Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!08/06/2026
08/06/2026

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
08/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  சமகால அரசியல் சதுரங்கமும் ஹிஸ்புல்லாஹ் என்னும் அசைக்க முடியாத சக்தியும்: ஒரு விரிவான அரசிய...
07/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 சமகால அரசியல் சதுரங்கமும் ஹிஸ்புல்லாஹ் என்னும் அசைக்க முடியாத சக்தியும்: ஒரு விரிவான அரசியல் பகுப்பாய்வு..!

✍️ எஸ்.கே

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஆளுமை
இலங்கை அரசியலில், குறிப்பாக கிழக்கு மாகாண மற்றும் சிறுபான்மையின அரசியலில் தசாப்தங்களாக தவிர்க்க முடியாத ஒரு பெரும் சக்தியாக விளங்குபவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ். அண்மையில் அவர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் எழுப்பிய குரல் மற்றும் அவருடைய கருத்துக்கள் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அவரது அரசியல் முதிர்ச்சியை கேலி செய்யும் நோக்கில் எதிரணியினரால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், உண்மையில் அவரது ஆழமான அரசியல் உத்திகளையும் தூரநோக்கையும் புரிந்து கொள்ளாததன் விளைவே ஆகும்.

1. எதிரணியினரின் நக்கல்: அரசியல் முதிர்ச்சியின்மையா, அச்சமா?

ஹிஸ்புல்லாஹ்வின் அண்மைக்கால நகர்வுகளை "முறைகேடானது" அல்லது "அரசியல் முதிர்ச்சியற்றது" என்று சமூக ஊடகங்களில் எதிரணியினர் நையாண்டி செய்து வருகின்றனர். ஆனால், அரசியல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது அவர்களின் அரசியல் பலவீனத்தையும் அச்சத்தையுமே காட்டுகிறது.
மரபுரீதியான, தேக்கமடைந்த அரசியல் பாணிகளுக்கு பழகிப்போன சில்லறை விமர்சகர்களால் ஹிஸ்புல்லாஹ்வின் அதிரடி மற்றும் யதார்த்த அரசியல் (Realpolitik) நகர்வுகளை ஜீரணிக்க முடிவதில்லை. சமகால அரசியல் சூழலில், ஒரு தலைவர் எவ்வாறு தனக்கான பேசுபொருளை (Agenda) தானே உருவாக்க வேண்டும் என்பதற்கு ஹிஸ்புல்லாஹ்வின் இந்த நகர்வு ஒரு சிறந்த உதாரணம். விமர்சிப்பவர்கள் தங்களை "அறிவாளிகள்" கான்பித்துக் கொள்ள முயன்றாலும், உண்மையில் அவர்கள் ஹிஸ்புல்லாஹ் உருவாக்கிய அரசியல் அலைக்குள் அறியாமலேயே சிக்கிக்கொண்ட முட்டாள்களாகவே அடையாளப்படுகிறார்கள்.

2. Gen Z தலைமுறையை கவரும் நவீன அரசியல் வியூகம்
இன்றைய அரசியல் களம் மாறிவிட்டது.

குறிப்பாக Gen Z (ஜென்-இசட்) என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையினர் பாரம்பரிய, சலிப்பூட்டும் மேடைப் பேச்சுக்களை விரும்புவதில்லை. அவர்களுக்குத் தேவை துணிச்சல், தனித்துவமான ஆளுமை மற்றும் சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் (Viral) தன்மையுள்ள தலைவர்கள்.

• துணிச்சலான குரல்:

ஹிஸ்புல்லாஹ்வின் அண்மைக்கால அதிரடிப் போக்கு, புதிய தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

• டிஜிட்டல் ஆதிக்கம்:

சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் கூட, அவரைப் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விளம்பரமாகவே (PR) மாறுகிறது.

• அசைக்க முடியாத பிம்பம்:

எதற்கும் அஞ்சாமல், தனது தரப்பு நியாயத்தை ஆணித்தரமாகப் பேசும் அவரது பாணி, புதிய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அவரை ஒரு "Mass Leader" ஆக நிலைநிறுத்தியுள்ளது.

