evarest fm & tv

evarest fm & tv உண்மை செய்திகள்

பிள்ளையானின் சகாவான இனியபாரதி கைது!- திருக்கோவிலில் வைத்துப் பிடித்தது சி.ஐ.டி.பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில்...
06/07/2025

பிள்ளையானின் சகாவான இனியபாரதி
கைது!

- திருக்கோவிலில் வைத்துப் பிடித்தது சி.ஐ.டி.

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த குற்ற விசாரணைப் பிரிவினரே அவரைக் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனைக் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்துக் கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் இனியபாரதியைக் குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவ தினமான இன்று காலை திருக்கோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைக் கைது செய்து அம்பாறைக்குக் கொண்டு சென்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை காலப் பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் பலர் கடத்தப்பட்டுக் காணாமல்போன சம்பவம் தொடர்பாகக் காணாமல்போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ஹட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியில் விழுந்த மரம் ! ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில்   இன்று (06) பாரிய மரமொன்று முறிந்து...
06/07/2025

ஹட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியில் விழுந்த மரம் !

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று (06) பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலை 7:00 மணியளவில் நோர்வூட் ஓல்டன் பகுதியில் உள்ள பிரதான வீதியில் பாரிய மரமொன்று விழுந்துள்ளது.

விழுந்த மரத்தைச் தோட்டத் தொழிலாளர்கள் , நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் முறிந்து விழும் நிலையில் அதிக மரங்களில் அபாயகரமானதாககாணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையுடன்  #உடலுறவில் ஈடுபட்டால் அது  #பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும்.!நாட்டில்...
06/07/2025

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையுடன் #உடலுறவில் ஈடுபட்டால் அது #பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும்.!

நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ #பாலியல் #உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும்.

இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் பிரஜை ஒருவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு போதுமான அனைத்து சட்டங்களும் உள்ளன. நான் கடந்த 20 வருடங்களாக நீதிபதியாக கடமையாற்றினேன்.

இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

எனது தொழில் துறை அனுபவத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது நாட்டில் உள்ள சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களிடத்தில் போதுமான அறிவில்லை.

உதாரணமாக நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்கு கீழ் உள்ள பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமே கருதப்படும்.

உதாரணமாக 17 அல்லது 18 வயதுடைய ஆண் பிள்ளை 15 வயதுடைய பெண் பிள்ளையுடன் நெருங்கி பழக்கம் கொள்வதாக நினைத்து கொள்வோம். இந்த காலப்பகுதியில் இயற்கையாகவே அவர்களது உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். இதனால் அவர்கள் சில சந்தர்ப்பத்தில் #பாலியல் உடலுறவில் ஈடுபடலாம்.

ஒருவேளை இது இருவரின் விரும்பத்தின் பேரிலேயே இடம்பெற்று இருக்கலாம். விருப்பத்தின் அடிப்படையில் #பாலியல் உடல் #உறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் துஷ்பிரயோகமாகும் என எமது நாட்டில் உள்ள சட்டம் சொல்கிறது.

இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
எமது பிள்ளைகள் அதிகம் இந்திய சினிமாவின் ஹிந்தி திரைப்படங்களையே பார்க்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் பெண் பிள்ளையை கூட்டிக்கொண்டு ஓடுவதை வீரமாக கருதுகிறார்கள்.

பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போது அவர்களிடத்தில் இந்த சட்டம் தொடர்பில் வினவுவேன்.
ஆனால் அவர்கள் தெரியாது எனக் கூறுவார்கள். அப்போதே அது தவறு என விளங்கிக் கொள்வார்கள்.

சட்டம் தொடர்பில் தெளிவின்மையே இதற்கான காரணம்.விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக நடப்பதை மாத்திரமே இங்கு தவறு என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த விடயம் பிள்ளைகளுக்கு பாடசாலை மட்டத்தில் இருந்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும். தண்டனை வழங்குவதற்காக மாத்திரம் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது அல்ல.16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் வயது வந்த ஆண்களினால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது என்றார்.
பகிருங்கள்

தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை.!5GB தொலைத்தொடர்பு கோபுரம் நிறுவப்பட்டமைக்கும், அவ்விடத்திலிருந்து உட...
05/07/2025

தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை.!

