Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉 காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடல்..!✍️  நூருல் ஹுதா உமர் 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇✅👉 ...
27/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடல்..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த வீதியில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்புக் கருதி இந்த அத்தியாவசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியின் குறுக்கே நீர் பாய்வதாலும், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதாலும், பாதையின் நிலைமை உறுதி அற்றதாக மாறியுள்ளது. இதனால், வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் தடுக்கவே இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!27/11/2025
27/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
27/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  சர்வதேச அழகு கலைத்திறன் நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான ச...
26/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 சர்வதேச அழகு கலைத்திறன் நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

✅👉 சர்வதேச அழகு கலைத்திறன் கெம்பஸின் (International Beauty Artistry Campus) மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பயிலுநர்களினால் அலங்காரம் செய்யப்பட்ட மணப்பெண்கள் கண்காட்சியும் சர்வதேச அழகு கலைத்திறன் கெம்பஸின் பணிப்பாளர் ஜீனத்துல் பாஸீலாவின் தலைமையில் காரைதீவில் (25) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான, எஸ்.எல்.டி.பி கொள்கைப்பரப்பு செயலாளர் யூ.எல்.என். ஹுதா, பிரைனி கல்லூரி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல். பரீட்கான் ஆகியோர் பிரதான அதிதிகளாக கலந்து கொண்டு மணப்பெண் அலங்காரம் பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். அரூஸ், டீ.டீ. கல்விநிலைய செயற்பாட்டு பணிப்பாளர் எம். இம்தியாஸ் உட்பட பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வை டியூப் லீடர் பிரதானி ரோஷன் அஸ்ரப் தொகுத்து வழங்கினார்.

🌎 www.mihrajnews.com

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை..!எஸ் ஜே புஹாது ✅👉  அம்பாறை சே...
26/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை..!

எஸ் ஜே புஹாது

✅👉 அம்பாறை சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கல்லோயா படுக்கையில் வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளன

சேனநாயக்க சமுத்திரத்தின் கீழ்நோக்கி ஓடும் கல் ஓயா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது, மேலும் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டால், ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயரும்.

எனவே பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உடனடியாக அறிவுறுத்துமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

1. தமன

6. நிந்தவூர்

2. அம்பாறை

7. காரைதீவு

3. எரகம

8. சாய்ந்தமருது

4. அட்டாளைச்சேனை

9. கல்முனை

5. சம்மாந்துறை

10. நாவிதன்வெளி

11. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் அருகே உள்ள தாழ்வான பகுதிகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருப்பதை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்துங்கள். சம்பந்தப்பட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🌎 www.mihrajnews.com

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!26/11/2025
26/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
26/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!25/11/2025
25/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
25/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!24/11/2025
24/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
24/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 204வது கொடியேற்ற விழா ஆரம்பமானது..!✍️  சர்ஜுன் லாபீர் 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎...
21/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 204வது கொடியேற்ற விழா ஆரம்பமானது..!

✍️ சர்ஜுன் லாபீர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம்
கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும்
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 204 வது கொடியேற்று விழா இன்று (21) ஆரம்பமானது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ அப்துல் அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது .
கொடியேற்று தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் இவ் கொடியேற்ற விழாவை பார்வையிட வருகை தந்ததை காணமுடிந்தது
இந் நிகழ்வில் , அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம,முஸ்லிம் கலாச்சார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம் பிர்னாஸ் ,கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,முன்னாள் உறுப்பினர் ஏ.எம் ரியாஸ்(பெஸ்டர்),கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ் அமீர் அலி,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம் மஜீட்,நிர்வாக உத்தியோகத்தர் ஏ,சி.எம் பழீல் கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப்பின் செயலாளர் எம்.எச்.எம் முபாரிஸ்,பொருளாளர் எஸ்.எம்.ரிப்னாஸ் உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், மற்றும் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய மற்றும் கல்முனை கண்ணகி அம்பாள் ஆலய நிர்வாகிகள் என முக்கிய பிரமுகர்கள்,பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

