03/04/2026
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை…!!!
கிண்ணியா இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கிண்ணியா பொலீசாரின் ஒத்துழைப்போடு ஆலங்கேணி கலப்பு பகுதி இன்று 2026/04/03 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது இதன் போது சுமார் 3200 லிட்டர் (16 barel) கசிப்பு கைப்பற்ற பட்டத்துடன் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் இவ் சுற்றி வளைப்பினை கிண்ணியா இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் கிண்ணியா பொலீசார் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.