We Are Sri Lankan

We Are Sri Lankan Okkama Srilankan
(2)

இது NPPயின்  #ஹெல்பிங்  #ஹம்பந்தோட்டையா...?NPP அரசின் "இலங்கையை மீள்-கட்டி எழுப்பல்" (Rebuilding SriLanka) என்ற குழுவுக்...
31/05/2026

இது NPPயின் #ஹெல்பிங் #ஹம்பந்தோட்டையா...?

NPP அரசின் "இலங்கையை மீள்-கட்டி எழுப்பல்" (Rebuilding SriLanka) என்ற குழுவுக்கு, தித்வா பேரிடர் நிவாரணத்துக்காக, வெளிநாட்டு, உள்ளூர் நன்கொடையாக கிடைத்த சுமார் ரூ. 1,000 கோடி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் விபரங்கள் இல்லை என, செயலகம், RTI என்ற தகவல் அறியும் கோரிக்கைக்கு பதில் கூறி உள்ளது.

ரெஹான் ஜயவிக்ரம, ஃபராஸ் அலி இருவரும் வெளி கொண்டு வந்துள்ள இந்த அதிர்ச்சி தகவல்படி, வெளிநாட்டு நன்கொடை அமெ டொலர் 11.4மி, உள்ளூர் நன்கொடை ரூ. 617 கோடி, மொத்தம் ரூ. 1,000 கோடி, என ஜனாதிபதி செயலகம் ஏற்று கொண்டுள்ளது.

ஆனால், நிதி எங்கே, எப்போது, எதற்கு, பயன் படுத்த பட்டது என்ற விபரங்கள் இல்லையாம்.

ஆகவே, இவர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதே!

"இந்த முறை திரைக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? ஹெக்கர்களா, இல்லை, தேவதைகளா?"

(இந்த Rebuilding SriLanka Committeeக்கு நியமிக்க பட்ட கனவான்கள் யார், யாரென, ஆர்வம் உள்ளோர் தேடி பாருங்க!)

துபாய் — ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் சொர்க்கபுரி என்று உலகமே கொண்டாடிய நகரம். ஆனால், இன்று மாறிவரும் புவிசார் அரசியலா...
31/05/2026

துபாய் — ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் சொர்க்கபுரி என்று உலகமே கொண்டாடிய நகரம்.

ஆனால், இன்று மாறிவரும் புவிசார் அரசியலால், அது தன் வரலாற்றிலேயே மிக மோசமானதொரு ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது.

அமெரிக்காவின் தவறான கணக்கீடுகளை நம்பி தன் பாதுகாப்பைப் பணயம் வைத்ததன் விளைவாக, எந்நேரமும் உலக மக்கள் யாரும் பயணம் செய்யத் தயங்கும் ஒரு பேய் நகரமாக (Ghost Town) துபாய் மாறும் அபாயம் எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இன்று தன் வரலாற்றில் இதுவரை சந்தித்திராத ஒரு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.

பாலைவனத்தில் கட்டப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடிக் கோட்டைகளும், வானளாவிய கட்டிடங்களும் இன்று எந்த நேரத்திலும் உடையக்கூடிய அபாயத்தில் நிற்கின்றன.

காரணம்?

அமெரிக்காவின் முதுகில் ஏறி சவாரி செய்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கையும், ஈரானை குறைத்து மதிப்பிட்ட மாபெரும் வரலாற்றுப் பிழையும்தான்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உருவாகி வரும் அமைதி ஒப்பந்தத்தால், அரபு நாடுகளில் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கப் போவது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தான்.

இந்த அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஒரு புதிய அதிகார மையத்தின் பிறப்பைக் குறிக்கிறது.

பல தசாப்தங்களாகத் தொடர்ந்த தடைகள், அச்சுறுத்தல்கள், ரகசியப் போர்கள் மற்றும் ராணுவ நெருக்குதல்கள் என அனைத்தையும் தாண்டி ஈரான் வீழ்ச்சியடையவில்லை; மாறாக, அது பெரும் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது விவாதிக்கப்பட்டு வரும் அமெரிக்காவின் சலுகைகள் மிகவும் அவமானகரமானவை.
முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் பின்வாங்குவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வது ஆகியவை, அமெரிக்க வரலாற்றிலேயே அதன் மிகப்பெரிய ராணுவத் தோல்வியாகவே உலகம் முழுவதும் பார்க்கப்படும்.

