Muththithal முத்திதழ்

Muththithal முத்திதழ் எமக்கான தனித்துவ அடையாளத்தை தோற்றுவிக்கும் ஒரு தளம்

மூதுரை பிராந்தியத்திற்கான வீரகேசரி பத்திரிகையின் மேலதிக செய்தியாளராக ந.மு.ஜிப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவர் திருகோ...
07/07/2025

மூதுரை பிராந்தியத்திற்கான வீரகேசரி பத்திரிகையின் மேலதிக செய்தியாளராக ந.மு.ஜிப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் திருகோணமலை மீடியா போரத்தின் உறுப்பினராகவும், முத்திதழ் சஞ்சிகையின் பிரதேச செய்தியாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பை ஊக்கப்படுத்தவும் அவற்றை சமூக மட்டத்தில் பரவலாக்கம் செய்யவும் நாம் பேசுகிறோம், செயற்படுகிறோம் மற்றும் சிந்திக்கி...
20/06/2025

வாசிப்பை ஊக்கப்படுத்தவும் அவற்றை சமூக மட்டத்தில் பரவலாக்கம் செய்யவும் நாம் பேசுகிறோம், செயற்படுகிறோம் மற்றும் சிந்திக்கிறோம். என்றாலும் அவை மக்கள் மத்தியில் உண்டாக்கும் தாக்கம் மிக மந்தபோக்கிலே உள்ளதாக நான் உணர்கிறேன்.

நிறுவனத்தின் கீழ் முத்திதழ், Online Mutur Library என்ற இரு தளங்களினூடாக இந்த வாசிப்பு கலாசாரத்தை வலுவூட்டும் வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் கடந்த 2018 தொடக்கம் முன்னெடுத்து வருவதை நாங்கள் பெருமிதமாக உணர்கிறோம்.

நாட்டின் பயங்கரவாத தடை சட்டங்கள், குற்றப்புலனாய்வு விசாரணைகள் என்று பல்வேறு சவால்கள் மற்றும் அழுத்துங்கள் மத்தியிலேயே எமது நாளாந்த இயங்கியல் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வருடத்தின் ஆவண தொகுப்பாக வெளிவந்த முத்திதழ் - இதழ் 13 ஆனது 94+xix பக்கங்களை கொண்ட B5 அளவிலான சிற்றிதழாக வெளிவந்துள்ளது.

இலக்கிய ஆக்கங்களுக்கு மேலதிகமாக மூதூர் சார்ந்த நிகழ்வுகள், வெளியீடுகள், தேசிய மட்ட அடைவுகள், சாதனைகள், மற்றும் பரீட்சைப் பெறுபேற்று பகுப்பாய்வுகள் என்று பல்வேறு ஆவணங்களை தொகுப்பாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.
-------------------------------
முத்திதழ்
வகை : ஆவண சிற்றிதழ்
இதழ் : 13
ஆண்டு : 2024/25 ஜூன்
வெளியீடு : மூதூர் ஜே.எம்.ஐ வெளியீட்டகம்
வெளியீட்டாளர் : என்.ஆஷா பாலின்
முதன்மை ஆசிரியர் : ஜே.முஹம்மட் இஹ்ஷான்
பக்கம் : 94+19 (B5)
விலை - 600.oo (தபால் 200.oo)

மேலதிக தொடர்புகளிற்கு
Muththithal Magazine
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 www.muturjmi.com

Ihshan JMI Zikra Nawhal Mutur JMI

முத்திதழ் வகை : ஆவண சிற்றிதழ் இதழ் : 13 ஆண்டு : 2024/25 ஜூன்  வெளியீடு : மூதூர் ஜே.எம்.ஐ வெளியீட்டகம் வெளியீட்டாளர் : என...
14/06/2025

முத்திதழ்
வகை : ஆவண சிற்றிதழ்
இதழ் : 13
ஆண்டு : 2024/25 ஜூன்
வெளியீடு : மூதூர் ஜே.எம்.ஐ வெளியீட்டகம்
வெளியீட்டாளர் : என்.ஆஷா பாலின்
முதன்மை ஆசிரியர் : ஜே.முஹம்மட் இஹ்ஷான்
பக்கம் : 94+19
விலை - 600.oo (தபால் 200.oo)

ஆவண மற்றும் இலக்கிய சிற்றிதழாக வெளிவரும் முத்திதழ் சஞ்சிகையின் 13 ஆவது இதழ் இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

அறிவியல், சூழலியல், மருத்துவம், கவிதை, சிறுகதை, மூதூர் சார்ந்த நிகழ்வுகளும், மற்றும் பரீட்சை பெறுபேறுகள் என்று பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய ஆவண இதழாக இம்முறை வெளிவந்த முத்திதழ் சஞ்சிகையை நீங்கள் அணுகலாம்.

