We Are Sri Lankan

We Are Sri Lankan Okkama Srilankan

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாவால் உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்...
30/08/2026

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாவால் உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இடியாப்பம் ஒன்றின் விலையை 1 ரூபாவினாலும், அப்பம் ஒன்றின் விலையை 2 ரூபாவினாலும் உயர்த்தவும் அச்சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இத்தீர்மானங்களை எடுத்துள்ளது.

இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை கூடவுள்ளது.

அன்று கூடி, பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அன்று சொன்ன வார்த்தைகள் எல்லாம்இன்று காற்றில் எங்கோ போனது!!!கட்-அவுட்டுகளும் மாறிப்போன அரசியலும்!அரசியலில் அதிகாரத்தில் ...
29/08/2026

அன்று சொன்ன வார்த்தைகள் எல்லாம்
இன்று காற்றில் எங்கோ போனது!!!

கட்-அவுட்டுகளும் மாறிப்போன அரசியலும்!

அரசியலில் அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிப்பது எளிது. ஆனால், ஒருநாள் எதிர்க்கட்சியில் இருந்து முன்வைத்த அதே விமர்சனங்களை அதிகாரத்திற்கு வந்த பிறகும் தமக்குப் பொருந்தும் வகையில் கடைப்பிடிப்பதே உண்மையான அரசியல் நேர்மை.

ஒரு காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அநுரகுமார திசாநாயக்க, தேர்தல்களில் அரசியல் கட்சிகள் செலவிடும் பெரும் தொகைகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

குறிப்பாக, அரசியல் தலைவர்களின் அதிலும் ராஜபக்‌ஷாக்களின் பிரமாண்டமான கட்-அவுட்டுகளை சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறான கட்-அவுட்டுகளுக்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாகவும் கேள்வி எழுப்பினார். அவர் அப்போது அதுபற்றி பேசும்போது,

“தேர்தல்களில் ராஜபக்‌ஷாக்கள் பாரிய மக்கள் பணத்தை வீண்டிக்கிறார்கள், பாரிய கட்அவுட்களை வீதிகளில் வைக்கிறார்கள், ஒரு கட்-அவுட்டுக்கே குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் செலவாகிறது” என்றும்,

“ராஜபக்சாக்கள் இவ்வாறான கட்-அவுட்டுகளுக்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறார்கள், இது இந்தப் பொதுமக்களின் பணம்தானே?” என்றும் கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்வி அன்றைக்கு ராஜபக்சாக்களை நோக்கியதாக இருந்தது. ஆனால், அரசியலில் கேள்விகள் ஒருதலைப்பட்சமானவை அல்ல. இன்று அதே கேள்வி மீண்டும் எழுப்பப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இன்று வீதிகளில் காணப்படும் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் யாருடைய அரசியலை பிரதிபலிக்கின்றன?
அவற்றுக்குப் பின்னால் செலவிடப்படும் பணம் எங்கிருந்து வருகிறது?
இவற்றை அமைப்பவர்கள் யார்?
அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறதா? பொதுமக்களிடம் சிக்கனத்தையும் பொறுப்பையும் பேசும் அரசியல் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஏன் மீண்டும் அதே பழைய அரசியல் கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்?
அரசியல் மாறிவிட்டதா, அல்லது அரசியல்வாதிகளின் இடம் மட்டுமே மாறிவிட்டதா?

ராஜபக்சாக்கள் ஆட்சியில் இருந்தபோது, பிரமாண்டமான பதாகைகள், கட்-அவுட்டுகள், அரசியல் விளம்பரங்கள் ஆகியவை அதிகார ஆடம்பரத்தின் அடையாளங்களாக விமர்சிக்கப்பட்டன. மக்களின் பணத்தை வீணடிக்கும் அரசியல் கலாசாரத்திற்கு எதிராக மாற்றம் தேவை என்று கூறப்பட்டது.

அப்படியிருக்கையில், இன்று அதே காட்சிகள் வேறு அரசியல் நிறத்தில் தோன்றத் தொடங்கினால், பொதுமக்கள் கேள்வி கேட்பதில் என்ன தவறு?

