Beerok Media

Beerok Media BEEROK MEDIA

டிட்வா பேரிடருக்கு ஒரு மடல்:அன்பின் டிட்வாவுக்கு...!நீ நம்மிடம் சில நாட்கள் விருந்தாளியாக வந்தாய். உன்னை வரவேற்க நாம் தா...
04/12/2025

டிட்வா பேரிடருக்கு ஒரு மடல்:

அன்பின் டிட்வாவுக்கு...!

நீ நம்மிடம் சில நாட்கள் விருந்தாளியாக வந்தாய். உன்னை வரவேற்க நாம் தாயார் நிலையில் இருக்க வில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதனால் உன் கோற முகத்தை எம்மிடம் நீ காட்டிச் சென்றாய். ஆறாத வடுக்களை நம்மிடம் விட்டுச் சென்றாய்.

நீ மலைநாடுகளுக்கு வந்தாய். மரண பயம் தரும் மண்சரிவுகளைத் தந்தாய்.

நீ தரைப் பிரதேசங்களுக்கு வந்தாய். அள்ளி, அடித்துச் செல்லும் வெள்ளநீர் பயத்தைத் தந்தாய்.

நீ கரைப் பிரதேசங்களுக்கு வந்தாய். சீறிப் பாயும் ஆழிப் (சுனாமி) பேரலைகளின் பயத்தைத் தந்தாய்.

உன்னை நாம் திட்டித் தீர்க்க மாட்டோம்.
உன்னோடு எமக்கு கோப தாபங்கள் ஏதும் இல்லை. ஆனால் நீ ஏதோ நம்மிடம் சொல்ல வருகிறாய் போல் தெரிகிறது.

அருள் மழையாக வரும் நீ, அடங்காத அடை மழையாக வந்தாய். பயன் தரும் நதியாக ஓடிய நீ, சீறிப் பாயும் நதியாக மாறினாய்.
இதம் தரும் காற்றாக வரும் நீ, பயம் தரும் சூறாவளியாக மாறினாய். வதிவிடம் தரும் மண்ணாக இருந்த நீ, சரிந்து வந்து நம்மை விழுங்கிக் கொண்டாய்.

அப்படி இருந்த நீ, இப்படி மாற உன்னிடம் ஏதாவது முகாந்திரம் இருக்க வேண்டு்ம்.
உன் பக்கம் என்ன நியாயங்கள் உள்ளன என்பதை நீ சொல்வாயா! எம் பக்கம் என்ன பிழைகள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள ஆவளாக உள்ளோம்.

சரிந்து விழ வாய்ப்புள்ள மலை அடிவாரங்களில், அச்சமின்றி எப்படி நீங்கள் கட்டிடங்கள் கட்டி வாழ்கிறீர்கள் என்று நம்மிடம் கேட்க வந்தாயா?

சொல்லச் சொல், நதிக் கரைகளிலும் ஆற்றுப் படுக்கைகளிலும் வீடுகள், கடைகள் கட்டி ஏன் என்னை கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்க வந்தாயா?

விழுந்து விட வாய்ப்புள்ள மரங்களையும்
சரிந்துவிழ வாய்ப்புள்ள மேடுகளையும்
நீங்களாகப் பார்த்து சரிசெய்யாவிட்டால் நான் வந்து, சரிசெய்யது விடுவேன் என்று சொல்ல வந்தாயா?

பாதைகள் போடும் போதும், பாலங்கள் கட்டும் போதும் ஊழல்கள் நடந்துள்ளன என்பதை சூசகமாக சொல்ல வந்தாயா?

பதில் சொல்...!

ஏற்கனவே இனவாதத்தால் சின்னாபின்னமாகிய இந்த அழகான தீவை, நான் வந்து இன்னும் கொஞ்சம் சின்னாபின்னமாக ஆக்கினால் என்ன குறைந்து விடப் போகிறது, என்று கேட்க வந்தாயா?