ஈரான் இனி வெறும் பிராந்திய சக்தி அல்ல. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக, உலக அரசியலைத் தீர்மானிக்கும் தீர்க்கமான வல்லரசுகளில் ஒன்றாக அது மாறி வருகிறது.

முட்டாள்கள் மட்டுமே இன்னும் இந்த உண்மையை உணர மறுக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக, ஈரானுடனான மோதலின் போது, அமெரிக்காவின் ராணுவ மேலாதிக்கம் தெஹ்ரானை நிரந்தரமாக அடக்கிவிடும் என்று நம்பி, வாஷிங்டனுடனும் இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகம் தன்னை மிகவும் நெருக்கமாக இணைத்துக் கொண்டது.

ஈரானைத் தாக்கி அழிக்குமாறு அது அமெரிக்கர்களைத் தூண்டியது. சமீபத்திய மோதலின் போது ஈரானுக்கு எதிராக அது வெளிப்படையாகப் போர் பிரகடனம் செய்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே அமீரகம் ஒரு ஆபத்தான புவிசார் அரசியல் விளையாட்டை விளையாடி வந்தது. தனது அண்டை நாடான ஈரானை எதிர்ப்பதில் அது எல்லைமீறிச் செயல்பட்டது.

அமெரிக்காவின் ராணுவ பலமும், இஸ்ரேலின் பாதுகாப்பும் தங்களை நிரந்தரமாகக் காப்பாற்றும் என்று அது குருட்டுத்தனமாக நம்பியது.

ஈரானுக்கு எதிரான சதிகளில் வெளிப்படையாக இறங்கியது; இஸ்ரேலுடன் கைகோர்த்தது; ஈரானை அழிக்க அமெரிக்காவைத் தூண்டியது மட்டுமல்லாமல், இஸ்ரேலின் ராணுவ முகவராகவும் (Proxy) செயல்படத் தொடங்கியது.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்கா ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் பேசி, மெதுவாக மத்திய கிழக்கில் இருந்து பின்வாங்கி வருகிறது. தங்களைக் காப்பாற்றும் என்று அமீரகம் நம்பிய அமெரிக்கா, தனது சொந்த நலனைப் பாதுகாத்துக்கொண்டு நழுவுகிறது.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்கா ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் பேசி, மெதுவாக மத்திய கிழக்கில் இருந்து பின்வாங்கி வருகிறது. தங்களைக் காப்பாற்றும் என்று UAE நம்பிய அமெரிக்கா, தனது சொந்த நலனைப் பாதுகாத்துக்கொண்டு நழுவுகிறது.

இப்போது ஈரானின் கோபப் பார்வை, தனித்து விடப்பட்ட அமீரகத்தின் மீது திரும்பியுள்ளது. பல தசாப்த கால பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, ஈரான் இன்று உலக வல்லரசுகளுக்கு நிகராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஈரானுக்கு எதிரான இந்தச் சமரசமற்ற அரசியல் நிலைப்பாட்டிற்காக, வரும் ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

உலக வர்த்தகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிற்குச் செல்கிறது. நினைத்தால் அமீரகத்தின் வர்த்தகப் பாதையை ஈரானால் ஒரே இரவில் முடக்கிவிட முடியும்.

இன்று ஈரானின் ஏவுகணைகளோ அல்லது அதிநவீன ஆளில்லா விமானங்களோ (Drones) அமீரகத்தை நோக்கித் திரும்பினால், அதைத் தடுக்கும் அரணாக அமெரிக்கா வராது என்ற கொடூரமான யதார்த்தம் அமீரகத்திற்குப் புரியத் தொடங்கியுள்ளது.

துபாய், அபுதாபி போன்ற நகரங்களுக்கு ராணுவ பலம் கிடையாது. அவற்றின் ஒரே உயிர்நாடி 'பாதுகாப்பான முதலீட்டு மையம்' என்ற பெயர்தான்.

சிறிய வணிக நாடுகள் எப்போதும் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தான் உயிர்வாழ்கின்றன.

ஆனால் ஒரு பிராந்தியத்தின் கட்டமைப்பு சிதையத் தொடங்கும் போது முதலீட்டாளர்கள், சந்தைகள் மற்றும் உலகளாவிய மூலதனம் ஆகியவை பதற்றமடைகின்றன.

போர் மேகங்கள் சூழ்ந்தாலோ அல்லது பிராந்தியத்தில் ஒரு சிறிய பதற்றம் உருவானாலோ கூட, உலகளாவிய முதலீட்டாளர்கள் ஒரு நொடிகூட அங்கு தரிக்க மாட்டார்கள்.

