KTN SMS

KTN SMS உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள F KTNsms1 Send to 40404

📍MISSING ALERT…🚨 🚨மேலே படத்தில் உள்ள தங்க நகை (Bracelet) 18.02.2025 காத்தான்குடி கடற்கரை வீதியிலிருந்து ஹுதா வீதிக்கு இட...
19/02/2025

📍MISSING ALERT…🚨 🚨

மேலே படத்தில் உள்ள தங்க நகை (Bracelet) 18.02.2025 காத்தான்குடி கடற்கரை வீதியிலிருந்து ஹுதா வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் தவறிவிட்டது.

கண்டெடுத்தவர்கள் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

Contact: 0772636193

ஜஸாக்குமுல்லாஹு‌ ஹைரன்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக ( Costa ) கொஸ்டா நியமனம்-முன்னாள் பணிப்பாளர் தௌபீக் கொழும...
24/08/2022

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக ( Costa ) கொஸ்டா நியமனம்-முன்னாள் பணிப்பாளர் தௌபீக் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி டி.ஜி.எம். கொஸ்டா ( D.G.M. Costa ) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து இன்று 24 புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

அத்தோடு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமனம் பெற்று இடமாற்றம் செல்லும் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தௌபீக்குக்கான விடுவித்தல் கடிதத்தையும் இதன் போது மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

0776033330

கணையம் எங்கே  இருக்கிறது?’ என்று கேட்டால், பலரும் யோசிப்பார்கள். காரணம், கணையம் குறித்த விழிப்புணர்வு எம்மவர்களிடம் கூட ...
26/09/2021

கணையம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், பலரும் யோசிப்பார்கள். காரணம், கணையம் குறித்த விழிப்புணர்வு எம்மவர்களிடம் கூட இல்லை. மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் கணையத்தை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கணையம் அல்லது Pancreas👇🏼
நம் வயிற்றில், இரைப்பைக்குக் கீழே, சிறிது பின்புறமாக, முன்சிறுகுடலுக்கு இடது பக்கமாக, மாவிலை வடிவத்தில், ஊதாவும் மஞ்சளும் கலந்த நிறத்தில், தட்டையாக ஓர் உறுப்பு உள்ளது.
நீளம் அதிகபட்சமாக 20 செ.மீ. எடை 100 கிராம் வரை இருக்கும்.
இது ஒரு கலப்படச் சுரப்பி (Dual Gland). இதில் நாளமுள்ள சுரப்பிகளும் உள்ளன. நாளமில்லா சுரப்பிகளும் உள்ளன

🔴கணையப் புற்றுநோய்
மிகை மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாக கணையத்தில் புற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு.

🔴இதன் அறிகுறிகளும் கணைய அழற்சிக்குரிய அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கும். இது ஒரு கொடுமையான புற்றுநோய்.
மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை கதிர்வீச்சு சிகிச்சை என்று எதற்கும் கட்டுப்படாது. நோயாளி சீக்கிரத்தில் உயிரிழப்பது உறுதி.

🔴கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையானவை. தங்கள் இயல்பை மீறி கணையத்தில் இவை தேங்குமானால், கணையத்தையே அழித்துவிடுகின்ற அளவுக்கு மோசமானவையும்கூட

🔴கணையம் சில காரணங்களால் திடீரென்றோ, நாள்பட்டோ பாதிக்கப்படலாம்.
அப்போது கணையம் வீங்கிவிடும். பிறகு அழுகிவிடும். இறுதியாக கணையத்தில் ரத்தப்போக்கு ஏற்படும் அந்த நிலைமையைக் `கணைய அழற்சி’ (Pancreatitis) என்கிறோம். 🔴சமிபாட்டிற்குத் தேவையான கணைய நொதிகள் (குறிப்பாக டிரிப்சின் நொதியம்) சிறுகுடலில் செயற்பாடடைவதற்குப் பதிலாகக் கணையத்திலேயே செயல்திறன்மிக்கதாக மாறிவிடுவதால் இந்நோய் உருவாகிறது.

🔹நாட்பட்ட கணைய அழற்சி நீரிழிவு நோய் அல்லது கணையப் புற்றுநோய்க்கு வித்திடலாம்
🔹கணைய நொதிகள் போதிய அளவு இல்லாமையால் சமிபாடு பாதிக்கப்பட்டு விளக்க இயலாத உடல் எடை குறைவு ஏற்படலாம்.