3. சர்வதேசத் தலைவர்களுடனான ஒப்பீடு:

துருக்கியின் தையிப் எர்டோகன்
ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பாணியை, சமகால சர்வதேச அரசியலின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) அவர்களின் அரசியல் நகர்வுகளுடன் ஒப்பிடலாம்.

• சவால்களை எதிர்கொள்ளல் சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்களை தனது தனித்துவமான ஆளுமையால் முறியடித்தல், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பலத்த எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கடந்து அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர்.

• மரபுவழி ஊடகங்களைத் தாண்டி, நேரடியாக அடித்தட்டு மக்களுடனும் இளைஞர்களுடனும் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பவர், சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் மூலம் Gen Z தலைமுறை வரை தனது செல்வாக்கை
விரிவுபடுத்தியவர்.

• பல்கலைக்கழகங்கள், சமூகக் கட்டமைப்புகள் மூலம் நீண்டகால சமூக மாற்றத்தை உருவாக்கியவர், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனங்களை உருவாக்கி, சமூகத்தின் எதிர்கால அடித்தளத்தை பலப்படுத்தியவர்.

எர்டோகனைப் போலவே, ஹிஸ்புல்லாஹ்வும் விமர்சனங்களை தனக்கு சாதகமான அரசியல் மூலதனமாக மாற்றுவதில் வல்லவர். எதிரிகள் எவ்வளவுதான் சேற்றை வாரி இறைத்தாலும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வித்தையை அவர் நன்கு அறிவார்.

4. ஹிஸ்புல்லாஹ்வின் நகர்வுகள் ஏன் சரி?

அரசியலில் இறுதி வெற்றி என்பது மக்களின் ஆதரவிலும், அதிகாரத்தை தக்கவைப்பதிலுமே தங்கியுள்ளது. ஹிஸ்புல்லாஹ்வின் தற்போதைய நகர்வுகள் தற்காலிகமான விமர்சனங்களை உருவாக்கினாலும், அவை நீண்டகால அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டவை:

1. பிராந்திய செல்வாக்கை உறுதிப்படுத்தல்:

கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் தனித்துவமான அடையாளத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதில்லை.

2. விமர்சகர்களின் அறியாமை:

அவரை விமர்சிக்கும் சில்லறை அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவர்கள், அரசியல் சதுரங்கத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை கணிக்கத் தெரிந்தவர்கள் அல்லர். அவர்கள் வெறும் தற்காலிக சலசலப்புகளை மட்டுமே நம்பியிருக்கும் முட்டாள்கள் என்பதை ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் சாணக்கியம் மீண்டும் நிரூபித்துள்ளது.

அசைக்க முடியாத பேரியக்கம்
விமர்சனங்கள் என்பவை ஆலவிருட்சத்தின் மீது வீசப்படும் கற்களைப் போன்றவை. கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் என்ற அரசியல் ஆளுமை, அத்தகைய கற்களால் வீழ்த்தப்பட முடியாத ஒரு அசைக்க முடியாத சக்தி. எதிரணியினரின் நையாண்டிகளும், சில்லறை விமர்சகர்களின் கூச்சல்களும் காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், புதிய தலைமுறையின் ஆதரவோடும், சர்வதேசத் தலைவர்களின் துணிச்சலோடும் ஹிஸ்புல்லாஹ் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகள், பிராந்திய அரசியலில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

🌎 www.mihrajnews.com

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!07/06/2026
07/06/2026

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
07/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉 ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பணி சம்மாந...
06/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பணி சம்மாந்துறையில் இருந்து ஆரம்பம்..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………..

✅👉 “ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி” என்ற தொனிப்பொருளின் கீழ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புனர்நிர்மாணம் மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முதற்கட்ட கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை கருவாட்டுக்கல்-03 கிராம சேவகர் பிரிவல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்பக் கூட்டத்தில், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.சி.எம்.நயீம், ஏ.எச்.எம்.காலித், வை.எல்.பசீர், மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினரான எம்.ரீ.எம்.லாபிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கட்சியின் புனர்நிர்மாணப் பயணத்தை சம்மாந்துறையில் இருந்து ஆரம்பிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமையும் என கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும், கட்சியின் அமைப்பை கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை பலப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால அரசியல் பயணத்திற்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகின்றது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  நீதித்துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார் சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம்..!✍️  நூரு...
06/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 நீதித்துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார் சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம்..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………….

