்லூரி மாணவன் AL ...
21/11/2025

கிழக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஹாபிழ்களுக்கான கிராத் போட்டியில் சவளக்கடையை சேர்ந்த அல் ஹாமியா அறபுக்கல்லூரி மாணவன் AL HAFIL MNM.NIHAS அவர்கள் நான்காவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் .

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when வியூகம் News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வியூகம் News:

Share