பொதுவான அறிகுறிகள்:
▪️மேல்வயிறு அல்லது வயிற்றின் இடது மேற்புறம் கடுமையான எரிச்சல் தரக்கூடிய வலி ,முதுகுபுறமாகப் பரவுதல்,
▪️குமட்டல்,
▪️உணவு உண்டபின் மோசமாகும் வாந்தி
▪️உடலின் உட்புறத்தில் ஏற்படும் இரத்தக் கசிவு மற்றும் அதன் தீவிரத்தைப் பொருத்து
▪️வலி, குருதி அழுத்தம் அதிகரிக்கலாம்.
▪️இதயத் துடிப்பு, சுவாசவீதம் ஆகியவை அடிக்கடி அதிகரித்துக் காணப்படும்.
▪️சாதாரணமாக, வலி ஏற்பட்டுள்ளதைப் போலல்லாமல்
குறைந்த அளவில் வயிறு மிருதுவாகக் காணப்படும்
▪️காய்ச்சல் அல்லது மஞ்சள் காமாலை காணப்படலாம்.

🔴பித்தக்கற்கள்

🔴மது அருந்துவது
(80%) கணைய அழற்சிக்குக் காரணமாகிறது.

பொதுவாக, கடுமையான கணைய அழற்சிக்குப் பித்தக்கற்களும்
நாட்பட்டக் கணைய அழற்சிக்கு மது அருந்துவதும் முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றன

☑️முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும். இந்த நோய்க்கு இது ஒரு முக்கிய அறிகுறி.
குமட்டல், வாந்தி இருக்கும்.
வயிறு உப்பும்.

🔴நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது - இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கும் இதே போன்றுதான் வயிற்றுவலி இருக்கும்.
🔴ஆனால், அவர்களுக்கு வாந்தி எடுத்த பின்னர் வயிற்று வலி குறைந்துவிடும்.
🔴கணைய அழற்சி உள்ளவர்களுக்கு வாந்தி எடுத்தாலும் வயிற்றுவலி குறையாது.

பரிசோதனைகள்
🔹ரத்தத்தில் அமைலேஸ் அளவு அதிகரித்தால் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளது என்று நிர்ணயித்துவிடலாம்.
இதன் இயல்பு அளவு 80லிருந்து 100 யூனிட்்.
கணைய அழற்சியில் இதன் அளவு 1000 யூனிட்டுகளுக்கு மேல் அதிகரிக்கும்
🔹ரத்தத்தில் லைப்பேஸ் அளவும் அதிகரிக்கும்.
🔹வயிற்று எக்ஸ்-ரே,
🔹அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,
🔹சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவையும் கணைய அழற்சியை உறுதி செய்ய உதவும்.

சிகிச்சை முறைகள்
கணைய அழற்சியை ஆரம்ப நிலை
யிலேயே கவனித்து விட்டால் மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். கணையம் அழுகி விட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும்.

கணையத்தைக் காப்பது எப்படி?
1. தொடர்ந்து மது அருந்துவதை அறவே தவிர்க்கவும்.
2. பித்தப்பையில் கற்கள் உருவானால் உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும்.
3. மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா நோய்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.
4. நீங்களாக மருந்துக்கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதை நிறுத்தவும்.
5. புகையில் வாட்டி தயாரிக்கப்படுகின்ற உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
6. கலப்பட எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டாம்.
7. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப்பயன்படுத்தாதீர்கள்.
8. நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொழுப்புணவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.
9. புகைப்பதை நிறுத்தவும்.
10. பழங்கள், காய்கறிகள் நிறைந்த ஆரோக்கிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
✅நாளமுள்ள சுரப்பிகள், என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நீர்களைச் சுரக்கின்றன. இந்தச் செரிமான நீர்கள் ‘கணைய நாளம்’ வழியாக முன்சிறுகுடலுக்குச் சென்று, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகிய உணவுச்சத்துகள் செரிப்பதற்கு உதவுகின்றன.

✅கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ (Islets Of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கின்றன.
ஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் 10 லட்சம் திட்டுகள் உள்ளன. ஒவ்வொரு திட்டிலும் 3000 முதல் 4000 வரை செல்கள் உள்ளன.
இந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று 3 வகைப்படும். இவற்றில் ‘பீட்டா’ செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனையும், டெல்டா செல்கள் சொமோட்டோஸ்டேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன. இவை ‘நாளமில்லா சுரப்பிகள்’ என்பதால், தாம் சுரக்கின்ற ஹார்மோன்களை ரத்தத்தில் நேரடியாகவே சேர்த்துவிடுகின்றன.
✅இப்படி ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்கிற உறுப்பு நம் உடலில் வேறு எதுவும் இல்லை.

