மாற்றம் maatram

மாற்றம்  maatram இது எம் சமுகத்தின் அரசியல், கலாச்சார, இது எம் சமுகத்தின் அரசியல், கலாச்சார, சமய, பண்பாடுகளுக்கான ஒரு எழுச்சி இந்த மாற்றம்

_*ஒரே ஒரு பொய் கூட சொல்லாமல் ஒரு நாளை வாழ்ந்து பார்த்தால் தெரியும் .*__*எத்தனை போலியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று .,*__தவ...
17/03/2025

_*ஒரே ஒரு பொய் கூட சொல்லாமல் ஒரு நாளை வாழ்ந்து பார்த்தால் தெரியும் .*_
_*எத்தனை போலியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று .,*_

_தவறு செய்பவனை கடவுள் தண்டிப்பதாக இருந்தால் கோயில் பக்கம் மனித நடமாட்டமே இருக்காது._

_*உன் கால்கள் ஓயாமல்*_ _*ஓடிக்கொண்டு இருக்கும்வரை தான் உனக்கு மதிப்பு.*_
_*ஒதுங்கி உட்கார்ந்து விட்டால் அதன்பின்தான் தொடர்கிறது உனக்கான அவமதிப்பு.*_

_உழைக்கும்போது எதிர்காலத்தை நோக்கிச் சென்ற நினைவுகள்_
_ஓய்ந்தபிறகு கடந்த காலத்தை நோக்கிச் செல்லுகிறது._

💎🌸💎🌸💎🌸💎

01/03/2025
அழகின் விலைதர்மபுரி அருகே உள்ள கிராமத்தில் 12 வயது சிறுமி மீனா வாழ்ந்தாள். அவளது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. தந்தை பசு...
10/01/2025

அழகின் விலை
தர்மபுரி அருகே உள்ள கிராமத்தில் 12 வயது சிறுமி மீனா வாழ்ந்தாள். அவளது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. தந்தை பசு மேய்க்கும் வேலை செய்தார், அம்மா கூலித்தொழிலில் பணி செய்தார். மூன்று நேர உணவுக்கே பெருமையாய் இருந்த குடும்பத்துக்கு, மீனாவின் கல்விச்செலவுகள் கூட பாரமாக இருந்தன.
மீனா பழைய சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வாள். இது நண்பர்களின் கிண்டலுக்கு காரணமாக இருந்தது. ஆனால் அவள் மனமுடையாமல், "விருதுகள் தோற்றத்தில் இல்லை; முயற்சியில்தான்" என்று தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தாள்.
ஒருநாள், பள்ளியில் ஒரு கலைப்போட்டி அறிவிக்கப்பட்டது. வெற்றியாளருக்கு புதிய சீருடை மற்றும் விருது கிடைக்கும் என்று கூறினர். மீனா அதில் கலந்து கொள்ளத் தீர்மானித்தாள். வீட்டில் ஓவியத்திற்கான பொருட்கள் இல்லாததால், மண் மற்றும் பழைய நுண்குழலை பயன்படுத்தி இரவில் விளக்கின் ஒளியில் ஓவியம் வரைந்தாள்.
போட்டியன்று, மீனாவின் ஓவியம் அனைத்து மாணவர்களுக்கும் முன்னே வெற்றி பெற்றது. அது சூரிய உதயத்தை மிகவும் அழகாக சித்தரித்திருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் அவளின் திறமையை பாராட்டினர்.
வெற்றி பெற்றதற்காக, மீனாவுக்கு புதிய சீருடையும் பள்ளி அளவிலான விருதும் வழங்கப்பட்டது. அவள் குடும்பமும் இந்த வெற்றியை பெருமையாகக் கொண்டாடியது.
அந்த நாள் மீனாவின் வாழ்க்கையில் திருப்பமாக அமைந்தது. ஒவ்வொருவரும் அவளின் திறமைக்கு மரியாதை கொடுக்கத் தொடங்கினர்.
கதை முறை:
ஏழ்மை ஒருவரது திறமையை அடக்க முடியாது. தன்னம்பிக்கையும் முயற்சியும்தான் உயர்வு தரும் உண்மையான சக்தி என்பதை மீனா நிரூபித்தாள்.

10/01/2025

🌴🌷🌴✋😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*

*(10.01.2025)*

*༺🌷༻*
*🌸🌼🌿நிறையுடைமை நீங்காமை வேண்டின்...*
*༺🌷༻*

சாது ஒருவர், பல வருடங்களுக்கு மேலாக ஊரை விட்டு ஒதுங்கி அமைதியான சூழலில், தனிமையில் மலை மேல் சென்று தவத்தில் இருந்து வந்தார்!!

அங்கு அவரை காண வந்த ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் கோவில் விழாவில் கலந்து கொள்ள வரச் சொல்லி அவரை வேண்டினர்!! அவர்களின் அழைப்பை ஏற்று துறவியும் மலை அடிவாரத்தின் கீழே அமைந்திருந்த அந்த மகரயாழ் ஊருக்கு வந்திருந்தார்....
*༺🌷༻*
கோவில் விழாவில் கடுமையான கூட்டம்!! கூட்டத்தில் யாரோ ஒருவர், தவறுதலாக சாதுவின் கால்களை மிதித்துவிட்டார்!! வலியினால் கோபமடைந்த சாது தன்னை மறந்து, நிதானத்தை இழந்து, தன் காலை மிதித்தவரை கண்டபடி வார்த்தைகளால் வசைப்பாடி தீர்த்தார்!! தவறுதலாக துறவியின் கால்களை மிதித்துவிட்ட அந்த பக்தர், துறவியின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார்....