✅👉 சட்டத் துறையில் தனது கல்வி மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பின் மூலம் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வந்த சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், அண்மையில் நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.

கௌரவ எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், எம்.எல்.எம். நசீர் மற்றும் சித்தி மர்லியா ஆகியோரின் புதல்வராவார். இவர் மாவனல்லை தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராக இருந்து தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

சட்டத் துறையில் உயர்ந்த இலக்குடன் பயணித்த அவர், 2017 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து வழக்கறிஞராகத் தகுதி பெற்றார். அதன் பின்னர் மாவனல்லை, கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் சம்மாந்துறை, அம்பாறை பிரதேசங்களிலும் பணியாற்றி சட்டத் துறையில் பெறுமதிமிக்க அனுபவங்களைப் பெற்றார்.

தற்போது சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த அவர், தனது தொழில்முறைப் பணிகளுடன் கல்விப் பயணத்தையும் தொடர்ந்தார். அதன் பயனாக, ஐக்கிய இராச்சியத்தின் Buckinghamshire New University பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமானி (LL.M.) பட்டத்தைப் பெற்று தனது கல்வித் தகைமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இவர் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை கொண்டவராவார்

இவர் சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி திருமதி யூ.எல். ஷிபானா அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, சம்மாந்துறை சட்டத்தரணி சங்கத்தில் தனது சட்டப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். தற்போது நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளமை அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, கல்விச் சாதனை மற்றும் தொழில்முறை நேர்மைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

அவரது இந்த மகத்தான சாதனையை முன்னிட்டு சட்டத்தரணிகள், நீதித்துறை சார்ந்தவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திலிந்து நீதித்துறை அதிகாரியாக தெரிவான இரண்டாமவர் எனும் பெருமையை இவர் பெறுகிறார்.

சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தச் சாதனை, அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பயணிக்கும் போது உயரிய இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தி ...
06/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பாக ரஹ்மத் மன்சூருடன் முக்கிய சந்திப்பு..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………

✅👉 கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களை இன்று அவரது காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது, பள்ளிவாசலை நவீன வசதிகளுடன் கூடிய அழகிய கட்டிடமாக அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், கட்டிட நிர்மாணத் திட்டத்தின் வரைபடம் மற்றும் தேவைகள் அடங்கிய மகஜர் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட அவர், திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து கேட்டறிந்ததுடன், பள்ளிவாசலின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பாகவும் தனது கவனத்தை செலுத்தினார்.

இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவருமான ஏ. எம். பஷீர் அவர்கள், பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சமூகத்தின் ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வபிவிருத்தித் திட்டம், எதிர்காலத்தில் பள்ளிவாசலின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  உலக சுற்றாடல் தின நிகழ்வு..!𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…….✅👉  உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளீன் சி...
06/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 உலக சுற்றாடல் தின நிகழ்வு..!

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…….

✅👉 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2026.06.05ம் திகதி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. M. S. சஹுதுல் நஜிம் அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபீர் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக பயனுள்ள விளக்கங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும் எமது பாடசாலையில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு பொறுப்பான இணைப்பாளர்களான திரு. A.R. பைரோஸ் கான் திரு.H.M.M நிஸ்பான் ஆகியோர் இந்நிகழ்வை சிறப்பாக வடிவமைத்து திறன் பட நடாத்தி வைத்தனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கல்முனை மாணவனுக்கு இரண்டாம் இடம் :  12 நாடுகள் பங்...
05/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கல்முனை மாணவனுக்கு இரண்டாம் இடம் : 12 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சாதனை..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……

