முசலி-media

முசலி-media உண்மையின் முகம்

மன்னார் மாவட்டமும் காற்றாலை மின் உற்பத்தியும் கனிய மணல் அகழ்வும்!!!இன்று முகநூல் ஒன்றில் ஒருவரின் பதிவு பார்த்தேன் காற்ற...
07/08/2025

மன்னார் மாவட்டமும் காற்றாலை மின் உற்பத்தியும் கனிய மணல் அகழ்வும்!!!

இன்று முகநூல் ஒன்றில் ஒருவரின் பதிவு பார்த்தேன் காற்றாலை மின் உற்பத்தியால் மன்னாரிற்கு என்ன தீமை? ஏன் எதிர்ப்பு?என்று

அதற்கான சிறு தெளிவுபடுத்தல்... என்னால் முடிஞ்சது...👇👇✍️🙏🙏

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மற்றும் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலை கோபுரங்கள் தற்போது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சூழ்நிலையில், அந்த திட்டத்திலிருந்து தாம் வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி முன்னெடுக்கப்படுவதற்கு மன்னார் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையின் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக மன்னார் தீவு பகுதி அமையப் பெற்றுள்ளது.

மன்னார் நிலப் பரப்பில் அதிகளவிலான கனிம வளங்கள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இல்மனைட் கனிம வளம் மன்னார் நிலப் பரப்பில் அதிகளவில் காணப்படுகின்றன. இல்மனைட்டை தவிர்த்து. மேலும் பல்வேறு வகையான கனிம வளங்கள் காணப்படுவதாக ஆய்வுகளின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நிலப் பரப்பில் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னரான காலத்திலிருந்து இந்த கனிம வளங்கள் உருவாகியுள்ளதாக மன்னார் கனிம வளங்கள் தொடர்பில் ஆய்வுகளை நடத்திய ஆவுஸ்திரேலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு வருடாந்தம் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பறவைகள் வருகைத் தருகின்ற சூழ்நிலையில், அந்த பறவைகளின் பிரதான நுழைவாயிலாக மன்னார் பகுதி காணப்படுகின்றது.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பறவைகள், இலங்கையில் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளை இலங்கையிலிருந்து தமது நாட்டிற்கு அழைத்து செல்வதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடலால் சூழப்பட்ட இயற்கை வளங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை மன்னார் மாவட்டம் கொண்டுள்ளது.

மன்னாரில் வலுசக்தி அமைச்சின் கீழ் 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் 2020ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் நிதித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக ஆண்டொன்றிற்கு 400 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேலும் சில காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

காற்றாலை மின் உற்பத்தியின் விளைவுகள்

1. மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுரங்களினால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

2.ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பக்கெட் மண்ணை அகழ்கின்றனர். இவ்வாறு தோண்டி எடுக்கின்ற மண்ணை வெளி இடங்களுக்கு கொண்டு போகின்றார்கள்.

3. குடியிருப்பு பாதிக்கப்படுகின்றது. தாழ்வுபாடு கிராமத்தில் 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக மூன்று காற்றாடிகள்.

4. காற்றாடி அமைப்பதற்கு வயர் கொண்டு போவதாக சொல்கின்றார்கள். இந்த வயர் புதைப்பதற்கு நிலத்தில் 25 அடி தோண்டி அந்த வயரை புதைத்து கொங்கீரிட், மண் போன்றவற்றை போட்டு செய்கின்றார்கள். கரையோரத்தில் கொங்கீரிட் போடுவதனால் மழை நீர் வெளியில் போகாது.

5.காற்றாலை அமைக்கபட்டதன் பின்னர் கடல் மட்டத்தை விடவும், நில மட்டம் தாழ்வாக இருக்கின்றமை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை உண்டு பண்ணும்.

6. கடத்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டவர்களுக்கு,
காற்றாலை அமைக்கப்பட்டதன் பிறகு, முன்னர் இருந்த மீன்களின் தொகையும், இந்த காற்றாலை அமைக்கப்பட்டதன் பின்னர் இருக்கின்ற மீன்களின் தொகையும் மிகக் குறைவு.

07.காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பனைகள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுன்றது.

08.காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் பிறகு இந்த ஊருக்குள் தண்ணீர் தேங்கி நிற்கின்ற காலம் நீண்டு போய், மழை காலத்திற்கு பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தண்ணீர் கிராமபுறங்களில் மூன்றில் இரண்டு பகுதிகளில் தேங்கியிருக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.

