எழுமின் செய்திகள்

எழுமின் செய்திகள் wellcome to the official page of the Ezhumin news.

இணைய ஊடகத்தின் இணையில்லா தலைவன்.

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை எமது எழுமின் செய்திகள் தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

நம்பகமான செய்திகளை நேயர்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கம்.

29/06/2025

மஸ்கெலியா நகரத்தில் விரைவில்..!

  | தோட்ட மக்களின் நலனுக்காக ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி – கொட்டகலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிஊட்டச்சத்து மாதத்தை முன்...
28/06/2025

| தோட்ட மக்களின் நலனுக்காக ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி – கொட்டகலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, கொட்டகலை சுகாதார மருத்துவ அலுவலகம், தோட்டப் பகுதி மக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, தோட்டப் பகுதி மக்களுக்கான ஊட்டச்சத்து உணவு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று, 2025.06.28 அன்று கொட்டகலை ரிஷி கேஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்ச்சி, கொட்டகலை சுகாதார மருத்துவ அலுவலகத்தின் சுகாதார மருத்துவ அதிகாரிகள், குடும்ப சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி கே. சுதர்சன் மற்றும் உதவி சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபய குணவர்தன ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தோட்டப் பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்க...
28/06/2025

வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு!

வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க முடியும் என கூறி பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப், வீ சாட் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அதன்படி, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடி செய்யப்படுகின்றது.

இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர்.

அதேவேளை, வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி விளம்பரங்களை பதிவிட்டு, அதன் ஊடாக அறிமுகமாகும் நபர்களின் வங்கி கணக்குகளை பெற்றுக் கொள்கின்றனர்.

பின்னர், அதில் பணத்தை வைப்புச் செய்து அந்த பணத்தை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தால் பெரியளவிலான பணத்தொகை இலாபமாக கிடைக்கும் என கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் முதலாம் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் வங்கி கணக்குகளில் பணத்தொகையை முதலீடு செய்த நபர்களின் பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு இலகுவாக பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதன் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன. எனவே, சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

மாவனெல்ல பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்து.நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை ...
28/06/2025

மாவனெல்ல பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்து.

நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாகவும் லொரியில் (கெப்) பயணித்த பதினோறு பேரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

28/06/2025

🌟 இலங்கையின் மிகப்பெரிய Footwear Sale தலவாக்கலையில்..! 🌟

📅 ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை மட்டுமே..!
📍 தலவாக்கலை கதிரேசன் கோயில் மண்டபத்தில்..!

👞👠👟
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமானது..!

🎁 இந்த சிறந்த சந்தர்ப்பத்தில் உங்கள் முழுக்குடும்பத்திற்குமான காலணிகளை வாங்கி செல்லுங்கள்..! 🎁

📞 மேலதிக விபரங்களுக்கு: 076 148 7000

  | இ.தொ.காவுடன் தேசிய மக்கள் சக்தியின் மஞ்சுல செய்துகொண்ட டீல் நோர்வூட் பிரதேசசபையில் தோற்றுப்போயுள்ளது.நோர்வூட் பிரதேச...
27/06/2025

| இ.தொ.காவுடன் தேசிய மக்கள் சக்தியின் மஞ்சுல செய்துகொண்ட டீல் நோர்வூட் பிரதேசசபையில் தோற்றுப்போயுள்ளது.

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெற்றிருந்தது. இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் இன்று காலையே அங்கு வந்திருந்தார்கள். ஜீவன் தொண்டமானை தவிர பெரும்பாலும் அனைவருமே அங்கு வந்திருந்தார்கள்.

அதேபோல, NPP சார்பில் மஞ்சுல சுரவீர உள்ளிட்டவர்களும் அங்கு வந்திருந்ததோடு ரவி குழந்தைவேலுவை தவிசாளராகவும், ஹெலனை உபதவிசாளராகவும் நியமிக்க வாக்களிக்க வேண்டுமென மஞ்சுல அவருடைய கட்சி பிரதேசசபை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், ரவி குழந்தைவேலுவுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என முன்கூட்டியே தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தார்கள். கட்சி இ.தொ.காவுடன் டீல் செய்திருந்தாலும் உறுப்பினர்கள் எவரும் இ.தொ.காவுடன் டீலில் இல்லை.

எனவே, மஞ்சுல சுரவீரவின் அறிவுறுத்தலை மீறி ஹெலனை தவிசாளராக நியமிப்பதாக சபையில் அறிவித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் சபையை தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இ.தொ.காவுடன் டீல் செய்து ஏனைய சபைகளை கைப்பற்றிவிட்டு வெளியில் வந்து “விஞ்ஞான விளக்கம்" கொடுத்த NPP பாராளுமன்ற உறுப்பினர் நோர்வூட் பிரதேசசபையை NPPயே கைப்பற்றியிருக்கிறபோதிலும் வெளியில் வந்து "விஞ்ஞான விளக்கங்கள்" எதுவும் கொடுத்ததாக தெரியவில்லை.

தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் எடுத்துக்கொண்ட படங்களில் கூட NPP உறுப்பினர்கள் சிலரின் முகங்களை பார்த்தாலே நோர்வூட் பிரதேசசபையில் என்ன நடந்துள்ளது என்பது தெரியும்.

நுவரெலியா மாவட்டத்தில் NPPயை வளர்த்தெடுத்த முக்கிய உறுப்பினர் ஒருவரை பதவியிலிருந்து விலக்கப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் மிரட்டியுள்ள சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.

(ஊடகவியலாளர் - நிரோஷ்)

மரண அறிவித்தல் மெராயா நகர், ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய பிரதமகுருக்களும் ஸ்ரீ ஜோதிஸ்வரூப தீர்த்த யாத்திரை  குழு  குருசுவாமியு...
27/06/2025

மரண அறிவித்தல்

மெராயா நகர், ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய பிரதமகுருக்களும் ஸ்ரீ ஜோதிஸ்வரூப தீர்த்த யாத்திரை குழு குருசுவாமியுமான நானுஓயா, கிரிமெட்டிய, அவோக்கா தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட சிவஸ்ரீ லெச்சுமன் முத்துகுமார் குருக்கள் இறைவனடி சேர்ந்தார்.

🌟 இலங்கையின் மிகப்பெரிய Footwear Sale தலவாக்கலையில்..! 🌟📅 ஜூன் 20 முதல் ஜூலை 4 வரை மட்டுமே..!📍 தலவாக்கலை கதிரேசன் கோயில்...
27/06/2025

🌟 இலங்கையின் மிகப்பெரிய Footwear Sale தலவாக்கலையில்..! 🌟

📅 ஜூன் 20 முதல் ஜூலை 4 வரை மட்டுமே..!
📍 தலவாக்கலை கதிரேசன் கோயில் மண்டபத்தில்..!

👞👠👟
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமானது..!

🎁 இந்த சிறந்த சந்தர்ப்பத்தில் உங்கள் முழுக்குடும்பத்திற்குமான காலணிகளை வாங்கி செல்லுங்கள்..! 🎁

📞 மேலதிக விபரங்களுக்கு: 076 148 7000

  | நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பிரான்ஸில் ஹெலன் தெரிவு.
27/06/2025

| நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பிரான்ஸில் ஹெலன் தெரிவு.

 #  I மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - கினிகத்தேனையில் சம்பவம்!கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் தொழில்நுட்பத் துறையில் 13 ...
26/06/2025

# I மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - கினிகத்தேனையில் சம்பவம்!

கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் தொழில்நுட்பத் துறையில் 13 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர்,குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறி, நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வியாழக்கிழமை (26) அன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தான் இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றதாகவும் கடந்த திங்கட்கிழமை (23) அன்று பாடசாலைக்கு சென்ற போது ​​பாட ஆசிரியர் தன்னிடம் வந்து தனது குறிப்பேடுகளை கேட்ட நிலையில் தான் பிரத்தியேக வகுப்புகளில் இருந்து எடுத்த குறிப்புகளைக் காட்டியதாகவும் இதன்போது, ​​ஆசிரியர் அந்த புத்தகத்தை கிழித்து முகத்தில் பலமுறை தாக்கியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது, ​​அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில், கினிகத்தேன பொலிஸ் நிலையத்தின் அருகே வந்து, தன்னை வலுக்கட்டாயமாக பாடசாலைக்கு அழைத்துச் சென்று, சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாகவும் மாணவன் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு காது கேளாமை இருப்பதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் அதிபர் உபுல் இந்திரஜித்திடம் விசாரித்தபோது, ​​பல மாதங்களாக பாடசாலைக்கு செல்லாததால், ஆசிரியர் குறித்த மாணவன் உட்பட சில மாணவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கினிகத்ஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விராஜ் விதானகேவிடம் விசாரித்தபோது, ​​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தான் தாக்கப்பட்டதாகக் கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான பதிவை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் பொலிஸார் குறித்த மாணவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து சம்பவம் குறித்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கௌசல்யா

ஹட்டன் டிக்கோயர் நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது
26/06/2025

ஹட்டன் டிக்கோயர் நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது

  | கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக ராஜமணி பிரசாந் தனது கடமைகளை நேற்றைய தினம் (23) பொறுப்பேற்றுக் கொண்டார்.           ...
24/06/2025

| கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக ராஜமணி பிரசாந் தனது கடமைகளை நேற்றைய தினம் (23) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Address

No 36, Cymbru Upper Division
Lindula

Alerts

Be the first to know and let us send you an email when எழுமின் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எழுமின் செய்திகள்:

Share