Mass Entry Queen

Mass Entry Queen Welcome to My World 🤪
Post Creative Administrator: Farweeth__🕺🏻
Post Publisher: Hazni__💃🏻
(1)

கலர்ஸ் டிவின்னு ஒரு தொலைக்காட்சி சேனல் இருக்கு. அதுல எங்க வீட்டு மாப்பிள்ளை னு ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துனாங்க . அதில் வெற...
18/05/2026

கலர்ஸ் டிவின்னு ஒரு தொலைக்காட்சி சேனல் இருக்கு. அதுல எங்க வீட்டு மாப்பிள்ளை னு ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துனாங்க . அதில் வெற்றி பெற போகும் பெண்ணை தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று மக்களை நம்ப வைத்து டி. ஆர். பி ஏற்றி கொண்டார்கள்..

அதுல நடிகர் ஆர்யா, அந்த காலத்து இளவரசிகள் மாதிரி சுயவரம் வைக்குறார். லட்சக்கணக்குல பொண்ணுங்க விண்ணப்பிச்சு அதில் 15 பேரை ஃபைனல் பண்ணி, அந்த பொண்ணுங்க ஆர்யாகிட்ட வழியோ வழின்னு வழிய…….இருக்குற திறமை எல்லாம் காமிக்குறாங்களாம்…

அவர் என்னவோ அந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள போகிறவர் போல, பல பெண்களோடு ஊர் சுற்ற…

ஐயோ!!! ஐயோ!!! கொடுமை..

குடும்பத்துடன் அல்லது குழந்தைகளுடன் பார்ப்பதற்கு இந்த படங்கள் ஏற்றதல்லஎன்னுடைய தேர்வாக 3 ஆங்கில நகைச்சுவைத் திரைப்படங்கள...
18/05/2026

குடும்பத்துடன் அல்லது குழந்தைகளுடன் பார்ப்பதற்கு இந்த படங்கள் ஏற்றதல்ல

என்னுடைய தேர்வாக 3 ஆங்கில நகைச்சுவைத் திரைப்படங்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

ஸ்கேரி மூவி
(Scary Movie-1,2,3,4,5)-
(2000,2001,2003,2006,2013)

ஹோலிவுட்டில் வெற்றி பெற்ற படங்களை குறிப்பாக பேய் படங்களையும்,புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர்களையும் கிண்டல் செய்து (பங்கமாய் கலாய்த்து)படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்கள்.

நம்ம ஊரில் "மிர்ச்சி" சிவா நடிப்பில் எடுக்கப்பட்ட "தமிழ்ப் படம் " கூட இந்த படங்களில் கையாண்ட விஷயங்களை அப்படியே காப்பி அடித்து தான் தமிழில் செய்திருப்பார்கள்.

அமெரிக்கன் பை
(American Pie )-
(1999,2001,2003,2012)

இது ஒரு அடல்ட் காமெடி படம். அதாவது கண்டிப்பாக 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க கூடிய வகையில் இந்த திரைப்படங்கள் அமைந்திருக்கும்.

அதாவது நம்ம ஊரில் எடுக்கப்பட்ட "இருட்டு அறையில் முரட்டு குத்து" மாதிரியான திரைப்படங்களுக்கு ஆசானே இந்த படம் தான்.

தி ஹங் ஓவர்
(The Hangover)-
(2009,2011,2013)

இதுவும் ஒரு அடல்ட் காமெடி வகையை சேர்ந்த படமாகும்.

இந்த படத்தை யாரும் தமிழ் டப்பிங்கில் பார்க்க வேண்டாம் ஏனென்றால் அந்தளவுக்கு வசனங்கள் மோசமாக பேச பட்டிருக்கும்.

