Irfân Rizwân

Irfân Rizwân Please Subscribe my YouTube Channel. Irfan Vlogs Lk - https://youtube.com/channel/UC_iMUnrOX8ZzUWf9kVWDv0w

14/01/2025
09/01/2025
2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலாவது தங்கம் பதக்கத்தை சீனா தன்வசமாக்கியது.டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான 10 மீற...
24/07/2021

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலாவது தங்கம் பதக்கத்தை சீனா தன்வசமாக்கியது.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்கத்தை சீனாவின் யாங் குயான் வென்றார்.

ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

குறித்த போட்டில் பங்கேற்ற இலங்கை வீராங்கனையான தெஹானி எகொடவெல முதல் சுற்றிலேயே வெளிறேினார். இதில் தெஹானி 49 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ரிஷாட்டின் வீட்டு நுழைவாயை முற்றுகையிட்டு அரசியல் ஏஜன்டுகள் அராஜகம் ..!முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ ...
20/07/2021

ரிஷாட்டின் வீட்டு நுழைவாயை முற்றுகையிட்டு அரசியல் ஏஜன்டுகள் அராஜகம் ..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, ரிஷாட் பதியூதீனின் கொழும்பு − பெளத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரவிகுமார், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் S.ஆனந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை,
சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக அரசாங்கம் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விலை மதிக்க முடியாத இரத்தினக்கற்கள் பலத்த பாதுகாப்புடன் இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பு !தேசிய இரத்தினக்...
19/07/2021

விலை மதிக்க முடியாத இரத்தினக்கற்கள் பலத்த பாதுகாப்புடன் இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பு !

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்கள் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிகள், நாரஹேன்பிட்டியிலுள்ள அமைச்சு கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் நடவடிக்கைகள், மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை, அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத, பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்களும்பொலிஸ் விசேட அதிரடிபடையின் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இரத்தினக்கற்கள், இலங்கை வங்கிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள.

கல்பிட்டி பிரதேசத்தில் நாளை (20/07/2021) Covid 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.30 வயதுக்கு மேற்பட்...
19/07/2021

கல்பிட்டி பிரதேசத்தில் நாளை (20/07/2021) Covid 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் முதலாவது பெண் விமானியாக  இமானுவேல் எவாஞ்சலின்மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்க...
19/07/2021

வடக்கின் முதலாவது பெண் விமானியாக இமானுவேல் எவாஞ்சலின்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவுசெய்து முழு விமானியாக வெளிவர உள்ளதாக மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானி என்று பெயர் எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வரும் இமானுவேல் எவாஞ்சலின் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக மன்னார் மாவட்டம் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கல்வி கலை கலாச்சாரம் விளையாட்டு தனிமனித திறமைகளில் மன்னார் மாவட்டம் எப்பொழுதும் முன்னிலையிலேயே நிற்கின்றது.

மன்னார் மண்ணிற்கும் வட மாகாணத்திற்கு இலங்கை மண்ணிற்கும் பெருமை தேடித்தரும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இமானுவேல் எவாஞ்சலின் அவர்களுக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குர்பானை நிறுத்த திட்டம் - அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமில்லை - இம்ரான் மஹ்ரூப் எம்.பி ஹஜ் பெருநாள் குர்பான் நடவடிக்கைக...
18/07/2021

குர்பானை நிறுத்த திட்டம் - அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமில்லை - இம்ரான் மஹ்ரூப் எம்.பி

ஹஜ் பெருநாள் குர்பான் நடவடிக்கைகளை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நாடகமே மாடறுப்பை தடை செய்யுமாறு அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த அரசுக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல பக்கம் அழுத்தங்கள் காணப்படுகின்றன. அவர்களின் வெளிநாட்டு கொள்கையால் கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மற்றொரு பக்கம் இனவாதத்தை கொண்டு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த இவர்கள் கூறிய பொய்களை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். இதனால் இவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த கடும்போக்கு அமைப்புகளே அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

இவ்வாறு பல பக்க அழுத்தங்களை எதிர்கொள்ளும் அரசு இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட தமக்கு எதிராக உள்ள கடும்போக்கு அமைப்புக்களை அமைதிப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சியே மாடறுப்பு தடை தொடர்பாக அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்.

இதன்மூலம் அடுத்தவார ஹஜ்ஜூப்பெருநாள் நாட்களில் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் குர்பான் நடவடிக்கைகளை குழப்பவே அரசு முயற்சிக்கிறது.

இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அதன்பின்னரே இச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு குறித்த அமைச்சுக்கு உள்ளது.
ஆனால் இவர்கள் வர்தமானியில் வெளியிட்டவைகளையே இன்னமும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றனர். ஆனால் வர்தமானியில் வெளியிடப்படாத ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத விடயத்தை நடைமுறைப்படுத்த அமைச்சின் செயலாளருக்கு எந்த அதிகாரமுமில்லை. ஆகவே இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நாம் நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பேச எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.

