Udunuwara Update

Udunuwara Update இதுவும் கடந்து போகும்

10/03/2026
கடைசி 10 நோன்பை பிரயொசனப்படுத்திக்கொல்லுங்கள்
10/03/2026

கடைசி 10 நோன்பை பிரயொசனப்படுத்திக்கொல்லுங்கள்

Elamaldeniya Musjid Udunuwara Kandy Masha allah
07/03/2026

Elamaldeniya Musjid
Udunuwara Kandy
Masha allah

23/02/2026

Horsetail Fall – USA 🇺🇸
🔥🌊 நீர்வீழ்ச்சி… ஆனால் சில நாட்களில் அது “தீப்போல்” மின்னும்!

💞 நோன்பை முறிக்கும் 6 செயல்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞• இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும்! நோன்ப...
19/02/2026

💞 நோன்பை முறிக்கும் 6 செயல்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும்! நோன்பு என்பது அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல், ஆசைகள் என அனைத்தையும் தவிர்த்து இருப்பதை நோன்பு என்போம்!

• நோன்பை முறிக்க கூடியவைகளை அரபியில் ‘ முப்திலாதுஸ் ஸவ்ம் ’ (நோன்பை முறிப்பவை) கூறப்படும்! நோன்பை வைக்க கூடிய ஒவ்வொரு முஸ்லீமும் எந்த செயல்கள் செய்தால் நோன்பு முறிந்து விடும் என்பதை அறிந்து வைத்து இருக்க வேண்டும்! இன்ஷாஅல்லாஹ் அவற்றை பற்றி பார்ப்போம்!

1) கணவன் மனைவி சேர்வது :

• நோன்பை முறிக்கும் விஷயங்களில் இதுவே மிகவும் கடுமையானதும், மிகவும் பாவமான ஒரு செயலாகும்.

• ரமலானில் நோன்பு வைத்த நிலையில் வேண்டுமென்றே அல்லது சொந்த விருப்பப்படி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விந்து வெளியானாலும், வெளியாக விட்டாலும் நோன்பு முறிந்து விடும்.

• நோன்பு முறிந்தாலும் அவர் சூரியன் மறையும் வரை நோன்பை விட கூடாது அதன் பின்பு கடுமையான பரிகாரம் செய்ய வேண்டும்.

❤️ பரிகாரம் :

1) தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லது,

2) 60 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2600)

• கணவன் மனைவி சேர்வது தவிர, நோன்பை முறிக்கும் வேறு எந்த விஷயத்திற்கும் பரிகாரம் கிடையாது.

2) வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல் :

• ஒருவர் அறியாத நிலையில் அல்லது மறதியாக உணவு அல்லது ஏதேனும் பானம் வாய் வழியாகவோ அல்லது மூக்கின் வழியாகவோ உடலினுள் சென்று விட்டால் நோன்பு முறியாது ஆனால் வேண்டுமென்றே இவ்வாறு நடந்தால் நம்முடைய நோன்பு முறிந்து விடும்!

(சூரத்துல் : அல் பகரா : 187)

• நாம் ஒழு செய்யும் பொழுது கூட கவனமாக ஒழு செய்ய வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீ தண்ணீரை நன்கு மூக்கினுள் செலுத்திச் சுத்தம் செய்! ஆனால், நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர (அப்போது அவ்வாறு செய்யாதே)

(நூல் : சுனன் திர்மிதி : 788)

• வாசனை நுகர்வதால் நோன்பு முறியாது!

❤️ மறதியாக உண்ணுதல், பருகி விட்டால்?

• யார் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் மறதியின் காரணமாக சாப்பிடுகிறாரோ அல்லது தண்ணீர் பருகிவிடுகிறாரோ (அவர் மீது எந்த குற்றமும் இல்லை) அவரின் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும்!