✅👉 மலேசியாவின் ஹென்டிங் (Genting) நகரில் நேற்று (04) நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கல்முனை மாணவன் முஹம்மட் அனாகித் அம்றி இரண்டு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இச்சர்வதேச போட்டியில், சாய்ந்தமருதில் இயங்கி வரும் தாருல் இல்மு கல்வி நிலையத்தின் ஐகம் அபாகஸ் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முஹம்மட் ஹனீஸ் முஹம்மட் அனாகித் அம்றி (Level-1) தனது திறமையை வெளிப்படுத்தி இந்த சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

கல்முனை – 05, டாக்டர் ரிஸ்வி வீதியைச் சேர்ந்த எம்.எச். முஹம்மட் ஹனீஸ் மற்றும் ஏ.எம். பாத்திமா இன்ஸிரா தம்பதியினரின் புதல்வரான இம்மாணவர், குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச மட்டத்தில் தனது கணிதத் திறனையும் மனக்கணக்குத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

இந்த வெற்றி இலங்கைக்கும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகப் பாராட்டப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர்களின் அறிவாற்றலையும் போட்டித்திறனையும் வெளிப்படுத்தியுள்ள இச்சாதனை, இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக தாருல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வழங்கி வரும் பங்களிப்பு கல்வித்துறையில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  இனவாத அரசியலுக்கு நான் ஒருபோதும் ஆதரவாளன் அல்ல : பேச்சுவார்த்தைக்கே அழைப்பு விடுத்தேன் -: ...
05/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 இனவாத அரசியலுக்கு நான் ஒருபோதும் ஆதரவாளன் அல்ல : பேச்சுவார்த்தைக்கே அழைப்பு விடுத்தேன் -: கலையரசனுக்கு ஹரீஸ் பதில்..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……….

✅👉 அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசு அவர்கள் நான் கூறிய விடயங்களை பிழையாக விளங்கி சில கருத்துக்களை கூறியுள்ளார். தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை விரும்பும் மக்கள் அவருடைய கருத்தினால் வேதனைப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். உண்மையில் கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக எம்.ஏ சுமந்திரன் அவர்களிடம் வேண்டியிருந்தேன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இந்த உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சமாதானமான ஒரு தீர்வை எட்டவேண்டும். தமிழ்- முஸ்லிம் மக்கள் எல்லையுடனான ஒரு நிர்வாக அலகை பெறவேண்டும் என்பது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் இதைத்தான் பேச்சுவார்த்தை ஊடாக செய்யுங்கள் என்று வேண்டியுள்ளேன் என உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து அங்கு பேசிய அவர்,

இதை வலியுறுத்தித்தான் நான் எனது கருத்துக்களையும் அது சார்ந்த விடயங்களையும் கூறினேன். அதே நேரம் கல்முனைத் தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி நிதன்சன் அவர்களும். என் மீது சில வினாக்களைத் தொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை. நடைபெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வர இருந்ததாகவும், நான்தான் அந்தத் தீர்வு எட்டுவதற்குத் தடையாக இருந்தேன் என்ற ஒரு அபாண்டத்தை தெரிவித்திருக்கின்றார்.

இந்த பேச்சுவார்த்தைகள் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் அவரது அமைச்சிலும் இன்னும் சில இடங்களிலும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது, அதில் தமிழ்த் தரப்பிலிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர்களாக இருந்த ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்களுடன் தற்போதைய பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எம்.பிக்களும், முஸ்லிம் தரப்பிலிருந்து ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் நான் உட்பட அரசியல் முஸ்லிம் பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டோம்.

அந்தப் பேச்சுவார்த்தையில் எல்லோரும் சாட்சியாக இருக்கின்றார்கள் எந்தத் தீர்வும் முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் எட்டவில்லை. கடைசியில் "வெண்ணை திரண்டு வரும்போது தாலி உடைந்த சம்பவம்" எதுவும் என்னால் அங்கு நடைபெறவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம். எந்த இணக்கப்பாட்டுக்கும் வராத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

அதன் பின்பு. ஈஸ்டர் குண்டு தாக்குதல் பின்பு கல்முனை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து கொழும்பில் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் இதே தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையிலான இதே சுமந்திரன், மாவை போன்ற தலைவர்களும் கோடீஸ்வரன் எம்.பி உட்பட பல தமிழ் பிரதிநிதிகளும் அதே நேரம் முஸ்லிம் தரப்பில் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள நிஸாம் காரியப்பர் உட்பட நாங்களும் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை.

