Angle Eight

Angle Eight Angle Eight - Bringing you Every Angle, Every News. Your destination for diverse and comprehensive coverage

HMPV (Human Metapneumovirus) தொடர்பான புதிய செய்திகள்:சீனாவில் HMPV வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள...
08/01/2025

HMPV (Human Metapneumovirus) தொடர்பான புதிய செய்திகள்:

சீனாவில் HMPV வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

இது COVID-19 போன்ற ஆபத்தான நிலையை இது உருவாக்கவில்லை என்பதானால் மக்கள் பெரிதும் அச்சம் கொள்ள தேவையில்லை.

HMPV, பொதுவாக குளிர்பிடிப்பு மற்றும் மூச்சுக்கோளாறை உருவாக்கும் வழக்கமான வைரஸாகும்.

சீனாவில் குழந்தைகளில் அதிகம் காணப்பட்டாலும், உலகம் முழுவதும் இதற்கு முன்னெச்சரிக்கை எடுக்கப்படுகிறது.

இருந்தாலும் இன்னும் இதற்கு
தடுப்பூசிகள் எதுவும் இல்லை, ஆனால் சாதாரண குளிர்த் தொற்றுக்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சை போதுமானதாக உள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது, சிறந்த தடுப்பு முறையாகும்.

இந்த வைரஸ் COVID-19 போல புதியதாக இல்லை. இது அறியப்பட்ட மற்றும் பரிமாறக்கூடிய வைரஸாகும். WHO மற்றும் சுகாதார அமைப்புகள் இதைப் பாதுகாப்பாக கையாளுகின்றன.

மேலும் இரு கலாநிதி பட்டங்கள் தொடர்பில் சர்ச்சை Two more fake ’Dr’ titles rock govt.*Urban Development and Housing Minist...
13/12/2024

மேலும் இரு கலாநிதி பட்டங்கள் தொடர்பில் சர்ச்சை

Two more fake ’Dr’ titles rock govt.

*Urban Development and Housing Minister Karunatilake found not to be a PhD holder

'Dr' title of Justice Minister suddenly dropped from the parliamentary website

*Speaker who was in question earlier still maintains stoic silence

*Opposition questions NPP legitimacy

Days after a shocking dispute over the doctoral credentials of Speaker Asoka Ranwala and his stoic silence over it, fresh controversy has emerged following the discovery that Urban Development and Housing Minister Aruna Karunatilake also does not possess such qualifications despite him being referred to as 'Dr.' on certain occasions and in instances, and the same of Justice Minister Harshana Nanayakkara being dropped from the parliamentary website.

An informed source told the Daily Mirror that some close aides of Minister Karunatilake had mistakenly referred to him as 'Dr.' since he is from academia.

The Minister is currently reading for his doctorate in Computational Mathematics at the Kelaniya University.

He is expected to submit his thesis within the next three months only.

In the meantime, the Justice Minister had also been referred with the 'Dr' title in official letters issued by the Office of Leader of the House earlier, but it had been knocked off from the parliamentary website.

The sudden drop has further fueled concerns that the academics who entered Parliament on the NPP ticket had used fake titles to deceive the public.

It is learnt that the parliamentary authorities have instructed those officials to have an overview of the titles in front of the names of MPs.

Opposition parties say this is an assault on the legitimacy of the NPP which boasted of academic and professional qualifications of its members, now assigned with responsibilities to run the country.

Earlier, the UNP said that the use of a fake doctorate title by the Speaker is an insult to the Parliament of Sri Lanka which is the oldest democracy in South Asia. Following criticism, the Speaker has got his title removed from the official website of Parliament.

The government has not made any official announcement yet, though the government said he was expected to hold a media briefing soon and would release a statement.

The NPP government, throughout it's Presidential and Parliamentary campaign had been stating that their candidates were professionals including doctors, engineers etc. and they would bring in a new political culture by maintaining transparency.

Opposition parties such as the SLPP have already called on the diplomatic community to distance itself from the Speaker due to his alleged false educational qualifications and called on him to resign immediately.

Source:

Days after a shocking dispute over the doctoral credentials of Speaker Asoka Ranwala and his stoic silence over it, fresh controversy has emerged following the discovery that Urban Development and Housing Minister Aruna Karunatilake also does not possess such qualifications despite him being referre...

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தரான  திரு.கே. குணநாதன் அவர்கள்:=...
12/12/2024

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தரான திரு.கே. குணநாதன் அவர்கள்:

=========[எம்.ஐ.எம்.வலீத்]============

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தரான திரு.கே. குணநாதன் நேற்று (11.12.2024) கடமையேற்றுக் கொண்டார்

1973 ஏப்ரல் 13ம் திகதி யாழ்ப்பாண தெல்லிப்பழையில் குமாரசிங்கம் -பூலோகேஸ்வரி தம்பதிகளின் புதல்வராக பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திலும் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

பின்னர் 1995-1998 ஆம் ஆண்டுவரை வவுனியா கல்விக் கல்லூரியில் தனது ஆசிரியர் பயிற்சியை அதி சிறப்பு சித்தியுடன் முடித்து, 1999ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2003 வரை சுமார் 05 வருடங்கள் யாழ்ப்பாண கல்வி வலய கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினார்.

2001ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் (வணிகம். புவியியல், அரசியல்) விஷேட பட்டப்படிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் முடித்து, செப்டம்பர் 2003ல் இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவாகி பயிற்சிகளை முடித்து 2004ம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் மாகாணப் பொது நிருவாகத்தினுள் உள்ளீர்க்கப்பட்டார்.