ஒரு அரசியல் தலைவரை ஆதரிப்பது மக்களின் உரிமை. அவருடைய படத்தை வைத்து கட்-அவுட் வைப்பதும் ஆதரவாளர்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், ஒரு அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களது ஆதரவாளர்களிடையே பழைய அரசியல் கலாசாரமே மீண்டும் உருவாக அனுமதிக்கிறார்களா? என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி.

மாற்றம் என்பது ஆட்சியாளரின் முகம் மாறுவது மட்டுமல்ல. மாற்றம் என்பது அரசியலின் நடைமுறையும் மாறுவதுதான்.

நேற்று ராஜபக்சாக்கள் செய்தபோது அது வீண் செலவு என்றால், இன்று அநுரகுமாரவின் ஆதரவாளர்கள் செய்தால் மட்டும் அது அரசியல் அன்பின் வெளிப்பாடாக மாறிவிட முடியாது.

நேற்று “மக்களின் பணம்” என்று கேள்வி எழுப்பிய அரசியல், இன்று அதே காட்சியைப் பார்க்கும்போது அமைதியாக இருந்தால், மக்கள் இயல்பாகவே கேட்பார்கள் “அன்று கேட்ட கேள்வி இன்று உங்களுக்கும் பொருந்தாதா?” என்று.

அரசியலில் உண்மையான சோதனை எதிர்க்கட்சியில் இருக்கும்போது அல்ல; அதிகாரத்தில் இருக்கும்போதுதான்.

அன்று சொன்ன வார்த்தைகளை இன்று நினைவில் வைத்திருக்கிறோமா? அன்று விமர்சித்த அரசியல் கலாசாரத்தை இன்று நாமே உருவாக்குகிறோமா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகள் அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களுமே.

ஏனெனில், மாற்றம் என்பது ஒரு கட்சியின் பெயர் மாறுவது அல்ல; அரசியலின் முகமும் முறையும் மாறுவதுதான்.

அதிகாரத்தில் இருப்பவர் யார் என்பது முக்கியமல்ல. அதே தவறை யார் செய்தாலும், அது தவறுதான்.

🚨 முக்கிய அறிவிப்பு — இவரைப் பற்றிய தகவல் தேவை 🚨இந்த புகைப்படத்தில் உள்ள பெண்மணி மூன்று குழந்தைகளின் தாயார். இவர் பல மாத...
29/08/2026

🚨 முக்கிய அறிவிப்பு — இவரைப் பற்றிய தகவல் தேவை 🚨

இந்த புகைப்படத்தில் உள்ள பெண்மணி மூன்று குழந்தைகளின் தாயார். இவர் பல மாதங்களாக குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல், புகைப்படத்தில் அருகில் உள்ள நபருடன் சென்றுவிட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், வீட்டிலிருந்த நகைகள், பணம் மற்றும் சில முக்கியமான பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் மூன்று குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.

இவரைப் பற்றியோ அல்லது இவர் தற்போது இருக்கும் இடம், தொடர்புகள் அல்லது அவருடன் சென்ற நபர் பற்றியோ ஏதேனும் தகவல் தெரிந்தால், தயவுசெய்து கீழே கொடுக்கப்படும் தொடர்பு எண்ணில் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

📞 தொடர்புக்கு: 0757126310
தயவுசெய்து இந்த பதிவை அதிகமாக பகிர்ந்து, இவரை கண்டுபிடிக்க உதவுங்கள். 🙏

வெனிசுலாவில் கொள்ளையடிக்க ஒப்பந்தம் போட்ட டிரம்ப்வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படு...
29/08/2026

வெனிசுலாவில் கொள்ளையடிக்க ஒப்பந்தம் போட்ட டிரம்ப்

வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் இதுவென்றும் ஜனாதிபதி டிரம்ப் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 65 பில்லியன் பீப்பாய்கள் திறன் கொண்ட 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்பில் ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிப்புஇலங்கையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்...
29/08/2026

கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிப்பு
இலங்கையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மா உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த திடீர் விலை அதிகரிப்பானது இன்று (29) சனிக்கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்களான ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் (Prima) மற்றும் செரண்டிப் ஆலை (Serendib Flour Mills) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த விலை உயர்வை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இந்த மா விலை அதிகரிப்பு காரணமாக, சந்தையில் தற்காலிக கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அத்துடன், வெண்பாண் (Bread) உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்கள் மற்றும் உணவக உணவுகளின் விலைகளும் வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அவசரத் தகவல் – காணவில்லை மாலிகாவத்தையில் வசிக்கும் உமர் (UMAR) இன்று (28.08.2026) மதியத்திலிருந்து காணாமல் போயுள்ளார்; த...
29/08/2026

அவசரத் தகவல் – காணவில்லை

மாலிகாவத்தையில் வசிக்கும் உமர் (UMAR) இன்று (28.08.2026) மதியத்திலிருந்து காணாமல் போயுள்ளார்; தற்போது அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.உமரைப் பார்த்தவர்களோ அல்லது அவர் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தவர்களோ தயவுசெய்து உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

📍 கடைசியாகப் பார்க்கப்பட்ட இடம்: கொழும்பு கோட்டை (Fort)

🕐 கடைசியாகப் பார்க்கப்பட்ட நேரம்: 28.08.2026 மதியம்

📞 தொடர்புக்கு:
அப்துல்லா (சகோதரர்) - 0774173314

அப்துல் ரஹ்மான் (சகோதரர்) - 0757984860

நுஸ்கி - 0775283279

தயவுசெய்து இந்தச் செய்தியை உங்கள் தொடர்புகளுடன் பகிர்ந்து, எங்கள் நண்பரை பத்திரமாகக் கண்டறிய உதவுங்கள்.
எந்தவொரு சிறிய தகவலும் கூட மிகவும் உதவியாக இருக்கும். தயவுசெய்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங...
28/08/2026

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் - இம்ரான் மகரூப் Mp கோரிக்கை.

​​"ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து சுமுகமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.

​சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போதெல்லாம், அந்தப் சுமையை மக்கள் மீது சுமத்தி உடனடியாக இங்கு எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம், உலகச் சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கத் தயங்குவது ஏன்? எனவே, உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"

அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கை பிராந்தியத்தின் பிரதான பொருளாதார மையமாகவும், முன்னணியிலும் திகழும் என பிரித்தானிய உயர்ஸ்தானி...
28/08/2026

அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கை பிராந்தியத்தின் பிரதான பொருளாதார மையமாகவும், முன்னணியிலும் திகழும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

"விடைபெறுகிறேன் இலங்கையே, இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கும் நிறைந்த புன்னகைகள், மக்கள் வீதியை கடக்க வா...
28/08/2026

"விடைபெறுகிறேன் இலங்கையே, இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கும் நிறைந்த புன்னகைகள், மக்கள் வீதியை கடக்க வாகனங்கள் நின்று வழிவிடுவது, தூய்மையான காற்று..." என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இளம் பேட்டிங் திறமையாளர்களைப் பாராட்டிய அவர், "அதுமட்டுமின்றி, உங்கள் இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள்," என்றும் கூறினார்.

இறுதியாக, "மீண்டும் சந்திப்போம்" என்று விடைபெறும் முன், உள்ளூரில் 'அன்னாசி' (annasi) என்று அழைக்கப்படும் இலங்கை அன்னாசிப் பழம் "எப்போதும் போலவே மிகச் சிறப்பாக" இருந்ததாகக் குறிப்பிட்டு, தனது பதிவை மகிழ்ச்சியான குறிப்புடன் நிறைவு செய்துள்ளார்.

நேபாளத்தின் ரசுவாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 384 பேர் மாயம்நேபாளத்தின் ரசுவா (...
27/08/2026

நேபாளத்தின் ரசுவாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 384 பேர் மாயம்

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 93 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 384 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலைப்பாங்கான மற்றும் சுற்றுலாப் பிரசித்தி பெற்ற இந்த பிராந்தியத்தில் பெய்த தொடர் அடைமழை காரணமாக ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் போக்குவரத்துப் பாதைகளும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. காணாமல் போன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைக் கண்டறிவதற்காக நேபாள பாதுகாப்புப் படைகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி..

Address

Kandy
20850

Telephone

+94779998939

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are Sri Lankan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We Are Sri Lankan:

Shortcuts

Share