Daily Islamic Reminders

Daily Islamic Reminders அல் குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ் வழியில் முழு நேர இஸ்லாமிய ஊடகம் சத்தியம் வந்தது...! அசத்தியம் அழிந்தது...! அசத்தியம் அழிந்தே தீரும்...!

இரண்டு புனித பள்ளிவாசல்களில் பாதுகாவலர் மன்னர் சல்மான் சார்பாக, மக்காவின் துணை அமீர் இளவரசர் சவுத் பின் மிஷால்  தலைமையில...
10/07/2025

இரண்டு புனித பள்ளிவாசல்களில் பாதுகாவலர் மன்னர் சல்மான் சார்பாக, மக்காவின் துணை அமீர் இளவரசர் சவுத் பின் மிஷால் தலைமையில் இன்று (10) வியாழக்கிழமை புனித கஅபாவின் கழுவும் வருடாந்ந நிகழ்வு நடைபெற்றது.

Daily Islamic Reminders

தொழுகையை பேணுங்கள்...
10/07/2025

தொழுகையை பேணுங்கள்...

10/07/2025

எமது #தொழுகை எந்த விதம்?

அஷ் #ஷைஹ் ரிழா (ஸஃதி)

ஹஜ்ஜத்துல் விதா உரைநபியவர்கள் அரபா மைதானத்தில் அற்புதமான உரை.. #மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்க...
10/07/2025

ஹஜ்ஜத்துல் விதா உரை
நபியவர்கள் அரபா மைதானத்தில் அற்புதமான உரை..

#மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

#மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

#அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

#பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாத வர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

#நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

#மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

#உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

 #இறைவேதம் 📌✨
10/07/2025

#இறைவேதம் 📌✨

03/07/2025

யா அல்லாஹ் நாசகார யுத பயங்கரவாதிகளுக்கு தீராத வியாதிகளையும் கொடுமையான நெருப்பினைக் கொண்டும் அழித்து விடுவாயக . ஆமீன்

ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப...
02/07/2025

ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!

ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது

எத்தனை கறி செய்வது?

பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா?

யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது?

கவலைக்குரிய விடயம் என்னவெனில்:-

இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள்.

அடுத்த பிரச்சினை:-

ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள்.

ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும்.

பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.

ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது.

மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.

வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்...

ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.....

சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐 See less

இந்தியாவைச் சேர்ந்த இமாம் ஒருவர் பலஸ்தீன் சென்றபோது அங்குள்ள 10 வயது சிறுவனை அழைத்து நீ என்னுடன் இந்தியாவுக்கு வருகிறாயா...
30/06/2025

இந்தியாவைச் சேர்ந்த இமாம் ஒருவர் பலஸ்தீன் சென்றபோது அங்குள்ள 10 வயது சிறுவனை அழைத்து நீ என்னுடன் இந்தியாவுக்கு வருகிறாயா என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன், இந்தியாவில் என்ன கிடைக்கும் என்று கேட்டான்.

அங்கு நல்ல சுவையான உணவு, துணி, நிம்மதியான தூக்கம் எல்லாம் கிடைக்கும் என்று அந்த இமாம் தெரிவித்தார்.

அதற்கு அந்தச் சிறுவன், "எனக்கு அங்கு ஸஹீத் அந்தஸ்து கிடைக்குமா?

அல்லாஹ் இந்தப் பூமியில் அந்த அந்தஸ்த்தை எங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளான். அது வேறெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தான்.

சிறுவனின் பதிலைக் கேட்ட இமாம் கண்கலங்கினார்.

சிறுவனின் ஈமானைப் பாருங்கள். பலஸ்தீனர்கள் அல்லாஹ்வுக்காக தன் உயிரை விடுவதற்கு எப்பொழுதும் தயராக உள்ளனர்...!!❤❤
Islamic Knowledges

என்னிடம் நிறைய மாற்று மத நண்பர்கள் இந்த கேள்வியை கேட்டுள்ளார்கள் "இஸ்லாத்தை தவிர ஏனைய மதங்களில் அவர்களின் இறைவனுக்கு ஒரு...
30/06/2025

என்னிடம் நிறைய மாற்று மத நண்பர்கள் இந்த கேள்வியை கேட்டுள்ளார்கள் "இஸ்லாத்தை தவிர ஏனைய மதங்களில் அவர்களின் இறைவனுக்கு ஒரு உருவம் உண்டு ஆனால் இஸ்லாத்தில் இல்லை ஏன்???"

இதற்கான சிறிய விளக்கம் எங்களது இறைவன் ஆகிய அல்லாஹ் அவனது திருமறையில் அவனை பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

🔹(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
🔹அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
🔹அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
🔹அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இது ஸூரத்துல் இஃக்லாஸ் வரும் அல்லாஹ்வை பற்றி திருமறையாகும்.

அவனுக்கு நிகராக எவரும் இல்லை எங்கும் போது இறைவனை யாருடனும் ஒப்பிட முடியாது ( மனித உருவங்கள் அல்லது வேறு உருவங்கள் எங்களால் கொடுக்க முடியாது நாங்கள் உருவாக்கும் உருவங்கள் நிச்சயமாக ஏதோ ஒரு சந்தர்ப்பதில் பார்த்தவைகளில் இருந்தே உருவாக்க முடியும் எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு உருவம் நிச்சயமாக உருவாக்க முடியாது) இதனால் எங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது.

அத்துடன் இந்த நான்கு வசனங்களும் யாருக்கு பொருந்துமோ அவனே எங்கள் ஏக இறைவன் ❤️

✍️....... Abm Musab

 #பள்ளிவாயல்  #அல்லது  #குர்- #ஆன் மத்ரசாக்களுக்கு குழாய் கிணறு (Deep Well) தேவைப்பாடு இருந்தால் அவசரமாகதொடர்புகொள்ளவும்...
30/06/2025

#பள்ளிவாயல் #அல்லது #குர்- #ஆன் மத்ரசாக்களுக்கு குழாய் கிணறு (Deep Well) தேவைப்பாடு இருந்தால் அவசரமாக
தொடர்புகொள்ளவும்.
(முற்றிலும் இலவசம்)
0772011004

26/06/2025

HAPPY ISLAMIC NEW YEAR 1447
Hijri /2025

Address

Oddamavadi

Alerts

Be the first to know and let us send you an email when Daily Islamic Reminders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Islamic Reminders:

Share