Todayceylon PLUS

Todayceylon PLUS நம்பகமான செய்திகளை ஒரே இடத்தில் அறிந்துகொள்ள www.Todayceylon.com VCN

09/07/2026

மனித ஜாதிக்கு மட்டும் புரியும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரஹாதஹு  💔 மற்றவரின் துன்பம் நமக்கு மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கக் கூடாது.இன்று அவர்...
09/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரஹாதஹு 💔 மற்றவரின் துன்பம் நமக்கு மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கக் கூடாது.

இன்று அவர் சோதிக்கப்படுகிறார், நாளை நாம் சோதிக்கப்படலாம். ஒரு முஸ்லிமின் இதயம் மற்றவரின் வேதனையைக் கண்டு மகிழாது; மாறாக அவருக்காக துஆ செய்யும்.

ஒருவரின் கஷ்டத்தைப் பார்த்து கேலி செய்வதும், அவமானப்படுத்துவதும், மகிழ்ச்சி அடைவதும் அல்லாஹ்வுக்கு விருப்பமற்ற செயலாகும்.

🤲 "யா அல்லாஹ்! துன்பத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியையும், சோதனையில் இருப்பவர்களுக்கு பொறுமையையும் வழங்குவாயாக. பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழும் இதயத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக." ஆமீன்

தாய்லாந்தில் ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்க முத்திரை மோதிரம் மீட்பு!தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள ‘ட...
08/07/2026

தாய்லாந்தில் ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்க முத்திரை மோதிரம் மீட்பு!
தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள ‘டான் யாய் தாங்’ (Don Yai Thong) என்ற கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கு இது மிக முக்கிய வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நெல் வயல் ஒன்றில் வெண்கல முரசுத் துண்டுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து தொல்லியல் துறை கடந்த பிப்ரவரி முதல் அங்கு தீவிர அகழாய்வை மேற்கொண்டு வருகிறது.
இத்தளம் சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு இதுவரை 8 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பழங்கால ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள 4-ஆம் எண் எலும்புக்கூட்டின் அருகில் இரண்டு தங்க மோதிரங்கள் கிடைத்தன. அதில் ஒன்றில் பழங்கால இந்திய எழுத்து வடிவமான பிராமி (தமிழி) எழுத்துக்கள் தலைகீழாகச் செதுக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் கல்வெட்டு ஆய்வாளர்களின் முதற்கட்ட ஆய்வில், இந்த மோதிரத்தில் ‘புசரகிதாஸ’ (பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்) எனப் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழறிஞர்களின் கூற்றுப்படி, மெழுகிலோ அல்லது களிமண்ணிலோ அச்சடிப்பதற்காகத் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்தத் தமிழ்ப் பெயர் ‘அளரி வைரதன்’ என்பதைக் குறிக்கிறது. இதில் ‘அளரி’ என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல்லாகும்.
இந்த மோதிரம் பண்டைய இந்தியாவின் வணிகர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருடையதாக இருக்கலாம் எனத் தாய்லாந்து தொல்லியல் துறை கருதுகிறது. ஏற்கனவே தாய்லாந்தின் கிராபி மற்றும் சூம்போன் ஆகிய கடலோரப் பகுதிகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு பண்டைய கடல்வழி வணிகப் பாதையில் தமிழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது

இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்   முதலுதவி பயிற்சி_முகாம்.அவசரகால சூழ்நிலைகளில் சரியான முதலுதவியை வழங்கும் திறன...
08/07/2026

இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதலுதவி பயிற்சி_முகாம்.
அவசரகால சூழ்நிலைகளில் சரியான முதலுதவியை வழங்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் 2026.07.07ம் திகதி செவ்வாய்க்கிழமை வரிப்பத்தான்சேனை அல் - அமீன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பயிற்சிநெறியின் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். ஏ. எஸ். எம். பௌஷாட் அவர்கள் கலந்து கொண்டு விபத்துகள் மற்றும் திடீர் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மேலும் காயங்களுக்குக் கட்டுப் போடுதல் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துதல் தீக்காயங்கள் எலும்பு முறிவுகள் மயக்கம் மூச்சுத்திணறல் போன்ற அவசரநிலைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் CpR, செயன்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன.
பயிற்சியின் போது மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பித்தெளிவுகளைப் பெற்றுக் கொண்டனர்.
செயன்முறைப் பயிற்சிகளில் நேரடியாக பங்கேற்று முதலுதவித் திறன்களை நடைமுறையிலும் கற்றுக்கொண்டனர்.
இத்தகைய பயிற்சிகள் மாணவர்களிடையே பொறுப்புணர்வு தன்னம்பிக்கை மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்க்கும் என்பதுடன் எதிர்காலங்களிலும் இதுபோன்ற பயிற்சி முகாம்களை தொடர்ந்தும் நடத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இறக்காமம் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அல் - அமீன் மகா வித்தியாலயம்
அல் - மதீனா வித்தியாலயம் அஸ்-ஸபா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வானது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்புடன் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் அல் - அமீன் மகா வித்தியாலய பாடசாலை அதிபர் எஸ். எல். கலந்தர் லெப்பை பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ. எச். றகீப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். எம். கே. சாஜிதா முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். ஐ. பஸீனா உட்பட குறித்த பாடசாலைகளின் பொறுப்பு ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்

