21/08/2026
இந்த விவரம் சின்னதா இருந்தாலும் அட....!! ச்ச...!! இத்தனை வருஷம் தவறா புரிஞ்சிருக்கோமேனு தோணுச்சு.
தீரன் அதிகாரம் ஒன்று இந்த படத்துல வர ஒவ்வொரு சின்ன சின்ன விவரங்களும் டீடைல்ட்டா இயக்குனர் H வினோத் சொல்லிருப்பார்.
பல காட்சிகள் கவரும்படியாக இருந்தது.
அதுல இரண்டு காட்சிகள் மட்டும் சொல்றேன்.
இந்த படம் வரவரைக்கும், நான் உட்பட பல பேர் நினைச்சுட்டு இருந்த ஒரு விஷயம்,
கொ..../லை....யாளி விட்டுட்டுப்போன கத்திய கைக்குட்டை வச்சு தான் எடுக்கணும் இல்லனா எடுக்குறப்போ கொ....//லை....யாளி கை ரேகை அழிஞ்சிடும், நம்ப கை ரேகை பட்டுடும்,.
இதையே நம்ப சினிமா பாத்து தான் தெரிஞ்சிக்கிட்டு இருப்போம்
ஆனா இது முற்றிலும் தவறுனு காமிக்கிற மாதிரி இந்த படத்துல ஒரு காட்சி வரும்.
பயிற்சியின் போது,போலீஸ் உயர் அதிகாரி, பயிற்சி பெரும் காவலர்களிடம் ஒரு கேள்வி கேட்பார்.
"இது கிரைம் ஸ்பாட்ல குற்றவாளி யூஸ் பண்ண கத்தி ? இத எப்படி எடுப்பீங்க ?? "
முதலில் வந்த காவலர் ஒருவர் தன்னிடம் இருந்த கைக்குட்டையை கத்தியின் மேல் போட்டு கத்தியை எடுப்பார்.
கடுப்பான உயர் அதிகாரி ," எப்படி கத்துக்கிட்டிங்க ?? சினிமா பாத்தா " என்று கேட்டவுடன் அவரும் ஆமாம் என்ற சொல்ல மேலும் கடுப்பான அதிகாரி நெக்ஸ்ட் என்றவுடன்,
தீரன் வருவார்.
கத்தியை சற்று நேரம் நோக்கிவிட்டு ,மேலே படத்தில் உள்ளது போல் கத்தியை எடுப்பார்.
ஏன் அப்படி எடுத்தீங்க என்று உயர் அதிகாரி கேட்க.
" கைரேகை என்பது வியர்வை மாதிரி Body fluidல பதியறது தான் சார்.கர்ச்சீப் போட்டு எடுத்தாலும் அழிஞ்சிடும்.கிரிமினல் எந்த பக்கம் பிடிச்சிருப்பானு விஷுவல் பண்ணி பார்த்துட்டு அதுக்கு ஆப்போசிட் சைடுல மினிமம் handlingல எடுக்கணும்"னு விளக்கம் கொடுப்பார்.
அடுத்தது, எவிடென்ஸ் கண்டுபிடிக்க லைன் மெதட் உபயோகப்படுத்தி எவிடென்ஸ கண்டுபுடிக்கிற காட்சியும் தெளிவா புரியும்படி சிறப்பா இருக்கும்.
இதே மாதிரி இந்த படத்துல நிறைய காட்சிகள், அதுவரைக்கும் நமக்கு தெரியாத பல புதிய விவரங்களோடு கவரும்படியா இருக்கும்.