Digana News

Digana News Tamil News Services Kandy

31/05/2026

பீகாரில் திருமணத்திற்கு 100 பேருக்கு பதிலாக 200 பேரை அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை, உணவில் பேதி மருந்தை கலந்துள்ளார். இதனால் விருந்தினர்கள் ஆற்றங்கரையை நோக்கி ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பத்து வயது தங்கையை 15 வயது சகோதரன் கழுத்து நெரித்து கொலை செய்த துயரச் சம்பவம் – ஏறாவூரில் அதிர்ச்சிஏறாவூர் 5ஆம் குறிச்சி...
31/05/2026

பத்து வயது தங்கையை 15 வயது சகோதரன் கழுத்து நெரித்து கொலை செய்த துயரச் சம்பவம் – ஏறாவூரில் அதிர்ச்சி

ஏறாவூர் 5ஆம் குறிச்சியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்றில், 10 வயது சிறுமி ஒருவர் தனது 15 வயது சகோதரனால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் முறையே 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களுக்கு இடம்பெயர்ந்திருந்தன. பின்னர் அந்த முகாமில் வசித்த திருகோணமலையைச் சேர்ந்த ஆணும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டு, ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றனர்.

சுமார் 35 ஆண்டுகள் அகதி முகாம்களில் வாழ்ந்த பின்னர், குடியுரிமை தொடர்பான சிக்கல்களால் தாய்நாட்டிற்கு திரும்ப முடிவு செய்த இக்குடும்பம், 07.02.2026 அன்று இலங்கைக்கு வந்தது. ஆரம்பத்தில் செங்கலடியில் தங்கியிருந்த அவர்கள், பின்னர் ஏறாவூர் 5ஆம் குறிச்சி வெற்றிவேல் வீதியில் வீடு ஒன்றை வாங்கி 05.04.2026 முதல் அங்கு வசித்து வந்துள்ளனர்.

குழந்தைகளின் தந்தை புகைப்பட மற்றும் ஸ்டூடியோத் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், தாய் தனது தாயாரின் உடல்நலக் காரணமாக 19.05.2026 அன்று இந்தியா சென்றிருந்தார். இதனால் வீட்டில் தந்தையும் இரு பிள்ளைகளும் மட்டுமே இருந்தனர்.

28.05.2026 அன்று காலை மகனை தனியார் வகுப்பிற்கு அனுப்பிவிட்டு, மகளை ஒரு பிறந்தநாள் நிகழ்வின் புகைப்படப் பணிக்காக தந்தை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து, இரு பிள்ளைகளையும் வீட்டில் இருக்குமாறு கூறி, உணவு தயாரித்து வைத்திருப்பதாகவும், தாய் தொலைபேசியில் அழைத்தால் பேசுமாறும் அறிவுறுத்தி தனது கைப்பேசியை அவர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

பிற்பகலில் தந்தை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் பதில் கிடைக்காததால், மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மகள் குளியலறையில் நீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் வாளிக்குள் தலை அமிழ்ந்த நிலையில் கிடந்ததை கண்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி, சிறுமியின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகக் கண்டறிந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

இதற்கிடையில் இந்தியாவில் இருந்த தாய் 29.05.2026 அன்று நாடு திரும்பிய பின்னர், மகனை தனியாக விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவது தொடர்பாக தங்கையுடன் ஏற்பட்ட தகராறின் போது, கோபமடைந்த சிறுவன் தங்கையைத் தாக்கி கீழே தள்ளியதுடன், கைகளால் கழுத்தை நெரித்ததாகவும், பின்னர் பயத்தால் சம்பவத்தை மறைக்க முயன்று குளியலறையில் நீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் தங்கையை வைத்துவிட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவலை பெற்றோர் உடனடியாக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சிறுவன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

30.05.2026 அன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கைகளால் கழுத்தை நெரித்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குறித்த சிறுவன் சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த துயரச் சம்பவம் குடும்பங்களிடையே குழந்தைகளின் நடத்தை, கோபக் கட்டுப்பாடு மற்றும் கைத்தொலைபேசி பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற இந்த துயரமான சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. 😢அம்பாந்தோட்டை களமெட்டிய கடற்பகுதியில் கடலில்...
31/05/2026

இலங்கையில் இடம்பெற்ற இந்த துயரமான சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. 😢

அம்பாந்தோட்டை களமெட்டிய கடற்பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று மாணவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். தங்கள் பிள்ளைகளை இழந்து துயரத்தில் வாடும் பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சம்பவம் நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகளில் மறைந்திருக்கும் ஆபத்துகளை மீண்டும் நினைவூட்டுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பதும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பயணங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதும் மிகவும் அவசியமாகும்.