இதழுக்கான விளம்பர அனுசரணை அளித்த அனைவருக்கும் நன்றிகள்

மேலதிக தொடர்புகளிற்கு
Muththithal Magazine
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 www.muturjmi.com

நாடளாவிய பல்கலைக்கழக காற்பந்து சுற்றுத் தொடரில்  Colors 2024 க்கு மூதூரைச் சேர்ந்த நால்வர் தேர்வு இலங்கை அனைத்து பல்கலைக...
31/05/2025

நாடளாவிய பல்கலைக்கழக காற்பந்து சுற்றுத் தொடரில் Colors 2024 க்கு மூதூரைச் சேர்ந்த நால்வர் தேர்வு

இலங்கை அனைத்து பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய விளையாட்டு சங்கம் கடந்த 2024.10.06 திகதியன்று பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான காற்பந்து சுற்றுத் தொடர் ஒன்றை நடாத்தியது.

இச்சுற்றுத்தொடரில் Colors 2024 Award விருதுக்கு மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக பட்டதாரிகள் தேர்வாகியுள்ளனர்.
அந்தவகையில்
M. Mufath - Sabragamuwa university
A. M Asmeen - South eastern university
M. Musthaq - South eastern university
M. M. Arsalan - South eastern university

இவர்கள் மேலும் உதைப்பந்தாட்ட துறையில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த மூதூர் மண் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோப்பூர் -மன்பவுல் ஹைறாத் முன்பள்ளிப் பாடசாலையின் சிறுவர் சந்தை கடந்த 30.05.2025  வெள்ளிக்கிழமை மாலை முன்பள்ளியின் தலைவர...
31/05/2025

தோப்பூர் -மன்பவுல் ஹைறாத் முன்பள்ளிப் பாடசாலையின் சிறுவர் சந்தை கடந்த 30.05.2025 வெள்ளிக்கிழமை மாலை முன்பள்ளியின் தலைவர் எம்.என். முஹம்மட் நிஹான் (கவுன்சிலர்) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.ஜெம்சித் கலந்து சிறப்பித்தார்.

அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் திருமதி திலீப்குமார் கோமளா மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற...
31/05/2025

அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் திருமதி திலீப்குமார் கோமளா

மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அதிபர் சேவையில் இருந்து எதிர்வரும் 02.06.2025 திங்கள் அன்று பணி நிறைவு பெற்றுச் செல்லவுள்ளார் எமது வலயத்தின் மூத்த பெண் அதிபர் திருமதி திலீப்குமார் கோமளா அவர்கள்.

இவருடைய பணி நிறைவை முன்னிட்டு பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வும் கெளரவிப்பும் பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.

குறித்த பிரியாவிடை வைபவத்தின் போது அதிபர் கோமளா அவர்களுக்கு பாடசாலை அபிவிருத்திக்குழு முன்னாள் செயலாளர் எஸ்.கோணேஸ்பரன் அவர்களினால் "கோ-தேவி" என்ற நினைவுமலர் அனுசரணை அளிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மூதூர் புனித அந்தோனியா பாடசாலை அதிபராக இவர் கடமையாற்றிய காலத்தில் அந்தோனியா பாடசாலை பல மாகாண, தேசிய சாதனைகளை நிலைநாட்டியிருந்தமை விசேட அம்சமாகும்.

அதிபர் கோமளா அவருடைய ஓய்வுகாலம் சிறப்பாக அமைவதோடு கல்விப் சேவையில் மூதூர் மண்ணிற்கு தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தரம் 1 உதைப்பந்தாட்ட நடுவராக மூதூரைச் சேர்ந்த இளம் நடுவர் தேர்வு இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைப்...
28/05/2025

தரம் 1 உதைப்பந்தாட்ட நடுவராக மூதூரைச் சேர்ந்த இளம் நடுவர் தேர்வு

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட நடுவர்களுக்கான பரீட்சையின் இறுதி பெறுபேறுகள் நேற்று (27.05.2025) வெளியாகியது. இதில் மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனம் சார்பாக தரம் (i) ற்கான பரீட்சைக்குத் தோற்றிய AMS.HASAN இரண்டு வகையான பரீட்சைகளிலும் (Fitness & Theory) சித்தி பெற்று தேசிய நடுவர் தரம் ஒன்றிற்கு (Grade-i) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் இவர் தரம் (i) ற்கு சித்தியடைந்த மூதூரின் முதலாவது உதைப்பந்தாட்ட நடுவராகின்றார்.

அத்தோடு மூதூரைச் சேர்ந்த 19 நபர்கள் உதைப்பந்தாட்ட நடுவராக தரம் III க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இவர்களை வழிகாட்டிய நிர்வாகத்திற்கும் மூதூர் மண் சார்பாக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.

அகில இலங்கை ரீதியான அல் குர்ஆன் மனனப் போட்டியில் 2ஆம் 5ஆம் இடங்களைப் பெற்ற இரண்டு தோப்பூர் நூரிய்யா அரபுக்கல்லூரி மாணவர்...
28/05/2025

அகில இலங்கை ரீதியான அல் குர்ஆன் மனனப் போட்டியில் 2ஆம் 5ஆம் இடங்களைப் பெற்ற இரண்டு தோப்பூர் நூரிய்யா அரபுக்கல்லூரி மாணவர்கள்

தேசிய ரீதியில் நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தோப்பூர் நூரிய்யா அரபுக்கல்லூரி மாணவர்களான முஹம்மட் நப்ரீஸ் அப்துல்லாஹ் மற்றும் நர்பீஸ் ஹஸ்ஸான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சாதனைக்கு பின்னால் இருந்த நூரிய்யாவின் உஸ்தாத்மார்கள், நிருவாகத்தினர், பெற்றோர்கள் அனைவருக்கும் மனப்பூர்மான வாழ்த்துக்கள்.

மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை கல்வியலாளர் சேவைக்கு (SLTES) மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட இரு ஆசிரியர்கள் தேர்வு...
22/05/2025

மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை கல்வியலாளர் சேவைக்கு (SLTES) மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட இரு ஆசிரியர்கள் தேர்வு

அந்தவகையில் இயந்திர தொழிநுட்பவியல் பாடத்திற்காக மூதூர் மத்திய கல்லூரி ஆசிரியர் நஜிமுதீன் முஹம்மட் ரிழ்வான் அவர்களும், இரண்டாம் மொழி (தமிழ்) பாடத்திற்காக அந்-நஹார் மகளிர் கல்லூரி ஆசிரியர் திருமதி ஹுஸ்னா நபீல் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் எதிர்காலத்தில் இவ்விரு ஆளுமைகளின் சேவைகள் சிறப்பாக அமைவதோடு கல்விப்பணியில் மெம்மேலும் வளர முன்கூட்டிய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜெம்சித் நியமனம்முமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் ...
27/01/2025

மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜெம்சித் நியமனம்

முமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும் திறமையும், நேர்மையான சேவை போன்ற பல காரணங்களாலும், அவரின் சேவையின் திருப்தி மற்றும் அவசியத்தன்மை என்பவனவற்றை கருத்திற் கொண்டு ஜனாப். எம்.ஐ.எம்.ஜெம்சித் இன்று திங்கட்கிழமை (27.01.2025) தனது கடமையை மூதூர் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் புதிய செயலாளரை இன்முகத்துடன் வரவேற்றனர்.

பொன்விழா இலட்சினை வெளியீடுஇலங்கைத் திருநாட்டின்  பழைமைவாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும் திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அ...
27/12/2024

பொன்விழா இலட்சினை வெளியீடு

இலங்கைத் திருநாட்டின் பழைமைவாய்ந்த அஹதியாக்களில் ஒன்றாகவும் திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை அஹதியாவுமான மூதூர் மத்திய அஹதியா தனது 50 வது ஆண்டில் தடம் பதித்திருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வை பிரதிபளிக்கும்முகமாக இன்றைய தினம் (22-12-2024) திருகோணமலை மாவட்ட அஹதியாக்கள் சம்மோளத்தின் தலைவர் அஷ்ஷேஹ் M. Y ஹதியதுல்லஹ் மௌலவி அவர்களினால் மூதூர் மத்திய அஹதியாவின் பொன் விழா இலட்சினையானது வெளியீடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மூதூர் மத்திய அஹதியாவின் தலைவர் A.M அர்ஷத், உப தலைவர் ஹாபில் மௌலவி, செயலாளர் A.M. நுஸ்கி மௌலவி, உப செயலாளர் அயாஸ் மௌலவி மற்றும் ஞாயிறு பாடசாலையின் உப அதிபர் நிஷ்பாக் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் :- A.M. நுஸ்கி (நத்வி)
செயலாளர், மூதூர் மத்திய அஹதியா

தேசிய சாகித்திய விழாவில் கலாபூசணம் விருது பெரும் மூதூரின் இரு இலக்கியவாதிகள் இலங்கையின் இலக்கிய செயற்பாட்டிற்காக அரச இலக...
12/12/2024

தேசிய சாகித்திய விழாவில் கலாபூசணம் விருது பெரும் மூதூரின் இரு இலக்கியவாதிகள்

இலங்கையின் இலக்கிய செயற்பாட்டிற்காக அரச இலக்கிய உயரிய விருதாக கலாபூசணம் விருது வழங்கி வைக்கப்படுகின்றது. 60 வயதிற்கு மேற்பட்ட நீண்டகால இலக்கிய பயணத்தில் செயற்படும் இலக்கிய ஆளுமைகளுக்காக கலாபூஷண விருது பரிந்துரை செயப்படுகின்றது.

அந்தவகையில் 2024 ம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது வழங்கல் விழாவில் நாடளாவிய ரீதியில் 35 இலக்கிய செயற்பாட்டாளர்களின் மூதூரைச் சேர்ந்த இலக்கியவாதிகளான கிலிவெட்டையை சேர்ந்த பத்துக்குட்டி மதிபாலசிங்கம் அவர்களுக்கும், கட்டைபறிச்சான் பிரதேசத்தை சேர்ந்த இராமலிங்கம் இரத்தினசிங்கம் அவர்களுக்கும் கலாபூஷண விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கெளரவிக்கப்பட்ட இரு ஆளுமைகளுக்கும் முத்திதழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Address

Mutur
31200

Alerts

Be the first to know and let us send you an email when Muththithal முத்திதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muththithal முத்திதழ்:

Share

Category