Mannar Catholic Media

Mannar Catholic Media Mannar Diocesan Catholic Media
மன்னார் மறைமாவட்டம்

பேராலயப் பங்கில் முதல் நன்மை அருட்சாதனம்  வழங்கப்பட்டது - 06.06.2026மன்னார் மறைமாவட்டம் புனித செபஸ்தியார் பேராலயத்தில்  ...
08/06/2026

பேராலயப் பங்கில் முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்டது - 06.06.2026

மன்னார் மறைமாவட்டம் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 120 சிறார்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் தகுந்த ஆயத்தங்களுடன் 06.06.2026 (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.

காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளாரது தலைமையில் உதவிப் பங்குத்தந்தையர்களான அருட்பணி. விமல் றோய், அருட்பணி. பிரிய தர்சன் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்திருந்தனர்.

" எனது சதை உண்மையான உணவு எனது இரத்தம் உண்மையான பானம்" எனும் மைய கருத்தினை அடிப்படையாக கொண்டு மறையுரை ஆற்றப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மேலும் இத் திருப்பலியில் சிறப்பாக பெற்றோர், ஞானப்பெற்றோர் மற்றும் பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

புனித யோசேவ்வாஸ் ஆலயத் திருவிழாத் திருப்பலி - 31.05.2026மன்னார் மறைமாவட்டம் பேராலயப்பங்கின் புனித யோசேவ்வாஸ் ஆலயத் திருவ...
04/06/2026

புனித யோசேவ்வாஸ் ஆலயத் திருவிழாத் திருப்பலி - 31.05.2026

மன்னார் மறைமாவட்டம் பேராலயப்பங்கின் புனித யோசேவ்வாஸ் ஆலயத் திருவிழாவிற்க்கான கொடியேற்றமானது கடந்த 29.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது.

இவ் முதல் நாள் கொடியேற்ற திருப்பலியினை பேராலயபங்குத்தந்தை அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளார் வழிநடாத்தியிருந்தார்.

வெஸ்பர் ஆராதனை திருப்பலி மற்றும் நற்கருனை வழிபாட்டினை பள்ளிமுனைப் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்பணி. சிம்சன் குருஸ் அடிகளாரும் ஒப்புக்கொடுத்திருந்தார்.

திருவிழாத் திருப்பலியானது ஞாயிற்றுக்கிழமை 31.05.2026 அன்று மாலை 5.30 மணிக்கு வாழ்வுதய இயக்குநர் அருட்பணி. அருள்ராஜ் அடிகளாரின் தலைமையின் கீழ் பேராலயப் பங்குத்தந்தை அவர்களும் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. பிரிய தர்சன் அடிகளாரும் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் திருப்பலி நிறைவில் புனிதரின் ஆர்ப்பரிப்புடன் திருச்சுரூப ஆசிர்வாதம் நடைபெற்றது.

இத் திருப்பலியில் அருட்பணியாளர்கள், பங்குமக்கள் என பலரும் பக்தியுடன் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலையருவி - கவின் கலை பாடசாலையின் தலைமன்னார் கிளையில் பரதம்  கற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.பரதம் ...
03/06/2026

கலையருவி - கவின் கலை பாடசாலையின் தலைமன்னார் கிளையில் பரதம் கற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

பரதம் கற்பதில் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பித்து கற்கை நெறியினை இணைந்து கொள்ள முடியும்.

கலையருவி - கவின் கலை பாடசாலை முருங்கன் கிளையில் மிருதங்கம் கற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.மிருதங்...
03/06/2026

கலையருவி - கவின் கலை பாடசாலை முருங்கன் கிளையில் மிருதங்கம் கற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

மிருதங்கம் கற்பதில் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கலையருவி - கவின் கலை பாடசாலையின் ஆட்காட்டிவெளி கிளையில் பரதம் மற்றும் ஓர்கன் கற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பம் கோரப்...
03/06/2026

கலையருவி - கவின் கலை பாடசாலையின் ஆட்காட்டிவெளி கிளையில் பரதம் மற்றும் ஓர்கன் கற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

பரதம் மற்றும் ஓர்கன் கற்பதில் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பித்து கற்கை நெறியினை இணைந்து கொள்ள முடியும்.

வரலாற்று சிறப்புமிக்க சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா திருப்பலி - 02.06.2026வரலாற்று சிறப்புமிக்க சிப்ப...
03/06/2026

வரலாற்று சிறப்புமிக்க சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா திருப்பலி - 02.06.2026

வரலாற்று சிறப்புமிக்க சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா திருப்பலியானது கடந்த 02.06.2026 செவ்வாய்க்கிழமை காலை10.30 மணிக்கு ஆயிரக் கணக்கான இறைமக்கள் மற்றும் பக்தர்களின் பங்குபெற்றுதலுடன் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத்திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நேசரட்னம் அடிகளார் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து இருந்தார்.