🌎 www.mihrajnews.com

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  2026 வரவுசெலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு நலனுதவி ரூ.200/- உயர்வு அரசாங்கத்தின் நேர்மறைய...
17/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 2026 வரவுசெலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு நலனுதவி ரூ.200/- உயர்வு அரசாங்கத்தின் நேர்மறையான முடிவு: ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி பாராட்டுகிறது..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 2026 வரவுசெலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு வழங்கப்படும் நலனுதவித் தொகை ரூ.200/- உயர்த்தப்பட்டிருப்பது, அரசாங்கம் எடுத்துள்ள சமூகநீதி சார்ந்த ஒரு நல்ல மற்றும் வரவேற்கத்தக்க முடிவு என இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் தொடர்ந்தும், மலையக மக்கள் வரலாற்றுச் சூழலில் பல பொருளாதார சமூக சவால்களையும் அபிவிருத்தி பின்தங்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பதையும், இந்நிலையில் அரசு அவர்களுக்கு வழங்கும் எந்த முன்னேற்றமான நிவாரணமும் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் ரூ.200/- உயர்வு முழுமையான தீர்வல்ல என்றாலும், அரசாங்கம் மலையக மக்களை முக்கியமாகக் கவனத்தில் கொண்டிருப்பது ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நலனுதவித் தொகைகளின் உயர்வு மட்டுமின்றி, மலையகப் பகுதியின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு போன்ற துறைகளில் நீண்டகால மற்றும் திட்டமுடைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து தகுதியான பயனாளர்களுக்கும் இந்த உயர்வு தாமதமின்றி சென்றடைய அரசு உறுதி செய்ய வேண்டுமென கலாநிதி அன்வர் முஸ்தபா வலியுறுத்தினார். நலனுதவி வழங்கும் நடைமுறைகள் வெளிப்படையானவையாகவும், அரசியல் சார்பற்ற முறையில் செயல்படக்கூடியவையாகவும் இருக்க வேண்டும் என அவர் கவனத்திற்குக் கொண்டுவந்தார். “மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் எந்தச் செயலையும் எங்கள் கட்சி பொறுப்புடன் பாராட்டும்; அதே வேளை நாட்டின் அனைத்து சமூகங்களின் உண்மையான வளர்ச்சிக்காக தேவையான விமர்சனங்களையும் பரிந்துரைகளையும் தொடர்ந்து முன்வைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!17/11/2025
17/11/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
17/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  மிக நீண்ட காலம் சேவை செய்யும் நிறுவனமான மயோன் குரூப்பிற்கு விருது..!✍️  நூருல் ஹுதா உமர் 𝐑...
15/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 மிக நீண்ட காலம் சேவை செய்யும் நிறுவனமான மயோன் குரூப்பிற்கு விருது..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது ஆண்டு விழா இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.

இவ்விழாவில் மிக நீண்ட காலம் சேவை செய்யும் நிறுவனம் மற்றும் அதிக அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நிறுவனம் என்பன அடிப்படையாகக் கொண்டு மயோன் குரூப் நிறுவனம் விருது பெற்றது.

இந்த சிறப்பு விருதை மயோன் குரூப் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.றிஸ்லி முஸ்தபா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  ஹிஸ்புல்லாஹ்வை அருகே அழைத்து பாராட்டிய ஜனாதிபதி..!✅👉 பாராளுமன்றின் நடந்த சுவாரசிய சம்பவம்....
15/11/2025

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 ஹிஸ்புல்லாஹ்வை அருகே அழைத்து பாராட்டிய ஜனாதிபதி..!

✅👉 பாராளுமன்றின் நடந்த சுவாரசிய சம்பவம்..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் (14) பாராளுமன்ற உரையில், புத்தளத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற வைத்தியசாலை மற்றும் அருவக்காலு குப்பை திட்டம் தொடர்பாக ஆற்றிய உரையை தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற உரையில், புத்தளத்தின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சுட்டிக் காட்டி உரையாற்றிய போது, கெளரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும் பாராளுமன்றத்திலேயே இருந்துள்ளார்.

பின்னர், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களும், ஹிஸ்புல்லாஹ் அவர்களும் பகல் உணவுக்காக பாராளுமன்ற சிற்றூண்டிச்சாலைக்கு சென்ற போது, அங்கே பகல் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களையும்,பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் அருகே அழைத்து ஹிஸ்புல்லாஹ் அவர்களின் புத்தளம் சம்மந்தமான உரையை பாராட்டியுள்ளார்.

தான் புத்தளம் சென்ற போது அங்கே அவர்களுக்கு வைத்தியசாலை தொடர்பாக வாக்குறுதி வழங்கியதாகவும், அதனை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள் “ஆம் அது எங்களுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது, அதனை தரமுயர்த்தி தருவதாக நீங்களும் வாக்குறுதி வழங்கினீர்கள், இன்னும் பிரதமர் அவர்களும் வந்தபோது வாக்குறுதி வழங்கினார், எனவே அதனை செய்து தாருங்கள்” என கேட்டுக்கொண்ட போது,

அங்கே இருந்த சுகாதார அமைச்சரை ஜனாதிபதி அவர்கள் அழைத்து “இன்னும் 6 மாதங்களுக்குள் புத்தளம் தல வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை உடனடியாக செய்யுங்கள் என உத்தரவிட்ட போது, இல்லை என ஏதோ காரணம் சொல்ல சுகாதார அமைச்சர் முற்பட்ட போது, எதுவும் சொல்லாமல் 6மாதங்களுக்குள் இது நடக்க வேண்டும், நிதி போதாவிட்டால் சொல்லுங்கள் அதனை நான் தருகின்றேன் எனவும் ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

எனவே ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இன்றைய பாராளுமன்ற உரையின் மூலமும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களின் தொடர் முயற்சிகளாலும் புத்தளம் தல வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

Address

169/4 A Mathavan Road Kalmunai 03
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

Share