10/09/2026
அருட்சகோதரி டெனிற்றா அவர்களின் நித்திய வாக்குத்தத்த திருப்பலி – 04.09.2026 (திருப்பலி பதிவுகள்)
கடந்த 04.09.2026 அன்று வஞ்சியன்குளம் புனித பேதுரு ஆலயத்தில் அருட்சகோதரி. டெனிற்றா அவர்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் அருட்சகோதரி அவர்கள் தனது நித்திய அர்ப்பணத்தை செய்து கொண்டார்.
திருப்பலி ஆரம்பத்தில் மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் band வாத்திய இசை மற்றும் வரவேற்ப்பு நடனம் என்பவற்றின் மூலம் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்.
இத் திருப்பலியில் வஞ்சியன்குளம் புனித பேதுரு ஆலய பங்குத்தந்தை அருட்பணி. அலன் யூட்ரஸ் அடிகளார், அருட்பணி. ஞானாதிக்கம் அடிகளார், முருங்கன் மறைக்கோட்ட முதல்வரும் நானட்டான் பங்குத்தந்தையுமான அருட்பணி. அலெக்சாண்டர் சில்வா பெனோ அடிகளார், பேசாலை பங்குத்தந்தை அருட்பணி. சத்தியராஜ் அடிகளார், மகாஇறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி. யூட் ஞானராஜ் குருஸ் அடிகளார், கத்தோலிக்க இளைஞர்கள் ஆணைக்குழு இயக்குநரும் அன்பிய இயக்குநருமான அருட்பணி. நீக்கிலஸ் அடிகளார் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்;.
மறைமாவட்ட ஆயர் அவர்கள் மறையுரையில் அருட்சகோதரி அவர்களுக்கு சபையின் அர்ப்பணிப்பு பற்றியும் மற்றும் ஏழ்மை மற்றும் கற்பு பற்றியும் சிறப்பாக மறையுரையாற்றினார்.
அதன் பின் வாழ்த்துபா பத்திரத்தில் கையெழுத்து இட்டு இறைமீட்பர் சபையின் அருட்சகோதரியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து அருட்சகோதரி அவர்களுக்கு மறைமாவட்ட ஆயர் அவர்களால் திருச்சிலுவை ஆசிர்வதிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
இத் திருப்பலியில் அருட்பணியாளர்கள் பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.