Madurankuli Media

Madurankuli Media "மாற்றத்தை நோக்கிய ஊடகப் பயணம்"

 #புத்தளம் லிவர்பூல் அணிக்கும், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.அணிக்கும் இடையில் நடைபெற்ற கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியில் ஏறாவ...
06/06/2026

#புத்தளம் லிவர்பூல் அணிக்கும், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.அணிக்கும் இடையில் நடைபெற்ற கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணி வெற்றி.

எம்.யூ.எம்.சனூன்

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_315.html

புத்தளம் லிவர்பூல் அணிக்கும், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.அணிக்கும் இடையில் நடைபெற்ற கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணி 02 :00 என்ற கோல்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின், 80 வருட கனவான, பஸ் ஒன்றினை
பெற்றுக் கொள்வதற்காக "Bus For My Zahira" க்கான நிதி திரட்டும் திட்டத்துக்காக இந்த கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டியானது புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (05) மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.

இடைவேளைக்கு முன்பாக இரண்டு அணிகளும் கோல்களை பெற பலத்த முயற்சிகளை மேற்கொண்டபோதும் முடியாமல் போனது.

எனினும் இடைவேளைக்கு பின்பு தனது அணியினை மேலும் பலப்படுத்திய ஏறாவூர் அணி அதிரடியாக தொடர்ந்து இரண்டு கோல்களை பெற்றுக்கொண்டது.

அவ் அணியின் முன்கள வீரர் முஹம்மது முஸ்தாக் தனது அணிக்கான 02 கோல்களையும் பெற்றுக்கொடுத்தார்.

ஏறாவூர் அணியினை அதன் பயிற்றுவிப்பாளர் அதிபர் மொஹிதீன் வழி நடாத்தி இருந்தார்.

லிவர்பூல் அணியினை அதன் பயிற்றுவிப்பாளர் எச்.எம்.ஹம்ருசைன் வழி நடாத்தி இருந்தார்.

இந்த கண்காட்சி போட்டியினை புத்தளம் காற்பந்தாட்ட லீக், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஆர்.எம்.அம்ஜத், ஏ.ஏ.கியாஸ், எம்.எம்.சபான் ஆகியோர் கடமையாற்றினர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டார். மாநகர சபை உறுப்பினர்களான எம். டி.எம்.சஹ்ரான், இப்லால் அமீன், புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாகிகள், சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ.நஜீம், Bus For My Zahira இணைப்பாளர் கவிஞர் "புத்தளம் மரைக்கார்", பழைய மாணவர் சங்கத்தினர், அணுசரனையாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறிப்பு:
நீல நிற மேலங்கி ஏறாவூர் அணி.
சிவப்பு நிற மேலங்கி புத்தளம் அணி.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_315.html

 #ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!(மர்சூக் எம்...
05/06/2026

#ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

(மர்சூக் எம். சல்பி )

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_821.html

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் விளையாட்டு மைதான ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து கோல் போஸ்ட் ஒன்று இடைவேளை நேரத்தில் சாய்ந்து விழுந்ததால் தரம் 09 இல் கல்வி கற்கின்ற ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் மூத்த புதல்வர் ஆஷிப் மௌலானா என்பவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

மறுநாள் 26 ஆம் திகதியன்று ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவும் அவரது மனைவியும் வைத்தியசாலையில் தங்கியிருந்து தமது மகனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் வீட்டில் எவருமில்லாத நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 7.00 மணியளவில் சாய்ந்தமருது அல்ஹிலால் வீதி, ஜின்னா லேனில் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா அவதானித்துள்ளார்.

இதன்போது வீட்டின் பின்பக்கமாக அமைந்துள்ள குடியிருப்பாளர்கள் அற்ற வீடு - வளவு வழியாக இவரது வீட்டின் பின்பக்கமாகவுள்ள சமையலறைக் கதவுகளை உடைத்து உள்நுழைந்துள்ள திருடன் படுக்கையறை மேசையில் இருந்த லெப் டொப் ஒன்றையும் படுக்கையறையில் உள்ள அலுமாரியை உடைத்து 75 ஆயிரம் ரூபா பணத்தையும் பெண்ட்ரைவ் இரண்டையும் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக, பொலிஸார் பல தடவைகள் சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பகுதியிலுள்ள CCTV காட்சிகளைப் பரீட்சித்து வருகின்ற அதேவேளை, தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_821.html

