கீறல் TV

கீறல் TV கீறல் TV "இது மக்களின் குரல்"

உத்தியோகபூர்வமான செய்தித்தளம்!

தேசிய அடையாளத்தை வெளிப்படுத்துவதனை ஏன் தடைசெய்ய வேண்டும் ? இனத்தின், மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிக...
29/09/2025

தேசிய அடையாளத்தை வெளிப்படுத்துவதனை ஏன் தடைசெய்ய வேண்டும் ?

இனத்தின், மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டி பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு செல்லப்போவதாக முன்னாள் அமைச்சர் ரவி கருனாநாயக்கா அறிவித்துள்ளார்.

இது முதன்முறையாக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி அல்ல. இதே திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியாக இருந்தபோது மகிந்த ராஜபக்ச எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

இது பல இனங்களும், மதங்களும் வாழ்கின்ற ஜனநாயக நாடொன்றுக்கு பொருத்தமற்ற கொள்கையாகும். நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய எத்தனயோ பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்காமல், இனத்தின், மதத்தின் அடிப்படையில் கட்சிகள் இருப்பதனால் ரவி கருநாநாயக்காவுக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன ? இவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற சந்தேகம் உள்ளது.

ஒரு இனத்தின் அடையாளம் என்பது உயிரிலும் மேலானதும், விலைமதிக்க முடியாததுமாகும். அந்த அடையாளத்தை நிலை நிறுத்துவதற்காகவே உலகில் எத்தனையோ யுத்தங்களும், போராட்டங்களும், அழிவுகளும் இடம்பெற்றது. இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

எமது நாட்டில் அப்போது முஸ்லிம்கள் எட்டு சதவீதமாக வாழ்ந்தபோதிலும் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அரசியல் அடயாளம் இருக்கவில்லை. வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் தேசியத்துக்குள்ளும், ஏனைய மாகாணங்களில் வாழ்ந்தவர்கள் பெரும்பான்மை சமூகத்துக்குள்ளும் புதைந்து கிடந்தனர்.

1987 இந்திய - இலங்கை ஒப்பந்தம் வரையிலான எந்தவொரு ஒப்பந்தத்திலும் முஸ்லிம்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் எழுச்சிக்கு பின்பு இந்நாட்டில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று உலகத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டது.

விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்பு ஒரு இனத்தின், மதத்தின் பெயரில் அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்ற சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முயற்சித்தபோது, அவருடன் இருந்த சில முஸ்லிம் கட்சிகள் சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவே தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர்.

அந்தவகையில் றிசாத் வதியுதீன் தலமையிலான “”அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்”” என்ற கட்சியின் பெயரை “”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்”” என்றும்,

அதாஉல்லா தலமையிலான “”தேசிய முஸ்லிம் காங்கிரஸ்”” என்ற கட்சியின் பெயரை “”தேசிய காங்கிரஸ்”” என்றும் மாற்றிக்கொண்டனர்.

ஆனால் மகிந்த ராஜபக்சவுடன் பங்காளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். தமிழ் மக்களினால் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் தங்களது கட்சியில் இருக்கின்ற இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு உடன்படவில்லை.

அதேநேரம் ரவுப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த நிலையில், மகிந்தவின் இந்த திட்டத்துக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களின் உதவியை நாடியது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் உதவியை நாடியதுடன் இறுதியில் இந்தியா மற்றும் சில நாடுகளின் அழுத்தம் காரணமாக அத்திட்டம் மகிந்தவினால் கைவிடப்பட்டது.

எனவேதான் இனத்தின், மதத்தின் பெயரில் கட்சிகளை அழிக்க நினைப்பது சர்வாதிகார போக்கு மாத்திரமல்ல, சிறுபான்மை இனத்தின் தேசிய அடையாளத்துக்கும் சாவுமணி அடிக்கும் முயற்சி என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் அன்பளிப்பு...!தில்சாத் பர்வீஸ் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சம்மா...
29/09/2025

சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் அன்பளிப்பு...!

தில்சாத் பர்வீஸ்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் சமூக பொறுப்புணர்வின் அடிப்படையில் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன இன்று (29) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் கல்வி கற்கும் 13 மாணவர்களுக்கு தேவையான பொருட்களை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவினால் வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கே.கஜேந்தினி இடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

ஒலுவிலில் விவகாரம் - முட்டாள்களின் பதிவை - சாதாரணமாக கடந்து செல்லாமல், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...!!!யூ எல் மப்றூக...
29/09/2025

ஒலுவிலில் விவகாரம் - முட்டாள்களின் பதிவை - சாதாரணமாக கடந்து செல்லாமல், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...!!!