ஏற்கனவே ஊழால் சரிந்து போன நாட்டை நான் வந்து இன்னும் கொஞ்சம் சரித்தால் என்ன நடக்கப் போகிறது, என்று கேட்க வந்தாயா?

ஐஸ் போதைப் பொருளால் ஊறிப் போன நாட்டை நான் வந்து இன்னும் கொஞ்சம் ஊற வைத்தால் என்ன என்று கேட்க வந்தாயா?

பதில் சொல்...!

எனக்குத் தெரியும் நீ வாய் பேச மாட்டாய்.
சொல் புத்தி இல்லாதவர்களுக்கு கல்லால் அடித்து சொல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறாயா?

நீ பேசும் பாசை, புரிந்துகொள்ள இலகுவான பாசைதான். ஆனால் அதை செவிசாய்த்துக் கேட்கும் அளவுக்கு நம்மிடம் அகச்செவி மிகவும் குறைவுதான் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

டிட்வா... நீ சென்று வா..

எதிர்காலங்களில், மானிடர்கள் என்ற வகையில் நாம் நம்மை தார்மீக ரீதியாக திருத்திக்கொள்ளாவிட்டால், பெளதீக ரீதியாக மாற்றங்கள் செய்ய முற்படாமல் இருந்தால் நீ இன்னும் பல அவதாரங்களில்
வந்து எம்மை துவம்சம் செய்வாய் என்பது மட்டும் திண்ணம்.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

அற்ப காரணங்களுக்காக நீங்கள் விவாகரத்து கேட்கும் பெண்களா?கொஞ்சம் நில்லுங்கள். போகப் போக உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை ச...
26/11/2025

அற்ப காரணங்களுக்காக நீங்கள் விவாகரத்து கேட்கும் பெண்களா?

கொஞ்சம் நில்லுங்கள். போகப் போக உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லித் தருகிறேன்.

🔺️ உங்கள் குடும்பம்:

👉🏼 உங்கள் விவாகரத்தின் முதல் மாதத்தில், உங்கள் சகோதரர்கள் உங்களுக்காக தங்கள் கதவைத் திறந்து வைப்பார்கள். உங்கள் தாய் உங்களை முத்தமிட்டு ஆறுதல்படுத்துவாள்.

👉🏼 உங்கள் தந்தை, "நான் உயிருடன் இருக்கும் வரை நீ என் பராமரிப்பில் இருக்கலாம்" என்று கூறுவார். (நான் உயிருடன் இருக்கும் வரை) என்பதை மீண்டும் ஒரு முறை வாசித்துக் கொள்ளுங்கள்.

👉🏼 இரண்டாவது மாதத்தில், அவர்களுக்கு சலிப்பு தட்ட ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைகளின் இரைச்சல்களை அவர்கள் தொந்தரவாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் சகோதரர்களின் குழந்தைகளுக்கும் மத்தியில் ஏற்படும் சண்டைகளால் பதட்டங்கள் ஏற்பட்ட ஆரம்பிக்கும்.

👉🏼 உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அடைக்கப்பட்ட சுவர்களுக்குள் உங்களைப் பற்றியும் உங்கள் பிள்ளைகளைப் பற்றியும் பேசிக்கொள்வார்கள்.

👉🏼 மூன்றாவது மாதத்தில், உங்கள் சகோதரர்களின் மனைவிகளால் உங்கள் மீது தூண்டல் துலக்கல் வர ஆரம்பிக்கும். உங்களை கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். அங்குதான் உங்களுக்கு பெரும் தலையிடி ஆரம்பிக்கும்.

👉🏼 நான்காவது மாதத்தில், உங்கள் பிள்ளைகள் பற்றி சுற்றியுள்ளவர்களின் புகார்கள் வர ஆரம்பிக்கும். உங்கள் பிள்ளைகளை தந்தையிடம் அனுப்பி விட்டு நீங்கள் மட்டும் தனியாக இருக்குமாறு உங்களிடம் வேண்டுவார்கள்.