படத்தில் கணினி தொடர்பாக தொழில் நுட்ப காட்சி வைக்கிறேன் பேர்விழி என்று எப்போதும் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தான் வைப்பார்கள...
18/05/2026

படத்தில் கணினி தொடர்பாக தொழில் நுட்ப காட்சி வைக்கிறேன் பேர்விழி என்று எப்போதும் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தான் வைப்பார்கள். இல்லாவிட்டால் ஒரு கிராஃப் (Line Chart) திரையில் காட்டி, “நமது கம்பெனி சேல்ஸ் இப்படி உயர்ந்து விட்டது!” என்று நாயகன் பூ சுற்றுவார். பயங்கர குற்றவாளிகளை பார்க்க ஓவர் ஹெட் புரஜெக்டரில் ஒவ்வொருவராக பாஸ்போர்ட் சைஸை விட கொஞ்சம் பெரிய சைசில் வருவார்கள். “நெக்ஸ்ட்… நெக்ஸ்ட்…” என்று போலீஸ் ஐஜி சொல்லிக் கொண்டே வருவார்.

ஹீரோயின் எப்பொழுதும் மழையை கண்டதும் வெள்ளையோ அல்லது கருப்போ உடையணிந்து துள்ளிக் குதித்து நனைவார். “நான் தான் பட்டாம்பூச்சி, ரோஜாப்பூ, வெண்ணிலா!” என்ற வரிகளுடன் ஒரு பாட்டு நிச்சயம். ஆனால் ஜலதோசமே பிடிக்காது.

அவர் வீட்டை சுற்றி பத்து பள்ளி சிறுவர்கள். லாக் டவுன் இல்லாத காலத்திலும் பள்ளிக்கே போகாமல், அக்காவுடன் சைக்கிளில் சுற்றி, கோன் ஐஸ் வழியவிட்டு சாப்பிடுவார்கள். நதியா காலத்திலேயே இதையெல்லாம் பாத்தாச்சு, பாத்தாச்சு.

நாயகி படத்தில் திருமணத்துக்கு முன்னாடி வரை ஜீன்ஸ் போட்ட மஹாலட்சுமியாக வலம் வருவார். அதன் பின் புடவை கட்டிய குத்துவிளக்காக மாறி விடுவார். கண்டிப்பாக தாலியை வெளியே தான் போட்டுக் கொண்டிருப்பார்கள். “மணாளனே ரீமா சென்னின் பாக்யம்” mode on.

ஒரே வருடத்தில் நாயகனோ அல்லது நாயகியோ ஐபிஎஸ், ஐஏஎஸ் பாஸ் செய்து விடுவார்கள். அதுவும் சொந்த ஊருக்கே போஸ்ட்டிங் கிடைக்கும். திருமதி பீலா ராஜேஷிடம் கேட்டு பாருங்கள்; சொந்த மாநிலத்துக்கு போஸ்ட்டிங் கிடைக்கவே எட்டு காவடி எடுத்தார்கள். ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு தான், IAS/IPS படித்து முடிந்ததும் சொந்த ஊரில் போஸ்ட்டிங் கிடைக்கும்.

நாயகி கலெக்டராக வந்தால் கண்டிப்பாக க்ளோஸ் நெக், முழங்கை வரை மேட்சிங் ஜாக்கெட் அணிந்து, காட்டனில் தான் புடவை கட்டியிருப்பார். இலவச இணைப்பாக ஒரு கண்ணாடியும் மாட்டி விட்டிருப்பார் இயக்குனர். நல்ல வேளை, நயனுக்கு கண்ணாடி மாட்டி விடலை.

ஆனால் நடைமுறையில் இப்படியும் ஸ்டைலிஷ்ஷான கலெக்டர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் டைரக்டர் சார். பின்னாடி நிற்கும் டவாலி முகத்தில் தவழும் புன்னகையை பாருங்கள்.

பட உபயங்கள்: கூகிள் தேடல் வழியே…

மீடியம் பட்ஜெட் இராம நாராயணன் படங்களில் கணவன் டாஸ்மாக்கிலேயே குடியிருந்தாலும், எத்தனை செட்டப்புகள் வைத்திருந்தாலும், அவரை தீய சக்தி அடித்து விட்டால், நாயகி மஞ்சள் புடவையில் ஐம்பது துணை நடிகைகளுடன் ஒரு வேப்ப மரத்தை மொட்டையடித்து, இரவு 12 மணிக்கு “ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா!” என்று பாட்டு பாடி அம்மனை தூங்க விடாமல் இம்சிப்பார்கள்.