 #குருநாகல் மல்லவப்பிட்டி சமோதய பாடசாலை மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)http...
05/06/2026

#குருநாகல் மல்லவப்பிட்டி சமோதய பாடசாலை மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_449.html

குருநாகல் மல்லவப்பிட்டி சாமோதய வித்தியாலயத்தின் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (05) பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது

இதில் பிரதம அதிதியாக கல்வி உயர் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு மூன்று மாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி:
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் பெற்றுக்கொடுக்கும் இடமாக மட்டுமன்றி, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான, அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும். பிள்ளைகள் தங்களது நேரத்தின் பெரும்பகுதியைப் பாடசாலையிலேயே செலவிடுவதால், அந்தச் சூழல் பாசம் மிக்கதாக இருப்பது கட்டாயத் தேவையாகும் என தெரிவித்துள்ளார்.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_449.html

 #கற்பிட்டியில் சனிக்கிழமை உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)https://www.madurankulimedia.lk/20...
05/06/2026

#கற்பிட்டியில் சனிக்கிழமை உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_204.html

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி செடோ சிறீலங்கா மற்றும் நெகெனஹிர பவுண்டேஷன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (06) காலை 8.45 மணிக்கு கற்பிட்டி வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கேம்கிளாஷிங் உள்ளக விளையாட்டு அரங்கில் செடோ சிறீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் இடம்பெற உள்ளது.

பசுமையான நாளைய தினத்திற்கான இலட்சிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசுமை நிறைந்த நிலையான எதிர்காலத்தை வளர்க்கவும் அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_204.html

 #ட்ரம்புக்கு ஏற்பட்ட அச்சம் அவரது அறிக்கைகளில் தெரிகிறது. https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_68.htmlஅமெர...
05/06/2026

#ட்ரம்புக்கு ஏற்பட்ட அச்சம் அவரது அறிக்கைகளில் தெரிகிறது.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_68.html

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான்மீதான மோதலை தீவிரப்படுத்தினால், தனது அணுசக்தி திறனை நிரூபிக்கும் வகையில் ஈரான் அணு ஆயுத சோதனையை மேகொள்ள உள்ளதான இரகசிய தகவல் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவுக்கு சென்றதன் காரணமாக ட்ரம்ப் கொஞ்சம் அடக்கி வாசிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

அதாவது ஈரானின் நாகரீகத்தையே அழிப்பதாக மிரட்டிய ட்ரம்ப், இன்று அவர் கூறுகின்ற வார்த்தைகள் ஆச்சர்யமாக உள்ளது.

இறுதியாக வெளியான செய்திகளின்படி ஒப்பந்தம் தேவையில்லை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எப்போது வேண்டுமானாலும் எங்களால் கைப்பற்ற முடியும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவுள்ளதாக இதுவரையில் அடிக்கடி கூறிவந்த நிலையில், ட்ரம்ப் அவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் ஈரானிய சுப்ரீம் லீடரை சந்திப்பதனை ஒரு கௌரவமாக கருதுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் அறிக்கைகள் மூலம் ஓர் அணு ஆயுத நாட்டின் பலம் என்ன என்பதனை புரிந்துகொள்ள முடிகிறது.

முகம்மத் இக்பால்

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_68.html

 #கற்பிட்டி கீரிமுந்தல் மீனவ கிராமத்தின் கடலரிப்பை தடுக்கும் மண் வேலி அமைக்கும் பணி ஆரம்பம்(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்...
05/06/2026

#கற்பிட்டி கீரிமுந்தல் மீனவ கிராமத்தின் கடலரிப்பை தடுக்கும் மண் வேலி அமைக்கும் பணி ஆரம்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_05.html

