Ezhumin News

Ezhumin News wellcome to the official page of the Ezhumin news.

இணைய ஊடகத்தின் இணையில்லா தலைவன்.
(3)

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை எமது எழுமின் செய்திகள் தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

நம்பகமான செய்திகளை நேயர்களுக்கு விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கம்.

இரட்டை கொலை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கண்டி பல்லேகல சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்.டிக்கோயா இரட்டைக் கொ...
27/05/2026

இரட்டை கொலை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கண்டி பல்லேகல சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்.

டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் இவரை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்
ஹட்டன் திக்கோயா பகுதியில் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 27 .05.2026 அதிகாலை 5.45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.

சந்தேக நபரின் விபரங்கள்
பெயர் செல்லையா மனோஜ் அல்லது மனோஹரன்
வயது 37 வயது.
பின்னணி இவர் இதற்கு முன்னர் ஹாலிஎல, வட்டவளை, விக்டன் டிக்கோயா லிந்துலை, பொகவந்தலாவ, புலத்சிங்ஹல, இங்கிரிய மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நடமாடியுள்ளதுடன், பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (26) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த சந்தேக நபர், இன்று அதிகாலை 5.45 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
முன்னதாக, ஊடகங்கள் வாயிலாக வழங்கப்பட்ட பரவலான பிரசாரம் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் இந்த சந்தேக நபரைக் கைது செய்திருந்தனர்.

தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அல்லது அவரைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.

25/05/2026

இந்த வீட்டில நாங்க எப்படி வாழ்வது? அல்லல்படும் லிந்துலை-மவுசாலை மேற் பிரிவு மக்கள்..!

சந்தேக நபர் கைது.நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இரட்டை கொலை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது.சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதி...
23/05/2026

சந்தேக நபர் கைது.

நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இரட்டை கொலை சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது.

சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார் என பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா நிருபர்

🚨📢 உங்களைச் சுற்றி இந்த நபர் இருக்கிறாரா? டிக்கோயா இரட்டை கொ***லை சந்தேக நபரின் அடையாளம் வெளியீடு! தொடர்பு கொள்ள வேண்டிய...
23/05/2026

🚨📢 உங்களைச் சுற்றி இந்த நபர் இருக்கிறாரா? டிக்கோயா இரட்டை கொ***லை சந்தேக நபரின் அடையாளம் வெளியீடு! தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் இதோ!


டிக்கோயா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொ***லைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் மிக தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் பொதுமக்களின் அவசர உதவியை நாடியுள்ளனர்.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்த மிக முக்கியமான அடையாளத்தை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். இதன்படி, தற்போது திரையில் வெளியாகி இருக்கும் வீடியோவில் காணப்படும் நபர் தான் அந்த சந்தேக நபர் என்றும், அவர் கடைசியாக நீல நிற சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரையில் மற்றும் வீடியோவில் காட்டப்படும் நபரை யாராவது ஏதேனும் ஒரு இடத்தில் கண்டிருந்தாலோ, அல்லது அவர் தங்கியிருக்கும் இடம் மற்றும் அவர் பற்றிய ஏதேனும் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தாலோ, தயவுசெய்து தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஹட்டன் பொலிஸ் பிரிவின் அவசர தொடர்பு எண்களுக்கோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்களைத் தெரிவிப்பதற்காக ஹட்டன் பொலிஸ் நிலையம் 051 222 2222 என்ற எண்ணையும், குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி 076 167 0258 என்ற எண்ணையும், தலைமை பொலிஸ் பரிசோதகர் 071 859 1117 என்ற எண்ணையும் வழங்கியுள்ளனர். மேலும் 119 என்ற பொலிஸ் அவசர உதவி எண்ணிற்கும் நீங்கள் உடனடியாக அழைக்கலாம்.

அதேவேளை, பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவரும் இந்த சந்தேக நபரை தற்செயலாக கண்டால், அவருடன் நேரடியாக எந்தவொரு தொடர்பையோ அல்லது கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளையோ மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த நபர் குறித்த உறுதியான தகவல் தெரிந்தால் மட்டும் உடனடியாக பொலிஸாருக்கு இரகசியமாக அறியத்தரவும். கொடூர குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேக நபரை சட்டத்தின் முன் நிறுத்த பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பு பெரிதும் உதவும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  | பொகவந்தலாவில் தனியார் பேருந்து மோதி 28 வயது இளைஞர் உயிரிழப்புபொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற ...
20/05/2026

| பொகவந்தலாவில் தனியார் பேருந்து மோதி 28 வயது இளைஞர் உயிரிழப்பு

பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை சுமார் 10 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான புஷ்பகுமார சிந்துஷன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியின் இல்லத்திற்கு வருகை தந்திருந்த வேளையிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தின் ஹேன்ட் பிரேக் நழுவியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

– மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

நு /ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலய  மாணவச் செல்வங்கள், நுவரெலியா வலய தனிநபர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்ற...
19/05/2026

நு /ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலய மாணவச் செல்வங்கள், நுவரெலியா வலய தனிநபர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி, அபார திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு மாபெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளனர்.

