Thudippu News

Thudippu News நமது தலைமுறைகளின் துடிப்பு!

பெத்த மனம் கல்லாகி போனேதேன்...இந்த அழகு தேவதை இறைவனின் குழந்தை அது தான் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அரவணைக்க....!குருணாகல...
21/07/2025

பெத்த மனம் கல்லாகி போனேதேன்...
இந்த அழகு தேவதை இறைவனின் குழந்தை
அது தான் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அரவணைக்க....!
குருணாகல் பரகதெனிய சிங்கபுர வீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிசுவின்
தற்போதைய புகைப்படம்!
இந்த அழகு தேவதை பார்க்கும் போதே மனம் துடிக்கிறது..எப்படி தான் மனசு வந்ததோ அவளுக்கு....!!!!!!
#துடிப்புநியூஸ்ஹெலன்

*பொருளாதார மத்திய நிலையங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது*. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவ...
21/07/2025

*பொருளாதார மத்திய நிலையங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது*.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

விவசாயிகளுக்கு உரிய நேரத்திற்கு உரம் கிடைத்தபாடில்லை. அவர்களின் அறுவடைகளுக்கு நியாயமான விலையும் கிடைத்தபாடில்லை. விவசாய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், விவசாயிகளைப் பாதுகாப்போம் எனக் கூறிய இந்த அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை விற்று, தனியார்மயமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உரம் மற்றும் எரிபொருளை பெற்றுத் தருவோம், ஆடம்பரம் மிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை விவசாயிகளுக்கு உருவாக்கித் தருவோம். நெல்லுக்கு உத்தரவாத நிலையான விலைகளை கட்டளைச் சட்டங்கள் மூலம் சட்டப்பூர்வமாக பெற்றுத் தருவோம் என இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. யானை - மனித மோதலுக்கு தீர்வு காண்போம் என்றும் வாக்குறுதி வழங்கியிருந்தது. இன்று மனித உயிர்களும், யானைகளின் உயிர்களும் கூட இழக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்கிய எந்தவித வாக்குறுதிகளையும் இந்த அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் தம்புத்தேகம நகரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

🟩 இந்த அரசாங்கத்தின் கீழ் எத்தனை யானைகள் உயிரிழந்துள்ளன.

பயிர் சேதம், உயிர் இழப்பு மற்றும் சொத்து சேதங்கள் என்பனவற்றுக்கு எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இன்று விவசாயிகளும் வனவிலங்குகளும் அழிக்கப்பட்டு வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்காது, நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்?

இன்றைய நிலவரப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் காணப்படும் அதி குளிரூட்டி இயந்திரம் செயலிழந்துள்ளது. இலங்கையின் பிரதான வைத்தியசாலையே இந்தப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இவற்றையே சரியாகச் செய்ய முடியாத அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. உப்பைக் கூட சரியாக பெற்றுத் தர முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருந்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு பயந்து இந்த அரசாங்கம் அண்மையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது. எரிபொருள் விலை சூத்திரம், மின்சார கட்டண சூத்திரம் போன்றவற்றை நீக்குவோம் என வீராப்பு பேசியிருந்தாலும், இன்று அதைச் செய்வது இவர்களுக்கு சாத்தியமற்ற ஒன்றாக காணப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது அதிக வரிச்சுமையும் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 323 கொள்கலன்களை பரிசோதனையின்றி வெளியேற்றி விட்டு, இப்போது பொய் சொல்லி வருகின்றனர்.

நாட்டில் எங்குமே பிரச்சினைகள் காணப்படுகின்றன. 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவித்து விட்டு, இப்போது நாட்டிற்கு பொய்யையும், பொய்யான பன (பிரசங்கத்தையும்) சொல்லி வருகின்றனர்.

🟩 பாடசாலை கட்டமைப்பையே அழிக்கும் கல்விச் சீர்திருத்தங்களைக்கூட இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாசகார கொள்கைகளுக்கு எதிராக நாம் முன்நிற்போம். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 மக்களுக்காக நாம் முன்நிற்போம்.

தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் விவசாயிகளைப் பாதுகாப்போம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், இன்று நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து பொம்மை அரசாங்கமாகவே இருந்து வருகின்றது. மக்களின் வாழ்க்கையை அழித்து, அவர்களை படுகுழியின் பால் இழுத்துச் செல்லும் இந்த மக்கள் விரோத செயல்களை நாம் எதிர்ப்போம். இன்றும் கூட, பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கும் கூட பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு நான் அஞ்சப்போவதில்லை. மக்களுக்காக என்னால் இயன்றவரைப் போராடி, எனது உச்சக்கட்ட கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-
#துடிப்புநியூஸ்திணேஸ்

*ගොවියා සුරකිනවා කියු ආණ්ඩුව අද ආර්ථික මධ්‍යස්ථාන පවා කුණු කොල්ලයට විකුණනවා - විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා*.....

20/07/2025

கிழக்குப் பல்கலைக் கழக வெளிவாரிக் கற்கைகள் நிறுவனம் "நூலகவியல் தகவல் விஞ்ஞான உயர் டிப்புளோமா" கற்கைக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைப்பை அணுகவும்.
www.cedec.esn.ac.lk/hdlis

நன்றி: வீரகேசரி!
20/07/2025

நன்றி: வீரகேசரி!

"பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம் எதிர்க்கத்தக்கது" – சஜித் பிரேமதாச

நாளை ஆடி 1. #ஆடி மாத விரதங்கள் ...ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இரு...
20/07/2025

நாளை ஆடி 1.
#ஆடி மாத விரதங்கள் ...
ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆடி தபசு

ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இதையடுத்து ஆடி பவுர்ணமி நாளில், பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் இறைவன் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு, அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

ஆடிப்பூரம்
ஆடி அமாவாசை

ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
#துடிப்புநியூஸ்இராமன்கேதீஸ்வரன்

சர்ச்சையில்.... அமைச்சர் சரோஜா!
20/07/2025

சர்ச்சையில்.... அமைச்சர் சரோஜா!

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்!
20/07/2025

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்!

20/07/2025

ஜனாதிபதி நிதியத்தை தொடர்புகொள்ள பின்வரும் இலக்கத்திற்கு அழைக்கலாம்!
011 4354250

அனிருத் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!
20/07/2025

அனிருத் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

20/07/2025

நன்றி: மலையோரம் செய்திகள்

20/07/2025
 #அப்படியாஅண்ணாத்த அரசியல் அரிசியால் அரசியல்வாதிக்கு பிரச்சினையாமே அண்ணாத்த.......
20/07/2025

#அப்படியாஅண்ணாத்த
அரசியல் அரிசியால் அரசியல்வாதிக்கு பிரச்சினையாமே அண்ணாத்த.......

Address

Nuwara Eliya

Telephone

+94701014242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thudippu News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thudippu News:

Share