Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!14/11/2025
14/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
14/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  காரைதீவு பிரதேச சபை அமர்வு கூடியது : மக்களின் பிரச்சினைகள் பலதும் ஆராய்வு..!✅👉  நூருல் ஹுத...
13/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 காரைதீவு பிரதேச சபை அமர்வு கூடியது : மக்களின் பிரச்சினைகள் பலதும் ஆராய்வு..!

✅👉 நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 இலங்கையின் முக்கிய மீன் சந்தையையும், லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தையும், பள்ளிவாசல்கள் மேலும் பல கேந்திர இடங்களையும் கொண்டுள்ள மாளிகா வீதி முடிவில் வடிகான்கள் அடைப்பு எடுத்துள்ளதால் நீர் வடிந்தோட இடமின்றி நீர்தேங்கி நிற்பதால் பல்வேறு இன்னல்கள் உருவாகி அப்பிரதேச மக்களுக்கு நோய்நிலைகளும், அசௌகரியங்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டியும் பலனில்லை. மனிதாபிமானமான அடிப்படையில் மாணவர்களினதும், மீனவர்களினதும், அப்பிரதேச மக்களினதும் நன்மை கருதி காரைதீவு பிரதேச சபை உடனடி தீர்வை வழங்க முன்வரவேண்டும் என காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் இன்று பிரதேச சபை அமர்வில் வலியுறுத்தினர்.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 05வது மாதாந்த சபைக் கூட்டம் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று 13/11/2025 வியாழக்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் மாளிகைக்காடு மையவாடியை சீரமைக்க பிரதேச சபை தமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டிய அவசியத்தை முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் வலியுறுத்தினார்.

2026 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி முன்வைத்துள்ள பாதீட்டில் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை கொண்டு நீண்டகாலமாக அபிவிருத்தி காணாத தமிழ், முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் இந்த பாதீட்டின் மூலம் சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். மேலும் ஊழல் மற்றும் போதை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் வரவேற்கக்கூடியதாக உள்ளதாக தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தனது உரையில் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் தமது வட்டாரத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தமக்கு தெரியாமல் நடைபெறுவதாகவும், அமுலில் உள்ள சபையின் உபகுழுக்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமாரவின் ஊழல் ஒழிப்பு, போதையொழிப்பு செயற்பாடுகளை தாம் வரவேற்பதாகவும், சபையை வெளிப்படை தன்மையுடன் வழிநடத்துமாறும் வேண்டினார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் தவிசாளர் யோகரெத்தினம் கோபிகாந்த், போகின்ற போக்கை பார்க்கும் போது அடுத்தவருட நடுவில் சபை நிதி நிலைகளை சமாளிக்க முடியாத வாங்கறோத்து நிலை வரும். ஆதலால் சிறப்பான திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டியுள்ளதை வலியுறுத்தி, மேலதிக ஆளணியினரை உள்ளுராட்சி திணைக்களத்தில் இணைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அடுத்த சபைக் கூட்டத்தில் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பதனால் அதனை பரிசீலனை செய்து ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் முன்மொழிவுகளை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க தவிசாளர் உறுப்பினர்களை வேண்டிக்கொண்டதுடன் காரைதீவு மயானத்தில் தகன சாலை ஒன்றை அமைப்பதற்கு நன்கொடையாளர் ஒருவர் முன்வந்துள்ளமையினால் துறை சார் திணைக்களங்களின் இணக்கப்பாட்டுடன் தகனசாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டு சபை அனுமதி வழங்கியது.

கலாசார மண்டப தேவைகள், 43 அலுவலக ஊழியர்களுக்கு சீருடை கொடுப்பனவு வழங்கும் பணி, அனர்த்தங்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு சபை நிதியிலிருந்தும் உதவி வழங்க அனுமதி, இராணுவத்திடமிருந்து கையளிக்கப்பட்ட காணியில் சிறு திருத்தங்களை மேற்கொண்டு பாவனைக்கு விடுவதற்கு சபை அனுமதி பெறல் போன்ற பல விடயங்களுக்கு சபை அனுமதி வழங்கியது.

