CRT Express News - தமிழ்

CRT Express News - தமிழ் �� உடனுக்கு உடன் உண்மை செய்திகளை பெற? Paid Promotionl for YOUTUBE

நீதி என்பது கிடைக்..!!!???
08/07/2024

நீதி என்பது கிடைக்..!!!???

மோட்டார் சைக்கிள் மற்றும் கப் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி  இன்று06.07.2024 மணியலவில் 11.30.மணிய...
06/07/2024

மோட்டார் சைக்கிள் மற்றும் கப் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி

இன்று06.07.2024 மணியலவில் 11.30.மணியலவில் பூனகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குடமுருட்டி பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட வீதி விபத்தில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

பரந்தன் பகுதியில் இருந்து பூனகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் கப்ரக வாகனததில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் தொடர்பாக பூனகரி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

27/03/2024
கிளிநொச்சியில் அகழ்வாரட்சியில் கிடைக்க பெற்றவை
27/03/2024

கிளிநொச்சியில் அகழ்வாரட்சியில் கிடைக்க பெற்றவை

புளியம்பொக்கணை நாகதம்பிரான் 🐍ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா Full Video 》 https://youtu.be/RRhiei4sIIs?si=ZYc_lC...
27/03/2024

புளியம்பொக்கணை நாகதம்பிரான் 🐍ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா
Full Video 》 https://youtu.be/RRhiei4sIIs?si=ZYc_lC9RvoEVJB8B

27.03.2024சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகி...
27/03/2024

27.03.2024
சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்..

யாழ். பல்கலை மாணவி திடீர் மரணம் - வெளியானது காரணம். ★★காய்ச்சல் காரணமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவி உயிர...
24/12/2023

யாழ். பல்கலை மாணவி திடீர் மரணம் - வெளியானது காரணம்.

★★காய்ச்சல் காரணமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவி உயிரிழப்பு.★

டெங்கு நோயால் தெல்லிப்பளையை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .

#தெல்லிப்பழை

★வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்த  இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாவற்குளத்தில் இளம்பெண் ஒருவர்  வீழ்ந்ததை அவதானித்த அ...
22/12/2023

★வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாவற்குளத்தில் இளம்பெண் ஒருவர் வீழ்ந்ததை அவதானித்த அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை (21)இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 18 இற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்ட இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். அவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.★

#வவுனியா #பாவற்குளம் Death

🚨⚠️  #அவசர  #அறிவிப்பு ************************14.12.2023 மாலை 6.00 மணிக்கு இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 31' 3'' காலநில...
14/12/2023

🚨⚠️ #அவசர #அறிவிப்பு
************************
14.12.2023 மாலை 6.00 மணிக்கு இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 31' 3''

காலநிலை அவதான நிலையத்தின் எதிர்வு கூறலுக்கு அமைவாகவும் தற்போது தொடரும் மழை நாளையும் தொடரும் என எதிர்பார்ப்பதாலும் குளத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்து வருவதால் இன்று பின்னிரவில் வான்கதவுகள் திறக்கப்படலாம் என நீர்ப்பாசனத்திணைக்களம் தகவல் தந்துள்ளார்கள்.

குளத்தின் கீழான வான்பாயும் பகுதிகளான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஐயங்கோவிலடி, பெரியகுளம், வெலிக்கண்டல் கண்டாவளைப் பகுதி விவசாயிகள், குடியிருப்பாளர்கள், கால்நடை வளர்ப்போர் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.

அப்பகுதி கமக்காரர் அமைப்பினர் மக்களிற்கு உரிய தகவல் கிடைக்க ஆவன செய்ய வேண்டுவதோடு நீர்செல்லும் வழிகளில் தடைகள் இருப்பின் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். # kilinochchi #கிளிநொச்சி #இரணைமடு

மண்சரிவில் சிக்கி 2 யுவதிகள் உயிரிழந்திருந்தனர் #மண்ணில்  #புதையுண்டு மாண்டுபோன இரண்டு யுவதிகளுக்கும் ஆழ்ந்த  #அனுதாபங்க...
24/11/2023

மண்சரிவில் சிக்கி 2 யுவதிகள் உயிரிழந்திருந்தனர்

#மண்ணில் #புதையுண்டு மாண்டுபோன இரண்டு யுவதிகளுக்கும் ஆழ்ந்த #அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

நேற்று மாலை (22) மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 06வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் ஏற்ப்பட்ட மண்சரிவில் சிக்கி 2 யுவதிகள் உயிரிழந்திருந்தனர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

புதிய காத்தான்குடி-2, பரீட் நகரில் உள்ள 23 வயது ஜாவித் என்ற இளைஞர்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை சற்று முன்  ஜனாஸா வீட்டில்...
24/11/2023

புதிய காத்தான்குடி-2, பரீட் நகரில் உள்ள 23 வயது ஜாவித் என்ற இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை சற்று முன் ஜனாஸா வீட்டில் இருந்து மீட்பு..!

