Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் பாலமுனையில் பொதுக்கிணறு திறந்துவைப்பு…!✍️  எம்.சி.எம...
10/08/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் பாலமுனையில் பொதுக்கிணறு திறந்துவைப்பு…!

✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………

✅👉 பாலமுனை பிரதேசத்தில் குடிநீர் வசதியின்றி நீண்டகாலமாக கடுமையான சிரமங்களை எதிர்கொண்ட பல குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் புதிய பொதுக்கிணறு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்தத் திட்டம் மிகவும் குறுகிய காலத்திலேயே திட்டமிடப்பட்டு திறம்பட நிறைவேற்றப்பட்டது.

பொதுக்கிணறு திறப்பு நிகழ்வில் உலமாக்கள், பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், பிரதேச மக்களின் அன்றாட நீர்த்தேவையை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட இச்சமூகநலப் பணிக்கு மக்கள் தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் இத்தகைய சமூகநலப் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை எனக் குறிப்பிட்டார்.

மேலும், “பதவியின்றி மக்களின் மனங்களில் பதியும் செயற்பாடுகளே உண்மையான சேவை” என்பதற்கு ரஹ்மத் பவுண்டேஷன் முன்னெடுத்து வரும் இவ்வாறான பணிகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்கொண்ட குடும்பங்களுக்கு இந்தப் பொதுக்கிணறு ஒரு முக்கியமான நிவாரணமாக அமைந்துள்ளது.

சமூகத்தின் தேவைகளை உணர்ந்து, அவசரமான தருணங்களில் மக்களுக்கு கைகொடுக்கும் இத்தகைய சேவைகள், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதுடன், உதவியை எதிர்பார்க்கும் பலருக்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

மக்களின் தேவையை அறிந்து செயல்படும் சேவையே நிலையான சமூகப் பணியாகும் என்பதற்கு பாலமுனையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கிணறு மற்றுமொரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📢 Assalamu Alaikum brothers ⏳ *Only 3 days remaining!*Our GFK Bowling Event – Season 5 will be held this Thursday, 13 Au...
10/08/2026

📢 Assalamu Alaikum brothers

⏳ *Only 3 days remaining!*

Our GFK Bowling Event – Season 5 will be held this Thursday, 13 August 2026, at 7:30 PM at the Qatar Bowling Centre.

This is more than just a bowling event—it’s an opportunity to strengthen our brotherhood, build friendships, and enjoy quality time together.

If you haven’t registered yet, kindly complete your registration today so we can finalize the arrangements.

📞 For Registration:
• Mr. Muhammed Ijas: +974 3393 4789
• Mr. Mohammed Jahith: +974 7407 5188

🤝 Let’s strengthen our brotherhood, enjoy the game, and make this event a memorable one.

Together We Play, Together We Win! 🎳.
*For registration * https://forms.gle/iKkGbxqfn42X1W3m7

Mihrajtv



#𝗞𝗮𝗹𝗺𝘂𝗻𝗮𝗶

10/08/2026
📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 இன்றைய தினம் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள அன்பான மாணவ, மாணவிகளுக்கு ரஹ்மத...
10/08/2026

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 இன்றைய தினம் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள அன்பான மாணவ, மாணவிகளுக்கு ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி..!

✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………..,

✅👉 இன்றைய தினம் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள அன்பான மாணவ, மாணவிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியமான தருணமே நாளைய பரீட்சை.

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் எதிர்பாராத சவால்களுக்கு மத்தியிலும், தங்களது கல்விப் பயணத்தைத் தொடர்ந்தும், பரீட்சையை எதிர்கொள்ளும் உங்கள் மனவலிமையும் தன்னம்பிக்கையும் பாராட்டுக்குரியது.

நாளைய பரீட்சை உங்கள் வாழ்க்கையின் முடிவு அல்ல; உங்கள் எதிர்காலத்திற்கான இன்னுமொரு முக்கியமான படிக்கல் மட்டுமே.
எனவே, பயத்தை விட நம்பிக்கையையும், பதற்றத்தை விட அமைதியையும், சந்தேகத்தை விட தன்னம்பிக்கையையும் உங்கள் மனதில் நிறுத்துங்கள்.

📝 ஒவ்வொரு வினாவையும் நிதானமாக வாசியுங்கள்.
💪 உங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் பதிலளியுங்கள்.
🎯 நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.
🌱 ஒரு வினா கடினமாக இருந்தாலும் மனம் தளர வேண்டாம் — அடுத்த வினா உங்கள் வெற்றிக்கான வாய்ப்பாக இருக்கலாம்.

உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; உங்கள் முயற்சிகள் அதைவிடப் பெரியதாக இருக்கட்டும்.

அல்லாஹ்வின் அருளால், நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் வெற்றிக்கான படிக்கல்லாக மாறட்டும். உங்கள் அறிவுக்கும் உழைப்புக்கும் சிறந்த பலன் கிடைக்கட்டும். உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, நாட்டுக்கும் சமூகத்திற்கும் பயனளிக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் தலைமுறையாக நீங்கள் உயரட்டும்.

நம்பிக்கையுடன் செல்லுங்கள்…
தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்…
வெற்றியுடன் திரும்புங்கள்! 🌟

நாளைய பரீட்சையை எதிர்கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது பிரார்த்தனைகளும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளும்!

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் வெற்றியை வழங்குவானாக! 🤲

– ரஹ்மத் மன்சூர்
முன்னாள் பிரதி முதல்வர் – கல்முனை மாநகர சபை
பொருளாளர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்தாபகத் தலைவர் – கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன்

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!10/08/2026
10/08/2026

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
10/08/2026

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் ப...
09/08/2026

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை…!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..