''மன்னார் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாக இந்த இல்மனைட் அகழ்வு காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் அதிஷ்டம் அல்லது துரதிஷ்டம் என்பது மன்னார் மாவட்டத்தில் மிகக் குறைந்த செலவோடு மிகச் செறிவான இல்மனைட்டை பெறக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றது.

இலங்கையின் மற்றைய பகுதிகளிலும், உதாரணமாக மாணிக்க கங்கை, கும்புக்கன் ஓயா, புல்மோட்டை பகுதிகளிலும் இந்த இல்மனைட் காணப்பட்டாலும் கூட, அந்த பிரதேசங்களில் இந்த இல்மனைட்டை எடுப்பதற்கான செலவுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தினுடைய இல்மனைட் அகழ்வு என்பது மிகவும் செலவு குறைந்தது."

"அத்தோடு, அவற்றில் சில கனிமங்கள் காணப்படுகின்றன. எபடைட், டேடைல், சில்கோன், இல்மனைட் போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. ஒரு தொன் மணல் அகழப்பட்டால், அந்த மணலில் குறிப்பிட்ட அளவு மணல் மட்டுமே மீண்டும் பயன்படுத்த முடியாத மணலாக காணப்படும். பெரியளவானவை கனிம மணலாக காணப்படுகின்றன. மன்னார் மாவட்டம் கடல் பரப்பிலிருந்து குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது."

"இந்த கனிம மணல் அகழ்வின் ஊடாக மேலும் பரப்பளவு குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மன்னார் கடலுக்குள் மூழ்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

இல்மனைட் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்களிலேயே மன்னார் மாவட்டம் கடல் நீருக்குள் மூழ்கின்ற அபாயம் காணப்படுகின்றது.'' என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அகழப்படுகின்ற சிறியளவிலான மணல் அகழ்வு கூட, மன்னார் மாவட்டத்தின் நிலைமையை பெரிதும் பாதிக்கும் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

06/08/2025

போர் வடுக்கள் சுமந்த மன்னார் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

இன்றைய பாராளுமன்ற உரையில் காதர் மஸ்தான்

சரியாக அரை நூற்றாண்டிற்கு முன்னர் நாட்டின் அரசிற்கே கொடை கொடுத்த வள்ளல்!1974 ஆம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்...
06/08/2025

சரியாக அரை நூற்றாண்டிற்கு முன்னர் நாட்டின் அரசிற்கே கொடை கொடுத்த வள்ளல்!

1974 ஆம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அரசு பாரிய வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியிற்கு முகம் கொடுத்தது.

அப்போது ஒரு அமெரிக்க டாலரின் பெறுமதி ரூபாய் 6.65 ஆகவும் தங்கத்தின் விலை 154 ரூபாயாகவும் காணப்பட்டது.

அத்தகைய நெருக்கடி நிலையில் அன்று மாணிக்கக் கல் வர்த்தகத்தில் முன்னணியில் இருந்த ஜாமிஆ நளீமிய்யாஹ் கலாபீட ஸ்தாபகர் அல்ஹாஜ் நளீம் (ரஹ்) அவர்கள் இலங்கை அரசிற்கு 15 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டுச் செலாவணியை நன்கொடையாக வழங்கினார்.

இன்றைய தங்கத்தின் பெறுமதிப்படி அது 175 கோடி ரூபாய்களுக்கு சமமானது, இலங்கை வரலாற்றில் எந்தவொரு வர்த்தகரும் தேசத்தின் அரசிற்கு இவ்வாறு கைகொடுத்ததில்லை என்பது உண்மையாகும்.

குறிப்பாக அண்மைக்காலமாக நாடு ஏதிர் கொண்டுள்ள வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி நிலையில் நாட்டின் வர்த்தகர்களோ வங்கரோத்து அரசியலில் கோடிக் கணக்கில் வெளிநாடுகளில் செல்வங்களை குவித்துள்ளவர்களோ இலங்கை அரசிற்கு இவ்வாறு கை கொடுக்க முன்வரவில்லை என்பது ஊடகங்களிலும் பேசு பொருளாக இருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரிடம் அந்த கொடையை வழங்கும் கீழுள்ள படத்தை நளீம் ஹாஜியாரின் இளைய புதல்வர் அல்ஹாஜ் யாகூத் நளீம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டோம்.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
03.08.2024 || SHARE

06/08/2025

மன்னாரில் உங்கள் சண்டித்தனத்தைகாட்ட வேண்டாம்! மன்னாரை நாங்கள் காப்பாற்றுவோம்! சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள்…

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு இலங்கை ஜனாதிபதி அவர...
06/08/2025

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இவ் நடவடிக்க்களை ஆராய்ந்து மக்களுக்கான தீர்வை எட்டும் வகையிலான கலந்துரையாடல் நாளைய தினம் 7/8/2025 வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

06/08/2025

இல்மனைட் கனிய மண் அகழ்வுக்கு எதிரான மக்கள் எழுச்சி!