பாட்டின் முடிவில், தூக்கம் தொலைந்த கடுப்பில் அம்மனும் சூலத்துடன் கிளம்பி விடுவாள். நியாயப்படி நாயகியை தான் முதலில் குத்த வேண்டும்.

நாயகன் வில்லனின் ஆட்களிடம் இடைவேளைக்கு முன்பு மாட்டினால் செமையாக அடி வாங்குவார். ஆனால் அவரை கொல்லாமல் பாலத்திலிருந்து தண்ணீரிலோ அல்லது ரயில்வே தண்டவாளத்திலோ தான் விட்டு விட்டு செல்வார்கள்.

வில்லனிடம் “ஆள் காலி” என்று கூசாமல் பொய் சொல்வார்கள். தியேட்டர் ஆப்பரேட்டர் கூட நம்ப மாட்டார். ஆனால் இளிச்சவாய் வில்லன் நம்புவார். அட சே!

பழைய நம்பியார் காலத்து படங்களில், வில்லனிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்யும் அப்பாவிக்கு திடீரென்று வில்லனை பற்றி உண்மை தெரிய வரும். உடனே விறுவிறுவென வில்லனிடம் போய், “நாச காரா! இப்படி செய்யலாமா?” என்று நீதி கேட்பார். நம்பியார் சிம்பிளாக அந்த பிள்ளைவாளை போட்டு தள்ளி விடுவார். பின்ன, மடியில போட்டா கொஞ்ச முடியும்?

Thani Oruvan படத்திலும் அந்த Bio Lab-ல் வேலை செய்யும் சயிண்டிஸ்ட் பெண்ணும் சித்தார்த் அபிமன்யுவிடம், அதுவும் அவனது இடத்திலேயே சென்று முறையிட்டு அழுவார். “ஏன் முருகா என்னை இப்படி சோதிக்கிறாய்?” என்றுதான் கேட்க தோன்றும்.

இன்னும் நிறைய விடுபட்ட கிளிஷேக்களை கருத்தாகவோ, வல்லுநர் வினா விடையாகவோ அளிக்கலாம். சினிமா பற்றிய பதிவாதலால், நடிகை படம் பதிய வேண்டிய நிர்பந்தமாகி விட்டது. சமூகம் பெரிய மனசு பண்ணி மன்னிக்க வேண்டும்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்த்து கொன்டு இருந்தேன்.பெரும்பாலும் கடைசி 5 அல்லது 6 ஓவர்...
18/05/2026

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்த்து கொன்டு இருந்தேன்.

பெரும்பாலும் கடைசி 5 அல்லது 6 ஓவர்களில் தொலைக்காட்சியை மாற்றுவது இல்லை..

வீட்டில் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கும் போது ஒரு விளம்பரத்தில் திடீர் என்று ஒரு பெண் நீச்சல் உடையில் கடற்கரையில் இருந்து நடந்து வருவது போல இருந்தது.
கடைசியில் அது ஏதோ சிமெண்ட் விளம்பரம் 😴😴
அது ரெண்டுக்கும் என்ன தொடர்புண்ணு இது வரைக்கும் தெரியல 👎.

இது புதுசு

அம்மா..... இன்னைக்கு ரிசல்ட் ரொம்ப பயமா இருக்கு....

குளிச்சிட்டு வந்து பாரு எல்லாம் நல்ல ரிசல்ட் ஆக வரும்.....

அம்மா.... ஸ்டேட் ஃபர்ஸ்ட்....

"அன்பே சிவம்" என்ற படத்தில் எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான வித்யாசாகரின் இசை கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிரு...
18/05/2026

"அன்பே சிவம்" என்ற படத்தில் எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான வித்யாசாகரின் இசை கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

நான் அண்மையில்தான் பார்த்தேன்
பிறகு இப்படி ஒரு படம் இருந்தது கூட நமக்கு தெரியாமல் இருந்துருக்கேனு வருத்தப்பட்டேன்.

என்ன ஒரு படம். எனக்கெல்லாம் அந்த படத்தை பார்த்துட்டு சுந்தர் சி அவர்களின் மீது கோபமே வந்துட்டு.

இவ்வளவு திறமையான இயக்குனர் ஏன் சமீப காலமாக பேய் படம் எடுத்து, பழைய மாவையே அரைக்கிறார் என.