சிறிது நேரத்திற்கு பின்னர்
நிதானத்திற்கு வந்த துறவி, தன்னுடை பலவருட தவத்தின் பலனை இப்படி கோபமடைந்து சிதற விட்டோமே என்று எண்ணி வருத்தமடைந்தார்!!
*༺🌷༻*
இந்த சமூகம்தான்,
உங்கள் உள்தன்மையின்.... உண்மைத்தன்மையின்... உரைக்கல், என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!

உங்களையே - நீங்கள் நேர்மையாக பரிசோதனை செய்ய இந்த சமூகம் என்கிற சந்தைகடைதான் சரியான சூழல்!! தவத்தின் உண்மை தன்மை என்பது காடுகளிலும், மலைகளிலும் தான் நிகழ்ந்தாக வேண்டும் என்பதல்ல!!
சந்தைப்பேட்டையிலும் தியானிக்கலாம்!!

🤘 ~ ஓஷோ

*༺🌷༻*
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
🌻 ~ திருக்குறள்

(நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி வாழ வேண்டும்.)

✒️ ~ மனோரஞ்சிதா, ஆசிரியை
சத்தியமங்களம்
💐நன்றி🙏

05/01/2025

தவறான மனிதர்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்களும்

சரியான மனிதர்களை தவறாக புரிந்து கொள்பவர்களும்

வாழ்க்கை பாதையில் சரியாக பயணிப்பதாக நினைத்து கொண்டே தவறாக பயணிப்பார்கள்
அவர்களாக உண்மையை உணர்ந்தால் மட்டுமே வருந்தமுடியும்

இனிய காலை வணக்கம்

03/01/2025

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

_*இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாத போது தான் தெரியும். அன்பின்*_ _*அருமையும் தனிமையின் கொடுமையும்.*_

_*தனித்து நிற்கும் போது மட்டும் தான் தெரியும் தனிமை மட்டும் தான் நிஜம் என்று.*_

_*இருக்கும்போது தெரியாத அருமை இழந்த பின்பு தெரியும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

03/01/2025

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

_*கடந்து போவதெல்லாம் ஏதோ ஒன்றை*_
_*கற்றுக் தராமல் போவதில்லை*_
_*அவற்றில் சில மாற்றங்கள்*_
_*சில ஏமாற்றங்கள்...

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்இருக்கப் பழகிக்கொள்வதாகும்!8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற...
01/01/2025

4 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!

8 வயதில் உன் சாதனை என்பது
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ தெரிந்து கொள்வதாகும்.

12 வயதில் உன் சாதனை என்பது
உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.

18 வயதில் உன் சாதனை என்பது
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.

23 வயதில் உன் சாதனை என்பது
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம்
பெறுவதாகும்.

25 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு ஒரு வேலை கிடைப்பதாகும்.

30 வயதில் உன் சாதனை என்பது
ஒரு குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும்.

35 வயதில் உன் சாதனை என்பது
நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டு என்பதாகும்.

45 வயதில் உன் சாதனை என்பது
உன் இளமையை நீ தக்க வைத்துக் கொள்வதாகும்.

50 வயதில் உன் சாதனை என்பது
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.

55 வயதில் உன் சாதனை என்பது
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும்.

60 வயதில் உன் சாதனை என்பது
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும்.

65 வயதில் உன் சாதனை என்பது
நோயின்றி வாழ்வதாகும்.

70 வயதில் உன் சாதனை என்பது
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும்.

75 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு இன்னும் நண்பர்கள் இருப்பதாகும்.

80 வயதில் உன் சாதனை என்பது
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும்.

85 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.

இவ்வளவுதான் வாழ்க்கைச் சுற்றோட்டம்.

ஆதலால் கடவுள் நம்பிக்கை இருந்தால் அவனுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள்!

மறு உலக நம்பிக்கை இருந்தால் அதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்!

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.பக்கத்தில் கட...
31/12/2024

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.
தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.
அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,
கால் தடுக்கிக் கீழே விழ ,
கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்
சாக்கடையில் விழுந்தன.
என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்
ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.
அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.
அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,
" இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து
கொடுக்க முடியுமா......??
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!
அதற்கு வழிப்போக்கன்
"இதுதான் உங்கள் பிரச்னையா......?
அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!
மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி
இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார்
செய்து கொள்ளுங்கள்.......!!!
வண்டியை ஓட்டிச் சென்று,
அருகில் உள்ள மெக்கானிக் கடையில்,
4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்
விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது.......!!!
நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்,
இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே.........!!!
இவரைப்போய் ,
குறைத்து மதிப்பிட்டு விட்டோமே ........
என்று
தலை குனிந்தார் விஞ்ஞானி......!
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.........!!!!!!!
உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு.........!!!!!
*நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!!*
*யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!*

#படித்ததில்_பிடித்தது..

Address

Kurunegalla
Kurunegala

Alerts

Be the first to know and let us send you an email when மாற்றம் maatram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மாற்றம் maatram:

Share