08/07/2026
சவூதி அரசின் அர்ப்பணிப்பான சேவைகளுக்கு சவூதி தூதுவரைச்சந்தித்து நன்றி தெரிவித்த ஹஜ் யாத்திரிகர்கள்ஹஜ் யாத்திரிகர்களுக்கு...
08/07/2026

சவூதி அரசின் அர்ப்பணிப்பான சேவைகளுக்கு சவூதி தூதுவரைச்சந்தித்து நன்றி தெரிவித்த ஹஜ் யாத்திரிகர்கள்
ஹஜ் யாத்திரிகர்களுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களுக்கிடையிலுமான சந்திப்பு நேற்று (07) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்றது.
சவூதி அரேபியத்தூதரகத்தின் வழிகாட்டலின் கீழ் இவ்வருடம் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய யாத்திரிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, அல்லாஹ்வின் விருந்தினர்களான (ஹஜ் யாத்திரிகர்கள்) மீது சவூதி அரசாங்கம் காட்டும் மகத்தான கவனிப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்காக புனித ஹரம் ஷரீஃபின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஆகியோருக்கு யாத்திரிகர்கள் தமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்படும் மிகச்சிறந்த முன்னெடுப்புகளில் "புனித ஹரம் ஷரீஃபின் பாதுகாவலரின் ஹஜ் விருந்தினர் திட்டம்" ஒன்றாகும் என்பது இச்சந்திப்பில் விசேடமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்திட்டம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சேவை செய்வதில் சவூதி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
யாத்திரிகர்கள் எவ்வித சிரமமுமின்றி, மன அமைதியுடன் தமது ஹஜ் கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்குத் தேவையான உயர்தர வசதிகளையும் சிறந்த கவனிப்பையும் சவூதி அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகக் கடுமையான சமூகப் புறக்கணிப்பு; ஜனாஸா தொழுகைக்கும் கட்டுப்பாடு!​​நிந்தவூ...
07/07/2026

நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகக் கடுமையான சமூகப் புறக்கணிப்பு; ஜனாஸா தொழுகைக்கும் கட்டுப்பாடு!


​நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் வியாபாரிகளின் மரண சடங்குகள் மற்றும் ஜனாஸா தொழுகைகள் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

​நேற்று உயிரிழந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் இறுதிக்கிரியைகள் தொடர்பாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். ரியாஸ் ஆதம் தலைமையில் நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

​இந்தக் கூட்டத்தில், நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ. ஜவ்பர், நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். நசீல் மற்றும் நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் சடலங்களை பொது மையவாடிகளில் அடக்கம் செய்யாமல், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேகமான இடத்தில் மட்டுமே அடக்கம் செய்ய வேண்டும் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

​மேலும், இத்தகைய நபர்களின் ஜனாஸா தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்துவதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும், அவர்களது வீட்டிலேயே தொழுகைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

​நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து போதைப்பொருள் புழக்கத்தை முற்றாக ஒழிப்பதற்கான காத்திரமான நடவடிக்கையாகவே இந்தத் தீர்மானம் பார்க்கப்படுகிறது.

06/07/2026

நீர்கொழும்பு சிறையின் இன்றைய நாளின் பரபரப்பு காட்சி.!!

நீர்கொழும்பு சிறையில் கைதிகளுக்கிடையில் கலவரம் 30க்கும் மேற்பட்ட கைதிகள் வைத்தியசாலையில் இருவர் உயிரிழப்பு!! பெண் கைதிகள...
05/07/2026

நீர்கொழும்பு சிறையில் கைதிகளுக்கிடையில் கலவரம் 30க்கும் மேற்பட்ட கைதிகள் வைத்தியசாலையில் இருவர் உயிரிழப்பு!! பெண் கைதிகள் சிறைச்சாலை கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையேயான மோதலால் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸின் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதலுக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Address

Kandy
32450

Alerts

Be the first to know and let us send you an email when Todayceylon PLUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Todayceylon PLUS:

Shortcuts

Share