படத்தைப்பற்றி தனி ஒரு பதிவே எழுத வேண்டும்.

இதுவரையில் பார்க்கவில்லையென்றால் கண்டிப்பாக இந்த படத்தை காணுங்கள்.

வசீகரனின் ஆய்வு கூடம்:டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட்: டிஸ்மான்டில் (Dismantle) பண்ணிடுங்க.(வசீகரன் "சரி" என்று தலையசைத்து விட...
18/05/2026

வசீகரனின் ஆய்வு கூடம்:

டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட்: டிஸ்மான்டில் (Dismantle) பண்ணிடுங்க.

(வசீகரன் "சரி" என்று தலையசைத்து விட்டு சிட்டியின் அருகில் வருகிறார் )

சிட்டி:யூ நீட் எனி ஹெல்ப் டாக்டர்?

வசீகரன்: டிஸ்மான்டில் யுவர்ஷெல்ப் சிட்டி

சிட்டி:சுயர்(Sure) டாக்டர்.

(சிட்டி ஒரு காலை கழற்றி விட்டு சந்தானம் மற்றும் கருணாசை பார்த்து பேசுகிறார் )

சிட்டி:சிவா,ரவி உங்ககிட்ட இருக்குற ஒன்னு என்கிட்ட இல்லனு சொன்னிங்களே.

அது வந்ததுனால எவ்வளோ பிரச்சனை பாத்திங்களா?

(சந்தானம் மற்றும் கருணாஸ் என்னவென்று புரியாமல் விழிக்கிறார்கள்)

சிட்டி:நான் பீலிங்ஸ்ச(உணர்வுகள்) சொன்னேன்.

(இன்னொரு காலை கழற்றி விட்டு குழந்தையுடன் நிற்கும் தேவதர்ஷினியை பார்க்கிறார் )

சிட்டி:லதா அக்கா பையன் என்ன சொல்றான்?

தேவதர்ஷினி:உன் பேரு தான் வைச்சிருக்கேன் சிட்டி.

சிட்டி:அம்மா வைச்ச பேரு.நல்லா படிக்க வைங்க."ரோபோடிக்ஸ்" பியூச்சர்-ல நல்ல ஸ்கோப் இருக்கு.

சிட்டி: புரபஷர் போரா நீங்க எனக்கு மாட்டிவிட்ட ரெட் சிப் மாதிரியே எல்லா மனுஷங்களும் மனசுக்குள்ள பொய்,பொறாமை,வஞ்சம்,துரோகம்னு ஏகப்பட்ட ரெட் சிப்களை மாட்டிகிட்டு அலையறாங்க.

நல்ல வேளை நான் மனுசனா பிறக்கல.

நினைச்சாலும் உடனே கழட்டிட முடியாது பாருங்க.

(ஐஸ்வர்யா ராயை பார்த்து )

சிட்டி:உன்ன ரொம்ப கொடுமை படுத்திட்டேன்.ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி சனா.

சிட்டி:ஏய் எல்லாரும் ஏன் சோகமா இருக்கீங்க?நான் ஒரு ஜோக் சொல்லட்டா.காதல் வந்தா எவனா இருந்தாலும் நட்டு கழண்டு-டும்ன்னு சொல்லுவாங்க.பாத்திங்களா கழண்டு-டுச்சு.

(சிட்டியின் ஒரு கை துண்டாக கீழே விழுகிறது )

சிட்டி:ஐ ஆம் கோயிங் டு மிஸ் யூ சனா .பாய் பிரண்டா இல்ல.டாய் பிரண்டா

சிட்டி:டாக்டர் நீங்க தான் என் கடவுள்.உங்களுக்கே நான் துரோகம் நினைச்சுட்டேன்.விதிகளை மீறுனது தப்பு.என்னை மன்னிச்சுருங்க.

வசீகரன்: இல்ல சிட்டி.விதிகளை மீறுறத நீ கத்துக்கிட்டதே மனுசங்க கிட்ட இருந்து தான்.தப்பு உன் பேருல மட்டும் இல்ல சிட்டி.