கற்பிட்டி மீனவர்கள் பயணித்த படகு தலைமன்னாரில் கண்டுபிடிப்பு!புத்தளம் - கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் ...
18/07/2021

கற்பிட்டி மீனவர்கள் பயணித்த படகு தலைமன்னாரில் கண்டுபிடிப்பு!

புத்தளம் - கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) கற்பிட்டியிலிருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21) திருமணமான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறித்த மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

அத்துடன் கற்பிட்டி மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியில் காணாமல் போன மூன்று மீனவர்களையும் தேடி வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திப்படகு ஒன்று மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேசத்திலுள்ள தீட தீவு பகுதியில் ஒதுங்கியுள்ளதாக மன்னார் பொலிஸ் ஊடாக நேற்று (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் படகு மாத்திரமே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது எனவும் மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மூன்று மீனவர்களும் காணாமல் போயுள்ளமை கற்பிட்டி பிரதேசத்தில் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு நடுவராக சென்றுள்ள இலங்கை பெண்.இலங்கைக்கு ஒரு வரலாற்று தருணத்தை குறிக்கும் வகையில், இந்த வருடத்தின் ...
18/07/2021

ஒலிம்பிக் போட்டிக்கு நடுவராக சென்றுள்ள இலங்கை பெண்.

இலங்கைக்கு ஒரு வரலாற்று தருணத்தை குறிக்கும் வகையில், இந்த வருடத்தின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிக்கான நடுவராக பணியாற்றுவதற்காக ஒரு பெண் பொலிஸ் அதிகாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி ஒலிம்பிக் போட்டியில் இலங்கை மகளிர் Chief Inspector டி.நெல்கா ஷிரோமலா (T. Nelka Shiromala) குத்துச்சண்டை நடுவராக பங்கேற்க உள்ளார்.

2017 ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த குத்துச்சண்டை நடுவாராக விருது பெற்றுள்ளார்.

முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் அதிகாரத்தை மீறி செயற்படுகின்றார்! முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சாடல்குர்பான் உள்ளிட்ட விவகா...
18/07/2021

முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் அதிகாரத்தை மீறி செயற்படுகின்றார்!

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சாடல்

குர்பான் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் தனது அதிகாரத்தையும் தாண்டி எல்லை மீறி செயற்படுகின்றார் என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

குர்பான் வழங்குதல் என்பது மார்க்கச் செயற்பாடாகும். இலங்கையில் காலாகாலமாக பள்ளிவாசலில் குர்பான் கொடுக்கும் வழமை இருக்கின்றது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதானது பெரும் ஆபத்தான கட்டுப்பாடாகும் என அவர் மேவும் சுட்டிக்காட்டினார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறுகையில்,

கொழும்பு போன்ற நகரச் சூழலில் குர்பான் கொடுப்பதற்கு வீடுகளில் இடமில்லை என்பதால் நீண்ட காலமாக பள்ளிவாசல் காணிகள் மற்றும் வளாகத்திலேயே குர்பான் கொடுக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இந் நடைமுறை பல கிராமங்களிலும் இருக்கின்றன. கூட்டுக் குர்பான் நடைமுறை செய்யப்படும்போது முஸ்லிம்களின் மத்திய நிலையமாக பள்ளிவாசல்களையே தெரிவு செய்து அங்கு குர்பான் கொடுக்கும் வழமையையே இலங்கை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். இந்நிலையில், இதனை தடுக்கும் விதமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது மிகவும் பாரதூரமானதாகும்.

அவர் எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பிரதமரின் கீழுள்ள அமைச்சுக்கு கீழ் வருகின்றது. இந்நிலையில், யாரின் ஆலோசனைக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டது என்பதை பணிப்பாளர் கூற வேண்டும்.

அத்தோடு, பணிப்பாளருக்கு இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடையாது. அது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணியும் இல்லை. எனவே, பணிப்பாளர் தனது அதிகாரத்தையும் தாண்டி முஸ்லிம் விவகாரங்களில் எல்லை மீறி செயற்படுகின்றார். ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அமைச்சரவையில் நீதியமைச்சர் அலிசப்ரியும் இருக்கின்றார். இந்த வியடம் குறித்து நீதியமைச்சர் கவனம் செலுத்தி உடனடியாக பணிப்பாளரின் குறித்த அறிக்கையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

🛑 தெளிவிற்காக: ரிசாட் பதியூதினில் இல்லத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் சில விடயங்கள் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பாக பேசப்பட...
18/07/2021

🛑 தெளிவிற்காக:

ரிசாட் பதியூதினில் இல்லத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் சில விடயங்கள் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பாக பேசப்படுகின்றது!

