evarest fm & tv

evarest fm & tv உண்மை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள்.ஜனாதிபதி அறிவிப்பு
26/09/2025

ஈஸ்டர் தாக்குதல் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள்.

ஜனாதிபதி அறிவிப்பு

அர்ச்சுனா Mp  பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பி...
26/09/2025

அர்ச்சுனா Mp பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர், காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளில் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறி, பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ...
26/09/2025

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(26) மாலை வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Tharani fm

26/09/2025

மன்னார் மக்கள் இப்போது எங்கே போவது?

26/09/2025

மன்னார் மக்களின் கருத்துக்களுக்கு குரல் கொடுக்காமல்

மன்னார் நோக்கி கொண்டு வரப்படும் காற்றாலை உபகரணங்கள் ......

பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி உ...
26/09/2025

பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ். குப்பிளானின் வீட்டுக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததால் பாரிய சேதம்!நேற்றையதினம் யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில்...
26/09/2025

யாழ். குப்பிளானின் வீட்டுக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததால் பாரிய சேதம்!

நேற்றையதினம் யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தமானது ஜே/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Tharanifm

யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டி...
25/09/2025

யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

 #யானை  #தாக்கி  #குடும்பஸ்தர்  #பலி வாழைச்சேனை   பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை  பகுதியில் உள்ள மடு ஒன்றில் மீன்பிடிக...
25/09/2025

#யானை #தாக்கி #குடும்பஸ்தர் #பலி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பகுதியில் உள்ள மடு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே மரணமாகியுள்ளார்.

கிரான் பகுதியை சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான மூத்ததம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது .

கிணற்றில் வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் பலி கிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விளிந...
25/09/2025

கிணற்றில் வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட பகுதியில் நேற்று

மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா புவிதரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

இராமநாதபுரம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏன் மன்னார் மக்கள் காற்றாலைத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள்.மன்னார்த் தீவில் காற்றாலை தொடர்ச்சியாக அமைக்கப்படும் எனும் அற...
25/09/2025

ஏன் மன்னார் மக்கள் காற்றாலைத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள்.

மன்னார்த் தீவில் காற்றாலை தொடர்ச்சியாக அமைக்கப்படும் எனும் அறிவித்தலை ஜனாதிபதி தெரிவித்திருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம்.

கடந்த வாரம் மன்னார் மக்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் பல மணி நேரமாக நிலமைகளை விளக்கிக் கூறியிருந்தோம்.

ஒரு காற்றாலை கோபுரத்துக்கு பத்து ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுகிறது , 75 அடி அளவில் கொங்கிரீட் கொட்டப்படுகிறது.

தொடர் வெள்ளப் பெருக்கு இதர பல நெருக்கடிகள் ஏற்கனவே எழுந்துள்ளன.

வெறும் 40 கிலோமீட்டர் நீளமும் 3.5 கிலோமீட்ட்டர் அகலமும் கொண்ட மன்னார்த் தீவு முற்றாக மக்கள் அற்ற இடமாக மாறும் நிலையும் மோசமான சூழல் பாதிப்பும் ஏற்படும்.।

ஏற்கனவே நிறுவியுள்ள 36 காற்றாலைகளை விட மேலதிகமாக அமைப்பதை மன்னார் மக்கள் எதிர்க்கின்றார்கள். மன்னார் போன்ற சிறிய இடத்துக்கு முடியுமான காற்றாலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டன.

அடுத்து 14 நிறுவும் வேலைகள் நடக்கிறது அதை நிறுத்த மக்கள் பாடுபடுகின்றார்கள்.

எழுதாயிரதுக்கு மேற்பட்ட மக்களின் வாழ்விடம் என்பதை முதலில் அனைவரும் உணர வேண்டும்.

காற்றாலைகள் அமைப்பதற்கு முற்றாக எதிர்ப்பு என்று போலிப் பிரச்சாரம் செய்யும் அற படிச்சவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள வேண்டும்.

காற்றாலைகளை அமைக்க இன்னும் பொருத்தமான பல இடங்கள் இருக்கிறது அவற்றில் அந்த வேலைத்திட்டத்தை தொடரலாம்.

மட்டக்களப்பு வைத்தியசாலை மலசல கூடத்தில் சிசு  #உயிரிழப்பு – பெண் சிற்றூழியர் கைது.!மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத...
25/09/2025

மட்டக்களப்பு வைத்தியசாலை மலசல கூடத்தில் சிசு #உயிரிழப்பு – பெண் சிற்றூழியர் கைது.!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் மலசல கூடத்தில் #பெண் சிசுவை #பிரசவித்து, அதனை பெட்டிக்குள் வைத்து கட்டிலின் கீழ் #மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#உயிரிழந்த நிலையில் சிசுவின் உடல் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடைய 37 வயதான சுகாதார சிற்றூழியர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

2 பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், திருமணமானவராக இருந்தாலும், கணவருடன் கடந்த ஜூன் மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினமான திங்கட்கிழமை (22) வழக்கம்போல் தனது கடமையில் ஈடுபட்டிருந்தபோது, வயிற்று வலி ஏற்பட்டதால் மலசல கூடத்திற்குச் சென்ற அவர், யாருக்கும் தெரியாமல் #பெண் குழந்தையைப் #பிரசவித்துள்ளார்.

பிறந்த குழந்தையை பெட்டிக்குள் வைத்து கட்டிலின் கீழ் மறைத்த பின்னரும், தனது கடமையில் தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையில், அதிக #இ*ர*த்*தப்போக்கு ஏற்பட்டதால் தாதியர் ஒருவர் அவரை அவதானித்து வார்டில் அனுமதித்தார். வைத்தியர்கள் பரிசோதித்தபோது அவர் குழந்தையைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் விசாரணையில், குழந்தையை பெட்டிக்குள் மறைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். அந்த சிசு #உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

மேலும், அவர் 38 வார கர்ப்பத்திற்கு பின் 2.485 கிலோ எடையுள்ள பெண் சிசுவை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்தது சக ஊழியர்களுக்கும் தெரியவில்லை.

குறித்த சிற்றூழியரின் கணவரும், குறித்த வைத்தியசாலையில் சிற்றூழியராகவே கடமையாற்றி வருகிறார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கணவன் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

பிரிந்த கணவன் "அக்குழந்தை தனக்குப் பிறக்கவில்லை" எனத் தெரிவித்ததையடுத்து, குழந்தையின் மற்றும் தந்தையின் #இரத்த மாதிரிகளைப் பெற்று, DNA பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு (CID) பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tharani fm

Address

Mannar

Alerts

Be the first to know and let us send you an email when evarest fm & tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share