உயிரிழந்த மாணவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தைத் தாங்கும் மனவலிமை கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

வைபவ் சூர்யவன்ஷி குறித்து குமார் சங்கக்கார கூறியது 🗣️,"இந்த சீசனில் எங்கள் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர் வை...
30/05/2026

வைபவ் சூர்யவன்ஷி குறித்து குமார் சங்கக்கார கூறியது 🗣️,

"இந்த சீசனில் எங்கள் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

இந்த சீசன் முழுவதும் அவர் பேட்டிங் செய்த விதம் உண்மையிலேயே அற்புதம். ஒரு சீசனில் 600-700 ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் 240-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 600-700 ரன்கள் எடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

ஒரு சாதாரண கிரிக்கெட் வீரரால் இப்படி ஒரு காரியத்தை செய்வது மிகவும் கடினம். ஒரு அசாதாரணமான, தனித்துவமிக்க வீரரால் மட்டுமே இந்த அளவிலான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த முடியும். வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவின் மிகச்சிறந்த சொத்துக்களில் ஒருவராக மாறி வருகிறார், அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் (I take my hat off to him)

சூர்யவன்ஷிக்கு 30 கோடியில் வீடு’ 50 கோடிக்கு செக்: மும்பை இந்தியன்ஸ் சலுகை கொடுத்ததா?ஐபிஎல் 2021 சீசனுக்காக நடைபெற்ற மெக...
29/05/2026

சூர்யவன்ஷிக்கு 30 கோடியில் வீடு’ 50 கோடிக்கு செக்: மும்பை இந்தியன்ஸ் சலுகை கொடுத்ததா?

ஐபிஎல் 2021 சீசனுக்காக நடைபெற்ற மெகா ஏலத்திற்கு பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறது. இத்தனைக்கும் அணியில் திறமையான வீரர்கள் பலரும் இருந்து சொதப்புவதுதான் சோகத்திலும் சோகம்.

https://x.com/PantVerse/status/2059669146946977879?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2059669146946977879%7Ctwgr%5E8427217526b310289df7f161601ed911a2859487%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Fsports%2Fcricket%2Fiplt20%2Fnews%2Fvaibhav-sooryavanshi-offered-30-crore-mumbai-flat-by-mumbai-indians-fact-check%2Farticleshow%2F131368523.cms

இந்நிலையில், ஐபிஎல் 2026 சீசனிலும் தொடர்ச்சியாக சொதப்பி 4 வெற்றிகளை மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தை பிடித்ததால், அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த பலவீனத்தை ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக சரி செய்து, மீண்டும் பலமிக்க அணியாக உருவெடுக்க தற்போது இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வேலையை துவங்கிவிட்டது.

குறிப்பாக, ஓபனர் இடத்தில் இருந்து ரோஹித் சர்மாவை வெளியேற்றி, அவருக்கு மாற்றாக வைபவ் சூர்யவன்ஷியை கொண்டுவர, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மறைமுக டீலிங்கில் ஈடுபடுவதாக, ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, மும்பையில் சூர்யவன்ஷிக்கு 30 கோடியில் வீடு, 50 கோடிக்கு செக், இன்னும் சகல வசதிகளை செய்து தவறுவதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், திரைமறைவு பேரம் பேசுவதாக செய்திகள் வெளியான நிலையில், ரசிகர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சிலரோ, இந்த விஷயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கு தெரிந்ததும், ஐபிஎல் நிர்வாகத்திடம் சொல்லி, இந்த பேரத்தை தடுத்து நிறைத்துவிட்டதாகவும் சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மை இல்லை: இந்நிலையில், இப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்பது, ஐபிஎல் நிர்வாகத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடும் விதிமுறை இருக்கு: ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, ஒரு அணி நேரடியாக மற்றொரு அணி வீரரிடம், அணிக்கு வாருங்கள் என கோரிக்கை வைக்க முடியாது. இப்படி ஒரு விஷயம் ஒருவேளை நடைபெற்றால், இது ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்தவரை, தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும். இதனால், அந்த வீரர் மற்றும் அந்த அணிக்கு இரண்டு வருடங்கள் வரை தடை விதிக்கும் அளவுக்கு கடும் விதிமுறை இருக்கிறது.

ஒரேயொரு வழிதான் இருக்கிறது: ஒருவேளை, வைபவ் சூர்யவன்ஷி, தானாக முன்வந்து, தன்னை மும்பை இந்தியன்ஸுக்கு டிரேடிங் செய்யுங்கள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்து, அந்த அணி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வைபவ் சூர்யவன்ஷியால் மும்பை இந்தியன்ஸுக்கு செல்ல முடியும்.

இப்படி நடந்திருக்கிறதா? வீரர்கள், தங்களாகவே அணியைவிட்டு வெளியேறிய நிகழ்வுகள் இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடரில் கோப்பை வென்றப் பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தன்னை அணியில் இருந்து விடுவித்துவிடுங்கள் எனக் கேட்டதும், அவரை விடுவித்தனர். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், சஞ்சு சாம்சனை, சிஎஸ்கேவுக்கு டிரேடிங் செய்தது.

