KTV தமிழ்

KTV தமிழ் We Provide News, Drama, Short Films, Documentary, Songs and Award Programs மாற்றத்திற்கான அதீத சக்தி

இலங்கையின் முஸ்லிம் பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதற்காக அந்த சமூகத்தால் ஒரு போதும் ஒதுக்கப்பட்டதில்லை.தன்னுடைய கலாச்சாரத...
29/10/2025

இலங்கையின் முஸ்லிம் பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதற்காக அந்த சமூகத்தால் ஒரு போதும் ஒதுக்கப்பட்டதில்லை.

தன்னுடைய கலாச்சாரத்தை வெளிப்படுத்தி இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்து சிங்கக் கொடியை மரியாதையுடன் ஏந்தி தாய்நாட்டை பெருமைப்படுத்திய விளையாட்டு வீராங்கனை. 🇱🇰❤️

இலங்கையின் தேசமான்ய விருது பெற்ற ஸலீஹா ஃபத்தூம் இஸ்ஸதீன்

2018 ல் மலேசியாவில் நடந்த ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு கேப்டனாக இருந்தவர்.

அவர் அது குறித்து ஊடக பேட்டியின் போது....

ஹிஜாப் அணிவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இலங்கை பல இனங்களைக் கொண்ட நாடு அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவர்கள் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இலங்கையின் மகளிர் ஸ்குவாஷ் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர் மற்றும் நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் அணி நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

ஹிஜாப் என்ற கலாச்சார ஆடை முஸ்லிம் பெண்களுன் திறமையை முடக்குகின்றது என வாதிடும் தற்குறிகளுக்கான பதிவு.

✍️ Mohamed Bin Latheef

29/10/2025

உங்கள் கனவு இல்லங்களை பளிச்சிட வைக்க எம்முடன் இணையுங்கள்.

Kinniya Color House and Color Zone.
075228189 | 0779614324

உலகை வியக்க வைத்த அல்பேனியா - AI அமைச்சர் டயல்லாவுக்கு 83 குழந்தைகள்உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரான 'டயல்லா' (D...
28/10/2025

உலகை வியக்க வைத்த அல்பேனியா - AI அமைச்சர் டயல்லாவுக்கு 83 குழந்தைகள்

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரான 'டயல்லா' (Diella) விரைவில் 83 குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் என்று அல்பேனியப் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில், அல்பேனியா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட, டயல்லா (Diella) என்பது ஒரு அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஆகும்.

ஊழலைக் கட்டுப்படுத்தவும், பொது கொள்முதல் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மனிதத் தலையீடு இல்லாமல், தரவுகள் மற்றும் வழிமுறைகள் (Algorithms) மூலம் இவர் முடிவுகளை எடுப்பார் என அல்பேனியா பிரதமர் தெரிவித்தார்.

அந்தவகையில், அல்பேனியா உலகிலேயே முதல் முறையாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்தது.

இந்நிலையில், 'டயல்லா' விரைவில் 83 குழந்தைகளுக்குத் தாயாகப் போகிறார் என்று அல்பேனியப் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.

பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் மாநாட்டில் (Global Dialogue) இந்த ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், டயல்லாவின் 83 குழந்தைகள் என்பது ஆளும் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் (AI Assistants) ஆவார்கள்.

இந்த உதவியாளர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் நிகழ்வுகளையும் பதிவு செய்வார்கள்.

தங்கள் தலைவர்களுக்கு கொள்கை ஆலோசனைகளையும், விவாதங்களுக்குப் பதிலளிப்பதற்கான எதிர் வாதங்களையும் (Counter Arguments) உடனடியாக வழங்க இவர்கள் பயிற்சி அளிக்கப்படுவார்கள்.

"இந்தக் குழந்தைகளுக்கு அவர்களின் தாயின் (டயல்லா) அறிவு முழுவதும் இருக்கும்" என்றும் பிரதமர் ராமா தெரிவித்தார்.