வெளிநாட்டு மூலதனம் வெளியேறும்;
பங்குச்சந்தைகள் சரியும்;
சுற்றுலாத்துறை முடங்கும்.
பல லட்சம் கோடிகள் முதலீடு செய்யப்பட்ட அந்தப் பிரம்மாண்ட நகரங்கள், நொடிப்பொழுதில் பேய் நகரங்களாக (Ghost Towns) மாறும் அபாயம் கண்முன்னே நடக்க இருக்கிறது.

துபாயின் தற்போதைய சுற்றுலாத்துறை இன்னும் வீழ்ச்சியடையவில்லை; மாறாக அது அதன் உச்சத்தில் இருக்கிறது. ஆனால், அந்த உச்சமே இன்று அதற்குப் பெரிய பலவீனமாக மாறியுள்ளது.

தரவுகள் சொல்லும் உச்சமும், காத்திருக்கும் வீழ்ச்சியும்
துபாயின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி:

2025-ஆம் ஆண்டில் மட்டும் 1.95 கோடி (19.59 மில்லியன்) வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்குப் பயணம் செய்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட சுமார் 5% அதிகமாகும்.

2026 ஜனவரியில் மட்டும் சுமார் 20 லட்சம் (2 Million) வெளிநாட்டவர்கள் அங்கு வந்துள்ளனர்.

அங்குள்ள விடுதிகளின் சராசரி பயன்பாடு (Hotel Occupancy) 80%-க்கும் மேல் உள்ளது.

இவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கும் ஒரு நகரத்திற்குத் தான் இப்போது மாபெரும் வீழ்ச்சி காத்திருக்கிறது என்ற நிதர்சனம் அமீரக ஆட்சியாளர்களை உறைய வைத்துள்ளது.

சுற்றுலா மற்றும் அந்நிய முதலீடுகளை மட்டுமே முழுமையாக நம்பி இயங்கும் ஒரு பொருளாதாரம் துபாயினுடையது. ராணுவ பலமோ, சொந்த உற்பத்தியோ அற்ற ஒரு கண்ணாடிக் கோட்டை அது.

இன்று ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உருவாகி வரும் புதிய ஒப்பந்தங்களால், அமெரிக்கா மெல்ல மெல்ல மத்திய கிழக்கிலிருந்து பின்வாங்குகிறது. ஈரானை அழிக்க அமெரிக்காவைத் தூண்டிய அமீரகம், இன்று பாதுகாப்பற்ற நிலையில் தனித்து விடப்பட்டுள்ளது. உலக அரசியலில் ஈரானின் ஆதிக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், அதன் நேரடி அச்சுறுத்தலுக்கு அமீரகம் ஆளாகியுள்ளது.

இந்த நிலையில் ஒரு சிறிய ராணுவப் பதற்றமோ, அல்லது ஈரானின் ஒரு சிறிய அச்சுறுத்தலோ அரங்கேறினால் என்ன நடக்கும்?

ஆண்டுக்கு 2 கோடி பேர் வந்து செல்லும் துபாய் விமான நிலையம் ஒரே இரவில் வெறிச்சோடும். சுற்றுலாப் பயணிகள் உயிரச்சத்தில் தங்கள் பயணங்களை ரத்து செய்வார்கள்.

பிராந்தியத்தில் அமைதி இல்லை என்ற செய்தி பரவிய மறுநொடியே, உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கள் பல லட்சம் கோடி மூலதனத்தை அங்கிருந்து திரும்பப் பெறுவார்கள்.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஆடம்பர விடுதிகளும், வானளாவிய கட்டிடங்களும் ஆளில்லாமல் இருளில் மூழ்கும்.

அமெரிக்காவை அளவுக்கதிகமாக நம்பி, தனது அண்டை நாடான ஈரானை எதிர்த்து வெளிப்படையான பகைமை பாராட்டிய அமீரகத்தின் அரசியல் நிலைப்பாடு, இன்று அதன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே அழிக்கும் வல்லமை கொண்டதாக மாறியுள்ளது.

ஒரே ஒரு தவறான வெளியுறவுக் கொள்கையாலும், தவறான குதிரை மீது கட்டிய பந்தயத்தாலும் எப்படி எந்த மனிதரும் செல்ல விரும்பாத ஒரு பாதுகாப்பற்ற பகுதியாக மாறக்கூடும் என்பதற்கு ஐக்கிய அரபு அமீரகம் மிக விரைவில் ஒரு வரலாற்று உதாரணமாக மாறப்போகிறது.