அந்த இடத்தில் என்னால் தான் தீர்வு தடைப்பட்டது என்று யாரும் கூறவுமில்லை, கூறவும் முடியாது. அங்கு ஒரு சாத்தியமான தீர்வை எட்டுவதற்கு முடியாமல் போய்விட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பை சார்ந்த ஒருவரோ அல்லது சுமந்திரன் போன்ற யாரோ ஒருவர் வந்து கூற வேண்டும் நாங்கள் கலந்து கொண்ட எல்லா முஸ்லிம் தலைவர்களும் தீர்வுக்கு ஒத்துக்கொண்டாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசால் தான் தீர்வு எட்டப்பட முடியாமல் போகி விட்டது என்று. என்ன தீர்வு எட்டப்பட்டது என்பதையும் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தான் இரண்டு விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே வெறுமனே தமிழ் முஸ்லிம் உறவு மேம்பட்டு வருகின்ற நேரத்தில் எங்களை நோக்கி வீணான தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரம் உங்களுடைய வார்த்தைகள் சில இடங்களில் வரம்பு மீறியதாக இருப்பது கவலை அளிக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசுகின்ற முன்னாள் எம்.பி கலையரசன் அவர்களையோ அல்லது கவீந்திரன் கோடிஸ்வரன் எம்.பி அவர்களையோ அல்லது எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் எம்.பி போன்றவர்களையோ இதுவரையும் நாங்கள் பொதுவெளியில் இவர்கள் இனவாதிகள் என்று நாங்கள் கூறுவதில்லை. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயத்தைப் பேசுகிறார்கள் என்ற ஒரு புரிந்துணர்வு எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் எடுத்தவுடன் எங்களை. நோக்கி கடும் சொற்றொடர்களைப் பாவித்து கருத்துக்களை வெளியிடுவது வேதனையான விடயம்.

முக்கியமாக நான் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசியதாக முன்னாள் எம்.பி தவராசா கலையரசன் அவர்கள் கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய்யாகும். நான் எங்கும் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசி கருத்துக்களை வெளியிடவில்லை. தமிழ்- முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முஸ்லிம், தமிழ் சிவில் சமூகங்களை பேச்சுவார்த்தைக்கே நான் அழைத்திருந்தேன். இதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.

முன்னாள் எம்.பி கலையரசன் மற்றும் சட்டத்தரணி நிஷான்சன் போன்றோர்களிடம் நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் நீங்களே சொல்லிவிட்டீர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக நான் இருந்தேன் என்று. இது முஸ்லிம் சமூகத்திலும் பிழையான அர்த்தங்களை கொடுக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக இது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதற்கப்பால் உடனடியாக நீங்கள் உண்மையில் ஒரு தீர்வினையோ இரு சமூகங்களின் சமாதானத்தையோ விரும்புகின்ற தரப்பு என்றால், இதுவரை நான் குறுக்கே நின்றேன் என்று சொல்வதால் நான் இப்போது ஒரு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி இல்லாத இந்த சூழ்நிலையில், இப்பொழுது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, குறிப்பாக தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தமிழ் தரப்பின் குழுவும் அதே போன்று முஸ்லிம் தரப்பில் உள்ள கல்முனை தொகுதி பிரதிநிதி நிஸாம் காரியப்பர் மற்றும் ஏனைய அவர்களுடைய முக்கியஸ்தர்களை வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தலாம். இது உங்களுக்கு ஒரு தெரிவாக இருக்கிறது.