கி. ஜெயசிறில், எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.எம். ஜாஹீர், யோ.கோபிகாந்த் போன்ற உறுப்பினர்களினால் தெருமின்விளக்கு சீரமைப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சபை அமர்வின் ஆரம்பத்தில் மரணமான உறவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!13/11/2025
13/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
13/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!12/11/2025
12/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
12/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!11/11/2025
11/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
11/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  கல்முனை பிரதேச 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா - 2025..!✍️  ஏ.எஸ்.எம்.அர்ஹம் 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄...
10/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 கல்முனை பிரதேச 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா - 2025..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்முனை இளைஞர் கழக சம்மேளன தலைவர் என். எம். அப்ரின் தலைமையிலும் கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எ.எல் .எம். அஸீம் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களின் பங்களிப்புடன் (08) சந்தாங்கேணி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் WA. கங்கா சாகரிக்கா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் RM. சிறிவர்த்தன, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் ஆமீர் அலி , பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் பலீல் ,
டாக்டர் ஜெமீல் ஞாபகர்த்த வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் வஹாப் ரிஷாட் , றாஜித் , அல் - மிஸ்பாஹ் பாடசாலை அதிபர் அப்துல் றஸாக் ,றீம் 1st உரிமையாளர் ஜவ்ஸான் , அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட தலைவர் அப்துல் மனாப், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட், அமனா தக்காபுல் உத்தியோகத்தர் கரீம் BA. மற்றும் ,ஜெயராஜ்,பிரபாகரன் ,ராசிக் நபாயிஸ் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது இளைஞர் கழக வீரர்களுக்கு சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் என்பன அதிதிகளால் வழங்கி இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!10/11/2025
10/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
10/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!09/11/2025
09/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
09/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  கஃபாவைப் பார்வையிட்ட இஸ்லாமபாத் மாணவர்கள்..!✅👉  2025.11.06ம் திகதி கல்முனை இஸ்லாம்பாத் முஸ...
08/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 கஃபாவைப் பார்வையிட்ட இஸ்லாமபாத் மாணவர்கள்..!

✅👉 2025.11.06ம் திகதி கல்முனை இஸ்லாம்பாத் முஸ்லிம் மகா வித்யாலய பாடசாலை மாணவர்ளின் சித்திரக் கண்காட்சி நடைபெற்றது.

இக் கண்காட்சியினை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு எம்.எஸ்.சஹுதுல் நஜீம் , பாடசாலை அதிபர் திரு. ஏஜீ.எம். றிசாத், ஆகியோர் நாடாவெட்டி நிழ்வை ஆரம்பித்துவைத்தனர்.

மேலும் இவர்களுடன் இணைந்து சித்திரப்பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர், பாடசாலை பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.

சித்திரப் பாட ஆசாரியர் ஏ.எஸ்.எம் நிஸ்வி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கன்காட்சிக்கான ஆக்கங்கள் ஆனைத்தும் தரம் 9 மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவைகளாகும். கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒட்டுச் சித்திரங்கள், இரேகைச் சித்திரங்கள், அலங்காரச் சித்திரங்கள், தூரதரிசனக் காட்சிகள் எனப் பலவகையான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்தோடு மக்கா நகரில் அமையப் பெற்றுள்ள கஃபாவின் சாயலை ஒத்த மாதிரிகஃபாவும் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மேலும் இக்கண்காட்சியினை பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பார்வையிட்டதனைப் படங்களில் காணலாம்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  அம்பாறை மாவட்ட காணி சமபங்கு வேண்டும் நூல் வெளியீட்டு விழா : மேயர் அதாஉல்லா கலந்து கொண்டு ந...
08/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 அம்பாறை மாவட்ட காணி சமபங்கு வேண்டும் நூல் வெளியீட்டு விழா : மேயர் அதாஉல்லா கலந்து கொண்டு நீண்ட உரை நிகழ்த்தினார்..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை மற்றும் காணி சமபங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சட்டத்தரணி ஆஷிக் அலியார் மற்றும் சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் இணைந்து எழுதிய “அம்பாறை மாவட்டம் : காணி சமபங்கு வேண்டும்” என்ற நூல் வெளியீட்டு விழா (07) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்ராஹிம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நூல், அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை, காணி சமபங்கு, முஸ்லிம்,சிங்கள மற்றும் தமிழ் கிராமங்களில் காணி ஒதுக்கீட்டில் நிலவும் பிரச்சினைகள், வரலாற்றுப் பின்னணி, மற்றும் தீர்வுக்கான பரிந்துரைகள் குறித்து ஆழமான ஆய்வாக எழுதப்பட்டுள்ளது. நூல் ஆய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டு இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், கிழக்கு மாகாண மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், முஸ்லிம் அரசியலின் கடந்த கால பயணங்கள், தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய சமூக பணிகள் தொடர்பான ஆழமான உரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா தலைவர் ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் கருத்துரை வழங்கினார்.