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்ப...
06/08/2025

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சித் ரூ-2025' தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'ஒன்றாக - கைவிடாத' என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும் பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த சமூக சேவைகள் திணைக்களம் அதன் ஒரு மூலோபாயங்களில் ஒன்றாக 'சித் ரூ' கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. 06 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'சித் ரூ-2025' மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார்.
பிள்ளைகளுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுடன் குழு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

மன்னாரில் இல்மனைட் கனிய மண் அகழ்வுக்கு எதிரான மக்கள் எழுச்சி!🔴ஆரம்பம்🔴
06/08/2025

மன்னாரில் இல்மனைட் கனிய மண் அகழ்வுக்கு எதிரான மக்கள் எழுச்சி!

🔴ஆரம்பம்🔴

பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நகருக்குள் நுழைந்தது காற்றாலை இயந்திரங்கள்
06/08/2025

பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நகருக்குள் நுழைந்தது காற்றாலை இயந்திரங்கள்

06/08/2025

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப் பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை (6) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது.

முசலி தென்பகுதி, வடபகுதி மக்கள் பயன்பெறக்கூடியவாறு வாராந்த சந்தை  அமைத்தால் பல நன்மைகளைப் பெறலாம்!தவிசாளருக்கு சமூகம் சா...
06/08/2025

முசலி தென்பகுதி, வடபகுதி மக்கள் பயன்பெறக்கூடியவாறு வாராந்த சந்தை அமைத்தால் பல நன்மைகளைப் பெறலாம்!

தவிசாளருக்கு சமூகம் சார்பாக முன் வைக்கிறார் முன்னாள் முசலி கோட்டக்கல்வி அதிகாரி எச்.எம் உவைஸ் அவர்கள்

அண்மையில் மன்/அல் றிம்ஸா புதுவெளி பாடசாலையில் மாணவர்களின் சந்தை செயற்பாட்டிற்கு பிரதம அதிதியாக அதிபர் ஆசிரியர்கள் SDEC அழைப்பிற்கு அமைய கலந்து சிறப்பித்தேன். பிரதேச தவிசாளர், வைத்தியர், பொறியியலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.

இது போன்ற நிகழ்வொன்றில் 3 ஆண்டுகளுக்கு முன்பே முசலியில் உற்பத்தியாகும் காய்கறிகள், தேங்காய், முட்டை, கருவாடு பழங்கள், தேன் போன்றவைகளை விற்கவும் வாங்கவும் சிலாவத்துறைக்கு அண்மையில் வாராந்த சந்தை முசலி தென்பகுதி வடபகுதி மக்கள் பயன்பெறக்கூடியவாறு அமைத்தால் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் மீண்டும் தவிசாளருக்கு சமூகம் சார்பாக முன் வைக்கின்றேன்.

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு; மன்னார் நகரில்  கடையடைப்பு! இன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள் மீன்பிடிக்க...
05/08/2025

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு; மன்னார் நகரில் கடையடைப்பு!

இன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள் மீன்பிடிக்கு செல்வதை தவிர்த்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்ச்சியாக மக்களும் மன்னார் தீவுக்குள் இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களுக்கான மூலப் பொருட்கள் எதுவும் தீவு பகுதிக்குள் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் ஆதரவும் இதற்கு அதிகம் தேவைப்படுவது என்பதால் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் மக்களின் வருகையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Address

Mannar, Silavathurai
Mannar
41000

Telephone

+94768422970

Website

Alerts

Be the first to know and let us send you an email when முசலி-media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to முசலி-media:

Share

இது "உண்மையின் முகம்" 🇱🇰முசலி-media LIKE ✅ COMMENT ✅ TAG ✅ SHARE ✅

இது

"உண்மையின் முகம்"

🇱🇰முசலி-media

LIKE ✅ COMMENT ✅ TAG ✅ SHARE ✅