We Are Sri Lankan

We Are Sri Lankan Okkama Srilankan

நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!11 மாதங்களாக வீழ்ச்சியடைந்திருந்த கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டை (CCPI) அடிப்...
31/08/2025

நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

11 மாதங்களாக வீழ்ச்சியடைந்திருந்த கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டை (CCPI) அடிப்படையாகக் கொண்ட நாட்டின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் உயர்ந்துள்ளது.

புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் -0.3% ஆக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 1.2% ஆக அதிகரித்துள்ளது.

இதில், உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 1.5% இலிருந்து 2.0% ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உணவு அல்லாத வகை ஜூலை மாதத்தில் -1.2% இலிருந்து 0.8% ஆக அதிகரித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவ...
28/08/2025

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உள்நாட்டுப் பயணம் தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவிட்டது, கோரப்பட்ட விவரங்கள் ஜனாதிபதி தொடர்பான பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்ற அடிப்படையில்.

சவுதி அரேபியாவில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள்.!🇸🇦வசதியான மெத்தை, பரந்த இடம், மற்றும் சுத்தமான கழிப்பறைகள் க...
27/08/2025

சவுதி அரேபியாவில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள்.!

🇸🇦வசதியான மெத்தை, பரந்த இடம், மற்றும் சுத்தமான கழிப்பறைகள் கொண்ட அறைகள்.

🇸🇦இறைச்சி, கோழி, மீன் போன்றவற்றை உள்ளடக்கிய தினமும் மூன்று வேளை ஆரோக்கியமான உணவுகள்.

🇸🇦சிறைச்சாலை சந்தையில் தேவையானவற்றை வாங்குவதற்கு மாதாந்த கொடுப்பணவு .

🇸🇦கைதியின் குடும்பத்துக்கு மாதாந்த ஊதியம் வழங்கி, அவர்களின் நிலைமை கவனிக்கப்படுகிறது.

🇸🇦சிறை பள்ளிவாசலில் கூட்டாக தொழுகை நடத்தல்.

🇸🇦வாராந்திர குடும்ப சந்திப்புகளும், தேவையான போது தொலைபேசி அழைப்புகளுக்கான அனுமதி .

🇸🇦கைதி விரும்பினால் தனது மனைவியை தனிமையில் சந்தித்து குடும்பம் நடத்துவதற்கான தனியார் அறை பலத்த பாதுகாப்புடன் வழங்கல்.

🇸🇦கைதி முழு குர்ஆனை மனனம் செய்தால், தண்டனையின் பாதியை குறைக்கும் சிறப்பு.

🇸🇦சிறையில் தொழில்முறை கற்றல் நிலையம் அமைக்கப்பட்டு, தொழிற்திறன்கள் கற்பிக்கப்பட ல்.

🇸🇦கல்வியை தொடர விரும்புபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள்.

🇸🇦மார்க்க விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்படல்.

இத்தகைய மனிதாபிமான செயற்பாடுகள் சவுதி அரேபியாவின் சிறந்த போக்கை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

அஷ்ஷைக் ழபர் அஜ்வாத் (மதனி)

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ரணில் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் முன்னணி 'அரகலயா' ஆர்வலர்களும் கலந...
27/08/2025

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ரணில் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் முன்னணி 'அரகலயா' ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

கோட்டா-கோ-ஹோம் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவையும் பின்னர் 'ரணில்-ராஜபக்ச' வுக்கு எதிரான போராட்டங்களையும் வழிநடத்திய ஆர்வலர்கள், செவ்வாய்க்கிழமை ரணில் ஆதரவு குழுவுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு அருகில் காணப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க அல்லாது, தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தாங்கள் அங்கு வந்ததாக அந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தெரிவித்தனர்.

(Colombo Gazette)

🩸தலசீமிய நோயினால்  பாதிக்கப்பட்டஒரு வயது குழந்தையின் உயிரை பாதுகாக்க உதவுவோம் 𝗣𝗹𝗲𝗮𝘀𝗲 𝗦𝗵𝗮𝗿𝗲!உயிர் காக்க உதவி கோரப்படுகின்...
27/08/2025

🩸தலசீமிய நோயினால் பாதிக்கப்பட்ட
ஒரு வயது குழந்தையின் உயிரை
பாதுகாக்க உதவுவோம் 𝗣𝗹𝗲𝗮𝘀𝗲 𝗦𝗵𝗮𝗿𝗲!
உயிர் காக்க உதவி கோரப்படுகின்றது..

ஏழை குழந்தையின் உயிரைக்
காப்பாற்ற உதவுங்கள்!

உங்களின் சிறு உதவி பெரும் புண்ணியத்தை உண்டு பண்ணும்..

ஏழை பெற்றோருக்கு பிறந்ததால் இப்
பச்சிளம் பிள்ளை அவதியுறுகின்றது,
மதம், இனம் என்ற வேறுபாடு இன்றி
எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.

புத்தளம் – தம்பபண்ணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, தலசீமியா எனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை காப்பாற்ற சுமார் ரூ. 1.5 கோடி செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த
இந்த குழந்தைக்கு, உங்கள் சிறிய உதவியும் ஒரு பெரிய உயிர் காப்பாக இருக்கும்.
அல்லாஹ்வின் திருப்திக்காக, உங்களால் இயன்ற அளவு உதவுங்கள்.

இந்த பதிவை அதிகம்
பகிருங்கள் -உங்கள் பகிர்வே
ஒரு உயிரைக் காப்பாற்றும்!

📞 தொடர்பு எண்: +𝟗𝟒 𝟕𝟓 𝟓𝟒𝟓 𝟗𝟑𝟗𝟕

வங்கி கணக்கு விவரங்கள்:
𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿: 𝟎𝟎𝟗𝟐𝟎𝟎𝟏𝟎𝟎𝟎𝟓𝟗𝟕𝟕𝟐
𝗡𝗮𝗺𝗲: 𝗠𝗼𝗵𝗮𝗺𝗲𝗱 𝗙𝗮𝘀𝗲𝗲𝗹
𝗕𝗮𝗻𝗸: 𝗣𝗲𝗼𝗽𝗹𝗲'𝘀 𝗕𝗮𝗻𝗸
𝗕𝗿𝗮𝗻𝗰𝗵: 𝗣𝘂𝘁𝘁𝗮𝗹𝗮𝗺

47 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய பொறுப்புகளில் இருந்தபோதிலும், தமக்கு குறைந்தது ரூ. 5...
25/08/2025

47 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய பொறுப்புகளில் இருந்தபோதிலும், தமக்கு குறைந்தது ரூ. 500 இலட்சத்திற்கும் மேற்பட்ட சம்பளம் கிடைக்கத் தகுதியானதை கூட பெறாமல் அதை அரசின் பொருளாதார நிதியகத்திற்கு வழங்கி

இலவசமாக வழங்கப்படும் வாகன அனுமதி ஒருபோதும் பெற்றுக்கொள்ளாதவர்

ஒருபோதும் அரசின் உத்தியோகபூர்வ இல்லம் பயன்படுத்தாதவர்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தையும் நிராகரித்து

கோடிக்கணக்கான மதிப்புள்ள தனிப்பட்ட வீட்டையும் அரச பாடசாலைக்கு இலவசமாக வழங்கி

அத்தகைய தலைவரை எதிர்த்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து திருடன் என முத்திரை குத்த முயற்சிப்பதற்கு எதிராக குரல் கொடுப்போம்

ஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள்...
24/08/2025

ஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எட்டு சிறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் இரண்டு ஜெயிலர்கள் மற்றும் நான்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் அடங்குவர். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவைச் சுற்றி காவல்துறை பாதுகாப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த (22.08.2025) குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்போது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது அவரது ஆரம்ப பரிசோதனைகள் மற்றும் மேலதிக சிகிச்சைக்காக என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆபத்தான நிலையில் இல்லை
சோதனைகள் முடிந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் அவர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளோம் என பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

100 வருடங்களுக்கு முன்பு  அமெரிக்காவில் முஸ்லிம்கள் நிர்மாணித்து, அல்லாஹ்வை வழிபட்ட இடம் இது. "Mother Mosque of America"...
24/08/2025

100 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முஸ்லிம்கள் நிர்மாணித்து, அல்லாஹ்வை வழிபட்ட இடம் இது. "Mother Mosque of America" என்று அழைக்கப்பட்டு, தற்போதும் அதன் புராதனம் பாதுகாக்கப்படுகிறது.