👉🏼 ஐந்தாவது மாதத்தில், உங்களுக்கும் உங்கள் சகோதரர்களின் மனைவிகளுக்கும் இடையே வாய்ச் சண்டைகள் தொடங்கும்.
நீங்கள் சுற்றும் முற்றும் பார்ப்பீர்கள். 'உங்கள் கணவருடன் வாழ்வைதை விட நல்வாழ்வு கிடைக்கும்" என்று உங்களுக்கு
உறுதியளித்தவர்கள் அனைவரும் வாய் மூடி இருப்பதைக் காணுவீர்கள்.

👉🏼 இப்படி காலங்கள் போகப் போக அழுத்தாங்களும் நெருக்குதல்களும் அதிகரித்த்துக்கொண்டுதான் போகும்.
கடைசியில் நீங்கள் உங்கள் வசிப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ள அனைவருக்கும் வேலை செய்து சேவை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

🔺️ உங்கள் உறவினர்கள்

உங்களுடன் உங்கள் உற்றார் உறவினர்கள்
பழகும் விதங்கள் சற்று மாற்றமடைய ஆரம்பிக்கும். அவர்களின் பெண்களை உங்களுடன் பழக அனுமதிக்க மாட்டார்கள்.
(கோபப்படாதீர்கள், நியாயம் அநியாயம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்றைய சமூகம் விவாகரத்தானவளை ஒரு மாதிரியாகவே பார்க்கிறது.)

இதனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்படுவது போன்று உண்ர்வீர்கள். உங்கள் மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

🔺️ உங்கள் ​​சமூகம்:

👉🏼 நீங்கள் சந்தைக்குச் செல்லும்போது, சமூகத்திலுள்ள சந்தர்ப்பவாதிகள் உங்களை வெற்றிச் செல்வமாக அல்லது
வழிமாறி வந்த மான் போல பார்ப்பார்கள். எல்லோரும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்.

👉🏼 நீங்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு, பொது இடங்களுக்கு நுழையும்போது, ​​ உங்களை அற்ப விலைக்கு பேரம் பேச பலர் முயற்சிப்பார்கள்.

👉🏼 உங்களை உடலாக மட்டும் பார்க்கும்
பெண் பித்தர்கள் பதிவு செய்யப்படாத திருமண உடன்படிக்கைக்காக உங்களை
அழைப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு முழுமையான வாழ்க்கை துணையாக நீங்கள் தேவை இல்லை. பகுதி நேர துணையாக எதிர்பார்ப்பார்கள்.

இதனால் உங்கள் உணர்வுகள் கண்ட இடங்களில் மிதிக்கப்படும், உங்கள் பிள்ளைகளின் வாழ்வு இன்னும் சீரழிய ஆரம்பிக்கும்.

🔺️ உளவியல் மற்றும்உடலியல் ரீதியாக நீங்கள்:

👉🏼 உங்களை பாதுகாக்க, உங்களுக்கு அறுதல் அளிக்க ஒரு துணை இல்லையே என்ற பெரும் ஏக்கம் உங்களை வதைக்க ஆரம்பிக்கும். தனிமை உணர்வு உங்களை வாட்டத் தொடங்கும்.

👉🏼 வீட்டுக்கு உள்ளே... வெளியே...நீங்கள் பசியாக இருக்கும்போது... நீங்கள் தூங்கும்போது... நீங்கள் சோர்வாக இருக்கும்போது... நீங்கள் நோய்வாய்ப்படும் போது... நீங்கள் பலவீனமாக இருக்கும் போது... உங்கள் கணவர் உங்கள் பக்கத்தில்
இல்லையே என்ற சோகம் உங்களை
வருத்திக்கொண்டே இருக்கும். வறுமை, பிரிவு என்ற இரு பெரும் கொடுமைகளுக்கு மத்தியில் நீங்கள் திண்டாடுவீர்கள்.

