evarest fm & tv

evarest fm & tv உண்மை செய்திகள்

மன்னார் யாழ்ப்பாண வீதி சங்கு பிட்டி பாலத்திற்கு அருகாமை வைத்தியர் ஒருவரின் வாகனம் தடம் புரண்டது
31/07/2025

மன்னார் யாழ்ப்பாண வீதி சங்கு பிட்டி பாலத்திற்கு அருகாமை வைத்தியர் ஒருவரின் வாகனம் தடம் புரண்டது

மன்னார் நானாட்டானில் அரச உத்தியோகத்ததர் விபத்து மன்னார் மாவட்டம்  நானாட்டான், உயிலங்குளம் வீதியில் உந்துருளியில் பயணித்த...
30/07/2025

மன்னார் நானாட்டானில் அரச உத்தியோகத்ததர் விபத்து

மன்னார் மாவட்டம் நானாட்டான், உயிலங்குளம் வீதியில் உந்துருளியில் பயணித்த அரச உத்தியோகத்தர் பனைமர வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்

இந்த சம்பவமானது இன்று (30) மதியம் 2.30. மணியளவில் இடம்பெற்றுள்ளது

உயிலங்குளம் பகுதியிலிருந்து நானாட்டான் நோக்கி வரும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது

விபத்தில் காயமடைந்த நபரை வீதியால் பயணித்தவர்கள் மீட்டு முச்சக்கர வண்டி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்

விபத்தில் காயமடைந்தவர் நானாட்டான் பிரதேச செயலகத்தில் கடமைபுரிபவர் என்று தெரிவிக்கப்பட்டது

பொரளையில் கோர விபத்து: சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதிஇராஜகிரியவில் இருந்து பௌ...
29/07/2025

பொரளையில் கோர விபத்து: சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதி

இராஜகிரியவில் இருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் ரக வாகனமொன்று , பொரளை மயான சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.

விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கிரேன் வாகனத்தின் சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் 8 பேர் காயமடைந்தார்கள் என்றும், அவர்களில் ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்தார் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

29/07/2025

‘ரிக் ரொக்’ காதலனின் சொகுசு வாழ்வுக்கு வீட்டிலேயே நகைகளைத் திருடிய காதலி: யாழில் சம்பவம்!

29/07/2025

கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன (வயது - 53), அவரது மனைவி (வயது - 44) மற்றும் மகள் (வயது - 16) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்...
28/07/2025

அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr Mohamed Muizzu) வரவேற்றார்.

ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக மாலைதீவு வெலானா சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழுவொன்று அழகிய கலாசார நடனத்தை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அந்த சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr Mohamed Muizzu) தலைமையில் மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்ப...
28/07/2025

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து. கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறும்.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்,

28/07/2025

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவரும் வழக்கொன்றில் முன்னிலையாகாமையால் பா.உ. நாமல் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை - பொலிஸ்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை...
28/07/2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பொரளை பகுதியில் இன்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள...
28/07/2025

பொரளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்!

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் ...
26/07/2025

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப்பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் இன்றைய தினம் (26) கவனயீர்...
26/07/2025

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப்பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் இன்றைய தினம் (26) கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

Address

Mannar

Alerts

Be the first to know and let us send you an email when evarest fm & tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share