08/06/2026
பேராலயப் பங்கில் முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்டது - 06.06.2026
மன்னார் மறைமாவட்டம் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 120 சிறார்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் தகுந்த ஆயத்தங்களுடன் 06.06.2026 (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.
காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளாரது தலைமையில் உதவிப் பங்குத்தந்தையர்களான அருட்பணி. விமல் றோய், அருட்பணி. பிரிய தர்சன் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்திருந்தனர்.
" எனது சதை உண்மையான உணவு எனது இரத்தம் உண்மையான பானம்" எனும் மைய கருத்தினை அடிப்படையாக கொண்டு மறையுரை ஆற்றப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும் இத் திருப்பலியில் சிறப்பாக பெற்றோர், ஞானப்பெற்றோர் மற்றும் பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.