👉🏼 ஆகவே விவரமற்ற தாய், தோழிகள், ஆலோககர்கள் மற்றும் ரகசிய காதலன்
போன்றோரின் பேச்சைக் கேட்டு உங்கள்
வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர்கள்.

நீங்கள் விவாகரத்து கேட்கும்போது அனைவரும் உங்களுடன் நிற்பார்கள், உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் மாத்திமே நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என போராடுவார்கள்.

குறிப்பு:
இது அற்ப காரணங்களுக்காக ஆவேசப்பட்டு விவாகரத்து கேட்டுக்கும் பெண்களுக்கு மாத்திரமான பதிவாகும். ஆனால் தங்கள் மானம், மரியாதை மற்றும் மார்க்கத்தைக் காத்துக்கொள்ளவும், மனித மிருகங்களுக்கு வாழ்க்கைப்படு, விடுதலை தேடும் பெண்களுக்குமான பதிவல்ல.

✍ தமிழாக்கம் / imran farook

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

08.11.2025 மடவளை பஸார் அஸ்ரப் கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்த ஆண்டிறுதி இஸ்லாமிய கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு, ...
11/11/2025

08.11.2025 மடவளை பஸார் அஸ்ரப் கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்த ஆண்டிறுதி இஸ்லாமிய கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு, பட்டமளிப்பு விழாவிற்கு எமது BEEROK MEDIA வின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக பெறுமதி மிக்க பலா கன்றுகளை வழங்கி வைத்த CITIGARDENS நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளர் AL-HAJ HILRU M.SIDDEEQUE அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group

https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

என் பயணம் – தாய்–கம்போடிய எல்லைக்குப் பின்கம்போடியா – நேற்று / பலஸ்தீனம் – இன்று : வரலாறு மீண்டும் எழுதப்படுகிறது1975-ல்...
24/10/2025

என் பயணம் – தாய்–கம்போடிய எல்லைக்குப் பின்

கம்போடியா – நேற்று / பலஸ்தீனம் – இன்று : வரலாறு மீண்டும் எழுதப்படுகிறது

1975-ல் கம்போடியா “Year Zero” என அறிவிக்கப்பட்டது. அந்த இருண்ட காலத்தின் பல ஆண்டுகள் பின், தாய்–கம்போடிய எல்லையை கடந்தபோது, சிதைந்த கிராமங்கள், சிதறிய குடும்பங்கள், உயிர் பிழைத்தவர்களின் அமைதி — ஒரு தேசத்தின் வலியை நான் நேரில் கண்டேன்.

இன்று பலஸ்தீனத்தில் நடக்கும் சோகம், அந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. மாறுபட்ட நிலங்கள், மாறுபட்ட காலங்கள் — ஆனால் ஒரே கதை: இடம்பெயர்த்தல், துன்பம், அமைதி.

கம்போடிய மக்கள் க்மேர் ரூஜ் ஆட்சியால் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டார்கள்; இன்று பலஸ்தீனர்கள் அதே துயரத்தை அனுபவிக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை, போரின் பலியாகியவர்கள் பொதுமக்கள் — பசி, பயம், மரணம். கலாச்சாரம், அடையாளம், வரலாறு அழிக்கப்படுகிறது; உலகம் விவாதிக்கிறது — ஆனால் செயல் இல்லை.

கம்போடியா ஒரு எச்சரிக்கை ஆக இருந்தது: “இனி ஒருபோதும் இல்லாது.”
ஆனால் பலஸ்தீனத்தில், அந்த அதிர்வு மீண்டும் ஒலிக்கிறது.
கம்போடியா நேற்று நடந்த துயரம் எனில், பலஸ்தீனம் இன்று நடக்க…..