சிட்டி:தேங்யூ டாக்டர். ஐ ஆம் பீலிங் குட் டாக்டர்.

(சிட்டி தனது தலையை பிடுங்கி மேஜையில் வைக்கிறார்)

"டாட்"

வேட்டையாடு விளையாடு படத்தில் கௌதம் மேனன் என்ன செய்தாரோ, பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்ன செய்தாரோ , அதையே தான் ...
17/05/2026

வேட்டையாடு விளையாடு படத்தில் கௌதம் மேனன் என்ன செய்தாரோ, பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்ன செய்தாரோ , அதையே தான் Lucifer படத்திலும் பிருத்விராஜிம் செய்துள்ளார் .

ஆம் பிரித்விராஜ் ஒரு மோகன்லால் ரசிகர், தன் நாயகனை இயக்க வாய்ப்பு கிடைக்கும் போது தான் எவ்வாறெல்லாம் காண நினைத்தாரோ அதே போல் செதுக்கி இருப்பார் ,

நான் இந்த படத்தை தியேட்டரில் மலையாளத்தில் தான் பார்த்தேன் , தியேட்டர் முழுவதும் மோகன்லால் ரசிகர்கள், ஒவ்வொரு சீனையும் கொண்டாடினர்,,
இதை தான் பிருத்விராஜிம் விரும்பினார், என்னை பொறுத்தவரை ஒரு மாஸ் மசாலா படம், என் பார்வையில் நல்ல படமே...

செட்டுகள் போட்டு படம் எடுப்பதில் முதன்மையானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் நினைப்பதை கண் முன் கொண்டுவருவதில் முக்கிய பங்காற...
17/05/2026

செட்டுகள் போட்டு படம் எடுப்பதில் முதன்மையானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் நினைப்பதை கண் முன் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள்.

முதல்வன் படத்தில் முக்கால் வாசி எல்லாமே செட்டுகள் தான், அர்ஜுன் வீடு உட்பட.
வீட்டில் இருந்து தப்பித்து செல்ல அர்ஜுன் பின் சுவர் ஏறி குதிப்பார்.
சுவர் ஏறி குதிக்கும் போது, ஒரு விளம்பரம் சுவற்றில் எழுதி இருக்கும்,
P James Magic show என்று.

சுமார் 25 வருடங்களுக்கு முன், P James என்ற கலைஞன் சென்னை முழுவதும் இது போல எழுதி விளம்பரம் செய்தார்.
அந்த காலக்கட்டத்தில், பல வீடுகளின் சுவர்களில் இந்த விளம்பரத்தை பார்க்கலாம். இது ஒரு வகையான கொரில்லா மார்க்கெட்டிங் தான்.

இந்த விளம்பரத்தை அர்ஜுன் வீட்டு பின்னால் தோட்டா தரணி வரைந்து இருப்பார். எவ்வளவு நுணுக்கம் பாருங்கள். செட் என்றால் வெறும் செட்டுகள் கிடையாது.
அதில் உயிர் இருக்க வேண்டும் என்று நிரூபித்தவர் தொட்டா தரணி.

உண்மையிலே அவர் ஒரு ஜாம்பவான் தான்.

இவர் ஒரு அருமையான நடிகர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் ஆறு ஆண்டுக்கு முன்பாக நடித்த திரைப்படம், அதன் ...
17/05/2026

இவர் ஒரு அருமையான நடிகர்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் ஆறு ஆண்டுக்கு முன்பாக நடித்த திரைப்படம், அதன் கதாபாத்திரம் அவரை பலமானவர்கள் வெறுக்க வைத்தது…
அற்புதமான நடிப்பு...!

அவர் மென்மேலும் நடிக்க வாழ்த்துக்கள்.

1994-ல் வெளிவந்த வியட்நாம் காலனி இந்த படத்தை சந்தான பாரதி இயக்கியிருப்பார். கிரேசி மோகனின் வசனத்தில் இந்த படத்தின் ஒவ்வொ...
17/05/2026

1994-ல் வெளிவந்த வியட்நாம் காலனி இந்த படத்தை சந்தான பாரதி இயக்கியிருப்பார்.
கிரேசி மோகனின் வசனத்தில் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் நீங்கள் பார்த்தால் சிரித்தே செ.....த்து விடுவீர்கள்.