ஐபிஎல் 2021 சீசனுக்கான மெகா ஏலத்தில், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைடன்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்தது. மீண்டும், 2 வருடங்களுக்கு பிறகு குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஹர்திக் பாண்டியா திரும்பினார். இப்படி, சில அரிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

ஆகையால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், நேரடியாக வைபவ் சூர்யவன்ஷியிடம் பேச்சு வார்த்தை நடத்தவே வாய்ப்பில்லை என்ற நிலைமை இருக்கிறது.

கத்தாரில் நடைபெற்ற கண்டி தகன பிரதேச மக்களின் ஒன்று கூடல்.
29/05/2026

கத்தாரில் நடைபெற்ற கண்டி தகன பிரதேச மக்களின் ஒன்று கூடல்.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் புதிய கடல்சார் கட்டுப்பாடு! 🇮🇷🚢📅 21 மே 2026ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நுழையும் அனைத்து வணிக ம...
21/05/2026

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் புதிய கடல்சார் கட்டுப்பாடு! 🇮🇷🚢

📅 21 மே 2026

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நுழையும் அனைத்து வணிக மற்றும் போர்க்கப்பல்களும் இனி ஈரானின் முன் அனுமதி பெற வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. ⚠️

“இந்தப் பகுதி வழியாகச் செல்லும் அனைத்து போக்குவரத்தும் ஈரானின் ஒருங்கிணைப்பின் கீழ் மட்டுமே நடக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.

உலக எண்ணெய் மற்றும் கடல் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச வர்த்தக பாதிப்பு குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

அமெரிக்க இஸ்ரேல் செல்லும் இடங்களில் இப்படித்தான் ஜனநாயகம், மனித உரிமை, அபிவிருத்தி எல்லாம் இருக்கும்.Nizam Salih
20/05/2026

அமெரிக்க இஸ்ரேல் செல்லும் இடங்களில் இப்படித்தான் ஜனநாயகம், மனித உரிமை, அபிவிருத்தி எல்லாம் இருக்கும்.

Nizam Salih

**අතුරුදහන් වූ පසුම්බියක් (Wallet) 🚨**📍 **අතුරුදහන් වූ ස්ථානය:** දිගන නගරය (Digana Town)👜 **පසුම්බිය තුළ තිබූ වැදගත් දේව...
19/05/2026

**අතුරුදහන් වූ පසුම්බියක් (Wallet) 🚨**
📍 **අතුරුදහන් වූ ස්ථානය:** දිගන නගරය (Digana Town)
👜 **පසුම්බිය තුළ තිබූ වැදගත් දේවල්:**
• ජාතික හැඳුනුම්පත (NIC Card)
• රියදුරු බලපත්‍රය (Driving Licence)
• බැංකු කාඩ්පත් (Bank Cards)
📞 **ලැබුණු අයෙක් වේ නම් කරුණාකර සම්බන්ධ කරගන්න:**
+94 77 717 7084
කරුණාකර මෙම පණිවිඩය හැකිතාක් Share කරන්න.
කෙනෙකුගේ වැදගත් ලියකියවිලි ටික ආරක්ෂිතව නැවත ලබාගැනීමට ඔබ කරන එක Share එකක් ලොකු උදව්වක් වනු ඇත

🚨 காணவில்லை(Wallet) 🚨

📍 காணாமல் போன இடம்: திகன நகரப் பகுதி (Digana Town)

👜 பணப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள்:
• தேசிய அடையாள அட்டை (NIC)
• ஓட்டுநர் உரிமம்
• வங்கி அட்டைகள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள்

📞 யாருக்காவது இந்த பணப்பை கிடைத்தால் தயவுசெய்து உடனடியாக தொடர்பு கொள்ளவும்:
+94 77 717 7084

இந்த செய்தியை முடிந்தவரை Share செய்யுங்கள்.
ஒருவரின் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக மீண்டும் பெற்றுத்தர உங்கள் ஒரு பகிர்வு கூட பெரிய உதவியாக அமையும்.

கம்பளை - நாரண்விட்ட பகுதியில் கூரை இருந்து தவறி விழுந்த தந்தையின் கீழ், சிக்கி மூன்று வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக உயிரி...
18/05/2026

கம்பளை - நாரண்விட்ட பகுதியில் கூரை இருந்து தவறி விழுந்த தந்தையின் கீழ், சிக்கி மூன்று வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கம்பளை - நாரண்விட்ட, பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், வீட்டின் கூரை பகுதியில் இருந்த நீர் குழாயை எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார்.

சிறுவனுக்கு நேர்ந்த கதி
இதன்போது, தந்தை மேலே ஏறுவதை மூன்று வயது சிறுவன் கீழே நின்று பார்த்து கொண்டிருக்கையில், மாடிப்பகுதியிலிருந்த ஒரு பலகை உடைந்து, தந்தை சிறுவன் மேல் விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த தந்தையும் மகனும் கம்பொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த தந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கம்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digana News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share