Hilru
24/10/2025.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

 #வடமாகாணத்தில்_கடவுச்  #சீட்டு (  )  #வழங்கும்_பிராந்திய  #அலுவலகங்கள்_ஆரம்பம் 23 Sep 2025 யாழ்ப்பா ணத்தில் - மாவட்ட செ...
23/09/2025

#வடமாகாணத்தில்_கடவுச் #சீட்டு ( ) #வழங்கும்_பிராந்திய #அலுவலகங்கள்_ஆரம்பம்

23 Sep 2025 யாழ்ப்பா ணத்தில் - மாவட்ட செயலகத்திலும்
வவுனியாவில் - வவுனியா மன்னார் வீதியில் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்னாலும்
அமைந்துள்ளது.

#சேவைகள்

* கடவுச்சீட்டு விநியோகித்தல் (ஒருநாள் சேவை, சாதாரண சேவை )

* கடவுச்சீட்டுக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.

* 2018 இன் பின்னர் 15 வயதிற்கு மேற்பட்டோரால் வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டுக்கான விரலடையாளத்தை பதிவு செய்தல். (Finger Print)

#நடைமுறைகள்
* காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 2.00 வரை ஒருநாள் மற்றும் சாதாரண சேவைக்கான விண்ணப்பங்களைக் ஏற்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

* எந்தவிதமான முற்பதிவுகளும் தேவையில்லை.

#தேவையான_ஆவணங்கள்
1) பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்

2) பிறப்பு அத்தாட்சி பத்திரம் ( அசல்-Original ) தெளிவானதாக இருத்தல் வேண்டும்.

3) புகைப்படம் (Online Photo )- (பாஸ்போட் அலுவலகத்திற்கு உள்ளே போக முதலே அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம்)

4) தேசிய அடையாள அட்டையும் அதன் பிரதியும் ( தங்கள் தற்போதய தோற்றத்துடன் அடையாள அட்டையிலுள்ள புகைப்படம் ஒத்துப்போகவில்லை என்றால் அடையாள அட்டையை புதுப்பித்து கொண்டு செல்லுங்கள் )

5) ஏற்கனவே கடவுச்சீட்டு இருந்தால் அதனையும் அதன் பிரதியையும் கொண்டு செல்லுங்கள்.

6) திருமணமான பெண்கள் கணவனின் பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்பின் திருமண சான்றிதழை (Original) கொண்டு செல்லுங்கள்.

7) சான்றிதழ்களின் ஆங்கில மொழி பெயர்ப்புத் தேவையில்லை.

8. பதினைந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளையின் கடவுச்சீட்டு புதுப்பிப்பதாயின் தாய், தந்தை இருவரும் கட்டாயம் நேரில் செல்ல வேண்டும். தாய் தந்தை இருவரினதும் சம்மத கடிதம் (concern letter) மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதி இணைக்கப்பட வேண்டும்.

#குறிப்பு :
பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தால் வெளிநாட்டு தூதரகத்தில் சம்மதம் தெரிவித்து கடிதம் மற்றும் சான்றுப்படுத்திய கடவுச்சீட்டு பிரதியினையும் பெற்று அதனை இணைக்க வேண்டும் (No Objection Letter)

பெற்றோரில் ஒருவர் மரணமடைந்து இருந்தால் மரண சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.

பெற்றோர் விவாகரத்து பெற்றிருந்தால் நீதிமன்ற கட்டளை அவசியமானது . பிள்ளையின் கட்டுக்காவல் பராமரிப்பு எந்த பெற்றோரிடம் உள்ளதோ அவரே பிள்ளையின் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

9 ) கடவுச்சீட்டு தொலைந்திருந்தால் பொலிஸ் முறைப்பாட்டு்பிரதி அவசியமானது.