Written by dr . Priyaanthini Kamalasingam
DGH chilaw , TH jaffna.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)அம்பாறை சம்பவம் திட்டமிட்ட இனவாத செயல்-குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
27/02/2018

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அம்பாறை சம்பவம் திட்டமிட்ட இனவாத செயல்-குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

'சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமை –பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நல்லாட்சி அரசிலும் இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து செல்வதானது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுசேர்ந்து அரசுக்கு கடுமையைன அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

அம்பாறையில் நடந்துள்ள சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகும். வெளியூர்களில் இருந்து வந்த கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் மந்த கதியில் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிரான விரைவாக சட்ட நடவடிக்கை எடுத்து அங்கு முஸ்லிம்கள் வாழ்வதற்கான –வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை உறுதி செய்ய வேண்டும் என சட்டம் ஒழுங்கு அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இன்று காலை நான் அவருக்கு அனுப்பி வைத்த அவசர கடிதத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு-2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் -நாளை மட்டக்களப்பில்- 5000ப...
23/02/2018

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு-2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் -நாளை மட்டக்களப்பில்- 5000பேர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்ப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட செயலகமும்,மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் 24 நாளை சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் தெரிவித்தார்.

2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .......

பாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஆண்டுதோறும் தென் இலங்கையின் கொழும்பு,கண்டி,காலி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெறும். இம்முறை கொழும்புக்கு வெளியே வடக்கு-கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் பாரிய நடைப்பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர்,சுகாதார அமைச்சர்,சுகாதார பிரதியமைச்சர் உட்பட இலங்கை சுகாதார சேவைகளின் உயரதிகாரிகள் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள் அனைத்தின் பங்களிப்புடன் இப் பாரிய பாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இப் பாரிய நடைப்பயணத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இப் பாத நடையின் இறுதியில் வருபவர்கள் அனைவருக்கும் அத்தியவசியமான தொற்றா நோய்கள் பற்றிய அறிவுரையும்,நோய் இருப்பதா? என்பதை பார்ப்பதற்கான இரத்த பரிசோதனையும்,இரத்த அழுத்தப் பரிசோதனையும் நடைபெறவுள்ளது.

குறித்த பாத நடையின் நோக்கம் பாரிசவாதம் தவிர்க்கப்படக்கூடியது,குணப்படுத்தக்கூடியது,உடனடியாக முதல் மூன்று மணித்தியாலங்களில் வைத்தியசாலையை நாடினால் முக்கியமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை நாடினால் சில வேளைகளில் உங்கள் பாரிசவாதத்தை முற்று முழுதாக குணப்படுத்தக் கூடிய அளவுக்கு ஊசி,மருந்துகளும் ,இதர சிகிச்சைகளும் ஆளணியினரும் உள்ளனர் என்பதை சொல்வதற்காகவே இப் பாத நடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாரிசவாத்தை எவ்வாறு தவிர்க்கலாம்,வந்தவர்களுக்கு இன்னுமொறு முறை வராமல் எவ்வாறு தடுக்கலாம்,பாரிசவாதம் ஏற்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உடல் ஊனங்களில் இருந்து எவ்வாறு விடுதலை பெறலாம் என்பனவற்றை சொல்வதற்கும் பல்வேறு வகையான மருத்துவ ஆளணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ,மட்டக்களப்பின் இதர அனைத்து வைத்தியசாலைகளில் இருந்தும் ஒன்று குழும ஆயத்தமாகவுள்ளனர்.

பாரிசவாத விழிப்புணர்வுக்காக முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் மாபெரும் நடைப்பயணத்தில் எமது பாரிசவாத அமைப்புடன் இணைந்து பங்குபற்றி பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் மேலும் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)காத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் ...
22/02/2018

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு –நாளை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 23 நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி -05 ஆற்றங்கரையிலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அல்-ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீம் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன்,காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயகுமார் உதயஸ்ரீதர்,பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், மட்டு- மத்தி கல்வி வலயத்தின் நிருவாக உத்தியோகத்தர்; சீ.எம்.ஆதம்லெப்பை,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன்,யூனானி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் யூ.எல்.எம்.ஜலால்தீன், காத்தான்குடி நகர சபை செயலாளர் எம்.ஆர்.எப்.றிப்கா ஷபீன்,இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் பொறியியலாளர் ஏ.சீ.எம்.நௌபல் உட்பட கல்வியலாளர்கள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