​சதுரங்கப் பலகையில் சாதுரியமாக காய்களை நகர்த்தி, பதக்கங்களை வென்றெடுத்த எமது சிங்கங்கள் மற்றும் மாகாண அணிக்குத் தெரிவான வெற்றியாளர்களின் விபரம் இதோ:

​🥇 பதக்கங்களை அள்ளிய சாதனையாளர்கள்:

🥇 தங்கப் பதக்கம்* - ஜே. சரணகவி - 16 வயதுக்குட்பட்டோர்.
🥈 வெள்ளிப் பதக்கம்* - எஸ். மிதுஷன் - 12 வயதுக்குட்பட்டோர்.
🥉 வெண்கலப் பதக்கம்* - வி. சஞ்சீவனி - 16 வயதுக்குட்பட்டோர்.

மாகாண மட்ட போட்டிக்கு தெரிவானவர்கள்:*

1. பி. ட்ரிஸ்டன் - 12 வயதுக்குட்பட்டோர்
2. எம்.ஜே. ஜுஹா - 12 வயதுக்குட்பட்டோர்
3. எஸ். தேவன்ஷி - 12 வயதுக்குட்பட்டோர்
4. எஸ். தினுஷா - 14 வயதுக்குட்பட்டோர்
5. எஸ். சஹானா - 14 வயதுக்குட்பட்டோர்
6. ஆர். கவிஷகா - 16 வயதுக்குட்பட்டோர்

​ பாடசாலையின் நாமத்தை வலய மட்டத்தில் ஒளிரச் செய்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து சிறந்த முறையில் பயிற்சியளித்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றோர்களுக்கும் எழுமின் செய்திகளின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

​மாகாண மட்டப் போட்டிகளிலும் எமது மாணவர்கள் வெற்றி வாகை சூட மனதார வாழ்த்துகிறோம்!

19/05/2026

மலையகத் தமிழர்களின் காணி உரிமையை வலியுறுத்தி தலவாக்கலையில் இருந்து கொழும்பு வரை நடைபயணம் மேற்கொள்ளும் ஆறு வயது சிறுவன் பிரேமராஜா கார்கி.

⭕️ ஹட்டனில் இருந்து கொழும்பு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் பயணிகள் அவதி; தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாத அர...
17/05/2026

⭕️ ஹட்டனில் இருந்து கொழும்பு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் பயணிகள் அவதி; தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாத அரச அதிகாரிகள்.

2026.05.17

உடபுஸ்ஸல்லாவ தோட்டத்தில் தாக்குதல் சம்பவம் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி இடமாற்றம்உடபுஸ்ஸல்லாவ, பிளோர்லிமென்ட் தோட்டத...
17/05/2026

உடபுஸ்ஸல்லாவ தோட்டத்தில் தாக்குதல் சம்பவம் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி இடமாற்றம்

உடபுஸ்ஸல்லாவ, பிளோர்லிமென்ட் தோட்டத்தின் சென்மார்க்ரட் பிரிவில் கடந்த 14ஆந்திகதி அன்று சுப்பையா நிரோஜன் என்பவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட தோட்ட அதிகாரி, உதவி அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தை, உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் பொது முகாமையாளர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக தொழிலாளர் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் வலியுறுத்தலான கோரிக்கையை பொது முகாமையாளர் ஏற்றுக்கொண்டார். அதன்படி, குறித்த அதிகாரிகள் மீது உடனடி இடமாற்றம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கு உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இராகல மாநில இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நடராஜா மலர்வேந்தன்

நோர்வூட் - நிவ்வேலிகம பகுதியில் விபத்து. பொகவந்தலாவாவிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் கார் ஒன்றுசார...
16/05/2026

நோர்வூட் - நிவ்வேலிகம பகுதியில் விபத்து.

பொகவந்தலாவாவிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பிரதான வீதியைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர் .

குறித்த விபத்து இன்று (16) நோர்வூட் நிவ்வேலிகம பகுதியில் உள்ள ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மாலை சுமார் 4:00 மணியளவில் நிகழ்ந்தது.

வேகமாகச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார், சறுக்கிச் சென்று வீதியோரத்தில் இருந்த தொலைபேசிக் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது .

விபத்து நடந்த நேரத்தில் காரில் இரண்டு பேர் பயணம் செய்துகொண்டிருந்தாலும், அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்

Address

No 36, Cymbru Upper Division
Lindula

Alerts

Be the first to know and let us send you an email when Ezhumin News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ezhumin News:

Share