எழுமின் செய்திகள்

எழுமின் செய்திகள் wellcome to the official page of the Ezhumin news.

இணைய ஊடகத்தின் இணையில்லா தலைவன்.

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை எமது எழுமின் செய்திகள் தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

நம்பகமான செய்திகளை நேயர்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கம்.

  2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மக...
18/09/2025

2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த அரசாங்க செலவினம் 4,434 பில்லியன் ரூபாய் ஆகும்.

அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் ஊடாக நிதி அமைச்சகத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது ரூ. 634 பில்லியன் ஆகும்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சகத்திற்கு ரூ. 618 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பொது நிர்வாக அமைச்சிற்காக ரூ. 596 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஆண்டிற்கு சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்திற்கு ரூ. 554 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ. 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் கல்வி அமைச்சகத்திற்கு ரூ. 301 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 11 பில்லியன் ஆகும்.

இது 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2.7 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது சுமார் ரூ. 8 பில்லியன் அதிகமாகும்.

2026 ஆம் ஆண்டில், முக்கியமாக வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 8.29 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமை இவ்வாறு, செலவின அளவு அதிகரிக்க காரணமாகும்.

மேலும், 2026 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் ஓய்வூதியங்களுக்காக ரூ. 488 பில்லியன் ஒதுக்ககப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான செலவுகளை ஈடுகட்ட பெறக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் பெறுதலின் அதிகபட்ச வரம்பு ரூ. 3800 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அதை மீறக்கூடாது.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முதலாம் வாசிப்புக்காக செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் நிதியமைச்சர் என்ற முறையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

SRI LANKA NEED 170 RUNS TO WIN🇱🇰 Sri Lanka Vs 🇦🇫 Afghanistan
18/09/2025

SRI LANKA NEED 170 RUNS TO WIN
🇱🇰 Sri Lanka Vs 🇦🇫 Afghanistan

  I நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு...
18/09/2025

I நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 46.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன் - தர்ஷனின் ‘காட்ஜில்லா’ படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மயக்கமடைந்தார்.

உடனே அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிரிழந்தார்.

  இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” பிரதான மாநாடு இன்று (18) ...
18/09/2025

இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” பிரதான மாநாடு இன்று (18) கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் Disrupt Asia 2025, நேற்று (17) ஆரம்பமானதோடு செப்டம்பர் 20 வரை நடைபெறும்.

சர்வதேச கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தெற்காசியாவில் வளர்ந்து வரும் புத்தாக்க மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். புதிய தொழில்முனைவு மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது சிறந்த பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற பிரதான மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, புதிய தொழில்முனைவோர் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.“Disrupt Asia 2025” என்பது நாட்டில் இளைஞர் சமூகத்தை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் சிறந்த பக்கபலம் என்று பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் திட்டம் நாட்டில் திறமையான தொழில்முனைவோருக்கும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் என்றும் தெற்காசியாவில் புத்தாக்கத்திற்கான நுழைவாயிலாக இலங்கையை நிலைநிறுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு பிரதான உரை நிகழ்த்திய கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, இலங்கையின் டிஜிட்டல்மயமாக்கலின் நோக்கங்களையும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்கான திட்டங்களையும் விளக்கினார். டிஜிட்டல் ஏற்றுமதிகளை மூன்று மடங்காக அதிகரித்தல், டிஜிட்டல் திறமை எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல் மற்றும் இலங்கையை உலகளாவிய டிஜிட்டல் தரநிலைகளில் முன்னணிக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் இலக்குகளை அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் புதிய தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் குறைவான முதலீட்டுத் துறைகளாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த பெறுமதியான முதலீட்டு வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று உள்ளூர் மற்றும் உலகளாவிய பங்காளர்களை வலியுறுத்தினார். டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் டொலர் வாய்ப்பு உள்ளது என்றும், அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதே அதைவிட முக்கியமான விடயம் என்றும் அவர் மேலும் கூறினார். இப்போது முதலீடு செய்து இந்த மாற்றத்தில் பங்காளிகளாக மாறுபவர்கள் நாளைய வெற்றியாளர்களாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழல், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான பாதுகாப்பான சூழல் மற்றும் அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளை தனியார் துறைக்குத் திறக்க அனுமதிக்கும் புதிய கொள்கைகள் குறித்தும் அவர் இங்கு எடுத்துரைத்தார்.

Paytm இன் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் சேகர் சர்மா மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட உலகளாவிய நிபுணர்களுடனான கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் உலக வங்கி குழுமத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் கெவோர்க் சார்கிசியன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

18/09/2025

அக்கரப்பத்தனையில் நடமாடும் சேவை; மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள்

அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் அன்றாட சிரமங்களை குறைத்து, அவர்களுக்கான சேவைகளை நேரடியாக வழங்கும் நோக்கில் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை இன்று (18) மன்றாசி நிசாந்தனி மண்டபத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தலைமையேற்றார். அவருடன் தலவாக்கலை பிரதேச செயலக செயலாளர், அக்கரப்பத்தனை பிரதேச சபை பிரதி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை முன்னிறுத்தி, அஸ்வெசுமு கொடுப்பணவு, முதியோர் கொடுப்பணவு, பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நிகழ்விடத்திலேயே தீர்வுகள் வழங்கப்பட்டன.

பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு தங்களின் சிக்கல்களை முன்வைத்தனர். நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள் பலர், “சாதாரணமாக அலுவலகங்களுக்கு சென்று இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பது சிரமமானது. ஆனால் இன்று இந்நிகழ்வின் வாயிலாக எங்கள் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு, தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு, அதற்கான தீர்வுகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்ததோடு, பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

| | |

  இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வ...
18/09/2025

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு மருங்கில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.

  you இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது. இந்த போ...
18/09/2025

you இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி அபுதாபியில் இன்று இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குழு Bயில் இலங்கை முன்னிலை வகிப்பதுடன், ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டிய்ல ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றால், அந்த அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் வெளியேறும். அப்போது, 4 புள்ளிகளுடன் இருக்கும் பங்களாதேஷ் இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

அதேநேரம் ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தினால், அது புள்ளிப் பட்டியலை மிகவும் சிக்கலாக்கும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அந்த அணியும் 4 புள்ளிகளைப் பெறும்.

அப்போது, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய மூன்று அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலையில், நெட் ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும்.

நெட் ரன் ரேட் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் (+2.150) மற்றும் இலங்கை (+1.546) ஆகியவை மிகவும் வலுவான நிலையில் உள்ளன.

பங்காளதேஷ் அணியின் நெட் ரன் ரேட் (-0.270) மைனஸில் இருப்பதால், அவர்களின் வாய்ப்பு மிகவும் குறைவு.

இலங்கை அணி மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே பங்காளதேஷிற்கு வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அந்த அணியும் இலங்கை அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறவே அதிக வாய்ப்புள்ளது.

  உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் பின்தங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 11ஆம் திகத...
18/09/2025

உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் பின்தங்கியுள்ளது.

செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டில், கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 96 வது இடத்தில் இருந்தது.


ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் நுழையக்கூடிய இடங்களின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.

இந்த குறியீட்டின்படி, சிங்கப்பூர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக காணப்படுவதுடன், தென் கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இந்த கடவுச்சீட்டு குறியீட்டில் ஆப்கானிஸ்தான் மிகக் குறைந்த இடத்தில் உள்ளது.

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் ப...
18/09/2025

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டும் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது.

காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அக்டோபர் 7, 2023 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165,697 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150 க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ள கூடார முகாம்களுக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியுள்ளன.

இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் காசா நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தன. சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தத் தாக்குதல்களால், பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன.

காசா நகரில் இருந்து தென் பகுதிக்கு மக்கள் வெளியேறுவதற்காக 2 நாட்களுக்கு புதிய வழித்தடம் ஒன்றை இஸ்ரேல் திறந்துள்ளது. வாகனங்களிலும், கால்நடையாகவும் பாலஸ்தீன மக்கள் காசா நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வான், கடல் மற்றும் நிலத்திலிருந்து நகரம் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாகவும், மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் தப்பிச் செல்லும் மக்கள் தெரிவித்தனர்.

உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன. 2 வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவை என்று மக்கள் விவரிக்கின்றனர்.

இதற்கிடையே காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. கட்டார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, இஸ்ரேல் இனப்படுகொலையை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வட்டவளை பகுதியில் உள்ள கரோலினா தோட்ட பாடசாலை மாணவர்களை கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றாமல் செல்கின்ற இலங்கை போக்குவரத்து சபை...
17/09/2025

வட்டவளை பகுதியில் உள்ள கரோலினா தோட்ட பாடசாலை மாணவர்களை கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றாமல் செல்கின்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் புகார்.

வட்டவளை பகுதியில் உள்ள கரோலினா தோட்ட பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்கு முன் கூட்டியே பணம் செலுத்தி பெற பட்ட பருவகால சீட்டினை வைத்து இருக்கும் மாணவர்கள் மற்றும் பணம் செலுத்தி செல்லும் மாணவர்கள் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ள காலை வேளையில் ஏற்றிச் செல்வதில்லை என அப் பகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த பேருந்தினை தவறவிட்டு பட்சத்தில் காலதாமதமாக செல்ல நேரிடும் எனவும் அதிக பணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்கள் ஹட்டன் டிப்போ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மஸ்கெலியா நிருபர்.

  | 🥔 உருளைக்கிழங்கு சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்க, வெட்டிய சிப்ஸ்களை குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின் நன்கு ...
16/09/2025

| 🥔 உருளைக்கிழங்கு சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்க, வெட்டிய சிப்ஸ்களை குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின் நன்கு உலர்த்திவிட்டு பொரித்தால் போதும்.

😀 இதுபோன்ற சமையல் குறிப்புகள் பார்க்க நம்ம Page_ah இப்போவே Follow பண்ணுங்க

Address

No 36, Cymbru Upper Division
Lindula

Alerts

Be the first to know and let us send you an email when எழுமின் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எழுமின் செய்திகள்:

Share