காரணம் என்ன என்று தெரியவில்லை மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ஆழ்ந்த இரங்கல்

#காத்தான்குடி ***de

23/11/2023

Follow the Crt Express News Tamil channel on WhatsApp:

காதலிப்பது தவறு இல்லை, காதலித்து திருமணம் செய்வதும் தவறு இல்லை. ஆனால் நிரந்தரமாக ஒரு வேலை இருக்க வேண்டும் காரணம் இரு வீட...
23/11/2023

காதலிப்பது தவறு இல்லை, காதலித்து திருமணம் செய்வதும் தவறு இல்லை. ஆனால் நிரந்தரமாக ஒரு வேலை இருக்க வேண்டும் காரணம் இரு வீட்டார் சம்மதிக்க வில்லை தனித்து வாழ வேலை அவசியம் மற்றும் சொந்த வீடு அவசியம் இவ்வாறு இல்லாமல் திருமணம் பண்ணிவிட்டு தற்கொலை செய்தால் நீங்க செய்த தவறுக்கு உங்கள் பிள்ளை தான் அநாதை😥😥 காதலிப்பதாக இருந்தால் எல்லாவற்றையும் பற்றி சிந்தித்து காதலியுங்கள் 🙏🙏

திருக்கோவிலில் வீட்டிற்குள் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்த #கணவனும் #மனைவியும். வெளியான அதிர்ச்சி #காரணம்.!

திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் கடந்த செவ்வாய் கிழமை ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதன்படி அவர்கள் இருவருக்கும் கடன் தொல்லை அதிகம் இருந்தமையினால் அவற்றை திருப்பி தருமாறு கடன் கொடுத்தவர்கள் கேட்ட நிலையில் திருப்பி செலுத்த முடியாததால் இருவரும் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் 2 வயதில் குழந்தை உள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#24/7

திருக்கோவில் பிரதேசத்தில் விபரீத முடிவெடுத்த இளம் தம்பதி ‼️ 😭பெற்றோரை இழந்த இரண்டு வயது  பெண் குழந்தை  குழந்தைய நினைச்சா...
23/11/2023

திருக்கோவில் பிரதேசத்தில் விபரீத முடிவெடுத்த இளம் தம்பதி ‼️
😭பெற்றோரை இழந்த இரண்டு வயது பெண் குழந்தை
குழந்தைய நினைச்சாவது யோசிச்சி முடிவு எடுத்திருக்கலாம் 😔

காசாவில் இருந்து மக்கள் எகிப்திற்குள் வராதவண்ணம் சுமார் 20அடி உயரமான சுவரை எழுப்பிவருகிறது எகிப்த்.பாலஸ்தீனர்களின் ஊடுறு...
16/10/2023

காசாவில் இருந்து மக்கள் எகிப்திற்குள் வராதவண்ணம் சுமார் 20அடி உயரமான சுவரை எழுப்பிவருகிறது எகிப்த்.

பாலஸ்தீனர்களின் ஊடுறுவலை தடுப்பதற்காக இரண்டடுக்கு பாதுகாப்பு சுவர்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#🇮🇱

வட்டக்கச்சி பாலசிங்கம் யுகதீபன் பெலராஸில் சடலமாக மீட்புபிரான்ஸ்க்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிந...
16/10/2023

வட்டக்கச்சி பாலசிங்கம் யுகதீபன் பெலராஸில் சடலமாக மீட்பு

பிரான்ஸ்க்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி
வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலராஸ்,போலந்து,ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7 ஆம் திகதி சனிக் கிழமை பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில்
உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலைஎங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு ...
16/10/2023

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை

எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு
வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு
சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இன்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி
வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்
சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக
நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக
காத்திருக்கும் மாணவிகள் ஆவா்

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர். அத்தோடு
இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும்
வருகின்றனர்.

..

Address

Kilinochchi
44000

Alerts

Be the first to know and let us send you an email when CRT Express News - தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share