Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 "Green Which Red Day" 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇✅👉  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசா...
27/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 "Green Which Red Day"

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையின் ஒரு பகுதியாக இயங்கி வரும் கிரீன்விச் பாலர் பாலசாலையின் "Red Day" நிகழ்வு 2025.06.26ம் திகதி இடம் பெற்றது.

மேலும் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம் றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்று இந் நிகழ்வில் கல்முனை வலய பாலர் பாடசாலைப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் அஷ்ஷேய்ஹ்: ஐ.எல். முகம்மட் அனீஸ்
அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது மாணவர்களின் சிவப்பு நிறத்திலான அலங்காரங்களும் மற்றும் உணவு பண்டங்களும் தயாரிக்கப்பட்டு மாணவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!27/06/2025
27/06/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
27/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  இஸ்லாமிய புதுவருட வாழ்த்துச் செய்தி..!✍️  ஏ.எஸ்.எம்.அர்ஹம் 𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇✅👉  🌙 "முஹர்ரம்...
26/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 இஸ்லாமிய புதுவருட வாழ்த்துச் செய்தி..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 🌙 "முஹர்ரம் – அது காலத்தின் ஆரம்பமல்ல, நெஞ்சத்தின் விழிப்புணர்வு.
இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் தியாகம்,
நம் வாழ்வில் உண்மை, நீதி, ஈமான் என்ற மூன்றையும் ஊன்றட்டும்.
1447 ஹிஜ்ரி புத்தாண்டு,
நம் உள்ளங்களில் ஒளியையும்,
நம் வாழ்வில் அமைதியையும் பரப்பட்டும்."

🕊️ இனிய ஹிஜ்ரி 1447 இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

என்றும் உங்கள்
ரஹ்மத் மன்சூர்
ஸ்தாபகர், ரஹ்மத் பவுண்டேசன் – கல்முனை

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!26/06/2025
26/06/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
26/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 "Solar" சூரிய சக்தி படலம் ஏறாவூர் மட்/ அறபா வித்தியாலயத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டத...
25/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 "Solar" சூரிய சக்தி படலம் ஏறாவூர் மட்/ அறபா வித்தியாலயத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது..!

✍️ ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்

✅👉 2003ஆம் ஆண்டு எமது பாடசாலையில் தரம் ஒன்பதில் கற்று வெளியாகி பழைய மாணவர்களின் முயற்சியால் பாடசாலைக்கு மிகவும் சவாலாக அமைந்த மின் கட்டண செலவை நிவர்த்திக்கும் பொருட்டு "Solar" சூரிய சக்தி மின் இணைப்பு பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றது.

பாடசாலை முதல்வரின் வேண்டுகோளின் பேரில் 2003 ஆம் ஆண்டு பழைய மாணவராகிய ASM.Suath அவர்களின் முயற்சியினால் ஐக்கிய அரபு ராட்சியத்தின் தணவந்தர்களான அஷ்ஷெய்ஹ் யூசுப் அல்தமீமி, அஷ்ஷெய்ஹ் ஹமாத் அல் ஆமிரி, அஷ்ஷெய்ஹ் பலாஹ் அல் ஆமிரி ஆகியோரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

பாடசாலைக்கு அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற இச் சோளர் மின் இணைப்பிணை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலயின் முதல்வர் ஜனாப். ML.பதியுதீன் சேர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இப் பாடசாலையின் EPSI இணைப்பாளரும் ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளருமான ஜனாப். A. றியாஸ் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஜனாப். MHM. ஜவாத், பதியுத்தீன் வித்தியாலயத்தின் சிரேஷ்ட ஆசிரியர் ஜனாப். MB. நஸீப் அலாம், மிச்நகர் இல்மா வித்தியாலய அதிபர் ஜனாப். HM. முஹிஜிர், தாமரைக் கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலய அதிபர். ALM. நௌபீ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சோளர் மின் இணைப்பு
2003 பழைய மாணவர்களினால் பாடசாலையின் அதிபர் அவர்களிடம் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நன்கொடையை வழங்கிய தனவந்தர்களுக்காவும், இதனை பெற்றுத் தருவதற்கு துணையாக நின்ற பழைய மாணவர்களுக்காவும் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் மௌலவி ULM. ஹம்சா அவர்களினால் துஆப் பிராத்தணையும் இடம் பெற்றது.

அதிபர் அவர்களின் தலைமை உரையும் பழைய மாணவர்கள் சார்பாக மாவட்டப் பதிவாளர் ஜனாப். AMM.நபீஸ் அவர்களின் அறிமுக உரையும், பிரதம அதிதியின் விஷேட உரையும் இடம் பெற்றது.

அத்துடன் இந்நிகழ்வினை மேலும் சிறப்புற வைப்பதற்காக
தரம் 2 மாணவிகளின் கலை நிகழச்சி வகுப்பாசிரியர் திருமதி.நுஸ்ரத் ஜஹானி அவர்களின் வழிகாட்டலில் அனைவரினதும் பாராட்டுக்கள் கிடைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஜனாப். MIM. றிஸ்வான் அவர்களின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.

தணவந்தர்களுக்கான நினைவுச் சின்னமும் அதிபர் ஆசிரியர், பாடசாலையின் அபிவிருத்தி நிறை வேற்றுக் குழு உறுப்பினர் ஆகியோரால் பாடசாலையின் 2003 பழைய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  உலகிற்கே முன்னுதாரணமாக திகழும் மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள்..!✍️ எஸ். சினீஸ் கான் ...
25/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 உலகிற்கே முன்னுதாரணமாக திகழும் மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள்..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 சவூதி அரேபியாவின் மன்னரும், இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் விளங்கும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டிவரும் மனிதபிமானம், மனித நேயம், சகோதரத்துவம் மிகுந்த தலைவராகவும் திகழ்கிறார்.