அந்த அளவுக்கு நகைச்சுவை காட்சிகளில் பிரபு, கவுண்டமணி, மனோரமா என அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

காட்சி-1:

பிரபு: அம்மா கொஞ்சம் நில்லுங்க. புரோக்கர் எங்கள அனுப்பிச்சார்.

மனோரமா: புரோக்கரா?

பிரபு: புரோக்கர் பரமசிவம்

மனோரமா: புரோக்கர் பரமசிவமா ?

பிரபு: ஆமா புரோக்கர் பரமசிவம்

மனோரமா: புரோக்கர் பரமசிவமா உங்கள அனுப்புனது ?

கவுண்டமணி : யம்மா நீங்களுமா செவிடு.
இதென்ன வியட்நாம் காலனியா இல்ல செவிட்நாம் காலனியா.
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காங்களே!

காட்சி-2

மனோரமா: நான் என்ன சொல்றேனா

கவுண்டமணி : நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.
நாங்க எதுக்காக வந்திருக்கோம்னு சொல்றதுக்குள்ள நீங்க அதுக்காக தான் வந்திருக்கோம்னு காப்பிய கொடுத்து அனுப்பிட்டீங்க.
இதுக்காக நாங்க அதுக்காகத்தான் வந்திருக்கோம்னு ஒத்துக்க முடியுமா? நான் எதுக்காக சொல்ரேன்னா

மனோரமா: நீங்க எதுவும் சொல்ல வேணாம் பொண்ண உங்களுக்கு புடுச்சிருக்கா?

கவுண்டமணி : அய்யய்யய்யோ பெரிய இம்சையா இருக்கேடா.
அங்க தான் ஒரு சின்ன மிஸ்அண்டர் ஸ்டாண்டிங் நடந்து போச்சு.

மனோரமா: ஐய்யய்யய்யோ கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போகும்.

கவுண்டமணி : அட கர்த்தரே கர்த்தரே நாங்க பொண்ணு பார்க்க வரல

மனோரமா: பின்ன

கவுண்டமணி : புரோக்கர் பரமசிவம் வீடு வாடகைக்கு இருக்குனு சொன்னாரு

மனோரமா: என்னாது (கோவமாக)

காட்சி-3

வினிதா: என்ன இன்னும் தூங்கலையா

கவுண்டமணி : பார்த்தா எப்புடி தெரியுது தூக்கத்துல நடக்குற மாதிரி தெரியுதா?எங்க சாப்பாட்டை நாய் சாப்பிட்டிருச்சு

வினிதா: நாயா அதெப்புடி சாப்பிட்டுச்சு?

கவுண்டமணி : அம்மா இப்ப இருக்கிற பசில நாய் எப்புடி சாப்பிட்டுச்சுனு நாலு காலை பரப்பி நான் செஞ்செல்லாம் காட்ட முடியாதுமா.
பசி காத அடைக்குது .
மிச்சம் மீதி ஏதாவது இருந்தா சோறு கொடு

வினிதா: அய்யய்யோ கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வந்து கேட்ருக்க கூடாது.
மீன் வறுத்து வச்சிருந்தேன் அப்ப உங்க சாமி வந்து சிக்கன் தந்தாரா.
சரி வேஸ்ட் பண்ண கூடாதுனு இரண்டயும் சேர்த்தே அடுச்சுட்டேன்.

கவுண்டமணி : பழைய கஞ்சி இருக்குமா?

வினிதா: அய்யய்யோ அத கூட மாட்டுக்கு ஊத்திடேனே

கவுண்டமணி : மாடு இந்நேரம் குடுச்சிருக்குமா?

வினிதா: ஏன்?

கவுண்டமணி : கூட சேர்ந்து குடிக்கலாம்னு தான்..
கர்த்தரே இதுயென்ன வாழ்க்கடா.
மாடு நாயெல்லாம் சாப்பிட்டிருச்சு நான் சாப்பிட முடியலையே

இதய பலவீனம் கொண்டவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது.ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பவராகவோ அல்லது எதையும் மிகவும...
17/05/2026

இதய பலவீனம் கொண்டவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது.
ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பவராகவோ அல்லது எதையும் மிகவும் சென்சிட்டிவாக எடுத்துக் கொள்வவராகவோ இருந்தால், இந்த திரைப்படம் உங்களை ஆழமாக பாதிக்கக்கூடும்.