எமெரல்ட்,றூபி,சபெயர் ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இடம்பெறவுள்ள குறித்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் 60 தொடக்கம் 100 மீட்டர் வரையிலான ஓட்டம் ,அணி நடை ,உடற்பயிற்சி கண்காட்சி போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

30/08/2017

காத்தான்குடியின் பிரபல விஞ்ஞான பாட ஆசிரியர் மஹ்ரூப் சேர் அவர்கள் சற்று முன் வபாத். INNALILLAHI..
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்.
- KTN -

(பழுலுல்லாஹ் பர்ஹான்)'உதிரம் கொடுப்போம் உயிர் காக்க உதவுவோம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான ம...
12/03/2017

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

'உதிரம் கொடுப்போம் உயிர் காக்க உதவுவோம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் காத்தான்குடியில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊடாக தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காக்க உதவுவோம்' எனும் தொனிப்பொருளில் 12வது மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் இன்று 12 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி-02 ஜாமிஉல் அதர் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. றஊப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன், தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி),காத்தான்குடி நகர சபையின் சன சமூக நிலைய உத்தியோகத்தர் திருமதி. உருத்திரகாந்தன், தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நிஸார் உட்பட ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், ஆண், பெண் சகோதர, சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் மற்றும் காத்தான்குடி இரத்த வங்கி அதிகாரி எம்.எம்.எம்.அய்யாஷ்,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஏ.எஸ்.எம்.ஸப்ரான் ஆகியோரினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இங்கு இரத்ததானம் செய்த அனைவருக்கும் தாருல் அதர் சனசமூக நிலைய அனுசரணையில் 'டீ மக்' ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இங்கு 170ற்கும் மேற்பட்டவர்கள் தங்களது இரத்தத்தை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.

குறித்த தாருல் அதர் அத்த அவிய்யா தஃவா அமைப்பு பல்வேறு சமூகப் பணிகளையும்,மார்க்கப் பிரச்சார பணிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)தான் பணம் கொடுத்து வாங்கிய காணியை சுவீகரித்துள்ளார் என கூறுவது உண்மைக்கு புறம்பானது- கர்பலா காணி வி...
07/03/2017

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தான் பணம் கொடுத்து வாங்கிய காணியை சுவீகரித்துள்ளார் என கூறுவது உண்மைக்கு புறம்பானது- கர்பலா காணி விவகாரத்தை சட்ட ரீதியாக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களில் கையாளுவதற்கு தயார் என்கிறார்-றஹீம் மௌலவி.

தான் பணம் கொடுத்து வாங்கிய காணியை சுவீகரித்துள்ளார் என கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் கர்பலா காணி விவகாரத்தை சட்ட ரீதியாக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களில் கையாளுவதற்கு தான் எந்த நேரமும் தயாராக இருப்பதாக றஹீம் மௌலவி தெரிவித்தார்.

கர்பலா காணி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .......

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 312 நபர்களின் 13 ஏக்கர் காணியை றஹீம் மௌலவி ஆகிய நான் சுவீகரித்துள்ளதாக ஊடகங்களுக்கு கர்பலா காணி உரிமையாளர்கள் என்ற போர்வையில் கருத்து தெரிவித்த விடயமானது அந்த காணியின் உண்iமான உரிமையாளரான என் மீது மிக அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கின்றார்கள்.

உண்மையான விடயம் என்னெவெனில் தான் இக் காணியை மிஹ்ழார் ,பாயிஸ்,அலியார் செய்னம்பு போன்றவர்களிடமிருந்து கொள்முதல் செய்துள்ளேன்.
நீண்ட வரலாற்றை கொண்ட இக் காணியை காணியின் முன்னாள் உரிமையாளர்கள் நீதி மன்றம் சென்று வழக்கை வென்ற பிற்பாடுதான் குறித்த காணியை கொள்முதல் செய்தேன்.

ஏன் இவர்கள் இப்போது என் மீது இப்படியான பொய்யான குற்றச்சாட்டை செய்கின்றார்கள் என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை.