உருவாகி வரும் புதிய மத்திய கிழக்கு (New Middle East) அமைப்பில், எந்தக் கேடயமும் இல்லாமல், ஈரானின் நிழலின்கீழ் நிராயுதபாணியாக நிற்கிறது ஐக்கிய அரபு அமீரகம்.

மாபெரும் கடற்சுழலில் சிக்கிய சிறிய படகைப் போலத் தத்தளிக்கும் அமீரகத்திற்கு, இந்தப் பேராபத்திலிருந்து தப்பிக்க இப்போதைக்கு எந்த வழியும் இல்லை என்பதே நிதர்சனம்!
படித்ததில் பகிர்வது

மட்டுவில் பயங்கரம்!! 11 வயதுச் சிறுமி 15 வயது அண்ணாலேயே கொல்லப்பட்டாள்! நடந்தது என்ன? இணைப்பு  முழு விபரம் முதலாவது கருத...
31/05/2026

மட்டுவில் பயங்கரம்!! 11 வயதுச் சிறுமி 15 வயது அண்ணாலேயே கொல்லப்பட்டாள்! நடந்தது என்ன? இணைப்பு முழு விபரம் முதலாவது கருத்துப் பகுதியில்

IMF யிற்கு அநுர அடிமைத்தனத்திற்கு கொடுத்த பரிசுதான் இந்த எரிபொருள் விலையேற்றம்.மக்களின் நிலை அதே கதிதான் இப்படி போனால் ச...
31/05/2026

IMF யிற்கு அநுர அடிமைத்தனத்திற்கு கொடுத்த பரிசுதான் இந்த எரிபொருள் விலையேற்றம்.மக்களின் நிலை அதே கதிதான் இப்படி போனால் சாதாரண மக்கள் வீதியில் பிச்சை எடுக்க நேரிடும்.

அனுராவின் ஆட்சியின் அடுத்த பரிசு மக்களுக்கு கிடைத்துள்ளது இறக்குமதி செய்யப்படும் பால்மா 400 கிராம் விலை 50 ரூபாவாலும்1Kg...
20/05/2026

அனுராவின் ஆட்சியின் அடுத்த பரிசு மக்களுக்கு கிடைத்துள்ளது
இறக்குமதி செய்யப்படும் பால்மா
400 கிராம் விலை 50 ரூபாவாலும்
1Kg விலை 125 ரூபாவாலும் அதிகரிப்பு!

மக்கள் நினைத்தால் முடியும்.
09/05/2026

மக்கள் நினைத்தால் முடியும்.

முதலமைச்சருக்கான ஆணையை பெற்றார் விஜய்ஆளுநரிடம் இருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார் தவெக தலைவர் விஜய்.. கைகொடுத்து வா...
09/05/2026

முதலமைச்சருக்கான ஆணையை பெற்றார் விஜய்

ஆளுநரிடம் இருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார் தவெக தலைவர் விஜய்..
கைகொடுத்து வாழ்த்து தெரிவித்த ஆளுநர் அர்லேகர்..

இன்று G.C.E O/Lவெளியாக இருக்கிறது
09/05/2026

இன்று G.C.E O/Lவெளியாக இருக்கிறது

14 வயது பாடசாலை மாணவியை காணவில்லை..! சதாம் நகர் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த கந்தளா சிங்கள பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்க...
09/05/2026

14 வயது பாடசாலை மாணவியை காணவில்லை..!

சதாம் நகர் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த கந்தளா சிங்கள பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்கும் 14 வயது மாணவியான பாத்திமா ரனா என்பவர்,

கடந்த மூன்று தினங்களுக்கு முன் பாடசாலை சென்றவர் இன்று வரை வீடு வரவில்லை.

எனவே இந்த சகோதரியை யாராவது கண்டால் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் நன்றி.

தகவல்

சகோதரர் - 075 6100576
தந்தை - 075 9736624

பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து நீலாங்கரை வீட்டிற்கு கான்வாய் பாதுகாப்பு இன்றி தனியாக செல்லும் விஜய் வாகனம்.
06/05/2026

பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து நீலாங்கரை வீட்டிற்கு கான்வாய் பாதுகாப்பு இன்றி தனியாக செல்லும் விஜய் வாகனம்.

Address

Kandy
20850

Telephone

+94779998939

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are Sri Lankan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We Are Sri Lankan:

Share