#கட்டணங்கள்
ஒருநாள் சேவை - 20,000/-
சாதாரண சேவை - 10,000/-

திருத்தங்கள் - 1,200/-

தொலைந்த கடவுச்சீட்டு எனின் தண்டப்பண விபரம்:

வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு உட்பட்டது - 20,000/-
வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேற்பட்டது - 15,000/-

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

1980 ஆம் ஆண்டு கம்போடிய மக்கள் தாய்லாந்து எல்லைக்கு பெருநிரம்பல்இது தென்கிழக்காசியாவின் நவீன வரலாற்றில் மிகப்பெரிய அகதி ...
22/09/2025

1980 ஆம் ஆண்டு கம்போடிய மக்கள் தாய்லாந்து எல்லைக்கு பெருநிரம்பல்

இது தென்கிழக்காசியாவின் நவீன வரலாற்றில் மிகப்பெரிய அகதி நெருக்கடிகளில் ஒன்றாக அமைந்தது.

1979இல், வியட்நாம் படைகள் கம்போடியாவை கைப்பற்றி, க்மெர் ரூஜ் ஆட்சி வீழ்ந்தது.
பின்பு பினாம்பென்னில் கம்புச்சிய மக்கள் குடியரசு (PRK) நிறுவப்பட்டது.

துன்புறுத்தல், பசி, வலுக்கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆகியவற்றின் அச்சத்தால், நூற்றுக்கணக்கான கம்போடியர்கள் மேற்கே தாய்லாந்து எல்லை நோக்கி தப்பிச் சென்றனர்.

பெருநிரம்பல் (1980 உச்சம்)

1980 நடுப்பகுதியில், 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கம்போடியர்கள் தாய்–கம்போடிய எல்லையில் திரண்டு இருந்தனர்.

அகதிகள் ஆபத்தான நிலக்குண்டுப் பகுதிகள் மற்றும் போர்க்களங்கள் வழியாகச் சென்றதால், பலர் பசி, சோர்வு மற்றும் வன்முறையால் உயிரிழந்தனர்.

நோங் சான், நோங் சமெட், காஓ-ஐ-டாங், சா கியோ போன்ற இடங்களில் தற்காலிக முகாம்கள் தோன்றின.

முகாம்கள் மிகவும் நெரிசலுடனும், போதிய வசதியின்றியும், பாதுகாப்பற்றவையாகவும் இருந்தன.
அங்கே காலரா, ஊட்டச்சத்து குறைவு, சுகாதார வசதி பற்றாக்குறை அதிகமாக காணப்பட்டது.

UNHCR, ICRC, WFP, UNICEF மற்றும் பல தன்னார்வ அமைப்புகள் அவசர உதவிகளை வழங்கினாலும், விநியோகங்கள் போதுமானதாக இல்லை.

ஆரம்பத்தில் தாய்லாந்து நிரந்தர குடியேற்றம் ஏற்படும் என்ற அச்சத்தால் அகதிகளைத் தள்ளியதும், சர்வதேச அழுத்தத்தால் பின்னர் UN மேலாண்மையில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது.

ஹில்ரூ
To be continued... 🌿
22/09/2025

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH

கம்போடியா "இயர் ஸீரோ" அறிவிப்பு1975-ல் கெமர் ரூஜ் (Khmer Rouge) ஆட்சி கம்போடியாவை கைப்பற்றியபோது, தலைவர் பொல் பொட் (Pol ...
19/09/2025

கம்போடியா "இயர் ஸீரோ" அறிவிப்பு

1975-ல் கெமர் ரூஜ் (Khmer Rouge) ஆட்சி கம்போடியாவை கைப்பற்றியபோது, தலைவர் பொல் பொட் (Pol Pot) நாடை "Year Zero" என அறிவித்தார்.

👉 இதன் பொருள், பழைய சமூக, அரசியல், கலாச்சார அமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஒரு புதிய சமூகத்தை ஆரம்பிப்பது.

நகரங்களில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்களை கிராமங்களுக்கு அனுப்பி வேளாண்மை அடிப்படையிலான சமூகமாக மாற்றினர்.

