
12/06/2025
அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்கு நேற்று (12) இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பில் ஏர் இந்தியா உறுதிப்படுத்தப்பட்ட முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன் 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 13.38 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதை தெரிவித்துக் கொள்கிறோம்.உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானிய பிரஜைகள், 7 போர்த்துகேய பிரஜைகள் மற்றும் 1 கனேடிய பிரஜைகள் அடங்குவர்.உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜை ஆவார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறத