Velli Velichcham

  • Home
  • Velli Velichcham

Velli Velichcham Media

இறைவனின் படைப்பில் இதுவுமொன்று...பாலைவனத்தில் நடப்பதற்காகவே வடிவமைக்க பட்ட பாதம் 😳🔥
14/08/2025

இறைவனின் படைப்பில் இதுவுமொன்று...
பாலைவனத்தில் நடப்பதற்காகவே வடிவமைக்க பட்ட பாதம் 😳🔥

இளைஞர்களை கவரும் ஹபீல் ------------------------------------------------------மருதமுனை இளைஞர்களை  - தற்காலத்தில் கவர்ந்து...
14/08/2025

இளைஞர்களை கவரும் ஹபீல்
------------------------------------------------------
மருதமுனை இளைஞர்களை - தற்காலத்தில் கவர்ந்து வரும் இளைஞராக உருவெடுத்துள்ளார்
𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 உரிமையாளர் அப்துல் ஹபீல் அவர்கள் .

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியாக இருக்கலாம் அல்லது பொதுத் தேவையாக இருக்கலாம் அப்துல் ஹபீலின் பிரசன்னம் அங்கு முதன்மை பெறும்.

குறிப்பாக - இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஹபீலுக்கு நிகர் ஹபீல்தான்.

🔴மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 வெற்றிக் கிண்ண மின்னொளி
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பல்வேறு சிற்பம்சங்களை தொடர்ச்சியாக உட்புகுத்தி - மருதமுனை இளைஞர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.

இந்த சுற்று போட்டிக்கு பூரண அனுசரனை வழங்கிக் கொண்டிருக்கின்றார். பாடசாலைகளில் நடைபெறும் பரிட்சைக்காக ஒத்திவைக்கப்பட்ட - மேற்படி சுற்றுப்போட்டி நாளை மீண்டும் ஆரம்பமாகின்றது. வானவேடிக்கையுடன் நாளை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் களை கட்டப்போகின்றது.

மருதமுனை பிரதான வீதியில் அமைந்திருக்கின்றது 𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 எனும் எரிபொருள் நிரப்பு நிலையம்.

இந்த சுற்றுப் போட்டியின் பரிசுத் திட்டத்திலும் அண்மையில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியதன் மூலம் விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தி இருந்தார்.

மருதமுனை இளைஞர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ள அப்துல் ஹபீல் - விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒருவராக வலம் வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
Boomudeen malik

மின்னொளியிலான கிரிக்கெட் போட்டி
14/08/2025

மின்னொளியிலான கிரிக்கெட் போட்டி

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள  இனப்படுகொலையை நிறுத்துமாறும் ,கோர யுத்தத்தை நிறுத்துமாறும் கோரி சுதந்திர பலஸ்...
14/08/2025

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையை நிறுத்துமாறும் ,கோர யுத்தத்தை நிறுத்துமாறும் கோரி சுதந்திர பலஸ்தீனத்துக்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை(14)பிற்பகல் கொழும்பில் உள்ள ஐ. நா. அலுவலகத்தின் முன்னால் ஒன்று கூடி பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக்கு மகஜரொன்றும் வழங்கப்பட்டது. இந்த எதிர்ப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அங்கு தெரிவித்தார். மு.கா.பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை,கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கலாநிதி வீரசிங்க,முன்னாள் கொழும்பு மேயரும்,இலங்கையின் முன்னாள் ஈரான் தூதுவருமான ஒமர் காமில், கொழும்பு மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் அங்கம் வகிக்காத எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நன்றிகள்-ரஊப் ஹக்கீம் MP

காத்தான்குடி பிரதேசத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினுள் உள்வாங்குதல் தொடர்பிலான கலந்துரையாடல்.காத்தான்குடி பிரதேசத்தை ந...
14/08/2025

காத்தான்குடி பிரதேசத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினுள் உள்வாங்குதல் தொடர்பிலான கலந்துரையாடல்.

காத்தான்குடி பிரதேசத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினுள் உள்வாங்குதல் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று 14.08.2025 வியாழக்கிழமை தாருல் அர்கம் (CIG) மண்டபத்தில் கௌரவ நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் நகரசபை பதில் செயலாளர் ரினோஷா முப்லிஹ் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கௌரவ நகரமுதல்வர் அவர்களால் காத்தான்குடி பிரதேசத்தில் காணப்படும் நீர் வளத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம், பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதன் அவசியம் மற்றும் இத்திட்டத்தில் காணப்படும் சாதக, பாதகங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது‌.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் அதிகாரி திருமதி. தியாகராஜா அவர்களால் இத் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து Rise Sri lanka நிறுவனத்தின் சார்பில் பிரதேசத்தின் அமைவிடங்கள் தொடர்பில் சட்டத்தரணி ஏ.உவைஸ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கௌரவ துணை நகரமுதல்வர் MIM. ஜெசீம் JP, கௌரவ நகரசபை உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

14/08/2025
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினால் "தாரீகுந் நபி" போட்டிகள்  இம்மாதம் 20 ம் திகதி புதன்கிழ...
14/08/2025

