SL LATEST NEWS

SL LATEST NEWS 💯நம்பகமான செய்திகளின் அடையாளம்🔥 News

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அரசாங்கத்தின் புதிய திட்டம்250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்...
06/11/2025

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அரசாங்கத்தின் புதிய திட்டம்

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாடசாலை காலணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் நேற்று(05.11) அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சோதனைக் கட்டத்தின் கீழ், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள 1,266 பாடசாலைகளை சேர்ந்த 145,723 மாணவர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காலணிகள் வழங்கப்படவுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஒரு ஜோடிக்கு காலணிக்கு ரூ. 2,100 செலவில் ஒரு வருட உத்தரவாதத்துடன் கூடிய தரமான காலணிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ. 140 மில்லியன் சேமிக்க முடியும் எனவும் இந்த சேமிப்பு இரண்டு மாகாணங்களிலும் கூடுதலாக 62,481 மாணவர்களுக்கு காலணிகளை வழங்க பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டு காலணி உற்பத்தியாளர்கள் மட்டுமே சப்ளையர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு சரியான அளவில் காலணிகளை வழங்க பாடசாலைகளுக்கு நேரடியாகச் செல்லவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்ததுஇந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்...
06/11/2025

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,923,502 ஆகும்.

அவர்களில், 431,235 பேர் இந்தியாவிலிருந்தும், 177,167 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 138,061 பேர் ரஷ்யாவிலிருந்தும், 119,415 பேர் ஜேர்மனியிலிருந்தும், 113,619 பேர் சீனாவிலிருந்தும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32,815 ஆகும்.

இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 இலட்சம் என்ற எல்லையை 4 சந்தர்ப்பங்களில் கடந்துள்ளது.

2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இந்த எல்லையை கடந்திருந்தது.

தங்க விலையில் வீழ்ச்சிகடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில் இன்று (06) தங்க விலை சற்று குறைந்...
06/11/2025

தங்க விலையில் வீழ்ச்சி

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில் இன்று (06) தங்க விலை சற்று குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரு நாட்களின் முன், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 317,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 1000 ரூபாயால் குறைந்து 316,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 316,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 290,000 ரூபாயாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,525 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,250 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,625 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறி...
06/11/2025

கடும் மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே மின்னலால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்ற...
06/11/2025

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழப்புவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயி...
06/11/2025

இவ்வருடத்தின் இதுவரையில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(05) சிலாபம் - தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 05 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அரச சேவையில் 72,000 புதிய வேலைவாய்ப்புகள் - அமைச்சரவை அனுமதிஅரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்ச...
06/11/2025

அரச சேவையில் 72,000 புதிய வேலைவாய்ப்புகள் - அமைச்சரவை அனுமதி

அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறைக்கு 9,000 நியமனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 7,200 வெற்றிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எஞ்சிய தொகை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் சேவையின் தேவைக் கருதாது, அரசியல் ரீதியான நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட தேவையுடையவர்களுக்காக 10 பஸ்கள் இறக்குமதி - இலங்கை போக்குவரத்து சபைவிசேட தேவையுடையோருக்காக 10 பஸ்கள் இறக்குமதி செய்...
06/11/2025

விசேட தேவையுடையவர்களுக்காக 10 பஸ்கள் இறக்குமதி - இலங்கை போக்குவரத்து சபை

விசேட தேவையுடையோருக்காக 10 பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அடுத்த மாதமளவில் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

குறித்த பஸ்களுக்காக 420 மில்லியன் ரூபா செலவாகின்றது.
விசேட தேவையுடையவர்களுக்கு அவசியமான வசதிகள் குறித்த பஸ்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

முதியோர்களுக்கான தேசிய செயலகம், இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலை, கொழும்பிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் மற்றும் கொழும்பு பிரதான பஸ் நிலையங்களை கேந்திரமாகக் கொண்டு 10 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை!2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவத...
06/11/2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, நாளை (07) இடம்பெற உள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.

அதன்படி, வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது.

மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை - பலர் கைதுநாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்...
05/11/2025

நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை - பலர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 16 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது 32,201 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 736 நபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 271 பேரும் கைது செய்யப்பட்டன.

