Thudippu News

Thudippu News நமது தலைமுறைகளின் துடிப்பு!

12/09/2025
11/09/2025

இன்றைய போட்டி!
பாகிஸ்தான் v ஓமான்

   Hong Kong -143/7BAN - 144/3Bangladesh won by 7 wickets (with 14 balls remaining)
11/09/2025



Hong Kong -143/7

BAN - 144/3

Bangladesh won by 7 wickets (with 14 balls remaining)

மகா கவியின் தினம்!போற்றுவோம்!
11/09/2025

மகா கவியின் தினம்!
போற்றுவோம்!

11/09/2025

முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்..

11/09/2025

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

♦️காலம் :- 15.09.2025
♦️இடம் :- சாமிமலை கோவில் மண்டபம்
♦️நேரம் :- காலை 9.00 - மாலை 3 மணி வரை

அனைவரும் வருக பயன் பெருக....

ஏற்பாடு-
மஸ்கெலியா பிரதேச சபை
நன்றி! பிரதி தவிசாளர்

கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையம் புணரமைக்கபடவுள்ளதால் எதிர்வரும் 15 ம் திகதி தொடக்கம் 10 மாதங்களுக்கு மூடப்பட உள...
11/09/2025

கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையம் புணரமைக்கபடவுள்ளதால் எதிர்வரும் 15 ம் திகதி தொடக்கம் 10 மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.மாற்று பஸ் தரிப்பிட இடங்களாக பஸ்டியன் வீதி,போதிராஜமாவத்தை,குணசிங்கபுர பகுதிகளில் இருந்து CTB இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிகள் பயணிக்க முடியும்..
#துடிப்புநியூஸ்ஹெலன்

  - 2nd Game UAE v India UAE - 57 (13.1) | IND - 60/1 (4.3) India won by 9 wickets- #துடிப்புநியூஸ்ஹெலன்
10/09/2025

- 2nd Game
UAE v India

UAE - 57 (13.1) | IND - 60/1 (4.3)

India won by 9 wickets-
#துடிப்புநியூஸ்ஹெலன்

மனிதம் தொலைந்து விட்டது....!!!ஆழ்ந்த இரங்கல்கள் முரளி.....!!!
10/09/2025

மனிதம் தொலைந்து விட்டது....!!!
ஆழ்ந்த இரங்கல்கள் முரளி.....!!!

கொழும்பு முதல் வெலிமட வரை பயணித்த ஒரு நபர், பேருந்தில் உறங்கியதால் தனது இலக்கை தவறவிட்டு, அறியப்படாத ஊர் ஒன்றில் இறங்கி உள்ளார்..

இந்நிலையில் இவர் திருடன் என தவறாக எண்ணிய கிராமவாசிகளால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த அவர், ம*னமுடைந்து #த*ற்கொலையும் செய்து கொண்டார்.

பாதிக்கப்பட்டவர், புஸ்ஸல்லாவாவில் உள்ள ரோத்ஸ்சைல்ட் எஸ்டேட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34).
இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், ஒரே சகோதரி வேறு பகுதியில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முரளி, ரோத்ஸ்சைல்ட் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் பேருந்தில் உறங்கிவிட்டதால், அதிகாலை 2.00 மணியளவில் ரம்போட பகுதியில் இறங்கியுள்ளார்.

வேறு வழியின்றி, ரம்போடாவில் வசிக்கும் உறவினர் ஒருவரைத் தேடி செல்ல முடிவு செய்த அவர், துரதிர்ஷ்டவசமாக வழி தவறியுள்ளார்.

உதவி கோரி ஒரு வீட்டின் கதவைத் தட்டியபோது, அங்கிருந்தவர்கள் அவரை திருடன் என தவறாக எண்ணி, அக்கம்பக்கத்தினரை எச்சரித்து கூச்சலிட்டனர்.

இதையடுத்து, கூடிய கிராமவாசிகள் அவரை கடுமையாக தாக்கி, ஒரு மரத்தில் கட்டி வைத்து, கொத்மலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணைகளில் முரளி நிரபராதி என தெரியவந்ததை அடுத்து, காவல்துறை அவரை பிணையில் விடுவித்து, மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ரோத்ஸ்சைல்ட் எஸ்டேட்டில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்தது.

எனினும், அவரை தாக்கியவர்கள் இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், மனமுடைந்த முரளி, தூ*க்கிட்டு #த*ற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோத்மலை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி வாஜிர ரத்நாயக்க மேற்கொண்டு வருகிறார்.

09/09/2025

#ஆசியா #கோப்பை 2025
AFG -188/6
HKG
(20 ov, T:189) 94/9
Afghanistan won by 94 runs

09/09/2025

Asia Cup 2025 - 1st Game
Afghanistan v Hong Kong

AFG - 188/6 (20) | Hong Kong Target - 189-

வருடாந்த அலங்கார உற்சவம்தென் மாகாணம் காலி மாவட்டம் எல்பிடிய எத்கந்துறை திவிதுறை தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ...
09/09/2025

வருடாந்த அலங்கார உற்சவம்

தென் மாகாணம் காலி மாவட்டம் எல்பிடிய எத்கந்துறை திவிதுறை தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2025 செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி புண்ணியாக வாஜனம் நடைபெறுவதுடன் சுப முகூர்த்த சுப வேளையில் கொடியேற்றம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு பூஜை. வசந்த மண்டப பூஜையுடன் சுவாமி உள்வீதி உலா நடைபெறுவதோடு இரவு 9.05 மணிக்கு கங்கை கரையில் கரகம் பாலிக்கும் நிகழ்வு இடம்பெறும்
11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் யாவும் ஆரம்பமாகி காளியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி இடம் பெற்று ஆலயத்தை வந்தடையும் தொடர்ந்து ஆலயத்தில் அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இரவு 8.00 மணிக்கு அசுர சங்ஹாரம் எனும் திருவேட்டை திருவிழா ஆலய வளாகத்தில் நடைபெறும்.

12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் பக்தர்கள் புடைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி தேர் பவனி வெளி வீதி ஊர்வலம் நடைபெறும்.

13 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு முருகன் ஆலயத்தில் இருந்து பறவை காவடி ஊர்வலம் ஆலயத்தை வந்தடைந்ததும் தீமிதிப்பு வைபவம். அக்னி சட்டி எடுத்தல்
நேர்த்திகடன் பூஜைகள் நடைபெற்று அம்மனுக்கு மாவிளக்கு பூஜை என்பன நடைப்பெறும்.

14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆலய தீர்த்த கேனியில் தீர்த்தோற்சவத்துடன் கொடியிறக்கம் மஞ்சள் நீர் விழாவுடன் கரக ஊர்வலம் நடைபெறுவதுடன் இரவு 8.00 மணிக்கு
ஆலயத்தில் பூங்காவனம் திருவூஞ்சல் திருவிழா நடைபெற்று விழா இனிதே நிறைவு பெறும்.

கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு
சிவஸ்ரீ.ஜெ.கிஷாந்தன் குருக்கள் தலைமையில் நடைபெறும்.

இவ் வருடாந்த அலங்கார உற்சவத்தில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஆலய நிர்வாக சபை.
தோட்ட பொது மக்கள்
விழா ஏற்பாடு குழுவினர்கள்.

செய்திகள் : -
#துடிப்புநியூஸ்இராமன்கேதீஸ்வரன் இராமன் கேதீஸ்வரன்

Address

Nuwara Eliya

Telephone

+94701014242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thudippu News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thudippu News:

Share