நவம்பர் 2004ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2005ம் ஆண்டு வரை வடகிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின், உள்ளுராட்சி உதவி ஆணையாளராக (தலைமைக் காரியாலயம்- பொறுப்பதிகாரி) கடமையாற்றினார்.
அதே ஆண்டு திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக நியமனம்பெற்று சுமார் 08 வருடங்கள் உள்ளுராட்சி துறைக்கு அபரிமிதமான பங்களிப்புக்களை வழங்கினார்.
மேலும் அதே காலப்பகுதிகளில் கிழக்குமாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் பதில் செயலாளராகவும், உலக வங்கியின் சமூக குடிநீர் வழங்கல் செயற்றிட்டத்தின் திருகோணமலை மாவட்ட மேற்பார்வை மதிப்பீட்டு அதிகாரியாகவும், பதில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகவும் 2009ம் ஆண்டுவரை கடமை புரிந்தார்.

2010ம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் பொது நிருவாகத்தின் டிப்ளோமா முடித்து 2012ல் அதே பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத் துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் சிறப்பு தேர்ச்சியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2010 முதல் 2013 வரை உலகவங்கியின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட புறநெகும/நெல்சிப் திட்டத்தில் மாவட்ட திட்டப்பணிப்பாளராகவும்,ஜெய்க்கா-ஜப்பான் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமிய குடிநீர் விநியோகத்திட்டத்தில் மாவட்ட திட்ட முகாமையாளராகவும் தனது சீரிய பங்களிப்புக்களையும் நல்கினார்.

2013 முதல் 2015 ஆண்டு வரை கிழக்குமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பதில் செயலாளராகவும் கடமையாற்றினார்.
கிழக்குமாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக 2015ம் ஆண்டு நியமனம்பெற்று 2017 ம் ஆண்டு வரை அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார்.

ஜனவரி 2017 முதல் 2018 வரை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும், ஆகஸ்ட் 2018 முதல் 2021 வரை திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளராகவும், ஜூலை 2022 முதல் 2024 டிசம்பர் வரை திருகோணமலை குச்சவெளிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.

மேலும் கனடா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்வேறுபட்ட சர்வதேச மாநாடுகளிலும் சிறப்பு பயிற்சிகளிலும் பங்கு பற்றியுள்ளதுடன் இலங்கையிலும், மேற்படி உலக நாடுகளிலும் பெற்றுக்கொண்ட தனது அனுபவத்தின் பயனாக இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சிறப்புத் தேர்ச்சிமிக்க வளவாளராகவும் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம், இலங்கை உள்ளுராட்சி நிறுவகம், மாகாண முகாமைத்துவ பயிற்சித்திணைக்களம், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு, ஆசியா மன்றம், கொமன்வெல்த் உள்ளுராட்சி அமையம் உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்றிட்ட ஆலோசகராகவும், திட்ட வளவாளராகவும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 2006 இல் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு சதுர்ஷன்,கபிலேஷ் ஆகிய இரு புதல்வர்கள் உள்ளனர்.

திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டார் தே.கா. தலைவர...
10/12/2024

திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டார் தே.கா. தலைவர் அதாவுல்லா !

நூருல் ஹுதா உமர்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம் மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டதுடன் வாக்குகள் எண்ணப்பட்டதிலும் பாரதூரமான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

மேலும், கச்சேரியில் எமக்கு எதிரான சதி வலை பின்னல் தொடர்ந்து. ஆரம்பத்தில் காலையில் ஒரு விதமாகவும், பின்னர் வேறு ஒரு விதமாகவும் முடிவுகள் அறிவிக்கப்படலாயின. நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை. ஏற்பதாக கையொப்பம் இட்டு கொடுக்கவில்லை. வெளிப்படையாகவே ஆட்சேபித்தோம். ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று சட்டப்படி முறையாக கச்சேரியில் கோரினோம். ஆனால் வாக்குகளை மீண்டும் எண்ணப்படவே இல்லை. இதை ஆட்சேபித்து கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுத்துமூலம் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம்.

அவசியம் ஏற்படுகின்ற பட்சத்தில் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும். நாம் கடந்த காலங்களில் அரசியலில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம். என்றார். இந்த மனு கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸமும் கலந்து கொண்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Dr. Anil Jasinghe appointed as the new Secretary to the Ministry of Health and Media - PMD
10/12/2024

Dr. Anil Jasinghe appointed as the new Secretary to the Ministry of Health and Media - PMD

10/12/2024

Dr. Anil Jasinghe appointed as the new Secretary to the Ministry of Health and Media - PMD

திகதி: 10.12.2024மருதமுனை அல் ஹம்றா வித்தியால க பொ த சாதாரண தர மாணவர்களின் பரீட்சை பெறுபேற்றை அதிகரிக்கும் முகமாக தொடர் ...
10/12/2024

திகதி: 10.12.2024

மருதமுனை அல் ஹம்றா வித்தியால க பொ த சாதாரண தர மாணவர்களின் பரீட்சை பெறுபேற்றை அதிகரிக்கும் முகமாக தொடர் கருத்தரங்குகள் மற்றும் முன்னோடி பரீட்சைகள் நடை பெற்று வருகின்றன.

இதனை மாணவர்களின் பெற்றேர்களே முன்னின்று நடாத்தி வருவது முன்னோடியான விடயமாகும்.

☄️எமது வாட்ஸ்அப் சனலினை பின் தொடர: https://whatsapp.com/channel/0029Vaypb5o6LwHpd9g3Yx07

Address

Al-Hambra Vidiyalaya Maruthamunai
Maruthamunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Angle Eight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share