இந்தக் காணியின் முன்னாள் உரிமையாளர்களான பாயிஸ்,நவாஸ்,அலியார் செய்னம்பு ஆகியோரிடம் இருக்கும் போது கர்பலா காணி உரிமையாளர்கள் என்று கூறுபவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து,பொலிஸில் முறைப்பாடு செய்து காணி பெற்று இருக்கலாம் தானே.

காணிக்கு நான் பணம் கொடுத்து,அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து வாங்கிய பிறகு ஏன் பிரச்சினைப்பட வேண்டும்.

இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கின்றது என்பதை என்னால் உனர முடிகின்றது.

நான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளராக இருந்தாலும் இந்த காணி விடயத்திற்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

ஆகையால் என்னோடு பிரச்சினை என்றால் என்னோடு சட்ட ரீதியாக பேசாமல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை விமர்சித்து இதை அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்.

ஒரு சிலர் இக் காணிப் பிரச்சினையை அரசியலாக்குவதற்கு முனைகின்றனர்.

இறுதியாக நாங்கள் கர்பலா காணி உரிமையாளர்கள் என்று கூறுபவர்களிடம் நான் தெரிவிப்பது என்னெவெனில் உங்களுடைய காணி ஆவணங்கள் உண்மையாக இருந்தால் நீதி மன்றம் சென்று இதற்கு தீர்வை பெறவும் என் மீது வழக்குத் தொடரவும் முடியும்.

அத்தோடு குறித்த காணிப் பிரச்சினைக்கு நீதி மன்றத்தில் எந்த நேரமும் முகம் கொடுக்க தான் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி மக்களின் காணிகள் சில சுவீகரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுமட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் ...
06/03/2017

காத்தான்குடி மக்களின் காணிகள் சில சுவீகரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சிலரின் 13 ஏக்கர் காணி, தனிநபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில், சுவீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் காணி உரிமையாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

2004ம் ஆண்டு நாங்கள் இந்த காணிகளை வாங்கினோம், சுனாமிக்கு பிறகு உரிய முறையில் கட்டை போட்டு எல்லையை அடைத்தோம்.

ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்த காணிகளின் கட்டைகளை பெக்கோ போட்டு தள்ளிவிட்டு சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆகவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் எடுத்து, பாரபட்சம் பார்க்காது சம்பந்தப்பட்ட காணிகளை உரிய மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்.

காத்தான்குடி பிரதேசம் சன நெருக்கமுடைய பிரதேசமாக காணப்படுவதால் அங்கிருந்து இந்த பகுதிக்கு வந்து குடியேற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து 5, 6 தினங்கள் கடந்துள்ள போதிலும் எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, என்றார்.
(அத தெரண)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)புனரமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் நாளை மக்கள் பாவனைக்காக மீள் திறக்கப்படும்-காத்தான்க...
25/02/2017

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புனரமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் நாளை மக்கள் பாவனைக்காக மீள் திறக்கப்படும்-காத்தான்குடி நகர சபை செயலாளர் சபி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புனரமைக்கப்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் 26-02-2017 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.எம்.சபி தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் விளையாட்டு மைதான மீள் திறப்பு விழா நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பிவெதகெதர உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும், விளையாட்டு மைதான மீள் திறப்பு விழாவை முன்னிட்டு மின்னொளியுடன் கூடிய இரவு நேர 1 கடின பந்தாட்ட போட்டியும், 4 உதைப் பந்தாட்ட போட்டிகளும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மட்டக்...
23/02/2017

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு களுதாவளையிலுள்ள தனது வீட்டில் இனம் தெரியாத நபர்களினால் நேற்று 22 புதன்கிழமை இரவு துப்பாக்கிச் சுட்டுக்குள்ளாகி காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளரும், யாழ்ப்பாண மாவட்ட பதில் பணிப்பாளருமான நேசகுமார் விமல்ராஜ்; (சுமார் வயது 32) மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று 23 இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உட்பட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள்,மாவட்ட செயலகத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள்;,அரச அதிகாரிகள்,ஆண்,பெண் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரச அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்,அரச உத்தியோகத்தர் பாதுகாப்பை உறுதி செய்,குற்றவாளிகளை உடன் கைது செய், அலுவலர்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம்,அரச உத்தியோகத்தரை பாதுகாக்கவும்,அரச அலுவலர் மீதான தாக்குதல்கள் மேலும் தொடருமா? போன்ற பல்வேறு தமிழ் வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி தங்களது எதிர்பையும்,கண்டனத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Address

Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when KTN SMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share