News Nuwara Eliya நுவரெலியா

News Nuwara Eliya நுவரெலியா 📵 - 𝟬𝟳𝟱𝟰𝟰𝟰𝟭𝟰𝟰𝟰 & 𝟬𝟳𝟮𝟳𝟴𝟴𝟴𝟯𝟯𝟯

01/11/2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விசேட நடவடிக்கைகள்: பொலிஸ்மா அதிபர் உறுதி

நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

உயர்மட்டக் கலந்துரையாடல்

சபாநாயகரின் அறையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சிகளின் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு நிலைமை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பாக இந்தச் சந்திப்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

சந்திப்பின் போது, பாதுகாப்பு தொடர்பான காரணிகள் மற்றும் பொலிஸாரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்துப் பொலிஸ்மா அதிபர் விளக்கமளித்தார். மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பாதுகாப்பு நீக்கம் குறித்து கேள்வி

சந்திப்பு நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாரண, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாகவும், இதுகுறித்து அண்மையில் பொலிஸ்மா அதிபர் தன்னைப் பற்றிக் குறிப்பிட்ட விடயம் குறித்தும் கேள்வியெழுப்பியதாகத் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய ஜகத் விதாரண, "நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்பு கோரும் சகல உறுப்பினர்களுக்கும் மீண்டும் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். மேலும், என்னை பற்றி அவர் அண்மையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் அவர் தனது கவலையைத் தெரிவித்தார்," என்று கூறினார்.

இதன் மூலம், பாதுகாப்பு நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01/11/2025

இன்று முதல் இலவசம் இல்லை ! பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் இன்று முதல் அமுல்,

கடைகளில் பொருட்கள் வாங்கும் பொலித்தீன் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, சில்லறை வணிகர்கள் இனி பொருட்களை விற்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இத்தகையப் பைகளுக்குக் கட்டாயம் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதன் முக்கிய நோக்கம், பொலித்தீன் பயன்பாட்டைக் குறைப்பதும் சுற்றுச்சூழலுக்கு அதனால் ஏற்படும் தீங்கு விளைவுகளைக் கட்டுப்படுத்துவதும் ஆகும்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (CEA) தலைவர் பேராசிரியர் திலக் ஹேவவாசம் அவர்கள் இது குறித்துப் பேசுகையில், இன்று முதல் கடைகளில் பொலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், கடைகளுக்குச் செல்லும்போது அனைவரும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைத் தங்களுடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

01/11/2025

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை வட்டவளை தியகல பொலிஸ் சோதனை சாவடி பகுதியில் வைத்து இன்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

31/10/2025

மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றன.

கடந்த சில நாட்களாகவே இவ்வாறான சிவப்புநிற நண்டுகள் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவதற்கான காரணம் தெரியாதென மீனவர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அண்மைக்காலமாக சிவப்பு நிற நண்டுகள் கரையொதுங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அ.அலெக்ஸ் மட்டக்களப்பு

முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்துமுல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு பகுதியில்...
31/10/2025

முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்து

முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு பகுதியில் இன்று (30) ஒரு பொலிஸ் ஜீப் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

மாடுகள் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்தே இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த சில பொலிசார் சிறுகாயமடைந்துள்ளனர். எனினும் ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை சனத்தொகை தொடர்பான தகவல்கள்முக்கியமான விவ...
31/10/2025

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை சனத்தொகை தொடர்பான தகவல்கள்

முக்கியமான விவரங்கள் இந்த இரண்டு படங்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன

31/10/2025

நுவரெலியாவில் கடந்த (29) ஆம் திகதி புதன் கிழமை உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்க்கப்பட்டது.

28/10/2025

நுவரெலியாவில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

முழுமையாக வாசிக்க👇🏻

https://www.thamilan.lk/articles/goGKwIdKWW3CIaAeqvbl

28/10/2025

Ragale

28/10/2025

News Nuwara Eliya நுவரெலியா 27.10.2025

https://youtu.be/5OKKuWtEJG4?si=GwDFPPSNVRlkoSIn
28/10/2025

https://youtu.be/5OKKuWtEJG4?si=GwDFPPSNVRlkoSIn

Ada Derana | ශ්‍රී ලංකාවේ විශ්වසනීය හා ප්‍රමුඛතම පුවත් සපයන්නාමහ රෑ ගිනිබත් වූ නිමි ඇඳුම් වෙළෙඳසැලනුවරඑළිය - රාගල නගරයේ ...

28/10/2025

Address

Nuwara Eliya

Telephone

+94754441444

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Nuwara Eliya நுவரெலியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share