மேலும் காலை 6.00 மணி திருப்பலியை பேராலயப் பங்குத்தந்தை அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளாரும் 7.30 மணி திருப்பலியினை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளாரும், மாலை 5.00 மணி திருப்பலியை மன்னார் மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி. சுரேந்திரன் ரெவ்வல் அடிகளார் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர்.

நடைபெற்ற அணைத்து திருப்பலிகளிலும் மன்னார் மறைமாவட்டக் குருக்கள் ஏனைய மறைமாவட்டக் குருக்கள், அருட்சகோதரர்கள், இருபால் துறவியர், அந்தோனியார் பக்தர்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.

ஒவ்வொரு திருப்பலி முடிவிலும் புனிதரின் ஆர்ப்பரிப்பும் திருச்சுரூப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

காலி மறைமாவட்டத்தில் குருத்துவ அருட்பொழிவு கொண்டாட்டம் - 2026.06.02‎‎காலி மறைமாவட்டத்தின் ஹினிதும (Hiniduma) பங்கைச் சேர...
03/06/2026

காலி மறைமாவட்டத்தில் குருத்துவ அருட்பொழிவு கொண்டாட்டம் - 2026.06.02

‎காலி மறைமாவட்டத்தின் ஹினிதும (Hiniduma) பங்கைச் சேர்ந்த அருட்பணி. தசித் மிஹிரான் அடிகளார் கடந்த 02.06.2026 அன்று காலி மறைமாவட்டத்தின் புனித செபமாலை இராக்கினி பேராலயத்தில் நடைபெற்ற குருத்துவத் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கின் போது காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ரேமண்ட் விக்ரமசிங்க ஆண்டகை அவர்களால் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.

‎புதிய குரு அருட்பணி. தசித் மிஹிரான் அவர்களுக்கு மடு மாதா தொலைக்காட்சி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்துநேசரெட்னம் அடிகளார், மறைமாவட்ட குருக்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் இறைமக்கள் அனைவரது வாழ்த்துகளையும் செபங்களையும் அன்புடன் தெரிவிக்கின்றோம்.

02/06/2026

சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாத் திருப்பலி நேரலை - 02.06.2026

இன்றைய திருப்பலி ஒழுங்குகள் - 02.06.20266.00 காலை திருப்பலி 7.30 காலை திருப்பலி 10.30 காலை திருவிழா திருப்பலி (நேரலை)3.0...
02/06/2026

இன்றைய திருப்பலி ஒழுங்குகள் - 02.06.2026

6.00 காலை திருப்பலி
7.30 காலை திருப்பலி
10.30 காலை திருவிழா திருப்பலி (நேரலை)
3.00 பிற்பகல் திருப்பலி
5.00 பிற்பகல் திருப்பலி

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தலத்தில் இருந்து மடுமாதா தொலைக்காட்சி ஊடாக, உங்கள் அனைவரையும் இந்த நேரலை ஒலிபரப்பில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

சிப்பியாறு புனித அந்தோனியாரின் விசேட பரிந்துரையினாலும், இறை அருளினாலும் இன்று நாம் அனைவரும் இந்த புனித திருப்பலியில் ஒன்றாக இணைந்துள்ளோம்.

இன்றைய திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்துநேசரெட்ணம் அடிகளார் தலைமையிலும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரெட்னாம் மற்றும் மன்னார் யாழ்ப்பாணம் மறைமாவட்டங்களின் குருக்களும் இணைந்து காலை 10.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்க உள்ளனர்.

நம் வாழ்வின் தேவைகள், சோதனைகள், நோய்கள் அனைத்திற்கும் நடுவிலும் நம்பிக்கையோடு இறைவனை நாடி வந்திருக்கும் அனைத்து பக்தர்களையும் ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்ளுவோம்.

இத் திருப்பலியிலே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, புனித அந்தோனியாரின் அருளாசியை பெறும் நோக்குடன் ஒன்றிணைந்துள்ளனர்.

ஆகவே புனித அந்தோனியாரின் ஆசீரை பெற இணைதிருக்கும் அனைவரும் சிப்பியாறு புனித அந்தோனியாரின் திருவிழா நாளில் திருப்பலிகளில் பக்தியுடன் பங்கு கொள்வோம் சிறப்பு ஆசி பெறுவோம்.

Address

No. 202, Talaimannar Road
Mannar
41000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Catholic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mannar Catholic Media:

Share