வன்னி மண்

வன்னி மண் "வன்னிமண் அறக்கட்டளை"ஒரு
சமூக சேவை அமைப்பாகும்

துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டது!------------------------மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த வறுமைக்கோ...
09/05/2023

துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டது!
------------------------
மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் பகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர் ஒருவருக்கு அவரின் கற்றல் நடவடிக்கையை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.

நிதி வழங்குநர்- பெயர் குறிப்பிட விரும்பவில்லை

சற்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.----------------------------மன்னார் மாவட்டத்தின் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை...
04/05/2023

சற்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.
----------------------------
மன்னார் மாவட்டத்தின் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவருக்கு சற்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை தாயகத்தில் விசுவமடு பகுதியில் ரெமோ ஒருங்கிணைந்த பண்ணையை ஆரம்பித்து பல குடும்பங்களை வாழவைக்கும் லண்டனில் வசிக்கும் சுதன் அண்ணா குடும்பத்தினர் வழங்கிவைத்தனர்.
நன்றி அனைவருக்கும்

இன்றைய தினம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்...
23/04/2023

இன்றைய தினம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 50 குடும்பங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இக்குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொருட்களை லண்டனை சேர்ந்த சரோஜினி உருத்ரா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் விமலச்சந்திரன் அவர்களின் நினைவாக அவரது மகனான கரன் விமலச்சந்திரன்( நோர்வே ) அவர்களின் நிதி பங்களிப்பிலும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வளவு பொருட்களை ஒழுங்கு படுத்தி தந்த யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த சஞ்சி குடும்பத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமரர் திரு.குலசிங்கம் ராஜ்குமார் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாள் இன்று!-------------------------------------அமரர் திரு....
28/03/2023

அமரர் திரு.குலசிங்கம் ராஜ்குமார் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
-------------------------------------
அமரர் திரு.குலசிங்கம் ராஜ்குமார் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மன்னார் எழுத்தூர் புனித அன்னைத்திரேசா அரசினர் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலை சிறார்களுக்கு மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இவ் உதவிகளை வழங்கி வைத்த அன்னாரது தம்பியான வைத்தியர் குலசிங்கம் சுரேஷ்குமார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வழங்குபவர் -
வைத்தியர் குலசிங்கம் சுரேஸ்குமார்

முன்பள்ளிகளை பசுமையாக்கும் செயல் திட்டம்!கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் அமைந்துள்ள "சிவாலய செந்...
26/03/2023

முன்பள்ளிகளை பசுமையாக்கும் செயல் திட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் அமைந்துள்ள "சிவாலய செந்தூரன் முன்பள்ளி" பசுமையாக்கும் செயல் திட்டம் இன்றைய தினம் வன்னி மண் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டது.
முன்பள்ளியை அழகுபடுத்தும் மற்றும் நிழல்தரும் ஒரு தொகுதி மரக்கன்றுகள் எம்மால் வழங்கி வைக்கப்பட்டது.
பசுமைச் செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை சுற்று வேலிக்கான நெற்றும் எம்மால் வழங்கி வைக்கப்பட்டது.
எமது இத் திட்டங்களுக்கான நிதியனுசரணையை சிவநகர் கிராமத்தைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் முருகேசு செல்வராஜா (பலாலி முருகேசு) அவர்கள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி மிகவும் விமர்சையாக நடைபெற்றதும் விசேட அம்சமாகும்.
இதற்கான அனைத்து ஒழுங்கமைப்புகளையும் மேற்கொண்ட முன்பள்ளியின் தலைவர் திலக்சன் அவர்களுக்கும் வன்னிமண் அறக்கட்டளையின் உறுப்பினர் குஜன் மற்றும் நிதுசன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது!இன்றைய தினம் திருமண நாளை கொண்டாடும் திருவருள் & அனுசியா தம்பதிகளின் திரும...
23/03/2023

வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது!
இன்றைய தினம் திருமண நாளை கொண்டாடும் திருவருள் & அனுசியா தம்பதிகளின் திருமணநாளை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

சற்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது!இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வங்காலை கிராமத்தில் விபத்து ஒன்றில் முள்ளம் தண்டுவட...
28/02/2023

சற்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது!

இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வங்காலை கிராமத்தில் விபத்து ஒன்றில் முள்ளம் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அவரது தேவை கருதி சற்கர நாற்காலி வன்னி மண் அறக்கட்டளையினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை லண்டனில் வசிக்கும் மன்னார் ஆத்திமோட்யைச் சேர்ந்த
சுரேஸ்,செந்தில்,கோணேஷ்,ஜெனா,
ஜெயானந்தராசா இணைந்து வழங்கி வைத்தனர்.

வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது!!!யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையின் வைத்தியர் குலசிங்கம் சுரேஷ்குமார் அவர்...
27/02/2023

வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது!!!

யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையின் வைத்தியர் குலசிங்கம் சுரேஷ்குமார் அவர்களின் புதல்வியான சுரேஷ்குமார் மயூரகி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இரண்டு குடும்பங்களுக்கு உரிய வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 15 வருடங்கள் மேலாக வைத்தியர் குலசிங்கம் சுரேஷ்குமார் அவர்கள் தனது புதவிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி திட்டங்களும் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

"மதியழகன்" இல்லத் திறப்பு விழா!இறுதி யுத்தத்தில் படுகாயப்பட்டு முள்ளந் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்...
10/02/2023

"மதியழகன்" இல்லத் திறப்பு விழா!

இறுதி யுத்தத்தில் படுகாயப்பட்டு முள்ளந் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் கோரக்கன்கட்டு பகுதியில் தற்காலிக கொட்டகையில் வசித்து வந்த நல்லையா மதியழகனுக்கு நிரந்தர வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டது.
பிரித்தானியாவில் உள்ள மில்டன் கீன்ஸ் தமிழ் கல்விக் கழகம் "தமிழாய் ஒன்றிணைவோம்" என்னும் தொணிப்பொருளில் அங்குள்ள வர்த்தகர்களின் ஆதரவுடன் இதற்கான நிதி திரட்டப்பட்டு வன்னிமண் அறக்கட்டளையின் ஊடாக மதியழகனுக்கு இவ் வீடு இன்றையதினம் கையளிக்கப்பட்டது.
அனைத்து வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டு இன்றைய தினம் மதியழகன் இல்ல திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.இத் திறப்பு விழாவிற்கு மில்டன் கீன்ஸ் தமிழ் கல்வி கழகத்தின் உறுப்பினர் தயாபரன் அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார்.
வன்னி மண் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், சமூக சேவகர்கள், கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கிராமத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

செயற்கை கால் வழங்கிவைக்கப்பட்டது-----------------யுத்தத்தில் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்த  மன்னார் மாவட்டம் மடுக்கரை கி...
09/02/2023

செயற்கை கால் வழங்கிவைக்கப்பட்டது
-----------------
யுத்தத்தில் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்த மன்னார் மாவட்டம் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த பயனாளி வருவதற்கு நேற்று முன்தினம் செயற்கைகால் வன்னி மண் அறக்கட்டளையூடாக வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையை வவுனியாவை பிரபல வர்த்தகரான சதீஷ் அண்ணன் அவர்கள் வழங்கி வைத்தார்.

Address

Mannar
023

Alerts

Be the first to know and let us send you an email when வன்னி மண் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share