• என்றாலும், அவருக்கு அவர் நோன்பாளி என்பது நினைவு வந்து விட்டால் அதை அப்படியே நிறுத்தி விட வேண்டும். மேலும் , வாயில் உள்ளவற்றை துப்பி விட வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்! ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1933)

• மேலும், நோன்பாளி மறதியின் காரணமாக தண்ணீர் குடிப்பதையோ, சாப்பிடுவதையோ ஒருவர் பார்த்தால் அவருக்கு நோன்பாளி என்று நியாபகமூட்டுவது அவர் மீது கடமையாகும்!

3) உண்ணுதல் - பருகுதலுக்கு இணையானவை :

• சொட்டு மருந்து : நோன்பாளி மூக்கிற்கு (அ) காதுக்கு சொட்டு மருந்து விடுவதை முடிந்த அளவுக்கு தவிர்த்து கொள்ள வேண்டும்!

• காரணம் : சொட்டு மருந்தின் சுவை மூக்கு வழியாக அல்லது காதின் வழியாக வயிற்றை அடைய வாய்ப்புள்ளது. அதன் சுவை தொண்டைக்குழியை அடையாமல் இருக்குமானால் அவ்வாறு செய்வது நோன்பை முறிக்காது ! ஆனால் தொண்டையினுள் சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்!

(ஃபதாவா : ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) : 15 / 261)

• ஊசி மற்றும் குளுகோஸ் : உடல் சரி இல்லாதவர்கள் ஊசி போட்டு கொள்ள அனுமதி உண்டு அவரின் நோன்பு முறியாது!

• ஆனால் அந்த ஊசி போட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும் என்றால் நாம் ஊசி செலுத்திக்க கூடாது அல்லது நோன்பை விட்டு விட வேண்டும்! நோயாளிகளுக்கு நோன்ப விட அனுமதி உண்டு!

• குளுகோஸ் பொறுத்த வரை அதை நமது உடலில் செலுத்தினால் நோன்பு முறிந்து விடும் காரணம் அதை உடலில் ஏற்றினால் உடலின் சக்தி அதிகரிக்கும் அதனால் நோன்பு முறிந்து விடும்!

(லஜனதுத் தாயிமா லில்புஹுஸில் இல்மிய்யா வல் இஃப்தா : 5176)

4) வேண்டும் என்றே விந்து வெளியாக்குதல் :

• உடலுறவு அல்லாத வேறு வழிகளில் ஒருவர் இச்சையுடன் விந்தை வெளிப்படுத்தினால் அவரின் நோன்பு முறிந்து விடும்! அவர் அல்லாஹ்விடம் மனம் வருந்தி தவ்பா செய்ய வேண்டும் மேலும் முறிந்த நோன்பை மீண்டும் களா செய்ய வேண்டும்!

ஷேக் முகம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) கூறினார்கள் :

• ஒரு நபருக்கு கனவின் மூலம் விந்து வெளியாகினால் நோன்பு முறியாது ஆனால் இவை இல்லாமல் சுய இன்பம் மூலம் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடும்! மீண்டும் அவர் நோன்பை களா செய்ய வேண்டும்!

• ஆனால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தேவையில்லை! என்றாலும் அவர் அந்த பாவத்தில் இருந்து விலகி அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்!

(ஃபதாவா : அர்கானுல் ஈமான் : 2/661)

5) வேண்டும் என்றே வாந்தி எடுப்பது :

• ஒருவருக்குத் தானாக வாந்தி வந்தால் நோன்பை அது முறிக்காது! ஒருவர் தானாக முயற்சித்து வாந்தியெடுத்தால் அது நோன்பை முறிக்கும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யாருக்கு வாந்தி வந்ததோ அவர் அந்த நோன்பைக் கழா செய்ய வேண்டியதில்லை! யார் வேண்டுமென்றே வாந்தியெடுத்தாரோ அவர் அதை கழாச் செய்யட்டும்!

