29/05/2026
சூர்யவன்ஷிக்கு 30 கோடியில் வீடு’ 50 கோடிக்கு செக்: மும்பை இந்தியன்ஸ் சலுகை கொடுத்ததா?
ஐபிஎல் 2021 சீசனுக்காக நடைபெற்ற மெகா ஏலத்திற்கு பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறது. இத்தனைக்கும் அணியில் திறமையான வீரர்கள் பலரும் இருந்து சொதப்புவதுதான் சோகத்திலும் சோகம்.
https://x.com/PantVerse/status/2059669146946977879?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2059669146946977879%7Ctwgr%5E8427217526b310289df7f161601ed911a2859487%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Fsports%2Fcricket%2Fiplt20%2Fnews%2Fvaibhav-sooryavanshi-offered-30-crore-mumbai-flat-by-mumbai-indians-fact-check%2Farticleshow%2F131368523.cms
இந்நிலையில், ஐபிஎல் 2026 சீசனிலும் தொடர்ச்சியாக சொதப்பி 4 வெற்றிகளை மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தை பிடித்ததால், அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த பலவீனத்தை ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக சரி செய்து, மீண்டும் பலமிக்க அணியாக உருவெடுக்க தற்போது இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வேலையை துவங்கிவிட்டது.
குறிப்பாக, ஓபனர் இடத்தில் இருந்து ரோஹித் சர்மாவை வெளியேற்றி, அவருக்கு மாற்றாக வைபவ் சூர்யவன்ஷியை கொண்டுவர, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மறைமுக டீலிங்கில் ஈடுபடுவதாக, ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, மும்பையில் சூர்யவன்ஷிக்கு 30 கோடியில் வீடு, 50 கோடிக்கு செக், இன்னும் சகல வசதிகளை செய்து தவறுவதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், திரைமறைவு பேரம் பேசுவதாக செய்திகள் வெளியான நிலையில், ரசிகர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் சிலரோ, இந்த விஷயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கு தெரிந்ததும், ஐபிஎல் நிர்வாகத்திடம் சொல்லி, இந்த பேரத்தை தடுத்து நிறைத்துவிட்டதாகவும் சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மை இல்லை: இந்நிலையில், இப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்பது, ஐபிஎல் நிர்வாகத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடும் விதிமுறை இருக்கு: ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, ஒரு அணி நேரடியாக மற்றொரு அணி வீரரிடம், அணிக்கு வாருங்கள் என கோரிக்கை வைக்க முடியாது. இப்படி ஒரு விஷயம் ஒருவேளை நடைபெற்றால், இது ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்தவரை, தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும். இதனால், அந்த வீரர் மற்றும் அந்த அணிக்கு இரண்டு வருடங்கள் வரை தடை விதிக்கும் அளவுக்கு கடும் விதிமுறை இருக்கிறது.
ஒரேயொரு வழிதான் இருக்கிறது: ஒருவேளை, வைபவ் சூர்யவன்ஷி, தானாக முன்வந்து, தன்னை மும்பை இந்தியன்ஸுக்கு டிரேடிங் செய்யுங்கள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்து, அந்த அணி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வைபவ் சூர்யவன்ஷியால் மும்பை இந்தியன்ஸுக்கு செல்ல முடியும்.
இப்படி நடந்திருக்கிறதா? வீரர்கள், தங்களாகவே அணியைவிட்டு வெளியேறிய நிகழ்வுகள் இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடரில் கோப்பை வென்றப் பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தன்னை அணியில் இருந்து விடுவித்துவிடுங்கள் எனக் கேட்டதும், அவரை விடுவித்தனர். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், சஞ்சு சாம்சனை, சிஎஸ்கேவுக்கு டிரேடிங் செய்தது.
ஐபிஎல் 2021 சீசனுக்கான மெகா ஏலத்தில், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைடன்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்தது. மீண்டும், 2 வருடங்களுக்கு பிறகு குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஹர்திக் பாண்டியா திரும்பினார். இப்படி, சில அரிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
ஆகையால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், நேரடியாக வைபவ் சூர்யவன்ஷியிடம் பேச்சு வார்த்தை நடத்தவே வாய்ப்பில்லை என்ற நிலைமை இருக்கிறது.