யூ எல் மப்றூக்

ஒலுவில் பகுதியில் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகளுடன் தொடர்புபடுத்தி - யாரோ சில 'எருமைகள்' எழுதியதை, சில கழுதைகள் பேஸ்புக்கில் சுமந்து திரிகின்றன.

இந்த அபாண்டத்துக்கு எதிராக, பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து - சமூகவியல் துறை பேராசிரியரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான ரமீஸ் அபூபக்கர் - தனது பேஸ்புக் பக்கத்தில் காத்திரமான பதிவொன்றை எழுதியுள்ளார்.

'ஒலுவில் களியோடை பாலத்தருகே ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, உயர் கல்வி நிறுவன மாணவிகள் மீது சிலர் பழி சுமத்துகின்றனர்.

உயர் கல்வி நிறுவன மாணவிகள் சம்மந்தப்படுத்தும் முட்டாள்களின் பதிவை - சாதாரணமாகக் கடந்து செல்லாமல், அந்த அபாண்டத்தை எழுதியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு விடயத்தை தீர விசாரிக்காமல், அதன் ஆழ அகலம் தெரியாமல், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் மீதும் அந்நிறுவன மாணவிகள் மீதும் அபாண்டம் சொல்வது உண்மையில் கண்டிக்கத்தக்கது; சிறுபிள்ளைத்தனமானது.

பெண் மாணவிகளின் கல்வி மறுமலர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்டவர்களின் செயலாகவே இதனை கருத வேண்டியுள்ளது' என, பேராசிரியர் ரமீஸ் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி முட்டாள்களின் பதிவை - சாதாரணமாகக் கடந்து சென்று விடாமல், அந்த அபாண்டத்தை எழுதியவர்கள், அதனைப் பகிர்ந்தவர்களின் தகவல்களை உடனடியாக சேகரித்து, அவர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடொன்றை பதிவு செய்ய வேண்டும்.

குருட்டுத்தனமாக யாரோ ஒரு எருமை - பெண் பிள்ளைகளின் கௌரவத்தின் மீது கல்லெறிந்து விட்டுப் போவதை - தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டும் காணாமல் சென்று விடக் கூடாது.

அங்குள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, கௌரவம் அனைத்துக்கும் பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட எருமைகள் மற்றும் கழுதைகளுக்கு எதிராக - பல்கலைக்கழக நிர்வாகம் களத்தில் இறங்க வேண்டும்.

பக்கபலமாக நாங்களும் இந்த விடயத்தில் உங்களுடன் கைகோர்ப்போம்.

(படம்: சமூகவியல் துறை பேராசிரியரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான ரமீஸ் அபூபக்கர்)

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக   லசந்த களுவாராய்ச்சி   தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.க...
29/09/2025

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர், பூகொட பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து இன்று (29) பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராய்ச்சி கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுக்கொண்டார்.

மேலும் கல்முனை பகுதியில் சமூக நலனுக்காக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் புதிய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டார்.

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை கமு/ சது/ ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் திருமதி சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அம்மணி அவர்கள் இலங்கை அதிபர் ...
29/09/2025

சம்மாந்துறை கமு/ சது/ ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் திருமதி சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அம்மணி அவர்கள் இலங்கை அதிபர் சேவை தரம் -II பதவி உயர்வு

✍️மஜீட். ARM

திருமதி சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அம்மணி அவர்கள் இலங்கை அதிபர் சேவை தரம் -II இற்குப் பதவி உயர்வு பெற்றதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

​புதிய பதவி உயர்வுடன், அவர் இன்று (29.09.2025) கமு/ சது/ ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது கடமைப் பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

​அவருடைய நீண்ட காலச் சேவையும், அர்ப்பணிப்பும் இந்த உயர்வுக்குச் சான்றாகும். திருமதி சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அவர்களின் தலைமையில், ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயம் மேலும் பல வெற்றிகளைக் காண எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு முன்பாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்...!!(முஹம்மது ஜிப்ரான்)மூதூர் கல்வி வலயத்திற்க...
29/09/2025

மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு முன்பாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்...!!