(நூல் : சுனன் திர்மிதி : 720)

6) ஹைலு அல்லது நிபாஸ் ஏற்படுதல் :

• ஒரு பெண்ணுக்கு நோன்பு வைத்த நிலையில் மாதவிடாய் அல்லது நிபாஸ் ஏற்பட்டு விட்டால் அவளின் நோன்பு அந்த நிமிடமே முறிந்து விடும்! அது பகலின் ஆரம்பமாக இருந்தாலும் சரி! சூரியன் மறைவதற்கு ஒரு நிமிடம் முன்னால் ஏற்பட்டாலும் சரி! விட்ட நோன்புகளை கணக்கு செய்த பின்னர் களா செய்ய வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 560)

04/02/2026
இந்தப் படம் ஒரு கசப்பான உண்மையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. பல வீடுகளில் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு உடல்...
28/01/2026

இந்தப் படம் ஒரு கசப்பான உண்மையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. பல வீடுகளில் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்ந்து போயிருக்கும்போது, கணவன்மார்கள் அவர்களின் பழைய அழகைத் தேடுவதும், சமூக வலைதளங்களில் மற்ற பெண்களின் முகத்தைப் பார்த்து ரசிப்பதும் மிகப்பெரிய அநீதியாகும்.

உங்கள் மனைவியின் தழும்புகள் சொர்க்கத்தின் அடையாளங்கள்!
ஒரு பெண் தாயாக மாறும்போது தனது அழகை, ஆரோக்கியத்தை, தூக்கத்தை என அனைத்தையும் தியாகம் செய்கிறாள். ஆனால், அதே பெண் தன் குழந்தையை கையில் ஏந்தியிருக்கும்போது, கணவன் தன் அலைபேசியில் யாரோ ஒரு அந்நியப் பெண்ணின் அழகைப் பார்த்து ரசிப்பது எவ்வளவு பெரிய துரோகம்?
குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் பாடம்:
இஸ்லாம் பெண்ணைப் போற்றுகிறது. குறிப்பாக ஒரு மனைவியை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் சிறந்த வழிகாட்டி.
* சிறந்த மனிதன் யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரென்றால், அவர் தன் மனைவியிடம் சிறந்த முறையில் நடப்பவரே ஆவார்." (திர்மிதி)
* பார்வையைப் பேணுதல்:
அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) முஃமினான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளட்டும்." (அல்குர்ஆன் 24:30)
* அன்பும் கருணையும்:
அல்லாஹ் தம்பதிகளுக்கிடையே அன்பையும் கருணையையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறான். அந்த அன்பு, மனைவி சோர்வாக இருக்கும்போது அவளுக்குத் தோள் கொடுப்பதில்தான் இருக்கிறது.
ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்:
* பார்வையைத் தாழ்த்துங்கள்: திரையில் மின்னும் செயற்கை அழகை விட, உங்கள் குழந்தையை சுமந்து களைத்துப் போயிருக்கும் உங்கள் மனைவியின் முகம் ஆயிரம் மடங்கு புனிதமானது.
* அவள் தியாகத்தை மதியுங்கள்: பிரசவத்தின் போது அவள் அனுபவித்த மரண வலி, அவளது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் உங்களுக்காகவும் உங்கள் வாரிசுக்காகவும் தான்.
* துணையாக நில்லுங்கள்: அலைபேசியை ஓரம் வைத்துவிட்டு, தூக்கமில்லாமல் தவிக்கும் அவளுக்கு ஒரு மணிநேரம் குழந்தையைப் பிடித்து உதவி செய்யுங்கள். அதுவே நீங்கள் செய்யும் சிறந்த இபாதத்.
முடிவுரை: உங்களுக்காகத் தன்னைத் தொலைத்தவளை, அவள் அழகை இழந்த பிறகு புறக்கணிப்பது ஆண்மை அல்ல. அவளது தளர்ந்த தோற்றத்திலும் அவளை மகாராணியாகப் பார்ப்பதே உண்மையான இஸ்லாமியப் பண்பு.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்புத்தியையும், குடும்பத்தில் நிம்மதியையும் தருவானாக! ஆமீன்.

