முசலி-media

முசலி-media உண்மையின் முகம்

முசலி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.
25/06/2025

முசலி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.

முசலி பிரதேச சபை உப தவிசாளராக AR தன்சீம் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்) தெரிவு செய்யப்பட்டார்.
25/06/2025

முசலி பிரதேச சபை உப தவிசாளராக AR தன்சீம் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்) தெரிவு செய்யப்பட்டார்.

முசலி பிரதேச சபையின் தவிசாளராக NPP நலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
25/06/2025

முசலி பிரதேச சபையின் தவிசாளராக NPP நலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

முசலி பிரதேச சபை தற்போது
25/06/2025

முசலி பிரதேச சபை தற்போது

நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.
25/06/2025

நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.

மரியதாசன் ஞானராஜ் சோசை நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளராக தெரிவு
25/06/2025

மரியதாசன் ஞானராஜ் சோசை நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளராக தெரிவு

அன்ரன் அன்றுராஜன் நானாட்டான் பிரதேச சபை தவிசாளராக தெரிவு
25/06/2025

அன்ரன் அன்றுராஜன் நானாட்டான் பிரதேச சபை தவிசாளராக தெரிவு

மன்னார் நகர சபை முதல்வராக  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன்  தெரிவு-உப தவிசாளராக  அகில இலங்கை ம...
24/06/2025

மன்னார் நகர சபை முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு-

உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முகமது உசன் தெரிவு.
----------------------------------------------------------------------
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இதன் போது சபையில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் வருகை தந்த தோடு,ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
இதன் போது அதிக உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.இதன்போது கலந்து கொண்ட 15 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கு 06 வாக்குகளும்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தனுக்கு 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில்,கூடிய வாக்குகளை பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் மன்னார் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது உப தவிசாளர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.இதன் போது கூடுதலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இதன் போது வாக்களிப்பில் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது முகம்மது உசன் 08 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் 05 வாக்குகளையும் பெற்ற நிலையில் கூடுதல் வாக்குகள் பெற்ற நூர் முகம்மது முகம்மது உசன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் .

குறித்த தெரிவுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்,செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று (24.06.2025) பிரதேச வைத்தியசாலை சிலாவத்துறை பழைய வெளிநோயாளர் பிரிவு க...
24/06/2025

முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று (24.06.2025) பிரதேச வைத்தியசாலை சிலாவத்துறை பழைய வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தில் நடைபெறுகிறது

போசணைமாத கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு-உப தவிசாளராக ஜனநா...
24/06/2025

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு-

உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் ஆதரவாக 09 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் அவர்களுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.இதன் போது 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இதன் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் அவர்களுக்கு 15 வாக்குகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அழிக்கப்பட்ட நிலையில் மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும்
மன்னார் நகரசபை பிரதி மேயராக ACMC உஷைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் மேயராக சங்கு வசந்தன் தெரிவு

சமீஹா தங்க நகை மாளிகைஉங்களுக்கு தேவையான தங்க ஆபரணங்களை விசேட விலைக்கழிவுடன் நேர்த்தியான டிசைன்களில் பெற்றுக்கொள்ள  நீங்க...
21/06/2025

சமீஹா தங்க நகை மாளிகை

உங்களுக்கு தேவையான தங்க ஆபரணங்களை விசேட விலைக்கழிவுடன் நேர்த்தியான டிசைன்களில் பெற்றுக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம்

சமீஹா தங்க நகை மாளிகை
அரிப்பு வீதி,
சிலாவத்துறை சுற்றுவட்டம் , சிலாவத்துறை.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய மா...
15/06/2025

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15) கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிரின்சஸ் ரோஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 26 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Address

Mannar, Silavathurai
Mannar
41000

Telephone

+94768422970

Website

Alerts

Be the first to know and let us send you an email when முசலி-media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to முசலி-media:

Share

இது "உண்மையின் முகம்" 🇱🇰முசலி-media LIKE ✅ COMMENT ✅ TAG ✅ SHARE ✅

இது

"உண்மையின் முகம்"

🇱🇰முசலி-media

LIKE ✅ COMMENT ✅ TAG ✅ SHARE ✅