இந்த விழாவில் உலமாக்கள், ஊர் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்வியாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் தொடர்ந்து நூலாசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தும் போது நிலம் என்பது வாழ்வின் அடிப்படை உரிமை; சமபங்கு வழங்காமை சமூக அநீதிக்கு வழிவகுக்கிறது” என வலியுறுத்தி உரையாற்றியதுடன் கரையோர மாவட்டமும், கரையோர தேர்தல் மாவட்டமும் தொடர்பில் ஆழமான கருத்துக்களை முன்வைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு “அம்பாறை மாவட்டம் : காணி சமபங்கு வேண்டும்” என்ற நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் சமூக பணியாற்றிய தலைவர்களுக்கான கௌரவமும் இடம்பெற்றது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  Bahriyans 2002 (O/L) Batch இனால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கல்வி ...
07/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 Bahriyans 2002 (O/L) Batch இனால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நிதியுதவி..!

✅👉 கல்முனை Bahriyan’s 2002 O/L Batch இனால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியால 2026 இல் தரம் 5 ஆம் மாணவர்களின் அடைவு மட்டத்தை விருத்தி செய்வதற்கான செயலமர்வுகள், விஷேட வகுப்புக்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான இரண்டாம் கட்ட நிதியைபெற்றுக் கொள்வதற்கு 07/11/2025 வெள்ளி கிழமை காலை ஆராதனை நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்களான SN. ஹஸ்மி, FM. சமீம் ஆகியோரால் அதிபர் M. நவாஸ் செளபி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் காலை ஆராதனைக் கூட்டத்தில் Bahriyan’S 2002 ( O/L) Batch அமைப்பிற்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா..!✍️  நூ...
07/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக்கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, செய்யித் அப்துல் காதிர் நாஹூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204வது கொடியேற்று பெருவிழாவும் 460 வது மணாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் 2025.11.21 வெள்ளிக்கிழமை முதல் 2025.12.03 வரை (ஹிஜ்ரி 1447 ஜமாஅதுல் ஆகிர் பிறை 01 தொடக்கம் பிறை 12 வரை) வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெறவுள்ளதுடன் கொடியேற்ற தின மான 2025.11.21 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணி மணிக்கு சந்தனம் பூசுதல் நிகழ்வும், காலை 8:00 மணிக்கு பெண்கள் தலைபாத்திஹா மஜ்லிஸும், பிற்பகல் 3:45 மணிக்கு மௌலித் மஜ்லிசுடன் கொடி ஊர்வலம் நடைபெற்று மாலை 5:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.

இங்கு தினமும் நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி றாத்திப் மஜ்லிஸ், சியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விஷேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் சங்கைக்குரிய சாதாத்மார்கள், உலமாக்கள், அறபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறுவதோடு. இறுதித்தினமான 2025.12.03 புதன்கிழமை முஹர் தொழுகையின் பின்னர் மாபெரும் மந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டு, அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் கொடியிறக்கும் நிகழ்வும் இடம்பெறும். மேலும் 2025.12.04 வியாழக்கிழமை அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தாரின் கத்தூரி நிகழ்வும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

Address

169/4 A Mathavan Road Kalmunai 03
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

Share