அத்துடன் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திதற்காக 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு தென்னை முக்கோண வலய தெங்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க தீர்மானம்வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தெங்கு விவசாயிகளு...
05/11/2025

வடக்கு தென்னை முக்கோண வலய தெங்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க தீர்மானம்

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தெங்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.



புதிதாக தெங்கு பயிரிடப்படும் காணிக்கு நீர் வசதிகளைப் பெறுவதற்காக இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் 1 மில்லியன் கன்றுகளை வளர்க்கும் திட்டத்துடன் இணைந்து இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

திருமணத்தால் அதிகரிக்கும் இடப்பெயர்வுகள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று மில்லியன் மக்களில் சுமார் 40.6 சதவீதம் பேர் ...
05/11/2025

திருமணத்தால் அதிகரிக்கும் இடப்பெயர்வுகள்

நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று மில்லியன் மக்களில் சுமார் 40.6 சதவீதம் பேர் திருமணத்தின் காரணமாக வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு (16.7%) மற்றும் கம்பஹா (16.8%) மாவட்டங்களுக்கே அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சமீபத்திய குடிசன மதிப்பீட்டில், மொத்தமாக இடம்பெயர்ந்த சனத்தொகை 3,167,263 ஆக உள்ளது என்றும், அவர்களில் 40.6 சதவீதம் பேர் (1,285,909) பிரதானமாக திருமணக் காரணங்களுக்காகவே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அல்லது வேலை தேடல் 17.1%, குடும்பத் தேவைகள் 16.2%, நிரந்தர வதிவிடத்திற்குத் திரும்புதல் 11.3%, கல்விக்காக இடம்பெயர்தல் 6.5%, இடப்பெயர்வுக்குப் பிறகு மீள்குடியேற்றம் 3.3% போன்ற காரணங்களும் இடப்பெயர்வில் தாக்கம் செலுத்தியுள்ளனர்.

குறைந்தளவானோர் இடர்கள் (1.6%), அபிவிருத்தித் திட்டங்கள் (1.3%) மற்றும் மத நோக்கங்களுக்காகவும் (2.1%) இடம்பெயர்ந்துள்ளனர்.

வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மேலும் எட்டு மாகாணங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமான குடியேற்றவாசிகள் திருமணமே காரணம் எனக் கூறியுள்ளனர்.

கொழும்பில் (37.5%) மற்றும் கம்பஹாவில் (26.1%) வேலைவாய்ப்பை நோக்கிய இடம்பெயர்வு மிக அதிகமாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் (22.6%) குடும்பத் தேவைகளுக்காக இடம்பெயர்ந்தவர்களின் விகிதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் குடும்பத் தேவைகளுக்காக இடம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் (தலா 19.6%) பதிவாகியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிரந்தர வதிவிடத்திற்குத் திரும்புபவர்களின் சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது (25.4%). கல்வி தொடர்பான இடம்பெயர்வு மட்டக்களப்பு (25.3%), கொழும்பு (11.8%) மற்றும் கண்டி (10.6%) ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக உள்ளது.

வட மாகாணத்தில், இடம்பெயர்வுக்குப் பிந்தைய மீள்குடியேற்றமே கிளிநொச்சி (49.0%), மன்னார் (45.5%) மற்றும் யாழ்ப்பாணம் (40.8%) ஆகிய இடங்களில் இடம்பெயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தது.

இயற்கை இடர்கள் வவுனியா (16.5%) மற்றும் முல்லைத்தீவில் (11.7%) இடம்பெயர்வைத் தூண்டின, அதேவேளை அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை (13.3%) மற்றும் பொலன்னறுவை (11.8%) ஆகிய இடங்களில் இடம்பெயர்வைத் தீர்மானித்தன.

இந்தத் தரவுகள் திருமணமே குடியேற்றத்திற்கான பிரதான காரணியாக இருப்பதோடு, வேலை, குடும்பத் தேவைகள், கல்வி மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவை இலங்கையின் மாவட்டங்கள் முழுவதிலும் இடம்பெயர்வு வடிவங்களைத் தீர்மானிக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.

Address

Kandy
20000

Alerts

Be the first to know and let us send you an email when SL LATEST NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SL LATEST NEWS:

Share