(முஹம்மது ஜிப்ரான்)

மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு முன்பாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (29) ஈஈடுபட்டனர்

மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் நியமனத்தை இடைநிறுத்தக் கோரி நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுலோகங்கள் ஏந்தியபடி பெற்றோர்கள் பழைய மாணவர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

முன்னர் இருந்த அதிபர் கல்வி நடவடிக்கைகளிலும் ஒழுக்கங்களிலும் வீழ்ச்சி அடைந்திருந்த பாடசாலையை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்ததாகவும், அவர் தொடர்ச்சியாக கடமையாற்றினால் இன்னும் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த உடனே மூதூர் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரை வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவர்களிடம் விளக்கங்கள் கேட்டு அறிந்த வலயக் கல்விப் பணிப்பாளர், இக்கோரிக்கைகளை எழுத்து மனு மூலம் சமர்ப்பிக்குமாு கேட்டுக் கொண்டார்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
29/09/2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

அட்டாளைச்சேனை பிரதேச சபையின்  ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு திண்மக் கழிவகற்றும் குப்பைத் தொட்டிகள்வழங்கும் நிகழ்வு...!!!(றி...
29/09/2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு திண்மக் கழிவகற்றும் குப்பைத் தொட்டிகள்
வழங்கும் நிகழ்வு...!!!

(றியாஸ் இஸ்மாயில்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பி.எஸ்.டி.ஜி (PSDG) திட்டத்தில் பாடசாலைகளுக்கு திண்மக் கழிவகற்றும் குப்பைத் தொட்டிகள் முதல் கட்டமாக 40 வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான் தலைமையில் இன்று (29) பிரதேச சபையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ ஏ.எஸ்.எம்.உவைஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திண்மக்கழிவகற்றும் குப்பைத் தொட்டிகளை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளுக்கும், பள்ளிவாசல் மற்றும் மத்ர்ஷாக்களுக்கும்
முதல் கட்டமாக திண்மக்கழிவகற்றும் குப்பைத் தொட்டிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் கௌரவ எப்.எம்.நாஜித், பிரதேச சபையின் உறுப்பினர்களான
கௌரவ AC.நியாஸ், கௌரவ ஏ.எல்.
பாயிஸ்(ADE) கௌரவ ஐ.எல்.அஸ்வர் சாலிஹ் HNDE,BA,MBA, கௌரவ ஐ.ஏ.ஸிறாஜ்.BA,JP கௌரவ SIA.றியாஸ் கௌரவ முகம்மது றினாஸ், கௌரவ மெத்தானந்தடி சில்வா உட்பட பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களில், மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே அதிகளவில் போதைப்பொருட்களுக்கு, அடிமையாகும் போக்கைக் கொண்...
29/09/2025

இலங்கையில் பாடசாலை மாணவர்களில், மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே அதிகளவில் போதைப்பொருட்களுக்கு, அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை நிலையில் உள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி கிரேண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனித் தெரு, அங்குலானை, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஹிக்கடுவ உள்ளிட்ட பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகக்கூடியவர்கள் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடிய அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

சக நண்பர்களின் தூண்டுதல் பாடசாலை மாணவர்களின் போதைப்பொருள் பாவனையில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் நோக்கி பயணித்த சுற்றுலா பஸ் விபத்து; உயிர் தப்பிய பயணிகள்!நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற தனியார் பஸ்ஸொ...
29/09/2025

யாழ் நோக்கி பயணித்த சுற்றுலா பஸ் விபத்து; உயிர் தப்பிய பயணிகள்!

நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற தனியார் பஸ்ஸொன்று, நுவரெலியா – வலப்பனை பிரதான பாதையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது, நேற்று (28) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது,

யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த 28 பேர் கொண்ட குழுவொன்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​இயந்திரக் கோளாறு காரணமாக பஸ்ஸின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால், பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த பயணிகள் புதிய பஸ்ஸில் ஏறிச் யாழ்ப்பாணம் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிகள் தாக்கியதில் 6 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!முல்லைத்தீவு விசுவமடுவில் இன்று (29) காலை விசுவநாதர் ஆரம...
29/09/2025

குளவிகள் தாக்கியதில் 6 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு விசுவமடுவில் இன்று (29) காலை விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

12ஆம் கட்டை தபால் நிலைய வீதி பகுதியில் இராணுவத்தினரால் தோட்டம் செய்யப்படும் காணியிலுள்ள மா மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து மாணவர்களை கொட்டியதன் காரணமாக 6 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த மாணவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குளவி தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் நலன் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு இனிதே நிறைவடைந்தது.கடந்த உள்ளூராட்சி மன்ற தேர...
29/09/2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு இனிதே நிறைவடைந்தது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு 26,27,28.09.2025 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் இறுதி நாள் நிகழ்வின் போது கலந்து கொண்ட உறுப்பினர்களிடமிருந்து அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களில் நலவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன் அதற்கான தீர்வு திட்டங்கள் குறித்தும் ஆலோசனைக்குட்படுத்தப்பட்டது.

-ஊடகப் பிரிவு-

Address

Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when கீறல் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category