மன்னர் சல்மான், 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் மன்னராக பொறுப்பேற்றதிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புற்ற மக்களுக்கு உதவுவதிலும், உலக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர் ஆற்றிவரும் நற்பணி உலக மக்களால் புகழப்படுட்டுக் கொண்டிருக்கிறது.
இயற்கை அனர்த்தங்கள் உட்பட உலகில் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும், சவூதி அரசாங்கம், மன்னர் சல்மானின் வழிகாட்டுதலின் கீழ், உடனடியாக நிவாரண உதவிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

மன்னர் சல்மானுடைய மனிதாபிமானப் பணியின் முக்கிய அமைப்பாக "மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் " (King Salman Humanitarian Aid and Relief Centre – KSRelief) இயங்கிவருகிறது.

இவ்வமைப்பானது உலக நாடுகளின் நம்பிக்கையின் மையமாக இன்று மாறியுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், பேரழிவுகள், பசி, பட்டிணி, வறுமை, என எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதர்களுக்குத் தேவையான உதவிகளை மிகச் சிறப்பாக வழங்கிவரும் அமைப்பாக இது காணப்படுகிறது.

இவ் அமைப்பானது மக்கள் மத்தியில் ஊட்டச்சத்துப் குறைபாட்டை தவிர்க்க உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல், வறுமை ஒழிப்பிற்காக உணவு பொருட்கள் விநியோகம், அகதிகளுக்கான தங்குமிடம், உணவு, மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை எமன், பலஸ்தீன், சிரியா, துருக்கி, ஸ்ரீலங்கா போன்ற 100 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இவ்வமைப்பு செய்துவருகிறது.

2015 இல் நிறுவப்பட்டதிலிருந்து, KSrelief 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,100க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது, இதற்கான மொத்த பங்களிப்பு சுமார் $7.1 பில்லியன் ஆகும்.

அவ்வாறு, 1996–2024 காலப்பகுதிக்குள் சவூதி அரேபியா இதுவரையில் 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான உதவியாக $130 பில்லியனுக்கும் மேற்பட்ட உதவிகளையும் வழங்கியுள்ளது எனலாம்.

இவை அனைத்தும் சவூதி அரேபியாவினுடையதும் மன்னனுடையதும் மனிதநேயம் சார்ந்த தாராள பண்புகளின் வெளிப்பாடுகளே.
உலகம் முழுவதும் பாராட்டப்படும்
மன்னர் சல்மானின் சேவைகளை ஐநா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன.

அவரது பணிகள் உலக மனிதநேயம் வளர்ச்சிக்கும் மிகுந்த பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் சவூதி அரேபியா உலகில் மனிதநேயமிக்க நாடாக அனைவராலும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள் உலகுக்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

🌎 www.mihrajnews.com

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெ...
25/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (25) மாலை நடைபெற்றது.

திறந்த முறையில் நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனும், தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணியும் போட்டியிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் சார்பாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணிக்கு அதே கட்சியை சேர்ந்த எஸ். சுலட்சனா வாக்களித்தார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர் முன்மொழியப்பட்டிருந்தும் கூட அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஏ. பர்ஹாம் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

உப தவிசாளராக காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் மாளிகைக்காட்டை சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயிலை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்தனர். போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக எம்.எச்.எம். இஸ்மாயிலை உப தவிசாளராக அறிவிக்கப்பட்டர். இந்த அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. தாஹீர், எம்.எஸ். உதுமா லெப்பை, கே.கோடிஸ்வரன் உட்பட பிரமுகர்கள் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!25/06/2025
25/06/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
25/06/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!22/06/2025 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
22/06/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
22/06/2025 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰ஜனாஸா அறிவித்தல்.ஏறாவூர் தாமரைக்கேணி தக்வா பள்ளி வீதியில் வசித்து வந்த இஸ்மாலெப்பை சவிரித்த...
22/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

ஜனாஸா அறிவித்தல்.

ஏறாவூர் தாமரைக்கேணி தக்வா பள்ளி வீதியில் வசித்து வந்த இஸ்மாலெப்பை சவிரித்தும்மா
என்று அழைக்கப்படும் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

( ஊடகவியலாளர் சாதிக் அகமட்( தாய்ஆவார் )

அன்னார் மர்கூம் அகமது என்பவரின் அன்பு மனைவியும், நவாஸ் றாகிம் ஹுசைன் சாதிக் மகன் ஆவார்கள்

மகள் பூமா றிஸானா என்பவரின் அன்பு தாயாரும்.
றாசிட் லாபிர் மாகத்
றகுமாத்தும்மா ஜெமிலம்மா தங்கம்மா
என்று அழைக்கப்படும சகோதரியும்.மறுமாகண்
பாருக் நாசிர் ஆவார்கள்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று காலை 9.00 AM மணிக்கு
வாலிப்பா தைக்க மையவாடியில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல்.. சாதிக் அகமட்

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் ஒலுவில் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு...
20/06/2025

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் ஒலுவில் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு..!

✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 ஒலுவில் பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் தமக்கு பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இப் பொதுக்கிணற்றினை அமைத்து பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைத்தார்.

இதன்போது பயனாளிகளுடன், முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள், நலன்வி்ரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!20/06/2025 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
20/06/2025

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
20/06/2025 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

Address

169/4 A Mathavan Road Kalmunai 03
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

Share