✅👉 மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள் மற்றும் கழிவுகள் காரணமாக மழைக்காலங்களில் நீர் தேங்கி பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில், (08) வடிகால் துப்புரவுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் அவர்களின் வேண்டுகோளின் பேரில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களின் பணிப்பின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

மாளிகைக்காடு பிரதேசத்தின் முக்கியமான போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக விளங்கும் மாளிகா வீதியில் அமைந்துள்ள வடிகான் கட்டமைப்பில் மண், குப்பைகள், இலைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியிருந்ததால் மழைநீர் சீராக வழிந்தோடுவதில் தடைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் மழைக்காலங்களில் வீதியோரங்களில் நீர் தேங்கும் நிலை ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடிகான் துப்புரவுப் பணியை உடனடியாக முன்னெடுக்குமாறு ஏ.எம். ஜாஹீர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, காரைதீவு பிரதேச சபையினால் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

வடிகான் பகுதியில் தேங்கியிருந்த மண், குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, மழைநீர் தடையின்றி வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் மாளிகா வீதியில் மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்கத்தை குறைப்பதற்கும், பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பணியை நேரில் பார்வையிட்டு அதன் முன்னேற்றத்தை அவதானித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் மற்றும் முன்னாள் உப தவிசாளரும் உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் ஆகியோர், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு வழங்குவதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தினர்.

காரைதீவு பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி, வடிகான், சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாளிகைக்காடு போன்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வடிகான் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பது வெறுமனே மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை மாத்திரமல்லாது, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறைத்து, சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.

பொதுமக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடைமுறை ரீதியாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது உள்ளூராட்சி பிரதிநிதிகளின் முக்கிய பொறுப்பாகும். அந்த வகையில் ஏ.எம். ஜாஹீரின் வேண்டுகோளுக்கு இணங்க காரைதீவு பிரதேச சபையினால் மாளிகா வீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வடிகான் துப்புரவுப் பணி, பிரதேச மக்களின் அன்றாட தேவைகளுக்கு உள்ளூராட்சி நிர்வாகம் பதிலளிக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  கல்முனையில்"அத்தம" தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வு முகைதீன் ஜும்ஆ பெரிய ப...
09/08/2026

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனையில்"அத்தம" தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வு முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்…!

✍️ எம்.என். எம்.அப்ராஸ்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………

✅👉 அரசாங்கத்தின் "க்ளீன் ஸ்ரீ லங்கா’ கொள்கைத் திட்டத்தின் கீழ், ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று(08) நடைபெற்றது.

இதன் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இதனை அடுத்து பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிரமதான பணியிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, பிரதேச செயலாளர்,ரீ.எம்.எம்.அன்சார்,
உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீட் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல்நிர்வாகத்தினர்,பாதுகாப்பு பிரிவினர்,பொதுமக்கள் என பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰✅👉  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் அன்புத் துளிர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்…!✍️...
09/08/2026

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰

✅👉 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் அன்புத் துளிர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்…!

✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………

✅👉“ஒரு சிறிய பரீட்சை… பெரிய கனவுகளுக்கான முதல் படி…!

✅👉 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் எமது அன்புச் செல்வங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல மாதங்களாக நீங்கள் மேற்கொண்ட உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர்–ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் முக்கியமான தருணமே இன்றைய பரீட்சை.

📝 கேள்விகள் கடினமாக இருந்தாலும் அஞ்சாதீர்கள்.
💪 உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை இழக்காதீர்கள்.
🧠 தெரிந்தவற்றை தெளிவாகவும் நிதானமாகவும் எழுதுங்கள்.
❤️ மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாமல், உங்கள் திறமையை நம்புங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்…

இந்தப் பரீட்சையின் பெறுபேறு மட்டுமே உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை.
உங்கள் கனவு காணும் திறன், தொடர்ந்து கற்கும் ஆர்வம், நல்லொழுக்கம் மற்றும் விடாமுயற்சியே உங்களை நாளைய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்.

எனவே, இன்று பரீட்சை மண்டபத்திற்குள் செல்லும் போது பதற்றத்தை வெளியே விட்டுவிட்டு, “நான் முயற்சி செய்துள்ளேன்… என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்வேன்” என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்.

🤲 அல்லாஹ் உங்கள் உள்ளங்களுக்கு அமைதியையும், அறிவுக்கு தெளிவையும், நினைவாற்றலுக்கு வலிமையையும் வழங்குவானாக. உங்கள் ஒவ்வொருவரின் முயற்சிக்கும் சிறந்த பலனை வழங்குவானாக. ஆமீன்.

🌷 இன்று எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தும்,
🌷 நாளை உருவாகும் அழகான எதிர்காலத்தின் அடித்தளமாக அமையட்டும்!

எமது பிள்ளைகளின் கனவுகள் உயரட்டும்…
அவர்களின் கல்விப் பயணம் வெற்றிகளால் நிறையட்டும்! 🌟📚

💐 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!

என்றும் உங்கள்,
ரஹ்மத் மன்சூர்
ஸ்தாபகர் – ரஹ்மத் பவுண்டேஷன், கல்முனை
முன்னாள் பிரதி முதல்வர் – கல்முனை மாநகரசபை
பொருளாளர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

🌎 www.mihrajnews.com

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!09/08/2026
09/08/2026

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்..!
09/08/2026

Address

169/4 A Mathavan Road Kalmunai 03
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

Shortcuts

Share