06/11/2025
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அரசாங்கத்தின் புதிய திட்டம்
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாடசாலை காலணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் நேற்று(05.11) அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சோதனைக் கட்டத்தின் கீழ், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள 1,266 பாடசாலைகளை சேர்ந்த 145,723 மாணவர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காலணிகள் வழங்கப்படவுள்ளன.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஒரு ஜோடிக்கு காலணிக்கு ரூ. 2,100 செலவில் ஒரு வருட உத்தரவாதத்துடன் கூடிய தரமான காலணிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ. 140 மில்லியன் சேமிக்க முடியும் எனவும் இந்த சேமிப்பு இரண்டு மாகாணங்களிலும் கூடுதலாக 62,481 மாணவர்களுக்கு காலணிகளை வழங்க பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டு காலணி உற்பத்தியாளர்கள் மட்டுமே சப்ளையர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு சரியான அளவில் காலணிகளை வழங்க பாடசாலைகளுக்கு நேரடியாகச் செல்லவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.