அமெரிக்காவில் மிக குறைந்த மட்டத்திலேயே முஸ்லிம்க்ள வாழ்கின்றனர். அதுவும் வாழ்பவர்களில் அநேகமானவர்கள் ஏனைய தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்பவர்களாவர்.

எனினும் இந்தியா அங்குள்ள முஸ்லிம்களின் தாயம் முஸ்லிம் பெரியவர்களின் கப்றுத் தலங்கள், பள்ளிவாசல்கள் அழிக்கப்படுவதும், சேதமாக்கப்படுவதும், காவி கொடிகள் பறக்கவிடுவதும், காவல்துறை வேடிக்கை பார்ப்பது எல்லாம் கவலைக்குரியவை.

பொருளாதார வீழ்ச்சியில் இந்த நாடு சீரழிந்தபோது அதனை தூக்கி நிறுத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இன்றைய நிலை!இதுவோர் திட...
24/08/2025

பொருளாதார வீழ்ச்சியில் இந்த நாடு சீரழிந்தபோது அதனை தூக்கி நிறுத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இன்றைய நிலை!

இதுவோர் திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என்பதே பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை!

பொதுவெளியில் மேக்கப்புடன் வரும் நடிகர்களுக்கு மத்தியில் எந்த மேக்கப்பும் இல்லாமல் ஒரிஜினாலிட்டியுடன் வரும் நடிகர் அஜீத்,...
24/08/2025

பொதுவெளியில் மேக்கப்புடன் வரும் நடிகர்களுக்கு மத்தியில் எந்த மேக்கப்பும் இல்லாமல் ஒரிஜினாலிட்டியுடன் வரும் நடிகர் அஜீத், நடிகை சிம்ரன். யாருக்கெல்லாம் இவர்களை பிடிக்கும்...

காசாவில் போரின் நிலைப்பாடு குறித்த சர்ச்சைக்கு மத்தியில், அதன் அமைச்சர்கள் பலர் கூட்டு ராஜினாமாக்களை மேற்கொண்டதைத் தொடர்...
24/08/2025

காசாவில் போரின் நிலைப்பாடு குறித்த சர்ச்சைக்கு மத்தியில், அதன் அமைச்சர்கள் பலர் கூட்டு ராஜினாமாக்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, டிக் ஸ்கோஃப் தலைமையிலான டச்சு அரசாங்கம் பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக புதிய தடைகளை நிறைவேற்றத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் ஃபீல்ட்காம்ப் ராஜினாமா செய்தார். அவரது நடவடிக்கையைத் தொடர்ந்து, கட்சி (NSC) கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தது, துணைப் பிரதமர் எடி வான் ஹோம் ராஜினாமா செய்தார். மேலும் 3 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால், ஷூஃப் அரசாங்கம் ஐந்து முக்கிய அமைச்சர்களை ஒரே நேரத்தில் இழந்துள்ளது, இது போரில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்கள்

  மோசமடையும் ரணிலின் உடல்நிலை.. சிங்கப்பூர் கொண்டு செல்ல ஆலோசனைமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் இரத்த அழுத...
24/08/2025

மோசமடையும் ரணிலின் உடல்நிலை.. சிங்கப்பூர் கொண்டு செல்ல ஆலோசனை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் இரத்த அழுத்தம் சீராகாத நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிங்கப்பூர் கொண்டு செல்லுமாறு ஐக்கிய தேசியக் சக்தியினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்க, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்ற வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிர சிகிச்சை பிரிவு

இருப்பினும், அவரின் உடல்நிலை, அதாவது உயர் இரத்த அழுத்தம் சீராகாத நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிங்கப்பூர் கொண்டு செல்லுமாறு ஐக்கிய தேசியக் சக்தியினர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், நள்ளிரவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Address

Kandy
20850

Telephone

+94779998939

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are Sri Lankan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We Are Sri Lankan:

Share