Tamil Uthayam Fm

Tamil Uthayam Fm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Uthayam Fm, Radio Station, Point Pedro.

சாவகச்சேரியில் ரயில் மோதி விபத்து; உயர்தர மாணவன் பரிதாபச் சாவு! யாழ்ப்பாணம் சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள புகைய...
24/01/2022

சாவகச்சேரியில் ரயில் மோதி விபத்து; உயர்தர மாணவன் பரிதாபச் சாவு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள புகையிரத கடவையை நடந்து கடக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி ரயிலுடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் ரயில் பாதையை நடந்து கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நாளை பாடசாலையில் நடைபெறும் சோர்சல் நிகழ்வுக்கு ஆடைகளைத் தைக்கச் சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

24/01/2022
24/01/2022
சர்வதேச குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் தங்கம் வென்று முல்லைத்தீவு மாணவி இந்துகாதேவி சாதனை!பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற...
19/01/2022

சர்வதேச குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் தங்கம் வென்று முல்லைத்தீவு மாணவி இந்துகாதேவி சாதனை!
பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் வெற்றி பெற்று முல்லைத்தீவு மாணவி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று(18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இவ்வாறு சர்வதேச போட்டியில் வென்று சாதனை படைத்துள்ள இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். FM NEWS #

13 வயது சிறுமியை மாங்குளம் அழைத்து வந்து குடும்பம் நடத்திய இளைஞர் கைதாகி விளக்கமறியலில்!முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்கு...
18/01/2022

13 வயது சிறுமியை மாங்குளம் அழைத்து வந்து குடும்பம் நடத்திய இளைஞர் கைதாகி விளக்கமறியலில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் புதிய கொலனி பகுதியில் 13 அகவை சிறுமியுடன் குடும்பம் நடத்திய திருகோணமலையினை சேர்ந்த இளைஞர் ஒருவரை மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் 15.01.2022 அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாங்குளம் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காக திருகோணமலையினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலைதேடி வந்துள்ளார். இவர் தங்குவதற்காக மாங்குளம் புதிய கொலனி பகுதியில் கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந் நிலையில் திருகோணமலை மூதூர் பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி ஒருவரை அழைத்து வந்து சுமார் ஒரு மாதகாலமாக குறித்த ரயர்க்கடையில் வேலைசெய்த இளைஞன் பெற்றுக்கொண்ட வாடகை வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த சிறுமி தொடர்பிலான தகவல் புதிய கொலனி பகுதியில் கிராமத்தில் அலசல் புலசலாக பேசப்பட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளமையினை தொடர்ந்து சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய இளைஞனை மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளதுடன் 13 அகவை சிறுமியினையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 15.01.2022 அன்று இடம்பெற்றுள்ளது.

சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நிலையில் சிறுமி குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் இளைஞர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் 16.01.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி வாசஸ் தலத்தில் முன்னலைப்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மூதூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது FM NEWS #

ஆழிப் பேரலையிடம் நாய்களைக் காக்க முயன்ற பெண் உயிரிழப்பு!சுனாமி தாக்கிய தொங்காத் தீவுகள் வெளியுலக தொடர்பின்றித் தனிப்புபி...
18/01/2022

ஆழிப் பேரலையிடம் நாய்களைக்
காக்க முயன்ற பெண் உயிரிழப்பு!

சுனாமி தாக்கிய தொங்காத் தீவுகள்
வெளியுலக தொடர்பின்றித் தனிப்பு
பிரான்ஸிலும் அதிர்வலைகள் பதிவு