கற்பிட்டி கீரிமுந்தல் மீனவ கிராமத்தை கடல் அரிப்பின் கோரப்பிடியிலிருந்து பாதுகாப்பதற்கான தற்காலிக முன்னோடி நடவடிக்கையாக கீரிமுந்தல் கடற்கரையில் மண் வேலி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கடலரிப்பு காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள கீரிமுந்தல் (டச்பே) மீனவ கிராமத்தை பாதுகாத்து தருமாறு கீரிமுந்தல் கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோவின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு அமைய கரையோர வள பாதுகாப்பு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தற்காலிக மண் வேலி அமைக்கும் வேலைத்திட்டம் கற்பிட்டி பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தைகளான குரூஸ் அடிகளாரின் தலைமையில் இறை வழிபாடுகளுடன் இப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இயற்கைச் சீற்றத்திடமிருந்து தங்களது கிராமத்தையும், கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே இலக்கோடு கீரிமுந்தல் ( டச்பே) மீனவ கிராம மக்கள் இவ் வேலைத்திட்டத்திற்காக ஒன்று திரண்டனர் கரையோர வள பாதுகாப்பு திணைக்களத்தின் கற்பிட்டி பிரதேச காரியாலய அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் கீரிமுந்தல் (டச்பே) கிராமிய மீனவ அமைப்பின் பங்குபற்றுதலுடன் மிகவும் திட்டமிட்டபடி தரம் வாய்ந்ததாக சுமார் 80 மீட்டர் நீளம் கொண்டதும் 10 அடி அகலத்தை கொண்டதாக இந்த
மண் வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலய நிர்வாக சபையினர், மீனவ சங்கத் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் கீரிமுந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த கரையோர பகுதி மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

இந்த மண்வேலி அமைக்கும் பணி நிறைவடையும் பட்சத்தில், இப்பகுதியில் நிலவி வரும் கடல் அரிப்பு அபாயம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என பொதுமக்களும் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_05.html

 #ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு. எம்.யூ.எம்.சனூன்https://www.madur...
05/06/2026

#ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_455.html

கல்பிட்டி ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு வியாழக்கிழமை (04) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்பிட்டி கோட்ட கல்விப்பணிப்பாளர் ஏ.எம். ஜவாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு, மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும், அவர்களின் பொறுப்புணர்வு மற்றும் சமூக சேவைக்கான உறுதிப்பாட்டை உருவாக்குவதற்கான ஒரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதோடு, தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு அதிதிகளினால் சின்னங்களும் அணிவிக்கப்பட்டன.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_455.html

 #மக்களை வலுவூட்டும் பிரஜா சக்தி திட்டம் முந்தலில் ஆரம்பம்.எம்.யூ.எம்.சனூன்https://www.madurankulimedia.lk/2026/06/blog-...
05/06/2026

#மக்களை வலுவூட்டும் பிரஜா சக்தி திட்டம் முந்தலில் ஆரம்பம்.

எம்.யூ.எம்.சனூன்

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_745.html

இலங்கையின் பல்பரிமாண வறுமையை ஒழிக்கும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “பிரஜா சக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” தேசிய வேலைத்திட்டம், (03) முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைப்பாளரும், முந்தல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக மற்றும் புத்தளம், கல்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம்.பைசல் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விசேட திட்டத்தின் கீழ், முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கையளிக்கப்பட்டன.

அதன் முதற்கட்டமாக, புழுதிவயல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகால தேவையாக இருந்து வந்த பாடசாலை மைதானத்திற்கான மலசலகூடக் கட்டடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் முந்தல் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், புழுதிவயல் பாடசாலை அதிபர், புழுதிவயல் ஜும்ஆ பள்ளி நிர்வாகிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள், பிரஜா சக்தி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_745.html

 #சாய்ந்தமருது அல்ஹிலாலில் அதிபர்களின் பிரியாவிடை நிகழ்வு (எம்.எஸ்.எம்.ஸாகிர்)https://www.madurankulimedia.lk/2026/06/bl...
04/06/2026

#சாய்ந்தமருது அல்ஹிலாலில்
அதிபர்களின் பிரியாவிடை நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_402.html

சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் அதிபராக, பிரதி, உதவி அதிபர்களாகக் கடமையாற்றி, பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளுக்கு அதிபராக, பிரதி அதிபர்களாக இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்களின் பிரியாவிடை நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.