பொதுக் கொள்முதல் துறையை '100% ஊழலற்றதாக' மாற்றுவதே டயல்லாவின் முக்கியப் பணி என்றும், இந்த 83 புதிய செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் மூலம் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் அதிகரிக்க முடியும் என அல்பேனிய அரசு நம்புவதாகவும், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிளிநொச்சியில் தமிழ் பேசும் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனம்கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தமிழ்மொழி பேசக்கூடிய பொறுப்பதிகா...
28/10/2025

கிளிநொச்சியில் தமிழ் பேசும் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமனம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தமிழ்மொழி பேசக்கூடிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கிளிநொச்சி மக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை இனி தாய்மொழியில் நேரடியாக முன்வைக்கலாம்.

தமிழ் பிரதேசங்களில் தமிழ் அதிகாரிகளை நியமிக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்நியமனம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொறுப்பதிகாரியாக எம். சுல்தான் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முயற்சி, தமிழ் பேசும் மக்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

#தமிழ்

நெருப்பின் சுவையை சுவைத்துப் பாருங்கள்! 🔥🍗​Restaurant Mansoora Premium பெருமையுடன் வழங்கும் "BBQ CHICKEN SPECIAL"!சரியாக...
28/10/2025

நெருப்பின் சுவையை சுவைத்துப் பாருங்கள்! 🔥🍗

​Restaurant Mansoora Premium பெருமையுடன் வழங்கும் "BBQ CHICKEN SPECIAL"!

சரியாகப் பதப்படுத்தப்பட்டு, கிரில் செய்யப்பட்ட இந்த சுவையான BBQ சிக்கனை சுவைக்கத் தயாரா?

​உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.
உடனே அழையுங்கள்:

📞 DialMe 757 757 767

Restaurant Mansoora Premium வழங்கும் ஸ்பெஷல் Dolphin & Koththu! 🤩​இனி கிண்ணியாவில் சுவையான கொத்து ரொட்டிக்கு ஒரே இடம் Ma...
28/10/2025

Restaurant Mansoora Premium வழங்கும் ஸ்பெஷல் Dolphin & Koththu! 🤩

​இனி கிண்ணியாவில் சுவையான கொத்து ரொட்டிக்கு ஒரே இடம் Mansoora Premium தான்!

Veg, Egg, Chicken, Beef என உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆர்டர் செய்யுங்கள்.

​விலை விபரங்கள்:
🌱 Vegi - 500/=
🥚 Egg - 600/=
🍗 Chicken - 700/=
🥩 Beef - 800/=

​டெலிவரிக்கு அழையுங்கள்:
📞 DialMe 757 757 767

தெற்காசியாவின் அதி வேகப்பெண்..Sahfiya Yamik.யார் இந்த சஃபியா யாமிக்? – தென் ஆசிய தடகளத்தில் இலங்கையின் தங்க நட்சத்திரம்....
28/10/2025

தெற்காசியாவின் அதி வேகப்பெண்..
Sahfiya Yamik.

யார் இந்த சஃபியா யாமிக்? – தென் ஆசிய தடகளத்தில் இலங்கையின் தங்க நட்சத்திரம்.

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது தென் ஆசிய மூத்த தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளில், இலங்கையைச் சேர்ந்த இளம் ஓட்ட வீராங்கனை சஃபியா யாமிக் தனது அதிசய திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பெண்கள் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 23.58 வினாடிகளில் இலக்கை எட்டிய அவர், தங்கப் பதக்கத்தை வென்று இலங்கையின் கெளரவத்தை உயர்த்தினார். இதேபோல், 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம், மேலும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டத்திலும் சிறப்பாக பங்கெடுத்து மொத்தம் மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

சஃபியாவின் இந்த சாதனை தென் ஆசிய தடகளத்தில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. குறைந்த வயதிலேயே சர்வதேச மேடையில் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், இலங்கையின் புதிய தலைமுறை வீராங்கனைகளுக்கு ஒரு உத்தேசமான முன்மாதிரி ஆகிறார்.

