12/01/2026
பீகார் மாநிலம் மதெபுரா மாவட்டத்தில் நடந்த இந்த கொடூரம் மனிதநேயத்தை உலுக்கும் ஒன்றாக இருக்கிறது.
கணவரை இழந்து, தன் சிறு குழந்தைகளின் ஒரே ஆதரவாக வாழ்ந்து வந்த சுமார் 30 வயதான முஸ்லிம் விதவை ஹினா பர்வீன்,
ஜனவரி 3-ஆம் தேதி இரவு தனது குடிசையிலிருந்து கடத்தப்பட்டு,
குழு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் அருகிலுள்ள வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன் கணவரை இழந்த பிறகு,
தினக்கூலி வேலை செய்து தன் குழந்தைகளை காப்பாற்றி வந்த அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை பாரீர்.
பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையருக்கான நீதியெங்கே என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
தாயை இழந்த அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு?
நீதித்துறைக்கு விடப்பட்ட சவால் என்று நாம் கூறினாலும் , நாளை அந்த நீதிமன்றம் இவர்களுக்கு ஆதராகவே தீர்ப்பு கொடுக்கும் , தொடர்ந்து நடக்கும் நீதித்துறை செயல்பாடுகள் மக்கள் நம்பிக்கையை இழந்து நிற்கிறது.
🕯️ ஹினா பர்வீனுக்கு நீதி கிடைக்குமா?
இன்னொரு மிக முக்கியமான விசயத்தை கூறுகிறேன்.
🚨 இந்தியா ஆபத்தான Normalization என்ற பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு பாலியல் வன்கொடுமை – இயல்பாக்கப்படுகிறது,
முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவது – இயல்பாக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் மீது கூட்டுக் கொலை (Lynching) இயல்பாக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் மீது தாக்குதல் – இயல்பாக்கப்படுகிறது.
மசூதிகள் இடிக்கப்படுவது – இயல்பாக்கப்படுகிறது.
முஸ்லிம்களை தாக்க ஆயுதங்கள் பகிர்வது – இயல்பாக்கப்படுகிறது.
⚠️ இந்தியாவில் இஸ்லாமோபியா உச்சத்தில் உள்ளது.
ஜனநாயகத்தின் கடைசி மூச்சு மௌனமாக செல்லாமல் இருக்கவேண்டும்.