பள்ளிகள், கோவில்கள், பண்பாட்டு மரபுகள், பணக்காரர்கள், அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் – யாரும் விடுபடவில்லை.

முந்தைய கல்வி, பண்பாடு, மதம் அனைத்தையும் "பழையது – தேவையற்றது" என்று கருதி அழித்தனர்.

மக்கள் அனைவரும் சமமாக, விவசாயிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

இதனால் கம்போடியா மக்களுக்கு மிகுந்த பசி, துன்பம், படுகொலைகள் ஏற்பட்டன. 1975–1979 காலத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக கணக்கிடப்படுகிறது.

⚖️ "Year Zero" என்பது கம்போடியா வரலாற்றில் மிகக் கொடிய அத்தியாயமாக கருதப்படுகிறது.

ஹில்ரூ
19/09/2025

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH?mode=ems_copy_t

தாய்–கம்போடியா எல்லை கடந்து என் பயணம்.ஹில்ரு பால் போட்டின் ஆட்சியாண்டுகள் (1975–1979) கம்போடியாவை முற்றிலும் சேதப்படுத்த...
11/09/2025

தாய்–கம்போடியா எல்லை கடந்து என் பயணம்.
ஹில்ரு

பால் போட்டின் ஆட்சியாண்டுகள் (1975–1979) கம்போடியாவை முற்றிலும் சேதப்படுத்தியது. ஒரு கிராமப்புற உத்தோபிய கனவை உருவாக்கும் அவரது கடுமையான காணோட்டம், கோடிக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றினது; அவர்கள் கட்டாய வேலை, பசித்துக்கொல்லுதல் மற்றும் மரணத்தை சந்தித்தனர்.

1979-ல் வியட்நாம் அகிரமான போது, கெமர் ரூஜ் பின்தள்ளப்பட்டாலும், மக்களுக்கு உயிர் காப்பது மட்டுமே மீதமிருந்தது. 1980-ல், ஒரு மில்லியன் கம்போடியர்கள் பயணத்தில் இருந்தனர்—குடும்பங்கள் காட்டில் காலடிகள் இழுக்க, தலைகளை தூக்க முடியாத குழந்தைகள், எல்லை நோக்கி அசைக்கப்பட்டனர்.

மனிதன் செல்லாத 19 தற்காலிக முகாம்கள் உருவானது. நான் முதலில் ஒரு முகாமில் நுழைந்த போது, அங்கு துயரம் எல்லாத்திலும் பரவி இருந்தது: பசி, நோய், மரணம் தினமும் உயிர்களை பிடித்துக் கொண்டிருந்தது. சர்வதேச சிவப்பு குறுக்கு குழுமம் (ICRC) மற்றும் ஐக்கிய நாடுகள் உடனடியாக உதவி வழங்கினர், நான் உணவு மற்றும் நிவாரணத்தை ஒழுங்குபடுத்துவதற்குப் பணியமர்த்தப்பட்டிருந்தேன்.

அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது—தண்ணீர் கோரிக்கை வைக்கும் தாய், அன்புள்ளவர்களை புதைக்கும் தந்தை—ஆனால் மறக்க முடியாதது. மிகக் கறைமான தருணங்களில், சிறிய மனிதநேயம் காட்சிகளை நான் காண்ந்தேன்: ஒரு சிறுவன் அன்னோரைப் பகிர்ந்தார், ஒரு பெண் தன்னுடைய இல்லாத அனாதையை பராமரித்தார்.

தாய்–கம்போடியா எல்லை, உணரப்படாத துன்பம் மற்றும் அற்புதமான உறுதிப்பற்றின் சந்திப்பாக மாறியது. எனக்காக, அது வெறும் பணியுமல்ல—மனித குற்றத்தின் ஆழமும் மனித மனத்தின் வலிமையும் வெளிப்படுத்திய ஒரு பயணம்.

BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH?mode=ems_copy_t

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when Beerok Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beerok Media:

Share