பசுபிக் கடலடியில் சனிக்கிழமை நேர்ந்த
பெரும் எரிமலை வெடிப்பினால் கிளம்
பிய சாம்பல் படலம் தொங்காத் தீவுக்
கூட்டங்களைப் போர்த்து மூடியுள்ளது.
தொலைபேசி, இணைய சேவைகள்
தடைப்பட்டுள்ளன.இதனால் தலைநகரம் உட்பட தீவுகள் வெளி உலகத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
எரிமலை வெடிப்பு கடலடி இணையத்
தொலைத் தொடர்புக் கேபிள்களைச்
சேதப்படுத்தியுள்ளது என்று நியூசிலாந்து
அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் வசம்
இருக்கின்ற செய்மதித் தொலைபேசிகள்
கூட வான் மண்டலத்தைச் சாம்பல் மூடிய காரணத்தால் சீராக இயங்கவில்லை
என்ற தகவலைச் செஞ்சிலுவைச் சங்கம்
வெளியிட்டிருக்கிறது. தீவுகளில் பரவலா
கச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதை செய்மதி
படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.அங்கு அழகிய கடற்கரைகளை ஆழிப் பேரலை
துவம்சம் செய்திருப்பது தெரிகிறது.
நீர் நிலைகள் மாசடைந்துள்ளன என்று கூறப்படுகிறது. தண்ணீர் போத்தல்கள், உணவுப் பொட்டலங்களை வான் வழியே
வீசுவதற்காக நியூசிலாந்து தனது
விமானங்களை அனுப்பியுள்ளது.

தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது
என்பதைத் தெரிந்து கொள்வதற்காக
உலகெங்கும் வாழுகின்ற தொங்கா
மக்கள் கடந்த இரண்டு தினங்களாகச்
செய்திகளுக்குக் காத்திருக்கின்றனர்.
எரிமலை வெடித்த கையோடு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் தாழ்ந்த பகுதிகளைவிட்டு வெளியேறிப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடிந்துள்
ளது அதனால் உயிர்ச் சேதங்கள் பெரிய அளவில் ஏற் பட்டிருக்க வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது. எனினும் அங்கு நிகழ்ந்த ஓர் உயிரிழப்புப் பற்றிய முதலா
வது செய்தி வெளியாகியுள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற 50 வயதான பிரிட்டிஷ் பெண் ஒருவரது சடலம் தேடுதலில் மீட்கப்பட்டிருக்கிறது.தொங்காடப்பு (Tongatapu) என்ற தீவில் தனது கணவரு
டன் வாழ்ந்து வந்த அப்பெண் அநாதர
வான நாய்களைத் தத்தெடுத்துப் பராமரி
த்துவருபவர் என்றும் சம்பவதினம் ஆழிப்
பேரலைகள் எழுந்து வருவது கண்டு
தனது ஐந்து நாய்களையும் பாதுகாப்ப
தற்கு முயன்றவேளை அலையில் அடித்
துச் செல்லப்பட்டார் எனவும் லண்டனுக்கு
கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சம்ப
வத்தில் அவரது நான்கு நாய்கள் காணா
மற்போயுள்ளன.ஒரேயொரு குட்டி மட்டும்
மீட்கப்பட்டுள்ளது.கணவர் மரம் ஒன்றைப்
பற்றிக்கொண்டு உயிர்தப்பியுள்ளார்.
விலங்குகள் மீது பிரியம் கொண்டவராக வாழ்ந்த அந்தப் பெண் தனது நாய்களு டன் தோன்றும் படங்களை உறவினர்கள்
சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கின்
றனர்.

தொங்கா ராஜ்ஜியம்(Kingdom of Tonga) எனப்படுவது பசுபிக் கடலில் சுமார் 170 சிறிய தீவுக் கூட்டங்களை உள்ளடக்கி சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். அதன் அருகே சமுத்
திரத்தின் அடியில் அமைந்திருக்கின்றது
பயங்கரமான எரிமலை. அதன் பெயர்
சற்று நீண்டது.ஹங்கா-தொங்கா-ஹுங்
கா-ஹா'பாய்(Hunga-Tonga-Hunga-Ha’apai)
என்று அது அழைக்கப்படுகின்றது.

சனிக்கிழமை நேர்ந்த அதன் பெரும்
வெடிப்பு "ஆயிரம் ஆண்டுகளில் ஒரு
முறை நிகழ்கின்ற ஒன்று" என்று பூகோ
ளவியல் வல்லுநர்கள் வர்ணிக்கின்ற
னர்.அது ஏற்படுத்திய அதிர்வலைக
ளும் ஆழிப் பேரலைகளும் பசுபிக் வட்
டகை முழுவதும் - அமெரிக்கா முதல்
ஜப்பான் வரை - பெரு முதல் அலாஸ்கா
வரை-உணரப்பட்டிருக்கிறது.பத்தாயிரம்
கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள
பெரு நாட்டின் கடற்கரை ஒன்றில் கூட வழமைக்கு மாறான பேரலையில் சிக்கி இருவர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.