பொலிஸார் கூறிய தகவல்கள் கூட திரிவுபடுத்தப்பட்டு சில இணைய ஊடகங்கள், சிங்கள சில ஊடகங்கள் எழுதி acmc தலைவர் ரிஷாத் பதியுதீனின் மீதான காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் சிலரின் ஊக்குவிப்பு மூலம் பூதாகரமாக்கப்படுகின்றது என்பது தெளிவான உண்மை!

சில ஏஜெண்டுகள் மைக்குக்கு முன் வீரவசனம் பேச ஆரம்பித்துள்ளார். அது வழக்கமானது- பதியுதீன் என்ற நாமம் இல்லாவிடின்- அரசியல் இல்லை.

1- மரணித்த இஷாலினி என்ற பெண் தொடர்பில்:

குறித்த பெண் தலைவர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் மிக வறுமையான நிலையில் வேலைக்காக சேர்ந்தார். அவர் வேலைக்கு இணையும் போது 16 வயது பூர்த்தி என சொல்லப்படுகின்றது. அத்துடன் 16 வயது என்பதால் அது சட்டரீதியாக பிரச்சினை இல்லை. என்பதாக அறிகின்றேன்.

மரணத்தினால் எந்த வித பாதிப்பும் இல்லை ( வீட்டாருக்கு) நேரத்தோடு வீட்டில் வேளை செய்தவளது தந்தை மூலமாக வந்துள்ளாள் இதுவரை சுமார் 3 1/2 இலட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளது.

ஆக, குறித்த பிள்ளையின் வறுமை நிலையை கவனத்திற்கொண்டே அவருக்கான, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவும்
நோக்கில் அவர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

2- தற்கொலை:

குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.

கொழும்பு விசேட சட்டவைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பிரேத குறித்த மரணம் தொடர்பிலான பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது. அது நீதிமன்ற்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

3- வன்கொடுமை:

இஷாலினி என்ற அந்த பெண்ணுக்கு எந்தவிதமான சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இஷாலினி தரம் 7 வரையே கல்வி பயின்றுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரது 12 ஆவது வயதில் பதிவான சில சம்பவங்கள் மற்றும் டயகம பகுதியில் இஷாலினியின் வாழ்வில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் கடந்த கால விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று டயகம நோக்கி சென்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் போலியான செய்திகள் எழுதி, தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது இட்டுக்கட்டுப்பட்டு எழுதப்படுகின்றது. மிக கவலையானது!!

4- அன்று நடந்தது என்ன .?

கடந்த 3 ஆம் திகதி, காலை 6.50 மணியளவில், கீழ் மாடியில் இஷாலினியின் சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, உடலில் தீ பரவிய நிலையில் அலறுவதை அவதானித்ததாகவும், பின்னர் கால் துடைப்பான் ஒன்றின் துணையுடன் தீயை அனைத்து சிறுமியை அருகில் இருந்த நீர் தொட்டியில் இறக்கியுள்ளார் ரிஷாத் பதியுதீனின் மாமனார்,

அதன் பின்னர் இஷாலினியை 1990 அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் ஸ்தல பரிசோதனைகளை பொலிஸ் ஸ்தல பரிசோதனை அதிகாரிகள் முன்னெடுத்ததாகவும், குறித்த இடத்தின் சிசிரிவி பதிவுகளையும் ஆராய்ந்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு எற்கனவே அறிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இஷாலினி தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக்கொண்டதாக, தீவிர சிகிச்சைகளினிடையே வைத்தியர்களிடம் கூறியதாக அறிய முடிகிறது.

5- mp ரிஷாத் பதியுதீனுக்கும், இந்த சம்பவத்திற்குமான தொடர்பு.?

தலைவர் ரிஷாத் பதியுதீன் ஏலவே 3 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த சம்பவத்த்திற்கும் தொடர்புகளில்லை.

இந்த விசாரணைகளில், அவசியம் ஏற்படுமிடத்து, தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படும் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

6- வீட்டில் உள்ளோர்:

ரிசாட்டின் இல்லத்தில்: அவரின், மனைவின் குடும்பம் வாழ்கின்றது. எங்கு உள்ளவர்கள் அனைவரும் ஈமானிய சொந்தங்களே, துன்புறுத்தல் சித்திரவை என்ற பேச்சுக்கே இடமில்லை. மிக அன்பாக பழககூடியவர்கள், என்பதை மிக தெளிவான கூறுகின்றோம்.

Address

U. M. U Road
Kalpitiya
61360

Alerts

Be the first to know and let us send you an email when Irfân Rizwân posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Irfân Rizwân:

Share

Category