5GB தொலைத்தொடர்பு கோபுரம் நிறுவப்பட்டமைக்கும், அவ்விடத்திலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்து மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஏ 35 பிரதான வீதியின் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள ஏ 35 பிரதான வீதி அருகில் 5GB தொலைத்தொடர்பு கோபுரம் தற்பொழுது நிறுவப்பட்டு வருவதற்கு மக்கள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்பகுதியில் எமக்கு 5GB தொலைத் தொடர்பு கோபுரம் தேவையில்லை எனவும் இப்பகுதியில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எமக்கும் எமது உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், எமது சந்ததியையே அழித்துவிடும் எனவே தயவு செய்து இப்பகுதியில் இருந்து உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கத்தின் எந்தவித அனுமதியும் பெறவில்லை, கிராம சேவையாளரின் அனுமதியும் இல்லை பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை. இந் நிலையில் கோபுரம் யாரால் நிறுவப்பட்டது, யார் அனுமதித்தது என்பதும் தமக்குத் தெரியாதுள்ளதாகவும் எனவே உடனடியாக தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா நன்கொடை!லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம்...
05/07/2025

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் ரூபா நன்கொடை!

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

73 வயது நபர் மரணம்; மனைவி கைது- ஓட்டமாவடி - மாஞ்சோலையில் சம்பவம்!தனது 73 வயதான கணவரின் மரணம் தொடர்பான சம்பவத்தில் அவரது ...
05/07/2025

73 வயது நபர் மரணம்; மனைவி கைது
- ஓட்டமாவடி - மாஞ்சோலையில் சம்பவம்!

தனது 73 வயதான கணவரின் மரணம் தொடர்பான சம்பவத்தில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த 73 வயதுடைய நபர் ஒருவர் அடி காயங்களுடன் கடந்த 29 ஆம் திகதி இரவு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை (04) மரணமடைந்துள்ளார்.

அவரது மனைவி ஊன்றுகோலால் தாக்கியதில் வயோதிபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்ணும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் சிலாபத்தில்மரத்துடன் மோதி விபத்து!- 21 பேர் காயங்களுடன் ...
05/07/2025

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் சிலாபத்தில்
மரத்துடன் மோதி விபத்து!

- 21 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்

சிலாபம் - புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் விபத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகச் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின்  உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில்  வேகக்கட்டுப்பாட்டை இழந்த  கனரக வாகனமொன்...
05/07/2025

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது..

04/07/2025

இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

04/07/2025

வவுனியாவில் இன்று (04) காலை வேனுடன் துவிச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயனித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .

பாடசாலைகள் மூடல் தடுக்கப்படவேண்டும்; வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!அன்று அதிக மாணவர்களைக் கொண்டு இயங்கிய பாடசாலைகள் கூட இ...
03/07/2025

பாடசாலைகள் மூடல் தடுக்கப்படவேண்டும்; வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

அன்று அதிக மாணவர்களைக் கொண்டு இயங்கிய பாடசாலைகள் கூட இன்று இயங்கமுடியாமல் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய நிறுவுநர் நினைவுநாளும், பரிசளிப்பு விழாவும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்:- போர், இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு சமநிலை இருந்ததோ அதைப் போன்றதொரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வலிகாமம் வடக்குப் பிரதேசம் யாழ்.மாவட்டத்தில் போர் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம். மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. பல குடும்பங்கள் இங்கு வந்து மீளக்குடியமர வேண்டியிருக்கின்றார்கள்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில்கூட மக்களை இன்னமும் குடியமர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது .யாழ்.நகரப் பகுதியை நோக்கிப் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு விரும்பவில்லை.

வலிகாமம் வடக்கைப் பொறுத்தவரை பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டமையால் அடுத்த வருடம் கிடைக்கும் நிதியில் இந்தப் பகுதிப் பாடசாலைக் ளின் கோரிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். - என்றார்.

வத்தேகமவில் இருந்து குடுகல வழியாக கண்டி நோக்கிச் சென்ற வத்தேகம டிப்போவுக்கு  சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து இ...
03/07/2025

வத்தேகமவில் இருந்து குடுகல வழியாக கண்டி நோக்கிச் சென்ற வத்தேகம டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து இன்று (03) காலை சாலையை விட்டு விலகி கீழே உள்ள ஒரு வீட்டின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Address

Mannar Town

Alerts

Be the first to know and let us send you an email when evarest fm & tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share