பாடசாலை கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில், பாடசாலையின்
அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி, இடமாற்றம் பெற்று தற்போது சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் எம்.எச். நுஷ்ரத் பேகம், பிரதியதிபராகக் கடமையாற்றி, தற்போது நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் அதிபராகப் கடமையாற்றும் ஏ.பி. செரோன் டில்ராஸ், உதவி அதிபராகப் கடமையாற்றி, தற்போது மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றும் எஸ்.எம். உவைஸ் ஆகிய இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்களுக்கு அவர்களது அர்ப்பணிப்பான சேவையைக் கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்களும் அன்பளிப்புகளும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத்தின் மகன் அல்ஹாபிழ் கே.எம். ஷைBபான் நமி மிகக் குறுகிய காலத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து அல்ஹாபிழ் பட்டம் பெற்றமைக்காக இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் அவர்கள் தன் மனம் கோணாது பாடசாலைக்கு உதவி என்று வருகின்ற போது, எந்த உதவியாக இருந்தாலும் அதனை இன் மனங்கொண்டு ஏற்று, சளைக்காது செய்துவரும் அயராத, அர்ப்பணிப்பான அவரது அரும் பெரும் சேவைக்காக பாடசாலை சமூகத்தால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் நஸ்ரின் சாஜிதா, கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைஸல், சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா, கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம்.அன்சார், பாடசாலையின் பிரதியதிபர்களான எம்.எச். லாபிர், ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_402.html

 #உலக சுற்றுச்சூழல் தினம்: சவூதி அரேபியா சுற்றுச்சூழல் சுற்றுச் சூழலுக்கான அர்ப்பணிப்பு முதற் கொண்டு உலகளாவிய தலைமைத்துவ...
04/06/2026

#உலக சுற்றுச்சூழல் தினம்: சவூதி அரேபியா சுற்றுச்சூழல் சுற்றுச் சூழலுக்கான அர்ப்பணிப்பு முதற் கொண்டு உலகளாவிய தலைமைத்துவம் வரை..!

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_90.html

#எழுதியவர்: இலங்கைக் குடியரசிற்கான இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி மன்னரின் தூதர், காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

சுற்றுச்சூழல் சவால்கள் அதிகரித்து, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தீவிரமடைந்து வரும் உலகில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது இனி ஒரு வளர்ச்சித் தேர்வாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த விஷயமாகவோ இல்லை. மாறாக, அது நாடுகளின் வெற்றியையும், எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் அவற்றின் திறனையும் அளவிடும் ஒரு முக்கிய அளவுகோலாக மாறியுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில், உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டமானது, பூமிக் கோளின் மீதான நமது கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வின் நிலைத்தன்மையையும் அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும் வலுப்படுத்துகிறது.

சவூதி அரேபியாவில், இந்தப் பொறுப்பானது, இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பிரதமரான மாண்புமிகு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் ஆகியோரால் வழிநடத்தப்படும் ஒரு தொலைநோக்கு மூலோபாயப் பார்வையிலிருந்து உருவாகிறது. இவர்கள், 'விஷன் 2030'-இன் கீழ் சவூதி அரேபியாவின் தேசிய மாற்றத் திட்டத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கியுள்ளனர்.

உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை அடைவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் இடையிலும், நிகழ்காலத் தேவைகளுக்கும் எதிர்காலத் தலைமுறையினரின் உரிமைகளுக்கும் இடையிலும் ஒரு நிலையான சமநிலையை உருவாக்குவதில்தான் தங்கியுள்ளது என்பதை சவூதி தலைமை அங்கீகரித்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதும் தேசத்தின் மற்றும் உலகின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீட்டைக் குறிக்கிறது என்றும், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகள் மற்றும் பரந்த சர்வதேச கூட்டாண்மைகள் தேவை என்றும் மாண்புமிகு பட்டத்து இளவரசரின் பார்வை உறுதிப்படுத்துகிறது.

இந்தப் பார்வையின் அடிப்படையில், மாண்புமிகு பட்டத்து இளவரசர் "பசுமை சவூதி அரேபியா" (SGI) மற்றும் "பசுமை மத்திய கிழக்கு" (MGI) ஆகிய முன்னெடுப்புகளைத் தொடங்கினார். இவை தேசிய மற்றும் பிராந்திய அளவிலான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஒரு தரமான பாய்ச்சலைக் குறிக்கின்றன. "பசுமை சவூதி அரேபியா" முன்னெடுப்பானது, உமிழ்வுகளைக் குறைத்தல், தூய்மையான தூய சக்தி வளத்தைச் சார்ந்திருப்பதை அதிகரித்தல், பல்லுயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்தல், சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சிகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவியது. "பசுமை மத்திய கிழக்கு" முன்னெடுப்பானது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குப் புவியியல் எல்லைகள் இல்லை என்பதையும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பதையும் பற்றிய சவூதி அரேபியாவின் நம்பிக்கையை உள்ளடக்கியுள்ளது.