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினால் "தாரீகுந் நபி" போட்டிகள் இம்மாதம் 20 ம் திகதி புதன்கிழமை
பின்வரும் ஒழுங்கில் இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பு    இம்மாதம்16 ம் திகதி நடாத்தவிருந்த      "தாரீகுந் நபி" போ...
14/08/2025

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பு இம்மாதம்16 ம் திகதி நடாத்தவிருந்த "தாரீகுந் நபி" போட்டிகள் இம்மாதம் 20 ம் திகதி புதன்கிழமை நடாத்துவதற்கு அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் இப்போட்டிகள் நடாத்தப்பட்டு மீலாத் தினத்தன்று இடம்பெறும் நிகழ்வில் வெற்றியாளர்களுக்கு
பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.எப்.றிஸ்லா
(அலுவலக செய்தியாளர்)

Statement Issued by the Kattankudy Media Forum Condemning the Attack on JournalistsWe strongly condemn Israel’s delibera...
14/08/2025

Statement Issued by the Kattankudy Media Forum Condemning the Attack on Journalists

We strongly condemn Israel’s deliberate attack on journalists in Gaza.

The Kattankudy Media Forum denounces the inhumane and systematic targeting of journalists who have been working tirelessly to reveal the reality on the ground, even as brutal assaults on innocent civilians, including children and women, in the Gaza region intensify day by day.

Silencing journalists will never hide the truth—it is a futile dream. Facts cannot be buried; they will always emerge, and every attempt to conceal them will inevitably fail.

The ongoing, systematic killing of journalists—whose work documents and communicates the suffering of unarmed civilians in Gaza—constitutes a deliberate effort to erase evidence of ethnic cleansing.

Journalists are the eyes of society. As long as they live, the truth will endure. Targeting them is not only a crime against individuals but an attack on truth itself.

The Kattankudy Media Forum calls upon the international community, world nations, human rights organizations, and global media bodies to condemn this heinous act and to take urgent measures to bring those responsible before the International Court of Justice.

"ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்.' – காஸாவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையைக் கண்டித்து காத்தான்குடி மீடியா போரம் கண்டன அறிக்கை.

'ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்.' என காஸாவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையைக் கண்டித்து காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் புதன்கிழமை (13) வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காஸா பகுதியில் நிகழும் மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நடைபெறும் உண்மையான நிலவரங்களை வெளி உலகிற்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மீதும் இஸ்ரேல் வேண்டுமென்றே நடத்திய நடாத்திக்கொண்டிருக்கும் தாக்குதலை காத்தான்குடி மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊடகவியலாளர்களை மௌனப்படுத்துவதன் மூலம் உண்மைகளை மூடி மறைக்க முடியாது. அவ்வாறு கருதுவது பகல் கனவாகும். உண்மை எப்போதும் வெளிச்சத்திற்கே வரும்; அதை மறைக்கும் எந்த முயற்சியும் இறுதியில் தோல்வியடையும்.

மேலும், நிராயுதபாணிகளான அப்பாவி காஸா மக்களை நோக்கி தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றின் ஆவணப்படுத்தலிலும், தகவல் பரப்புதலிலும் முன்னிலையில் இருந்த ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது, 'இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்.'

ஊடகவியலாளர்கள் என்போர் சமூகத்தின் கண்களாவர், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை உண்மை உயிருடன் இருக்கும். அவர்களை இலக்கு வைப்பது என்பது உண்மையை அழிக்க முயலும் குற்றச் செயலாகும்.

உலக நாடுகள், சர்வதேச ஊடக அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு குழுக்கள் ஆகியவை உடனடியாக இந்தத் தாக்குதலைக் கண்டித்து, குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என காத்தான்குடி மீடியா போரம் கேட்டுக்கொள்கிறது எனவும் அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த   TEX`````````````````````````````````````````````````````````````````...
14/08/2025

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த TEX
```````````````````````````````````````````````````````````````````
வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலருக்குமான தரமான துணி வகைகள்.

பெண்களுக்கான அனைத்து விதமான துணி வகைகள், அபாயா துணி வகைகள், மற்றும் ஏனைய துணி வகைகளையும் சில்லறையாகவும், மொத்தமாகவும் நியாய விலையில் பெற்றிடலாம்.

TEX
159 ,டீன் வீதி(மத்திய பகுதியில்) காத்தான்குடி-06 தொடர்புகளுக்கு அழையுங்கள் 0772220526, 0740486683

மேலதிக விபரங்களுக்கு whatsapp உடன் இணைந்திடுங்கள்.
https://chat.whatsapp.com/DiCYx0RUFuL4QlguMPPnb6

13/08/2025

வெற்றி என்பதும், சாதனை என்பதும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை....

ஒருவருக்கு விரைவாக கிடைக்கலாம்,..
மற்றொருவருக்கு தாமதமாக கிடைக்கலாம்..
ஒரு சிலருக்கு கிடைக்காமலேயே கூட போகலாம்...

நாம் முயற்சிக்கும் முறையும், அவற்றிற்கு ஒரு காரணமாக அமையும்....

மட்/மம/ஹைறாத் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் கூட்டம்.
13/08/2025

மட்/மம/ஹைறாத் வித்தியாலயத்தின்
பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் கூட்டம்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Velli Velichcham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velli Velichcham:

  • Want your business to be the top-listed Media Company?

Share