02/01/2026

History of Kandy Clock Tower
கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் - வரலாறு

26/12/2025

இந்த ஆண்டு (2025) எனக்கு பல விஷயங்களை கற்றுத்தந்தது —
சிரமங்களோடு வாழ்வது எப்படி,
இரட்டை முகம் கொண்ட மனிதர்களை சமாளிப்பது எப்படி,
பொறுமையை எப்படி காக்க வேண்டும்,
சுயநலமான மனிதர்களோடு எப்படி வாழ வேண்டும் என்பதையும்.

மொத்தத்தில், Alhamdulillah எல்லாவற்றிற்கும் ♥️
என்னை எப்போதும் நேசித்து, வழிநடத்தி, பாதுகாக்கும் என் சகலவல்ல அல்லாஹ்வுக்கு நன்றி.

17/12/2025

என்ன ஒரு வாழ்க்கை! 😔

இரத்தப் புற்று நோயால் உயிருக்காக போராடும் சிறுமி ஹிமா முடிந்தால் எமது பிள்ளையாக நினைத்து உதவுங்கள் அதிகமாக பகிருங்கள் அஸ...
14/12/2025

இரத்தப் புற்று நோயால் உயிருக்காக போராடும் சிறுமி ஹிமா

முடிந்தால் எமது பிள்ளையாக நினைத்து உதவுங்கள் அதிகமாக பகிருங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு..

அல்லவெவ கிராமத்தைச் சேர்ந்த, அசன் மற்றும் ஜனூஃபா என்பவர்களின் அன்பு மகள் ஹிமா என்ற 5 வயது சிறுமி, #இரத்தப்_புற்றுநோய் காரணமாக தற்போது #மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருடைய மருத்துவச் செலவுகளை ஏற்கக்கூடிய #பொருளாதார வசதி குடும்பத்திற்கு #இல்லாததால் உங்கள் அன்புக்கரம் மூலம் முடிந்த அளவு #உதவிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு குடும்பத்தின் #கனவுகள் சிதறாமல், மலர்ந்திருக்கும் #வாழ்க்கை வெளிச்சம் காண, உங்களின் சிறிய பங்களிப்பே ஒரு #உயிரைக் காக்கும் மிகப் பெரிய ஆதரவாக இருக்கும்.

மற்றும் உங்களது பொன்னான #துஆக்களில் அந்த சிறுமியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்🤲

#வங்கி_இல.

150200160045399
Januba abdul affar
Peoples bank
Kebithigollewa

number :

0762852696
(AF janoofa)

உதவி செய்யவும் & #பகிரவும்.
உங்கள் பகிர்வும் ஒரு உயிரைக் காப்பாற்றலாம்..

12/12/2025

Masha Allah, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட Gelioya மற்றும் Gampola பகுதிகளுக்கு வந்து, அங்கு உள்ள அனைத்து வீடுகளையும் சுத்தம் செய்து உதவி செய்து வரும் Galle, Beruwala மற்றும் பல இடங்களில் இருந்து வந்த சகோதரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

அவர்கள் எங்களை தங்களுடைய சொந்த வீட்டினராகவே நினைத்து, ஒவ்வொரு வீடும் அக்கறையுடன் சுத்தம் செய்து உதவி செய்து வருகிறார்கள். Alhamdulillah, இது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மிகப் பெரிய ஆதரவாகவும் ஆறுதலாகவும் உள்ளது.

சில சமயங்களில் நமது சொந்த உறவுகளும் வந்து பார்க்க முடியாமல் இருக்கும் நேரங்களில்,
இந்த சகோதரர்கள் நமக்காக அவர்களின் வீடு போலவே எங்கள் வீடுகளையும் சுத்தம் செய்து உதவி செய்கிறார்கள் என்பது மிகப் பெரும் நன்மை.

Alhamdulillah, அல்லாஹ் அவர்கள் செய்த உதவிகளை ஏற்று, பல மடங்கு நன்மை வழங்கி ஆசீர்வதிக்கட்டும். 🤲✨

UDUNUWARA UPDATES

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udunuwara Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share