சவூதி அரேபியாவின் முயற்சிகள், முன்னெடுப்புகளைத் தொடங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், இப்பிராந்தியத்திலேயே மிகவும் மேம்பட்ட ஒன்றாகத் திகழும் ஒரு விரிவான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது வரையிலும் விரிவடைந்துள்ளன. சுற்றுச்சூழல் இணக்கக் கண்காணிப்பு, தாவர வளர்ச்சி மற்றும் பாலைவனமாதலைத் தடுத்தல், வனவிலங்கு மேம்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற தேசிய மையங்கள், சுற்றுச்சூழல் நிதியத்துடன் சேர்த்து நிறுவப்பட்டன. இது, சவூதி அரேபியாவில் சுற்றுச்சூழல் பணிகள் துண்டு துண்டான திட்டங்களிலிருந்து ஆளுகை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த மூலோபாய அமைப்பாக மாறியிருப்பதைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், நிலையான வளர்ச்சியை அடைவதற்குப் புத்தாக்கமே திறவுகோல் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், சவூதி அரேபியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், வட்ட கார்பன் பொருளாதாரம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்களில் தனது முதலீடுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தியது. இந்த அணுகுமுறை, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் சமச்சீரான தீர்வுகளை உருவாக்குவதில், சவூதி அரேபியாவை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதற்குப் பங்களித்துள்ளது.

சர்வதேச அளவில், உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திட்டத்தை வடிவமைப்பதில் சவூதி அரேபியா ஒரு செல்வாக்குமிக்க பங்காளியாக உருவெடுத்துள்ளது. காலநிலை மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடுகளில் சவூதி அரேபியா தீவிரமாகப் பங்கேற்றுள்ளதுடன், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த சர்வதேச உரையாடலை வலுப்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது. காலநிலை சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச கட்டமைப்புகளை உருவாக்குவதில் சவூதி அரேபியாவின் சிந்தனைகள் வெற்றி பெற்றதற்கான ஒரு முன்மாதிரியாக, 2020-ல் சவூதி அரேபியா ஜி20 குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தபோது, அக்குழு வட்ட வடிவ கார்பன் பொருளாதாரக் கருத்தை ஏற்றுக்கொண்டது அமைந்தது.

இந்த முயற்சிகளின் உச்சகட்டமாக, பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 16-வது அமர்வை (COP16) சவூதி அரேபிய தலை நகரம் ரியாத் நடத்தியது. இது சர்வதேச சுற்றுச்சூழல் நடவடிக்கை அமைப்பில் சவூதி அரேபியாவின் முக்கிய நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். சீரழிந்த நிலங்களை மீட்டெடுத்தல், பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுதல், மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனை மேம்படுத்துதல் போன்ற உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக, இந்த மாநாடு அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், வல்லுநர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய தளத்தை வழங்கியது.

சுற்றுச்சூழல் துறையில் இன்றைய சவூதி அனுபவம், தெளிவான அரசியல் தொலைநோக்கு, செயல்திறன் மிக்க நிர்வாக உறுதி, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனப் பணிகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுக்கான திறந்த மனப்பான்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான முன்மாதிரியாக விளங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வளர்ச்சிக்கு ஒரு சுமையல்ல, மாறாக அதுவே அதன் அடிப்படை உந்துசக்தி என்பதையும், இயற்கையில் முதலீடு செய்வது என்பது மனிதகுலத்திலும் சமூகங்களின் எதிர்காலத்திலும் செய்யப்படும் முதலீடு என்பதையும் இந்த அனுபவம் உறுதிப்படுத்துகிறது.

இந்த உலகளாவிய தருணத்தில், சவூதி அரேபியா, தான் சாதித்தவற்றைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நம்பி, உலகெங்கிலும் உள்ள தனது பங்காளிகளுடன் இணைந்து முடியுமான அனைத்தையும் சாதிப்பதற்கு எதிர் பார்க்கிறது.

https://www.madurankulimedia.lk/2026/06/blog-post_90.html

Address

Kanamoolai, Madurankuli
Puttalam

Alerts

Be the first to know and let us send you an email when Madurankuli Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madurankuli Media:

Share