இரண்டாவது தெரிவாக நேரடியாக கல்முனை தமிழ் சிவில் சமூகமும் கல்முனை முஸ்லிம் சிவில் சமூகமும் அதாவது தமிழ் சிவில் சமூகத்தில் கோயில் தர்மகர்த்தாக்கள், புத்திஜீவிக் கொண்ட ஒரு குழுவும், முஸ்லிம் சிவில் சமூகத்தில் பள்ளிவாசல் பிரதிநிதிகள், புத்திஜீவிகளைக் கொண்ட குழுவும் நிரந்தர தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதில் நீங்கள் என்னை நோக்கி குற்றம் சாட்டி இருப்பதால் நான் இந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இருந்து ஆர்க்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்படுத்துமாறும் வேண்டுகிறேன். கல்முனை நகரில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு நிர்வாக சிக்கல் இருப்பது வெளிப்படை உண்மை இதனை கவனத்தில் கொண்டே எனது ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சி பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்காகவே அழைப்பு விடுத்திருந்தேன். எந்த அழைப்பை எங்களின் நல்லண்ணமாக கொண்டு இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதனை கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

🌎 www.mihrajnews.com

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  உலக சுற்றுச்சூழல் தினம்: சவூதி அரேபியா சுற்றுச்சூழல் சுற்றுச் சூழலுக்கான அர்ப்பணிப்பு முதற...
05/06/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 உலக சுற்றுச்சூழல் தினம்: சவூதி அரேபியா சுற்றுச்சூழல் சுற்றுச் சூழலுக்கான அர்ப்பணிப்பு முதற் கொண்டு உலகளாவிய தலைமைத்துவம் வரை..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……..

✅👉 எழுதியவர்: இலங்கைக் குடியரசிற்கான இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி மன்னரின் தூதர், காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

✅👉 சுற்றுச்சூழல் சவால்கள் அதிகரித்து, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தீவிரமடைந்து வரும் உலகில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது இனி ஒரு வளர்ச்சித் தேர்வாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த விஷயமாகவோ இல்லை. மாறாக, அது நாடுகளின் வெற்றியையும், எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் அவற்றின் திறனையும் அளவிடும் ஒரு முக்கிய அளவுகோலாக மாறியுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில், உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டமானது, பூமிக் கோளின் மீதான நமது கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வின் நிலைத்தன்மையையும் அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் வலுப்படுத்துகிறது.

சவூதி அரேபியாவில், இந்தப் பொறுப்பானது, இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பிரதமரான மாண்புமிகு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் ஆகியோரால் வழிநடத்தப்படும் ஒரு தொலைநோக்கு மூலோபாயப் பார்வையிலிருந்து உருவாகிறது. இவர்கள், 'விஷன் 2030'-இன் கீழ் சவூதி அரேபியாவின் தேசிய மாற்றத் திட்டத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கியுள்ளனர்.

உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை அடைவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் இடையிலும், நிகழ்காலத் தேவைகளுக்கும் எதிர்காலத் தலைமுறையினரின் உரிமைகளுக்கும் இடையிலும் ஒரு நிலையான சமநிலையை உருவாக்குவதில்தான் தங்கியுள்ளது என்பதை சவூதி தலைமை அங்கீகரித்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதும் தேசத்தின் மற்றும் உலகின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீட்டைக் குறிக்கிறது என்றும், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகள் மற்றும் பரந்த சர்வதேச கூட்டாண்மைகள் தேவை என்றும் மாண்புமிகு பட்டத்து இளவரசரின் பார்வை உறுதிப்படுத்துகிறது.

இந்தப் பார்வையின் அடிப்படையில், மாண்புமிகு பட்டத்து இளவரசர் "பசுமை சவூதி அரேபியா" (SGI) மற்றும் "பசுமை மத்திய கிழக்கு" (MGI) ஆகிய முன்னெடுப்புகளைத் தொடங்கினார். இவை தேசிய மற்றும் பிராந்திய அளவிலான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஒரு தரமான பாய்ச்சலைக் குறிக்கின்றன. "பசுமை சவூதி அரேபியா" முன்னெடுப்பானது, உமிழ்வுகளைக் குறைத்தல், தூய்மையான தூய சக்தி வளத்தைச் சார்ந்திருப்பதை அதிகரித்தல், பல்லுயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்தல், சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சிகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவியது. "பசுமை மத்திய கிழக்கு" முன்னெடுப்பானது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குப் புவியியல் எல்லைகள் இல்லை என்பதையும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பதையும் பற்றிய சவூதி அரேபியாவின் நம்பிக்கையை உள்ளடக்கியுள்ளது.