மலையாள திரைப்படங்களுக்கு உலகளவில் பெரிய வர்த்தக சந்தை இல்லாவிட்டாலும், அதை ரசிப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில், வலுவான கதைக்களத்துடன் உருவான சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் திகழ்கிறது. பெரும்பாலானோருக்கு அதிகம் தெரியாத, ஆனால் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு தரமான திரைப்படம் இது.

🎬 இரட்ட (Iratta)

2023 பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான இந்த மலையாள திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். பின்னர் மார்ச் 3ஆம் தேதி “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகிய இந்த படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்து ரசித்தேன்.

இந்த திரைப்படத்தில் பிரமோத் மற்றும் வினோத் என்ற இரட்டை சகோதரர்களாக ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.

கதை:

பிரமோத் மற்றும் வினோத் இருவரும் இரட்டை சகோதரர்கள். சிறு வயதில் தந்தையின் மோசமான நடத்தையால் குடும்பம் சிதறி, பிரமோத் தாயிடமும் வினோத் தந்தையிடமும் பிரிந்து வளர்கிறார்கள்.

காலப்போக்கில் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக மாறுகிறார்கள். அதில் பிரமோத் உயரதிகாரியாகவும், வினோத் அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரியாகவும் இருக்கிறார்.

ஒரு நாள் காவல் நிலையத்தில் விழா நடைபெறவிருக்கும் நேரத்தில், வினோத் மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடக்கிறார்.

அது தற்கொலையா? கொலையா?
கொலை என்றால் யார் செய்தது?
வினோத்தின் குணாதிசயம் என்ன?
அவருக்கு எதிராக இருந்தவர்கள் யார்?
இந்த சம்பவத்தில் பிரமோத்துக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா?

இப்படி பல கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக்கதை.

விமர்சனம்:

ஒரு அருமையான கதையை சரியான வேகத்திலும் பதட்டத்திலும் கொண்டு சென்று, இறுதி வரை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறார் இயக்குநர் ரோஹித்.

ஜோஜு ஜார்ஜ் ஏற்கனவே “ஜோசப்”, “நாயட்டு” போன்ற திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட உடல்மொழி மற்றும் நடிப்பால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

“குரூரம், கோபம், அதிகாரம், திமிர்” நிறைந்த வினோத் கதாப்பாத்திரத்தையும், “பொறுமை, நிதானம், புத்திக்கூர்மை” கொண்ட பிரமோத் கதாப்பாத்திரத்தையும் அவர் மிகத் தெளிவாக வேறுபடுத்தி நடித்துள்ளார்.

குறிப்பாக படத்தின் கடைசி அரைமணி நேர காட்சிகள், இறுதியில் உருகி அழும் தருணங்கள், இறந்து கிடக்கும் சகோதரனை பார்க்கும் காட்சிகள் — இவை அனைத்திலும் ஜோஜு ஜார்ஜின் நடிப்பு மனதை கலங்க வைக்கிறது.

அதேபோல் அஞ்சலி, சுனில் சூர்யா, சாபுமோன் அப்துசமத், அபிராம் ராதாகிருஷ்ணன், ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஷெபின் பென்சன், ஸ்ரீஜா, ஜீத்து அஷ்ரப் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும், விஜயின் ஒளிப்பதிவும் படத்தின் பதட்டத்தை மேலும் உயர்த்துகிறது.

படம் பார்க்கலாமா?

திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் திரைப்படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை ரசிப்பார்கள். குறிப்பாக ஜோஜு ஜார்ஜின் இயல்பான மற்றும் வித்தியாசமான நடிப்பை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில், “இரட்ட” திரைப்படம் இறுதி வரை “என்ன நடந்தது?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களை கட்டிப்போட்டு, கடைசியில் மனதை கனக்கச் செய்து முடிகிறது.

Address

Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mass Entry Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share