அவரது பயிற்சியாளர் குழு தெரிவித்ததாவது, “சஃபியா மிகுந்த கட்டுப்பாடு, கடின உழைப்பு மற்றும் மனவலிமை கொண்ட வீராங்கனை. அடுத்த இலக்கு — ஆசிய மற்றும் உலக தடகளப் போட்டிகள்,” என.

இப்போது அனைவரும் கேட்கிறார்கள் —
யார் இந்த சஃபியா யாமிக்?
இலங்கையின் புதிய தங்க வேகப் பெண், எதிர்கால ஒலிம்பிக் கனவுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீராங்கனை!

A/L பரீட்சை முடித்தவர்களா? அல்லது உங்கள் தற்போதைய தொழிலில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா?London Graduate...
28/10/2025

A/L பரீட்சை முடித்தவர்களா? அல்லது உங்கள் தற்போதைய தொழிலில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா?

London Graduate School of Management (LGSM) பெருமையுடன் வழங்கும் UK HND மற்றும் UK Diploma கற்கைநெறிகளில் இன்றே இணையுங்கள். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தக் தகைமைகள், உங்களை உலகளாவிய தொழில் சந்தைக்குத் தயார்படுத்தும்.

எமது கற்கைநெறிகள்:
🎓 HND in Business Management
💻 HND in Information Technology
🏗️ HND in Quantity Surveying (QS).. மற்றும் பல டிப்ளோமா பாடநெறிகள்!

மேலும் விபரங்களுக்கு மற்றும் பதிவுகளுக்கு:
WhatsApp: 0706660002

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு, ரூபா 75 மில்லியன் செலவில் புதிய படகு சேவை ஆரம்பம்.​கிண்ணியா: கிண்ணியாவுக்கும் - க...
28/10/2025

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு, ரூபா 75 மில்லியன் செலவில் புதிய படகு சேவை ஆரம்பம்.

​கிண்ணியா: கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் இந்த சேவையை ஆரம்பித்து வைத்தார்.

​தற்போது குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதனால், பொது மக்களின் நன்மை கருதி இந்தப் படகுச் சேவை தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களில் பாலத்தின் முழுமையான கட்டட நிர்மாண வேலைகள் நிறைவடையவுள்ள நிலையில், அதுவரைக்கும் இந்தப் படகுப் பாதையின் சேவை செயற்பட உள்ளது.

​இந்தத் தற்காலிகப் படகுப் பாதைக்கும், அதன் பராமரிப்புச் செலவிற்கும் இரண்டு வருடங்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

​பாதுகாப்பான பயணத்துக்கான நடவடிக்கை

​பாதுகாப்பற்ற படகு சேவை காரணமாக 2021 ஆம் ஆண்டு, ஒரு தனியார் படகு ஆற்றில் கவிழ்ந்து, ஐந்து மாணவர்கள் உட்பட, 8 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்து சொகுசு இயந்திரப் படகு ஒன்று இன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

​புதிய அரசாங்கம் ஒரு வருட காலமே பூர்த்தி அடைந்த நிலையில், கிண்ணியா - குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு புதிய பாலம் அமைப்பதற்காக ரூபா 1200 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், தற்போது பாலத்துக்கான நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

​இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீம, தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் உட்பட கிண்ணியா பிரதேச மற்றும் நகர சபைகளின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

28/10/2025

சூடான, மென்மையான பரோட்டாவும்... காரசாரமான கறியும்! 🤤

​இந்த மாலை நேரத்திற்கு இதைவிட சிறந்த காம்போ இருக்க முடியுமா?

பாரம்பரிய சுவையை (Taste the Tradition!) உங்கள் வீட்டிலிருந்தே சுவைத்து மகிழ, இப்போதே DialMe-க்கு அழையுங்கள்.

​டெலிவரிக்கு அழையுங்கள்:
📞 DialMe 757 757 767

27/10/2025

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை ஆரம்ப நிகழ்வில் விபத்து!

Address

Main Road, Kinniya/04
Periya Kinniya
31100

Telephone

+94706660002

Alerts

Be the first to know and let us send you an email when KTV தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KTV தமிழ்:

Share