சவூதி அரேபியாவின் முயற்சிகள், முன்னெடுப்புகளைத் தொடங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், இப்பிராந்தியத்திலேயே மிகவும் மேம்பட்ட ஒன்றாகத் திகழும் ஒரு விரிவான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது வரையிலும் விரிவடைந்துள்ளன. சுற்றுச்சூழல் இணக்கக் கண்காணிப்பு, தாவர வளர்ச்சி மற்றும் பாலைவனமாதலைத் தடுத்தல், வனவிலங்கு மேம்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற தேசிய மையங்கள், சுற்றுச்சூழல் நிதியத்துடன் சேர்த்து நிறுவப்பட்டன. இது, சவூதி அரேபியாவில் சுற்றுச்சூழல் பணிகள் துண்டு துண்டான திட்டங்களிலிருந்து ஆளுகை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த மூலோபாய அமைப்பாக மாறியிருப்பதைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், நிலையான வளர்ச்சியை அடைவதற்குப் புத்தாக்கமே திறவுகோல் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், சவூதி அரேபியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், வட்ட கார்பன் பொருளாதாரம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்களில் தனது முதலீடுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தியது. இந்த அணுகுமுறை, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் சமச்சீரான தீர்வுகளை உருவாக்குவதில், சவூதி அரேபியாவை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதற்குப் பங்களித்துள்ளது.

சர்வதேச அளவில், உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திட்டத்தை வடிவமைப்பதில் சவூதி அரேபியா ஒரு செல்வாக்குமிக்க பங்காளியாக உருவெடுத்துள்ளது. காலநிலை மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடுகளில் சவூதி அரேபியா தீவிரமாகப் பங்கேற்றுள்ளதுடன், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த சர்வதேச உரையாடலை வலுப்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது. காலநிலை சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச கட்டமைப்புகளை உருவாக்குவதில் சவூதி அரேபியாவின் சிந்தனைகள் வெற்றி பெற்றதற்கான ஒரு முன்மாதிரியாக, 2020-ல் சவூதி அரேபியா ஜி20 குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தபோது, அக்குழு வட்ட வடிவ கார்பன் பொருளாதாரக் கருத்தை ஏற்றுக்கொண்டது அமைந்தது.

இந்த முயற்சிகளின் உச்சகட்டமாக, பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 16-வது அமர்வை (COP16) சவூதி அரேபிய தலை நகரம் ரியாத் நடத்தியது. இது சர்வதேச சுற்றுச்சூழல் நடவடிக்கை அமைப்பில் சவூதி அரேபியாவின் முக்கிய நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். சீரழிந்த நிலங்களை மீட்டெடுத்தல், பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுதல், மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனை மேம்படுத்துதல் போன்ற உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக, இந்த மாநாடு அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், வல்லுநர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய தளத்தை வழங்கியது.

சுற்றுச்சூழல் துறையில் இன்றைய சவூதி அனுபவம், தெளிவான அரசியல் தொலைநோக்கு, செயல்திறன் மிக்க நிர்வாக உறுதி, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனப் பணிகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுக்கான திறந்த மனப்பான்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான முன்மாதிரியாக விளங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வளர்ச்சிக்கு ஒரு சுமையல்ல, மாறாக அதுவே அதன் அடிப்படை உந்துசக்தி என்பதையும், இயற்கையில் முதலீடு செய்வது என்பது மனிதகுலத்திலும் சமூகங்களின் எதிர்காலத்திலும் செய்யப்படும் முதலீடு என்பதையும் இந்த அனுபவம் உறுதிப்படுத்துகிறது.

இந்த உலகளாவிய தருணத்தில், சவூதி அரேபியா, தான் சாதித்தவற்றைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நம்பி, உலகெங்கிலும் உள்ள தனது பங்காளிகளுடன் இணைந்து முடியுமான அனைத்தையும் சாதிப்பதற்கு எதிர் பார்க்கிறது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

Address

169/4 A Mathavan Road Kalmunai 03
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

Share