💥பிரான்ஸிலும் அதிர்வுகள்

சனிக்கிழமை நேர்ந்த எரிமலை வெடிப்
பின் அதிர்வுகளை மேற்கு ஐரோப்பிய
நாடுகள் பலவற்றின் காலநிலை அவதா
னிப்பு மையங்கள் பதிவு செய்துள்ளன.
தொங்கா தீவுகளில் இருந்து சுமார் 17
ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில்
அமைந்துள்ள பிரான்ஸிலும் வானிலை
அளவீட்டு சாதனங்கள் அதிர்வுகளைப்
பதிவுசெய்துள்ளன.

பாரிஸ் Saint-Germain-des-Prés இல் அமை
ந்துள்ள நிலையத்தில் அன்று வழமைக்கு
மாறான இரண்டு அமுக்க அதிர்வுகள் (pressure variations) தெளிவாகப் பதிவாகி
யுள்ளன என்பதை வானிலை நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.அந்தப் பெரு வெடிப்பு கடல் அடிப்படுக்கைகளில்
உருவாக்கியிருக்கக் கூடிய பாரிய
மாற்றங்களை அறிகின்ற முயற்சியில்
உலகளாவிய நிபுணர்கள் ஈடுபட்டுவரு
கின்றனர். FM NEWS #

நல்லூர் கந்தன்🙏🙏🙏  #யாழ்ப்பாணம்  #நல்லூர்
17/01/2022

நல்லூர் கந்தன்🙏🙏🙏
#யாழ்ப்பாணம் #நல்லூர்

இலங்கை மின்சார பொறியிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!Posted: 2022-01-17மின்சார சபையின் புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்...
17/01/2022

இலங்கை மின்சார பொறியிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!
Posted: 2022-01-17

மின்சார சபையின் புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் பதவிக்கு கடந்த 14ஆம் திகதி புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக இவ்வாறு நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் அந்த பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. FM NEWS #

மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் "மக்கள் திலகம்" M.G. இராமச்சந்திரன் அவர்களது பிறந்ததினம் இன்று. 1936ஆம் ஆண்டு வெளி...
17/01/2022

மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் "மக்கள் திலகம்" M.G. இராமச்சந்திரன் அவர்களது பிறந்ததினம் இன்று. 1936ஆம் ஆண்டு வெளிவந்த "சதிலீலாவதி" என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தந்து இரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அற்புத நடிகர்.

ஒரு நடிகராக மட்டுமல்லாது இயக்குனராகவும், கதையாசிரியராகவும் பல வெற்றித் திரைப்படங்களை தமிழ் இரசிகர்களுக்குத் தந்த சிறந்த ஆளுமை. பல்வேறு சாதனைகளை தமிழ்த் திரையுலகில் நிகழ்த்திக் காட்டியவர்.
FM NEWS #

🚨இலங்கைக்கு படை எடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். மீண்டெழும் இலங்கை சுற்றுலாத்துறை👨‍👩‍👦  / கட்டுநாயக்க விமான நிலையத...
17/01/2022

🚨இலங்கைக்கு படை எடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். மீண்டெழும் இலங்கை சுற்றுலாத்துறை👨‍👩‍👦

/ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ..... FM NEWS #

மின்சார சபையிடம் எரிபொருள் இல்லை; நாளை முதல் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்!Posted: 2022-01-17அனல் மின் உற்பத்திக்கு தேவை...
17/01/2022

மின்சார சபையிடம் எரிபொருள் இல்லை; நாளை முதல் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்!
Posted: 2022-01-17

அனல் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு நாளை செவ்வாய்க்கிழமை காலை வரைக்கும் மட்டுமே போதுமானது என இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் நாளை காலையுடன் முற்றாகத் தீா்ந்துவிடும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நீண்ட காலத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இவ்வாரம் இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி 22 வரை எரிபொருள் வழங்குவது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேசவுள்ளோம். இதுவரை எமக்கு எரிபொருளை வழங்காவிட்டால் என்ன செய்வது? என்பதை நாங்கள் தீர்மானிப்போம் எனவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். FM NEWS #

Address

Point Pedro

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Uthayam Fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category